“நீ என்னை துக்கப்படுத்துகிறாய்!” ஒரு அமேரிக்க விமானியின் கதரல்

இக்கட்டுரை தமிழ் கிறிஸ்தவ தளத்திற்காக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது "ஈஸா குர்-ஆன்" தளத்தில் பதிக்கப்போகும் கட்டுரையல்ல. ஈஸா குர்-ஆன் தளம் "பைபிள் குர்-ஆன்" வசன அடிப்படை, கொள்கை அடிப்படை சம்மந்தப்பட்ட கட்டுரைகளை வெளியிடும். இக்கட்டுரையை மற்றவர்கள் தங்கள் தளங்களில் மறுபதிவு செய்யலாம், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தள தொடுப்பை மூலமாக கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. Faith Freedom.org தளத்தில் கீழ்கண்ட குறிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது.

This letter has been floating on the internet for a while. Though the origin and authorship of the letter cannot be determined with any certainty, and perhaps, its content has been altered several times, the letter conveys a message that many Americans wish to say publicly. – FFI

Source : YOU WORRY ME

"நீ என்னை துக்கப்படுத்துகிறாய்!"
"YOU WORRY ME!"

அமெரிக்கா விமானி – Captain John Maniacalco எழுதியது

நீ என்னை துக்கப்படுத்துகிறாய். நீ அப்படி செய்யமாட்டாய் என்று நான் விரும்புகிறேன். நான் நேசிக்கும் இந்நாட்டின் தெருக்களில் நான் நடக்கும் போது, உன்னுடைய கலை மற்றும் கலாச்சாரம் இன்னும் இந்நாட்டின் மனித வள அழகைப்போல மாறவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், நீ இன்னும் எங்களோடு கலவாமலேயே இருக்கிறாய். நான் இதை கவனித்தேன். நீ என்னை துக்கப்படுத்துகிறாய்.

என்னால் எந்த உதவியும் செய்யமுடியாது, அதனால் உன்னை வெறும் கவனிக்கச் செய்கிறேன். உன் தாய்நாட்டிலிருந்து வரும் முஸ்லீம்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள், என் உடன் பிறந்த குடிமக்களையும், நண்பர்களையும் கடந்த 20 ஆண்டுகளாக தாக்கிக்கொண்டு, கொன்று குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கை என்ன என்றும், வெறுப்பு எதற்கு என்றும் எனக்கு புரியாத புதிராக உள்ளது. ஆனால், ஒன்று மட்டும் எனக்குத் தெரியும், அவர்களுடைய இந்த மனிதாபமற்ற செயலுக்கு காரணமாக எதைச் சொல்லியும் அவர்கள் நியாயப்படுத்த முடியாது.

செப்டம்பர் 11ம் தேதி, 19 அரேபிய முஸ்லீம்கள் எங்கள் நாட்டின் நான்கு விமானங்களை கடத்தினார்கள். அவர்கள் பல பிள்ளைகளுக்கு முன்பாக பல பெண்களின் தொண்டைகளை அறுத்தார்கள். பலபேரை மிகக்கொடூரமாக கத்தியால் குத்தி கொன்றார்கள். அவர்கள் அந்த நான்கு விமாங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, உயரமாக கட்டிடங்களில் அவைகளை மோதவிட்டு, பல ஆயிரமான கர்வப்படக்கூடிய தகப்பன்களை, நேசிக்கின்ற மகன்களை, அனுபவமிக்க தாத்தா பாட்டிக்களை, பெருமைப்படக்கூடிய மகள்களை, உயிர் நண்பர்களை, பிரியமான ஆசிரியர்களை, பயிற்சியாளர்களை, பயமில்லாத அரசாங்க ஊழியர்களை மற்றும் பல பிள்ளைகளின் தாய்மார்களை கொன்றார்கள். பாலஸ்தீன நாட்டினர் விழாக்கொண்டாடினார்கள், ஈராக்கியர்கள் மட்டில்லா மகிழ்ச்சி கொண்டார்கள், இப்படி பல அரேபிய நாடுகள் மகிழ்ந்தார்கள்.

ஆகையால், நான் உன்னை இப்போது கவனித்தேன், இனி நான் துக்கப்படப்போவதில்லை. இப்படிப்பட்ட தீவிரவாதிகளால் அழிக்கப்பட்ட ஆயிரமாயிரமான மனிதர்களைப் போல இனியும் இதே போல வெறுப்புடனும், பழிவாங்கும் எண்ணத்துடனும் இப்போதுள்ள மனிதர்கள் அழிக்கப்பட நான் விரும்பவில்லை. ஆனால், எனக்கு உன்னுடைய உதவி வேண்டும்.

ஒரு சாதாரண அமெரிக்க குடிமகனாக, என் தாய் நாட்டையும், குடும்பத்தையும் இந்த நியாயமற்ற உலகத்திலிருந்து பாதுகாப்பதற்காக, நான் ஒன்றை தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, உனக்கும், அரேபிய/முஸ்லீம் தீவிரவாதிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நான் எப்படி தெரிந்துக்கொள்வது?

ஒரு உண்மையான "அரேபிய/முஸ்லீம் – அமெரிக்க குடிமகனையும்", "அரேபிய/முஸ்லீம் – அமெரிக்க தீவிரவாதியையும்" எப்படி நான் வேறுபடுத்துவது அல்லது கண்டுபிடிப்பது. இந்த "அரேபிய முஸ்லீம் அமெரிக்க தீவிரவாதிகள்", நாங்கள் செல்லும் பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள், எங்கள் அழகிய தோட்டங்களையும் (Parks) இரசிக்கிறார்கள், எங்கள் நாட்டு அரசியல் சட்டத்தின் பாதுகாப்பின் கீழ், எங்கள் சமுதாயங்களில் எங்களோடு ஒன்றுகலந்து வாழ்கிறார்கள், ஆனால், அதே நேரத்தில் தனக்கு அக்கம் பக்கத்தில் வசிக்கும் நல்ல குடும்பங்களையும், பிள்ளைகளையும் கொல்லும் அடுத்த தீவிரவாத தாக்குதல் பற்றி திட்டம் தீட்டுகிறார்கள். இந்த செப்டம்பர் 11ம் தேதி நிகழ்ச்சி, இதற்கான பதிலை மாற்றிவிட்டது. என் உயர்ந்த நாட்டையும், அதன் எல்லா மதநம்பிக்கையையும், அதன் குறைபாடுகளையும் பார்த்து இந்நாட்டில் வாழும் நீங்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது அல்ல. இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு அரப்-முஸ்லீமும் தான் யார் என்பதை நிர்ணயிக்க இது தான் சரியான நேரம். இதை நீங்கள் தான் கண்டுபிடித்து எனக்குச் சொல்ல வேண்டும்.

நான் தெரிந்துக்கொள்ளவேண்டும், உரிமையுடன் கேட்கிறேன், நீங்கள் அமெரிக்காவை நேசிக்கிறீர்களா இல்லையா? நீங்கள் அமெரிக்காவின் தேசியக்கொடிக்கு முன்பாக உறுதிமொழி கொடுத்து அதை மதிக்கிறீர்களா? நம் நாட்டு தேசியக்கொடியை உங்கள் வீட்டின் முன்பும், உங்கள் வாகனத்தின் முன்பும் வைக்க கர்வப்படுகிறீர்களா? உங்களின் தினசரி தொழுகைகளில் இந்த நாட்டை ஆசீர்வதிக்கும்படியும், இந்த நாடு மேலும் வளர்ச்சியடையவும், பாதுகாப்பாக இருக்கவும் வேண்டும் என்று அல்லாவிடம் வேண்டிக்கொள்கிறீர்களா?

அல்லது ஏதாவது ஒரு ஜிஹாதில் அழிக்கப்படவேண்டும் என்று அல்லாவிடம் வேண்டிக்கொள்கிறீர்களா? இந்த நாடு கொடுக்கும் சுதந்திரத்திற்கு இந்த நாட்டிற்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்களா? இந்த சுதந்திரம் பல நூறு ஆயிர தேசபக்தர்கள் தங்கள் உயிரை கொடுத்து, இரத்தத்தை விலையாக கொடுத்து சம்பாதித்தார்கள். அதே போல நீங்களும் உயிரை தியாகம் செய்து இந்த சுதந்திரத்தை பேணிக்காப்பதற்கு விரும்புவீர்களா? அமெரிக்காவை நீங்கள் நேசிக்கிறீர்களா?

நீங்கள் இந்த உறுதி மொழியை எடுத்துயிருந்தால், எனக்கு நீங்கள் வேண்டும், அதைப் பற்றி எனக்கு தெரிவியுங்கள். உங்கள் இஸ்லாமிய தலைவர்கள் இப்போதே உங்கள் நம்பிக்கையைப் பற்றிய உண்மையை மக்களுக்கு தெரிவிக்கட்டும், உங்களின் இந்த உறுதி மொழியையும் தெரிவிக்கட்டும், மற்றும் ஒரு இஸ்லாமிய சமுதாயமாக இந்த அமெரிக்க நாட்டின் பாதுகாப்பிற்காக என்ன செய்ய இருக்கிறீர்கள் என்று உங்கள் "நடைமுறை திட்டங்களை" மக்களுக்கு அறிவிக்கட்டும். தயவு செய்து, ஏற்கனவே மரித்த அப்பாவி மக்களுக்காக நாம் இப்போது கண்ணீர்வடிக்க வேண்டாம், காரணம் உங்கள் அன்பான குணத்தை நான் அறிந்துக்கொண்டேன். அந்த கோர செயலுக்கு நீங்கள் காரணம் அல்ல. நடந்த முடிந்த தாக்குதல் பற்றி நாம் இனி கவலைப்படுவதினால் ஒரு நன்மையும் நமக்கு வராது. நான் இனி கவலைப்பட்டு கலங்குவதில் விருப்பம் காட்டமாட்டேன். இனி நாம் நடைமுறையில் என்ன செய்யப்போகிறோம் என்பதில் தான் நான் நாட்டம் கொள்கிறேன்.( I am not interested in any more sympathy. I am only interested in action)

நம்முடைய மிகப்பெரிய நாட்டிற்கு, இந்த பிரச்சனைகளின் காலங்களில், யுத்தங்களின் காலங்களில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? என் நாட்டின் தேசியக்கொடியை அரப்-முஸ்லீம்கள தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு, அதை அசைத்துக்கொண்டு வீரமாக நடப்பதை காணவிரும்புகிறேன். நீங்கள் "அல்லா அமெரிக்கவை ஆசீர்வதிப்பார்" என்று தொடர்ந்து சொல்வதை நான் கேட்கவிரும்புகிறேன். என் நாட்டின் இராணுவத்தில் வாலிப அரப்-முஸ்லீம்கள் சேவை செய்வதை நான் காண விரும்புகிறேன். இந்த பாதிப்பில் நம்பிக்கை இழந்த மக்களுக்கு உங்கள் மூலமாக பணத்தாலோ, நேரத்தாலோ இன்னும் அன்பான வார்த்தைகளாலோ அவர்களுக்கும், இந்த நாட்டிற்கும் ஆதரவாக இருப்பீர்கள் என்ற உறுதிமொழியை எதிர்பார்க்கிறேன். நம் நாட்டின் FBI இந்த உலக வர்த்தக மையம் தொடர்பாக 400 பேரிடம் பேசவேண்டுமென்று விரும்புகிறது. இவர்களில் பலபேர் உங்கள் இஸ்லாமிய சமுதாயத்தின் மத்தியில் இன்றும் வாழ்கிறார்கள், பழகுகிறார்கள். அவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அவர்களை இப்போதே எங்களிடம் ஒப்படையுங்கள். இப்படிப்பட்ட செயல்களை உங்களிடமிருந்து நான் இதுவரை காணவில்லை. இதற்கு பதிலாக அவர்களை இன்னும் பாதுகாப்பாக இரகசியமாக உங்கள் சமுதாயத்திலேயே பதுக்கி வைத்துள்ளீர்கள். நீங்கள் தெருக்களிலிருந்து மாயமாகிவிட்டீர்கள். உங்கள் வீடுகளின் கதவுகளின் பக்கத்தில் பாதுகாப்பு வீரர்களை வைக்கவேண்டிய நிலை வந்தது. உங்கள் மீது வழக்கு தொடருவோம் என்று பயமுறுத்தப்படுகிறீர்கள். உங்களை பழிவாங்குவார்கள் என்று திடீரென்று கதறிஅழுகிறீர்கள்.

சில அரப்-முஸ்லீம் பிரதிநிதிகள் மக்களின் மத்தியில் மேடையில் தோன்றி, அவர்களின் இந்த கொடூரச் செயலை பாதுகாக்கவே பேசுகிறார்கள். எந்த காரியம் செய்தாலும், அதற்கு முன்பு ஜாக்கிரதை படுவது அமெரிககாவின் பொறுப்பு என்று சொல்கிறார்கள். அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் தங்கள் இஸ்லாமிய சகோதரர்களின் பாதுகாப்பே அவர்களுக்கு பெரிதாகத்தெரிகிறது. மற்றும் அமெரிக்காவை ஆதரிப்பதாகச் சொல்கிறார்கள், மற்றும் பல இஸ்லாமிய தலைவர்களகிய Khadafi, Hussein, Farrakhan, and Arafat போன்றவர்களை பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையிலேயே இஸ்லாம் "சகிப்புத்தன்மையையும்", "அமைதியையும்", மற்றும் மற்ற "எல்லா மக்களை நேசிக்கவேண்டும்" என்றும் சொல்வது உண்மை என்றுச் சொன்னால், எனக்கு இப்படிபட்ட வசனங்கள் எந்த அதிகாரத்தில், எந்த வசனத்தில் இப்படி சொல்லப்பட்டுள்ளது என்று தெரிய விரும்புகிறேன். மற்றும் அந்த அருமையாக வாக்கியங்களுக்கு சில இஸ்லாமிய தலைவர்கள், இமாம்கள் என்ன பொருள் கூறுகிறார்கள் அல்லது அவர்களும் குர்-ஆன் சொல்வது போலவே "சகிப்புத்தன்மை", அமைதி போன்றவற்றை வழி மொழிகிறார்களா என்று தெரிந்துக்கொள்ள ஆசையாக உள்ளது. உண்மையிலேயே குர்-ஆனின் போதனைகள் நன்மையாயும், தூய்மையாயும், உண்மையாயும் இருக்கும் போது, இஸ்லாமிய தலைவர்கள் அவைகளுக்கு தீவிரவாத, சகிப்புத்தன்மையில்லாத பொருள் கூறுவதினால் என்ன நன்மை என்றுச் சொல்லுங்கள்?

What good is it if the teachings in the Koran are good, and pure, and true, when your "leaders" are teaching fanatical interpretations, terrorism, and intolerance?

உண்மையிலேயே இஸ்லாம் நல்ல மதமாக இருந்தாலும், உலகத்தில் உள்ள பெரும்பான்மையான முஸ்லீம்கள் முகமதுவுடைய போதனைகளை தவறாகவும், இஸ்லாம் மதத்திற்கு "களங்கம்" விளைவிக்கும் வகையிலே பொருள் கூறுவது, ஒரு முக்கிய பிரச்சனையாக மாறுகிறது. இஸ்லாமின் இந்த தோற்றத்தைத் பலமுறை நமக்கு இவர்களால் காட்டப்பட்டுள்ளது.

இந்த தோற்றத்தின் அஸ்திபாரம் வன்முறையும், மரணமும், தற்கொலைபடையுமாகும். இந்த தோற்றத்தின் உறுப்பினர்கள் உலக சிறைச்சாலைகளிலிருந்து வருகிறார்கள். இந்த தோற்றத்தின் உறுப்பினர்கள் (5 வயதிற்கு உட்பட்டு கூட இருப்பார்கள்), இவர்கள் ஒவ்வொரு நாளும், வாரமும், வருடமும் உலகத்தின் தெருக்களில் சென்று, எங்கள் ஜனாதிபதிகளின் உருவப்படத்தை எரிப்பதிலும், அமெரிக்க தேசியக்கொடியை எரிப்பதிலும், காற்றிலே வானத்திற்கு நேராக துப்பாக்கிச் சூடு செய்வதிலும் ஈடுபடுகிறதை காண்கிறோம். இந்த தோற்றத்தின் உருப்பினர்கள், ஒரு அமைதியான மதத்திலிருந்து மாறி, தான் பிறந்த தன் தாய் நாடான அமெரிக்காவிற்கு எதிராக ஆயுதங்களை தூக்குகிறார்கள். இந்த தோற்றம் அதன் சட்டங்கள் வித்தியாசமானவைகள், பயணம் செய்யும் இவர்களில் சிலர் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தங்கள் முகத்தை காட்ட மறுக்கிறார்கள், இஸ்லாமின் பெயரால்.

செப்டம்பர் 11 மற்றும் இது போல உள்ள தாக்குதலை இனி நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இது எங்கள் அரசியல் சாசனம் கொடுத்த அடிப்படை உரிமையாகும்.

நான் தெரிந்துக்கொள்ள விரும்புவேன், நான் மட்டுமல்ல இந்த நாட்டில் உள்ள உண்மையாக ஒவ்வொரு குடிமகனும் தெரிந்துக்கொள்ள வேண்டும், அதாவது இந்த நாட்டில் வாழும் "அரப்-இஸ்லாமியர்களாகிய" நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்? (உங்கள் அபிப்பிராயம் என்ன?) உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்கும் இந்த நாட்டின் அரசியல் சாசனம் கொடுத்த அடிப்படை உரிமை, இந்த உரிமைக்காக பல ஆயிரமாயிர நம் சகோதரர்கள், சகோதரிகள் தங்கள் இரத்தத்தை சிந்தியுள்ளார்கள். நான் உன்னிடத்தில் இறைஞ்சுகிறேன். நீ என்னுடன் என் சகோதரனாக, என் அயல் வீட்டுக்காரனாக, என் நண்பனாக, என்னுடன் வாழும் சக குடிமகனாக இந்நாட்டில் இருக்க நான் விரும்புகிறேன். ஆனால், இதில் எந்த உள்நோக்கமோ இருக்கக்கூடாது. உனக்கு இந்நாட்டின் மீது அக்கரை அல்லது பக்தி எவ்வளவு உள்ளது என்று நிருபிப்பது இனி உன்னை சார்ந்தது. நீ எங்கே நிற்கிறாய் என்று எனக்கு சொல் .


அதுவரைக்கும் "நீ என்னை துக்கப்படுத்துகிறாய்!"
Until then… "YOU WORRY ME!"

 
 

ஆப்ரிக்காவில் கற்பழிக்கப்படும் இஸ்லாமிய பெண்கள்

ஆப்ரிக்காவில் கருப்பு இன இஸ்லாமிய பெண்கள் மற்ற இஸ்லாமியர்களால் கற்பழிக்கப்படுகிறார்கள் என்று பிபிசி செய்தி தெரிவிக்கிறது

http://news.bbc.co.uk/2/hi/africa/6165017.stm

Women demand end to Darfur rapes


International stateswomen have made a joint call for an end to rape and sexual violence in Sudan’s conflict-torn region of Darfur.

Peacekeepers must be sent to protect women there, the group said in a letter published by newspapers worldwide.

Signatories include former US Secretary of State Madeleine Albright and the Irish former UN High Commissioner for Human Rights Mary Robinson.

The call comes as protests on the issue are planned in 40 countries.

The letter says rape is being used “on a daily basis” as a weapon of war in Darfur.

The main signatories were joined by other prominent women including:

  • veteran Palestinian politician Hanan Ashrawi
  • Graca Machel, wife of Nelson Mandela
  • Edith Cresson, former French prime minister
  • Glenys Kinnock, a UK member of the European Parliament
  • Carol Bellamy, former head of the UN children’s fund.

‘Constant fear’

Published on the eve of the Global Day for Darfur, the letter says that “women and young girls live in constant fear of attack”.

African Union soldiers patrol the village of Kerkera, northern Darfur”

African peacekeepers struggle to protect vulnerable civilians

Sudan’s government is accused of being “unwilling or unable to protect its own civilians”.

The international community is called upon to “deliver on its responsibility to protect these civilians”.

Events to mark Darfur Day are due to take place in more than 40 countries and will include women-led protests outside Sudanese embassies.

The BBC’s Jonah Fisher, in Khartoum, says the three-year war in Darfur has been characterised by rape and violence against women, mostly by the pro-government Arab Janjaweed militia.

The protests around the world will have no direct impact on the Sudanese government, he adds.

The government views the three-year crisis in Darfur as a Western invention, insisting that just 9,000 people have died.

It also denies reports of widespread rape, pointing out that the people of Darfur are Muslim and, therefore, incapable of rape.

In reality, though, at least 200,000 people have died in Darfur’s and an estimated two million people, mostly black Africans whose villages have been attacked by the Janjaweed, have fled their homes.

Khartoum denies accusations it is backing the militias to put down an uprising by Darfur’s rebel groups in 2003.

A force of 7,000 African Union peacekeepers has struggled to protect civilians in the absence of a strong, UN contingent.

ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா ;ஈசாகுரானின் மொழிபெயர்ப்பு கட்டுரை

           டேவிட் உட் என்பவரின் கட்டுரையை ஈசாகுரான் இணைய ஆசிரியர் மொழிபெயர்த்து உள்ளளர்.அதை கீழே காணலாம்

ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா

இயேசுவின் மரணம் மற்றும் அவரின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவத்தின் அடிப்படை அஸ்திபாரம். இந்த அஸ்திபாரத்தைப் பற்றி குர்-ஆன் வித்தியாசமான விவரங்களை தருகிறது, அதை அலசுவது தான் இக்கட்டுரை. தமிழில் சில வரிகள் புரியவில்லையானால், ஆங்கிலத்தில் படிக்கும்படி வேண்டுகிறேன். இக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கு படிக்கலாம்.

ஆசிரியர் சிறுகுறிப்பு: டேவிட் உட் (David Wood) என்ற இவர் ஒரு முன்னாள் நாத்தீகர். ஆனால், இப்போது இயேசுவை விசுவாசிப்பவர். இவரின் சிறப்பம்சம் “நாத்தீகர்களோடு வாதம் புரிவது”. முக்கியமாக infidels.org என்ற நாத்தீக தளத்தின் கட்டுரைகளுக்கு இவர் பதில்(http://answeringinfidels.com/) எழுதுகிறார். தற்போது, “Problem of Evil” என்ற தலைப்பில் இவர் Ph.D செய்துக்கொண்டு இருக்கிறார். இவர் சில இஸ்லாமிய காட்டுரைகளும் எழுதியுள்ளார். இந்த தற்போதைய கட்டுரை Answering Islam.Org என்ற தளத்தில் படித்து, அதை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கேட்டேன். அவர் உடனே கொடுத்ததுமன்றி, Answering-islam.org தளத்தில் உள்ள அவர் எல்லா கட்டுரைகளுக்கும் அனுமதி அளித்துள்ளார். அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் ஒரு இஸ்லாமியரோடு முகமது யார் – Who is Muhammad” என்ற தலைப்பில் புரிந்த விவாத DVD amazon ல் கிடைக்கிறது. மற்றும் அவருடைய மற்ற விவாதங்கள், இஸ்லாமிய கட்டுரைகள், மறுப்புக்கள், நாத்தீகரோடு புரிந்த நேரடி விவாதங்கள் வீடியோக்களை கீழ்கண்ட தளங்களில் காணலாம்.

1. http://www.answering-islam.org/Authors/Wood/index.htm
2. http://www.problemofevil.org/
3. http://answeringinfidels.com/
4. http://www.answeringmuslims.com/


ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா

அல்லாவைப் பற்றியும், இயேசுவைப் பற்றியும் உண்மையில் இஸ்லாம் என்ன போதிக்கிறது

ஆசிரியர்: David Wood

கிட்டத்தட்ட் இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் இயேசுவின் மரணம் மற்றும் அவர் உயிர்த்தெழுதலைப் பற்றி சொல்லிக் கொண்டுவருகிறார்கள். இந்த இரண்டு கோட்பாடுகளையும் இஸ்லாம் தள்ளிவிட்டது மற்றும் சிலுவை நேரத்திலும், அதன் பிறகும் என்ன நடந்தது என்று வேறு வகையான நிகழ்ச்சி நிரலை சொல்கிறது. எப்படி இருந்தாலும், இஸ்லாம் தன் சொந்த விளக்கத்திகாக அதிக விலை செலுத்தியுள்ளது. அவர்களின் இந்த விளக்கம் “இறைவனை ஒரு கொடுமையான ஏமாற்றுக்காரராக காட்டுகிறது” மற்றும் தீர்க்கதரிசிகளின் சரித்திரத்திலேயே இயேசு “படுதோல்வி” அடைந்தவராக காட்டுகிறது. இப்படி இருந்தும், “அல்லா உண்மையுள்ளவர்” மற்றும் இயேசு அல்லாவின் தீர்க்கதரிசிகளில் எல்லாம் மிகச்சிறந்தவர் என்று மதிக்கப்படுகிறார் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். அவர்களின் இந்த வாதங்கள் அனைத்தும் குறையுள்ளது, ஏனென்றால், இஸ்லாமிய கோட்பாடுகள் அனைத்தும் பெரும்பான்மையாக வாய்வழி மரபுகளாகவே வருகிறது.

Allah starts Christianity…. By Accident

(அல்லா தற்செயலாக உருவாக்கிய கிறிஸ்தவம்)

இஸ்லாமிய போதனைகளை நாம் கூர்ந்து ஆராய்ந்தால், கிறிஸ்தவத்தை அல்லா உருவாக்கியதாகவும், மட்டுமல்ல, கிறிஸ்தவத்தை உலகத்தின் மிகப்பெரிய அதிகாரமுடைய மதமாக மாற்றியதாகவும் நாம் கவனிக்க முடியும். இந்த உண்மை எல்லாருக்கும் ஏதோ புதுமையாக தோன்றும், நான் சொல்வதை நம்புங்கள், இஸ்லாமியர்களோ “கிறிஸ்தவம் ஒரு தவறான மதம்” என்று சொல்கிறார்கள். கிறிஸ்தவம் மனிதர்களால் மாற்றப்பட்டதால், அது ஒரு பிழையான மதம் என்று இஸ்லாமியர்கள் பதில் சொல்கிறார்கள். இதே செய்தியைத்தான் அல்லா மரியமின் மகனான இயேசுவிற்குச் சொன்னார்.

இயேசுவை பின்பற்றியவர்கள்(சீடர்கள்) இப்போதுள்ள இஸ்லாம் போல ஒரு கோட்பாட்டை நம்பியதாக ஒரு சிறு ஆதாரமும் இல்லை. இது ஒரு புறமிருக்க, இஸ்லாம் படி, கிறிஸ்தவத்தை திருத்தியதே அல்லா தான் (According to Islam, Christianity was corrupted by Allah himself) இஸ்லாம் ஏன் நம்மை இப்படி நம்பச்சொல்கிறது என்று புரிந்துக்கொள்ளவேண்டுமானால், நாம் சில உண்மைகளை தெரிந்துக்கொள்ளவேண்டும்.

FACT #1: இயேசு அல்லாவின் தூதர் என்றும், இஸ்லாமின் தீர்க்கதரிசி(நபி) என்றும் குர்-ஆன் கூறுகிறது:

இயேசு பிறந்த குழந்தையாக இருந்த நாளிலிருந்தே இஸ்லாமிய கோட்பாடுகளை(Islamic Theology) போதித்துவந்தார் என்று குர்-ஆன் அதிகாரம்(சூரா) 19 சொல்கிறது.

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறி(அரற்றி)னார். (19:23) (அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினான். (19:24) “இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும். (19:25)

“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், ‘மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும். (19:26)

“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். (19:30)

“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான். (19:31)

“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. (19:32)

“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது. (19:33) [2]

இயேசு தன் வாழ்நாள் முழுவதும், அதாவது அல்லா தன்னை தன் அளவில் உயர்த்திக்கொள்ளும்வரை இந்த இஸ்லாமிய கோட்பாடுகளை போதித்துவந்தார். குர்-ஆன்படி இயேசு கொண்டுவந்த இஞ்ஜில் என்ற வேதத்தின் செய்தியும், தனக்கு முன் வந்த தீர்க்கதரிசிகள் கொண்டுவந்த செய்தியும் வெவ்வேறானவை அல்ல. இயேசு அல்லாவின் ஊழியனாகவும், நபியாகவும் இருந்து இஸ்லாமை போதித்தார்.

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்’ என்பதே – இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது – தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் – (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.(42:13) [3]

அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம். (43:59) இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் – ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார். (43:63) நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி). (43:64) [4]

ஆக, இயேசு தான் பிறந்ததிலிருந்து, வானத்திற்கு அல்லாவிடம் எடுத்துக்கொள்ளப்படும் காலம் வரை, கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் இஸ்ரவேல் மக்களுக்கு இஸ்லாமை போதிப்பதில் செலவழித்தார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு கொண்டுபோகப்படும் முன்பு வரை அவருடைய இஸ்லாமிய பிரச்சாரம் ஓரளவிற்கு வெற்றிப்பெற்றதாக இருந்தது என்றுச் சொல்லலாம். ஏனென்றால், அவரை பின்பற்றுகிற பல சீடர்கள் அவருக்கு இருந்தார்கள் என்பதை நாம் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

FACT #2: இயேசு பல சீடர்களை சம்பாதித்தார் என்று குர்-ஆன் சொல்கிறது.

இயேசு தன் வாழ்நாள் முழுவதும் இஸ்லாமை போதித்தபடியால், அவருடைய ஆரம்பகால சீடர்களுக்கு அவர் கொடுத்த செய்தி, இஸ்லாமின் அடிப்படை கோட்பாடுகளைச் சுற்றியே இருந்திருக்கும். இப்போதுள்ள முஸ்லீம்கள் போல அவருடைய சீடர்கள் போதிக்கப்பட்டு(அ) கற்றுக்கொடுக்கப்பட்டு இருப்பார்கள். இதைத் தான் இஸ்லாம் (குர்-ஆன்) இயேசுவைப்பற்றி கீழ்கண்டவாறுச் சொல்கிறது:

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர். (3:52) [5]

“என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்” என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், “நாங்கள் ஈமான் கொண்டோம், நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள். (5:111) [6]

அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம், இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு, எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக இருந்தனர். (57:26)[7]

குர்-ஆன் சொல்வது உண்மையானால், இயேசு குறைந்தபட்சம் சில இஸ்ரவேல் மக்களையாவது இஸ்லாமுக்கு மாற்றியிருப்பார். ஆனால், இப்படிப்பட்ட மாற்றம் நடந்தது என்று ஒரு சரித்திர ஆதாரமும் இல்லை. இருந்தாலும் விவாதத்திற்காக வேண்டி, இயேசுவின் இஸ்லாமிய போதனைகளை விசுவாசித்த முதல் நூற்றாண்டு யூதர்கள் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று நாம் எண்ணிக்கொள்வோம். இப்படிப்பட்ட கருத்து (Assumption), இஸ்லாமுக்காக வாதாடுபவர்களுக்கு எதிராக பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என்று இனி நாம் பார்க்கப்போகிறோம்.

FACT #3: இயேசுவின் போதனையைக்கேட்டு முதல் நூற்றாண்டு யூதர்கள் இஸ்லாமியர்களாக மாறியிருந்தாலும், அவர்களின் இஸ்லாமிய நம்பிக்கை அதிக நாட்கள் நீடிக்கவில்லை.

இயேசுவின் சீடர்கள் முஸ்லீம்களாக இருந்தார்கள் என்ற வாதம் ஒரு தெளிவான கேள்வியை எழுப்பக்கூடியதாக உள்ளது. முதல் நூற்றாண்டில் முஸ்லீம்கள் இருந்தார்கள் என்பதை ஏன் நாம் ஒரு முறைகூட கேள்விப்பட்டதே இல்லை? இயேசுவை முதல் நூற்றாண்டில் பின்பற்றியவர்ககளைப்பற்றி அதிகபடியான சரித்திர விவரங்கள் இன்று நம்மிடம் உள்ளது, ஆனால், முஸ்லீம்கள் பற்றிய ஒரு ஆதாரமும் ஏன் நம்மிடம் இல்லை? இயேசுவை பின்பற்றிய கிறிஸ்தவ அல்லாத மார்க்க(இஸ்லாம் சம்மந்தப்பட்ட) எல்லா விவரங்களையும் கிறிஸ்தவம் துடைத்துவிட்டது என்று இஸ்லாமுக்காக வாதாடுபவர்கள் இதற்கு பதிலாக சொல்வார்கள். ஆனால், அவர்களின் இந்த பதில் வெறும் அறிவீனமான வாதமே ஒழியவேறில்லை. கிறிஸ்தவத்திற்கு முந்தைய நம்பிக்கைகளைச் சொல்லக்கூடிய கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவம்-அல்லாத நிறைய ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால், இந்த இரண்டு விதமான ஆதாரங்களிலும் (Christian and Non-Christian Source), ஒரு “முஸ்லீம்-கிறிஸ்தவன்” இருந்ததாக ஒரு தகவலும் இல்லை. ஒன்று மட்டும் நாம் நிச்சயமாகச் சொல்லலாம், அதாவது “இயேசுவின் மரணம்” பற்றிய விவரம் அந்த காலத்து அதிகாரிகளுக்கு தெரிந்தவிவரமாக இருந்தது. மற்றும் இயேசுவின் ஆரம்பகால சீடர்களாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் போன்றவர்களுக்கு கூட இயேசு தங்கள் பாவங்களுக்காக மரித்தார் என்றும் பிறகு உயிர்த்தெழுந்தார் என்றும் அவர்கள் நம்பினர். (இது மட்டுமல்ல இயேசுவின் சீடர்கள் இயேசு ஒரு தேவகுமாரன் என்று நம்பினர், இது இப்போதைக்கு என் கட்டுரையின் கருப்பொருள் அல்ல) இயேசு மரித்தார் மறுபடியும் உயிர்த்தெழுந்தார் என்று ஆரம்பகால கிறிஸ்தவர்கள் நம்பினார்கள் என்று புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களிலிருந்தும், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலிருந்தும் நாம் தெரிந்துக்கொள்கிறோம். பவுல் எழுதிய கடிதங்கள் கூட இயேசுவின் மரணம் உயிர்த்தெழுதல் பற்றி அடிக்கடி குறிப்பிடுவதை காணலாம். மட்டுமல்ல, இயேசுவிற்கு பிறகு வாழ்ந்த கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை நாம் 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் காணலாம். எனவே இயேசுவின் சீடர்கள்(அப்போஸ்தலர்கள்) காலத்தில் நிலவிய அவர்களின் நம்பிக்கைக்கு இது ஒரு அத்தாட்சியாகக் கொள்ளலாம்.

நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்[8]

இயேசுவின் சீடர்களின் நம்பிக்கையைப் பற்றிச் சொல்கின்ற புதிய ஏற்பாடு அல்லாத மற்ற கிறிஸ்தவ ஆதாரங்களும் (Early Christian Writings) இன்று நம்மிடம் உள்ளது.

உதாரணத்திற்கு: அப்போஸ்தர் பேதுரு “ரோம பேராயராக” நியமித்த ” ரோம் கிளமண்ட்(Clement of Rome)” என்பவர் கூட பல முறை அப்போஸ்தர்களின் நம்பிக்கையாகிய “இயேசுவின் மரணம் மற்றும் அவரது உயிர்த்தெழுதல்” பற்றி பலமுறை எழுதியுள்ளார்[9]. அப்போஸ்தலர் யோவான் நியமித்த போலிகார்ப்(Polycarp), என்பவரும் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பலமுறை எழுதியுள்ளார் [10]. இன்னும் பல “கிறிஸ்தவ அல்லாத ஆதாரங்கள்(Non-Christian Writings)” இயேசுவைப் பற்றியும், அவரது அப்போஸ்தலர்கள் பற்றியும் மிக முக்கியமான விவரங்களைச் சொல்கின்றன. யூத சரித்திர ஆசிரியர் “ஜோசபாஸ் (Josephus)” மற்றும் ரோம சரித்திர ஆசிரியர் டாசிடஸ்(Tacitus) இவர்களின் விவரங்களின்படி, இயேசு பொந்தியுஸ் பிலாத்து (Pontius Pilate) என்பவர் ஆட்சிசெய்யும் போது சிலுவையில் அறையப்பட்டார்[11]. ஒரு கிரேக்க நகைச்சுவை(Satirist) எழுத்தாளர் “Lucian of Samosata” என்பவர் இவ்விதமாகச் சொல்கிறார், “இன்று கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஒரு மனிதனை வணங்குகிறார்கள், இவர்களுடைய எல்லா நம்பிக்கைக்கும் அவர் தான் காரணர் மற்றும் இதனாலேயே அவர் சிலுவையில் அறையப்பட்டார் “[12]. அவ்வளவு ஏன், யூதர்களின் தல்மட் (Talmud) கூட இயேசுவின் சிலுவையில் அறையப்படுதலைப் பற்றிச் சொல்கிறது[13].

எனவே, குர்-ஆன் சொல்லும் (1) இயேசு மரிக்கவில்லை, (2) இயேசுவின் சீடர்கள் முஸ்லீம்களாக இருந்தார்கள் என்ற வாதம் தவறானது என்று நாம் நிச்சயமாகச் சொல்லலாம்.

உண்மை இப்படி இருந்தாலும், வாதத்திற்காக வேண்டி, முதல் நூற்றாண்டில் குறிப்பிட்ட அளவிற்கு முஸ்லீகள் இருந்ததாகவும், அவர்களுடைய விவரங்கள் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், பின்பு வந்த கிறிஸ்தவர்கள் அழித்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்வோம் . நாம் மேலே சொன்னது போல வித்தியாசமான கற்பனையை(Outlandish Assumption) நினைத்துக்கொண்டாலும், இதனால், முஸ்லீம்களுக்கு நிறைய பிரச்சனைகள் எழுகின்றன:

1. இந்த முதல் நூற்றாண்டு முஸ்லீம்கள் என்ன ஆனார்கள்?

2. ஏன் இயேசுவின் தியாக மரணம் மற்றும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை, இஸ்லாம் நம்பிக்கையை மாற்றிவிட்டது?

3. ஏன் இயேசுவின் 33 வருடகால இஸ்லாமிய போதனை ஒரு நம்பிக்கையாக மதிக்கப்படாமல் அழிந்துவிட்டது?

இந்த கேள்விகளுக்கு வழக்கம் போல “கிறிஸ்தவர்கள் இயேசுவின் போதனையை மாற்றிவிட்டார்கள், மற்றும் கிறிஸ்தவ குருக்கள் இயேசுவின் இஸ்லாமிய போதனையை மொத்தமாக அழித்துவிட்டார்கள்” என்று இஸ்லாமியர்கள் பதில் சொல்வார்கள். ஆனால், ஒரு உண்மையான முஸ்லீம் இதை ஏற்றுக்கொள்ளமாட்டான், காரணம் இது இயேசுவிற்கு என்ன நடந்தது என்று குர்-ஆன் சொல்வதை மறைத்துவிடுகிறது.

FACT #4: “இயேசு சிலுவையில் மரித்தார்” என்று மக்கள் அனைவரும் நம்பும்படி அல்லா எல்லா மக்களையும் ஏமாற்றினார்(Deceive) என்று குர்-ஆன் சொல்கிறது

குர்-ஆனின் கூற்றுப்படி, இயேசு சில யூதர்களை முஸ்லீம்களாக மாற்ற அவரால் முடிந்தது என்று அறியலாம். ஆனால், இயேசுவின் சீடர்கள் அல்லது அவரை பின்பற்றியவர்கள், அவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நம்பினார்கள் என்று சரித்திரத்தின் மூலமாக நாம் அறிந்துக்கொள்ளலாம். இருந்தாலும், இயேசு வானத்திற்கு எடுத்துக்கொண்ட பிறகு ஏன் “ஒரு முஸ்லீம் கூட” இல்லை? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதில் என்னவென்றால், இயேசுவை பின்பற்றிய எல்லாரும் “இயேசு சிலுவையில் மரித்தார் என்றும் அவர் மறுபடியும் மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்தார்” என்றும் நம்பினார்.

சரி, இவர்களுக்கு “இயேசு சிலுவையில் மரித்தார்” என்ற ஐடியாவை(விவரத்தை) யார் கொடுத்தது? இஸ்லாம் கூற்றுப்படி, “இயேசு சிலுவையில் மரித்தார்” என்ற ஐடியாவை ஆரம்பித்தவரே(கொடுத்தவரே) அல்லா தான்.

இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (4:157) ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (4:158) [14]

இயேசுவை கொல்ல நினைத்தவர்களை மட்டும் ஏமாற்ற வேண்டும் என்பது தான் அல்லாவின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கும் என்று நாம் நினைத்தாலும், இயேசுவின் சீடர்களும் அல்லாவால் ஏமாற்றப்பட்டனர் என்பதை நாம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிந்துக்கொள்ளலாம். அப்படியானால்,

இயேசு சிலுவையில் மரித்தார் என்ற கிறிஸ்தவ நம்பிக்கைக்கு யார் பொறுப்பு? ( So who is responsible for the Christian belief that Jesus died on the cross?)

இஸ்லாம்(குர்-ஆன்) சொல்வது உண்மையான தகவலாக இருக்குமானால், இயேசுவின் எதிரிகள் அவரை கொன்றுவிட்டோம் என்ற எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும் என்று அல்லா அவர்களை ஏமாற்றுவதற்கு முடிவு செய்தார். அதனால், ” இயேசு சிலுவையில் மரித்தார்” என்ற ஐடியா அல்லது நம்பிக்கை வருவதற்கு காரணமே அல்லா தானே! இது இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கிவிடும். இயேசுவின் சீடர்கள் ஏமாற்றப்பட்டது “தற்செயலாக(unintentional) அல்லது ஒரு விபத்தாக நடந்தது” என்று சொல்வீர்களானால், நாம் இந்த முடிவுக்கு வரலாம், அது என்னவென்றால், “உலகத்தில் மிகப்பெரிய ஒரு பொய்யான மதம் உருவாகப்போகிறது” என்பதை அல்லா அறியாமல் இதை செய்தார் என்று நாம் முடிவு செய்யலாம். இல்லை, அல்லா இதை தெரிந்தே வேண்டுமென்றே செய்தார் என்று சொன்னால், அல்லாவிற்கு பொய்யான மதங்களை உலகத்தில் உருவாக்கும் வியாபாரம் உள்ளது என்று முடிவு செய்யலாம் . ஆக, இஸ்லாமின் இறைவனாகிய அல்லா, ஒரு சின்ன விஷயத்தை கூட சரியாக செய்யத்தெரியாத “அறியாமையில்” இருக்கிறார் என்று முடிவு செய்யலாம், அல்லது “அவர் தெரிந்தே ஏமாற்றக்கூடியவர்” என்ற முடிவிற்கு வரலாம். (If the deception of the disciples was unintentional, then we must conclude that God didn’t realize that he was about to start the largest false religion in the world. If it was intentional, then God is in the business of starting false religions. Therefore, the God of Islam is either dreadfully ignorant or maliciously deceptive.)

முகமதுவின் கூற்றுப்படி தீர்க்கதரிசிகளின் சரித்திரத்திலேயே இயேசுவின் ஊழியம் ஒரு மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. இயேசு 33 ஆண்டுகள் இஸ்லாமிய போதனையை போதிப்பதில் கழித்தார் (அதிலும், அவர் குழந்தையாக இருந்ததிலிருந்தே இஸ்லாமிய கோட்பாடுகளை போதித்தார் என்று இஸ்லாம் கூறுகிறது), அப்படியிருந்தும், அவர் மரித்த சில நாட்களுக்குள் இஸ்ரவேல் மக்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிந்தனர். முதல் பிரிவு மக்கள் இயேசுவின் போதனை கேட்டவர்கள் “கிறிஸ்தவர்களாக” மாறிவிட்டனர், இவர்கள் கற்பனைகூட செய்யமுடியாத பாவமான “ஷிர்க் – SHIRK”[15] என்ற பாவத்தை செய்தவர்களாயினர். இரண்டாம் பிரிவு மக்களாகிய இவர்கள் “இயேசுவின் போதனைக்கு” கீழ்படியாததினால், இவர்களும் “இறைவனின் மிகப்பெரிய தீர்க்கதரிசியை” தள்ளிவிட்ட அல்லது நம்பாத பாவத்திற்கு ஆளானார்கள். ஆக, இயேசுவை நம்பினவர்கள், இயேசுவை நம்பாதவர்கள் இந்த இரு பிரிவினரும் கடைசியில் நரகநேருப்பில் பங்கடைய அல்லாவால் தண்டனைக்கு உட்பட்டார்கள். இப்படியிருந்தும், முஸ்லீம்கள் “இயேசு தீர்க்கதரிசிகளிலேயே சிறந்தவர்” என்றுச் சொல்வது மிகவும் ஆச்சரியத்தைத் தருகிறது. அதாவது, இயேசு, கடைசி வரை முஸ்லீமாக இருக்கக்கூடிய ஒருவரையாவது “சம்பாதித்து” இருந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிப்பட்ட ஒருவரையும் இஸ்லாமுக்கு மாற்றவில்லை. மட்டுமல்ல, ஒரு இஸ்லாம் தீர்க்கதரிசியாக, இயேசு, அல்லாவின் ஏமாற்றும் செயலில் தன் சீடர்களாகிய நீங்கள் ஏமாறக்கூடாது என்று அவர்களை எச்சரித்து இருந்திருக்கலாம். ஆனால், இயேசு தன் ஊழிய நாட்கள் அனைத்திலும் இப்படிப்பட்ட எச்சரிக்கை செய்தியை அல்லாவிடமிருந்து பெறவில்லை, அதனால், தன்னை பின்பற்றியவர்களுக்கு இதைப் பற்றி சொல்லவில்லை. இதன் பலனாக, உலகத்தின் கோடான கோடி மக்கள், இப்போது இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர், ஏனென்றால், இயேசு தங்கள் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்று அவர்கள் நம்புகின்றனர். ஏன் இவர்கள் இப்படி நம்புகின்றனர் என்றால், இந்த செய்தியை முதலாவது பரப்பியதே “ஏமாற்றும் இறைவனாகிய” அல்லாவும், படுதோல்வி அடைந்த மஸிஹாவுமே.

Allah Spreads the False Religion He Accidentally Started

தற்செயலாக ஆரம்பித்த பொய்யான மதத்தை, அல்லா பெருகச்செய்தார்

இஸ்லாமின் போதனையை நாம் கூர்ந்து கவனித்தால், அல்லா “கிறிஸ்தவ மார்க்கத்தை” தெரிந்தோ அல்லது தேரியாமலோ(intentionally or unintentionally) துவக்கினார் என்ற முடிவிற்கு வரலாம். அதோடு மட்டும் குர்-ஆன் நின்றுவிடவில்லை. தான் செய்த குழப்பத்தை சரி செய்வதை விட்டுவிட்டு, அல்லா “கிறிஸ்தவ மார்க்கத்தை” அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்கிறார்.

FACT #5: கிறிஸ்தவ மார்கம் வளர்ச்சி அடைய அல்லா உதவியதாக குர்-ஆன் சொல்கிறது

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் என்ற நம்பிக்கைக்கு அடித்தளம் அல்லா அமைத்ததோடு மட்டுமல்லாமல், அந்த பொய்யான செய்தியை(False Message) கிறிஸ்தவர்கள் பரப்புவதற்கும் மிகவும் நேர்த்தியாக அல்லா உதவினார்.

ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் – எனினும், இஸ்ராம?ீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் – அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள். (61:14) [16]

இந்த வசனம் மிகவும் முக்கியமான வசனம். இயேசுவின் போதனையை தள்ளிவிட்ட யூதர்களுக்கு எதிராக, அல்லா இயேசுவை பின்பற்றியவர்களுக்கு(சீடர்களுக்கு) உதவி செய்ததாக இந்த வசனம் சொல்கிறது . மற்றும் இந்த வசனத்தின்படி “இயேசுவின் சீடர்கள் வெற்றியாளர்கள் ஆகிவிட்டார்கள்” என்று குர்-ஆன் சொல்கிறது. எனவே, யூதர்களை விட மிகவும் வலிமைவாய்ந்தவர்களாக மாறிய மற்றும் இயேசுவை பின்பற்றியவர்களாகிய இவர்கள் யார்? இந்த விவரத்திற்கு சரியாக பொருந்துகிறவர்கள் சரித்திரத்தின் படி “ஆதி கிறிஸ்தவர்கள் – orthodox Christians” தான், இவர்களின் நம்பிக்கை “இயேசுவின் மரணத்தின் மீதும், அவர் உயிர்த்தெழுதலிலும், அவருடைய தெய்வீக தன்மையின்” மீதும் இருந்தது. இயேசுவின் போதனை மாற்றப்பட்டது என்றும், உண்மை சுவிசேஷம்(இஞ்ஜில் Gospel) துடைக்கப்பட்டது என்றும் இஸ்லாமியர்கள் இப்போது வாதிக்கமுடியாது, ஏனென்றால், இந்த மக்கள் கூட்டம் குர்-ஆன் வசனம் சொல்லும் மக்கள் அல்ல. ஒருவேளை குர்-ஆன் சொல்வது படி, முதல் நூற்றாண்டில் “முஸ்லீம்-கிறிஸ்தவ” கூட்ட மக்கள் இருந்ததாக ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் மற்றவர்களின் மீது வெற்றியுள்ளவர்களாக இருக்கவில்லை . அவர்கள் மிக சீக்கிரமாக துடைத்துவிடப்பட்டார்கள். இயேசுவை பின்பற்றியவர்களில், யூதர்களை விட அதிகமாக வலிமையானவர்கள், பிரகாசித்தவர்கள் கிறிஸ்தவர்களே. ரோம சாம்ராஜ்ஜியத்தில் அதிகமாக பரவியது இந்த கிறிஸ்தவமே. இந்த கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கை, இன்று உள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் போலவே இருந்தது. ஆக, குர்-ஆன் வசனத்தின் படி இந்த கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வர அல்லா உதவியாக இருந்தார் அதாவது வெற்றியாளர்களாக மாற்றினார்.

பின் எப்படி, கிறிஸ்தவம் வளர்ந்து, உலகத்தின் மிகப்பெரிய மதமாக மாறியது? இது அல்லாவின் வல்லமை சக்தியினால் வளர்ந்தது! மற்றும் கிறிஸ்தவ அடிப்படை செய்தியாகிய “இயேசு சிலுவையில் மரித்தார்” என்ற செய்தியை உருவாக்கியது யார்? இறைவன்(அல்லா) தான் இந்த செய்தியை கண்டுபிடித்தார்(Invented). கிறிஸ்தவம் அல்லாத சரித்திர ஆசிரியர்கள் (non-Christian historians) கூட இயேசுவின் மரணம் ஒரு நிருபிக்கப்பட்ட ஆதாரமாக உள்ளது என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு, இந்த செய்தி பரவியிருக்கிறது[17]. இந்த சரித்திர ஆசிரியர்களுக்கு இந்த செய்தி எப்படி கிடைத்தது? அவர்கள் இதை இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பல மக்கள் “இயேசு சிலுவையில் மரித்தார்” என்று நம்பும்படி செய்ய அல்லா தான் காய்நகர்த்தினார். அதனால், இந்த நிகழ்ச்சியைப் பற்றிய பல ஆதாரங்கள் நம்மிடம் உள்ளது. தற்போதுள்ள கணக்குப்படி, கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் கிறிஸ்தவர்கள் இப்போது உலகத்தில் இருக்கிறார்கள். இஸ்லாமின் மீது அதிகாரம் செலுத்தும் உலக மதமாக கிறிஸ்தவம் ஆரம்பித்ததற்கு பொறுப்பு இயேசுவும், அல்லாவுமே வகிக்கவேண்டும்.

If Islam Is True . . .

(இஸ்லாம் உண்மையாக இருந்தால்…)

இஸ்லாமின் கருத்து பல பிரச்சனைகளை உருவாக்குகிறது என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். இறைவன் பல பில்லியன் மக்களை ஏமாற்றினார் என்று இஸ்லாம் நம்மை நம்பச் சொல்கிறது. இது மட்டுமல்ல, இயேசுவின் சீடர்களும் “இயேசு சிலுவையில் மரித்தார்” என்று நம்பும்படிச்செய்து அவர்கள் இறைவனின் வழியைவிட்டு விலக அல்லா காரணமானார். அல்லா மக்களை ஏமாற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டாமல் இருந்திருந்தால், இதை தவிர்த்து இருந்திருக்கலாம். அதனால், இது நிறைய கேள்விகளை எழுப்புகிறது:

உண்மையில் “இயேசு சிலுவையில் மரிக்காமல் இருக்கும்போது” ஏன் இயேசு சிலுவையில் மரித்தார் என்று மக்கள் நம்பவேண்டும் என்று அல்லா நினைத்தார்?

இயேசுவை யூதர்களின் மற்றும் ரோம அதிகாரிகளின் கைகளிலிருந்து காப்பாற்றவே இப்படி அல்லா செய்தார் என்று முஸ்லீம்கள் வாதம் புரியமுடியாது, ஏனென்றால், அல்லா “இயேசுவை பாதுகாப்பாக” தன் அளவில் எடுத்துக்கொண்டு அவருக்கு பாதுகாப்பு அளித்துவிட்டாரே. ஏன் இயேசுவின் எதிரிகள் “இயேசு மரித்துவிட்டார்” என்று நம்பி நிம்மதியடைய அல்லா அனுமதித்தார்? ஏன் அல்லா யாரையும் ஏமாற்றாமல், இயேசுவை அப்படியே எல்லாருக்கும் முன்பாக தன் அளவில் உயர்த்திக்கொள்ளவில்லை? இப்படி இயேசுவை எடுத்துக்கொண்டு இருந்தால், இப்படி பல மக்களை ஏமாற்றவேண்டிய அவசியமே இருந்திருக்காதே? ஆனால், அல்லாவின் இந்த ஏமாற்றுச் செயல், கிறிஸ்தவம் உருவாக காரணமாகி விட்டதே!

கிறிஸ்தவம் இப்படித் தான் ஆரம்பித்தது என்று இஸ்லாம் நம்மை நம்பச் சொல்கிறது, இது நம்மால் ஜீரணிப்பதற்கு மிக கடினமாக உள்ளது. இஸ்லாம் சொல்வது உண்மையானால், தன் தீர்க்கதரிசிகளை நம்பின மக்களை அல்லா ஏமாற்றினார் என்பது தெளிவாகிறது. இஸ்லாம் சொல்வது உண்மையானால், அல்லா ஒரு தவறான செய்தியை(கிறிஸ்தவ செய்தி) ஆரம்பித்து, அது உலகத்தில் மிகப்பெரிய மார்க்கமாகும் வரை அதை வளர்த்தார் என்பது தெளிவாகிறது. இஸ்லாம் சொல்வது உண்மையானால், இயேசு மஸிஹா, திறமையில்லாதவராகவும் இறைவன் அனுப்பாதவராகவும் இருக்கிறார், ஏனென்றால், அவரது வாழ்க்கை யின் முடிவு, பல மக்களை இறைவனின் வழியிலிருந்து விலகச் செய்தது. இப்படி வழிவிலகச் செய்தவர் இயேசுவைத் தவிர ஒருவரும் உலக சரித்திரத்தில் இருக்கமுடியாது. ஏனென்றால், இறைவனின் குணம் எப்படி இருக்கும் என்று எல்லாரும் பொதுவாக நம்பிக்கொண்டு இருக்கிறார்களோ, அப்படி இல்லாமல் இஸ்லாமின் இறைபார்வை வித்தியாசமாக உள்ளது. ஒரு சராசரி சிந்திக்ககூடிய மனிதன் தள்ளிவிடுகிற அளவிற்கு இஸ்லாமின் கோட்பாடுகள் குழப்பமாக உள்ளது. கிறிஸ்தவத்தின் ஆரம்பம் என்று இஸ்லாம் சொல்லும் விவரங்கள் மிகவும் வெறுக்கத்தக்கதாக உள்ளது, மற்றும் அறிவுடமை உள்ளதாக இல்லை. இஸ்லாம் என்பது உண்மையானால், கிறிஸ்தவம் இப்போது இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை – If Islam is true, the existence of Christianity makes no sense at all.

(If Islam is true, Jesus, the Messiah, was completely incompetent and should never have been sent by God, since Jesus’ life ended up leading more people astray than any other life in history. Because the Muslim view is at odds with any traditional understanding of God’s nature (including the Islamic understanding), Islam is an incoherent religious system, which should be rejected by all rational people. Islam has a poor and contemptible explanation for the origin of Christianity. If Islam is true, the existence of Christianity makes no sense at all.)

If Christianity Is True . . .

(கிறிஸ்தவம் உண்மையானதாக இருந்தால்…)

அதே நேரத்தில், இஸ்லாம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்று கிறிஸ்தவம் தெளிவாகச் சொல்கிறது. ஒரு வேளை கிறிஸ்தவம் உண்மையான மார்க்கமாக இருக்குமானால், இஸ்லாம் ஏன் உருவானது என்பது தெளிவாகப் புரியும்.

ஏன் இப்படிப்பட்ட இஸ்லாம் போன்ற மதம் உருவானது என்று இப்போது உடனே உங்களுக்கு புரியவில்லையானால், கீழே உள்ள சில வரிகளை படியுங்கள், அப்போது புரியும்.

கிறிஸ்தவம் உண்மையாக இருக்குமானால், கீழ் கண்ட வாக்கியங்களும் உண்மையாக இருக்கும்:

(1) மக்கள் இயேசு மூலமாகத் தான் இறைவனிடம் வருகிறார்கள்.

(2) சாத்தான் என்ற ஒரு தீயசக்தி மக்களை இறைவனிடமிருந்து பிரித்துவிடுகிறான்.

மேலே உள்ள வரிகளை மனதிலே வைத்துக்கொண்டு, “சாத்தான்” பற்றி ஏதாவது ஒரு சில விவரங்களை கண்டுபிடிக்க முடியுமா என்று நாம் இப்போது சிந்திக்கலாம்.

சாத்தான் மக்களை இறைவனிடமிருந்து தூரப்படுத்தவேண்டும் என்று விரும்பினால், மற்றும் இறைவனிடம் செல்வதற்கு இயேசு வழி என்று அவன் தெரிந்துக்கொண்டால், சாத்தானுடைய குறி எதுவாக இருக்கும்? மக்களை அதிகமாக கெட்டவர்களாக மாற்றுவது அவனின் மிக மிக முக்கிய நோக்கமாக இருக்காது (அவன் இறைவனிடமிருந்து மக்களை பிரிக்க, இப்படியும் மக்களை அதிகமாக தீயகாரியங்கள் செய்யச் செய்வான்), இதற்கு பதிலாக, மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது தள்ளிவிடவேண்டும் என்ற எண்ணத்தை அவன் மக்களின் மனதில் பாய்ச்சுவான். இதனால், மக்கள் உண்மை இறைவனிடம் சேராமல் இருக்க வாய்ப்பு உண்டாகும்.

ஆனால், எப்படி சாத்தான் மக்கள் இயேசுவை மறுத்துவிட அவர்கள் நம்பும்படிச் செய்வான்? நாம் ஒன்றை இங்கு கவனிக்கவேண்டும், அது என்னவென்றால், இந்த உலகத்தில் “இறைவன்” பற்றி அக்கரைக் கொள்ளாத அனேகமாயிர மக்கள் உள்ளனர். சாத்தான் அவர்களைப் பற்றி கவலைப்படமாட்டான், ஏனென்றால், இறைவன் மூலமாக வரும் இரட்சிப்பு அல்லது முக்தி பற்றி அவர்களுக்கு அக்கரை இல்லை. சாத்தான் முடிந்த அளவு எவ்வளவு மக்களை இறைவனுக்கு தூரமாக பிரிக்கமுடியுமோ என்று முயற்சி செய்கிறான். முக்கியமாக, ஓர் அளவிற்கு இறைவன் விஷயங்களில் அக்கரை காட்டும் மக்கள் மீது அவன் கண் எப்போதும் இருக்கும் என்று நாம் சொல்லமுடியும். மக்களை இறைவனிடமிருந்து வேறுபடுத்த சாத்தான் இரண்டுவகையான முறையை கையாள்வான்:

ஒன்று “இறைவன் நம்பிக்கை” ஒரு முட்டாள்தனம் என்று நம்பவைப்பான் (இப்போது நாம் உலகத்தில் காண்கின்ற “சமயசார்பற்ற – secularism” கொள்கையை பரப்புவான்)

அல்லது அவன் உண்மைக்கு பதிலாக வேறு ஒரு மார்க்கத்தை கொடுப்பான் (இரட்சிப்பு அல்லது முக்தி அடைய தடையாக இருக்கும் ஒரு மார்க்கம்)

கிறிஸ்தவம் உண்மையானதாக இருக்குமானால், சாத்தான் இயேசுவின் மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் மறுக்கும்படி மதங்களை நம்பும்படிச் செய்வான். சில நேரங்களில் இப்படிப்பட்ட மதங்கள் கிறிஸ்தவத்தைப் போல சில கோட்பாடுகளைக் கொண்டு இருக்கக்கூடும். கிறிஸ்தவம் உண்மையான மார்க்கமாக இருக்குமானால், என்ன நடக்க வாய்ப்பு உள்ளது என்று நாம் இப்போது சரியாக ஊகிக்கமுடியும். இப்போது “இஸ்லாம்” நம்முடைய ஊகத்திற்கு ஏற்றதாக உள்ளதா என்று பார்க்கலாம்.

இஸ்லாமுடைய போதனை இப்படியாக இருக்கும்: “இறைவனை நம்பு, நன்மைகளைச் செய்“. நீ அதிக நன்மைகள் செய்தால், உனக்கு சொர்க்கம் நிச்சயமாக கிடைக்கும். இயேசுவை மதிக்கவேண்டும், ஏனென்றால், அவர் அல்லாவினுடைய சிறந்த நபியாக (தீர்க்கதரிசியாக) இருக்கிறார், அவர் அல்லாவின் செய்தியை இஸ்ரவேல் மக்களுக்கு போதித்தார். மட்டுமல்ல, இயேசு கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்றும், அவர் அனேக அற்புதங்கள் செய்தார் என்றும், அவர் தான் “மஸிஹா – Messiah ” என்றும் நம்பவேண்டும். ஆனால்,நீங்கள் எதை நம்பினாலும், அவர் உன்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்பதை மட்டும் நம்பவேண்டாம். மற்றும் அவர் மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்தார் என்றும் நீங்கள் நம்பவேண்டாம். முக்கியமாக நீங்கள் செய்யும் மிகப்பெரிய பாவம் என்னவாக இருக்கும் என்றால், இயேசு ஒரு தேவகுமாரன் என்று நம்புவதாகும். இங்கு கவனிக்கவும், இஸ்லாம் இயேசுவின் மற்ற எல்லா காரியங்களையும் ஏற்றுக்கொள்கிறது, ஆனால், மனிதன் இரட்சிக்கப்பட தேவையான முக்கியமான விஷயத்தை மறுக்கிறது. முஸ்லீம்கள் இறைவனை நம்பவேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளனர், ஆனால், சாத்தானும் அவன் கூட்டமும் இறைவனை நம்புகின்றன (For instance, Muslims are commanded to believe in God, but even Satan and his demons believe in God). நல்ல காரியங்களை செய்யும் படி முஸ்லிம்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர், மற்ற மதங்களிலும் இதே கட்டளை உள்ளது. முஸ்லீம்கள் இயேசுவின் பிறப்பு அற்புதத்தையும், அவர் ஒரு நபி என்றும் இஸ்லாம் நம்பும்படிச் சொல்கிறது, ஆனால், இந்த நம்பிக்கை ஒரு மனிதனை இரட்சிக்காது. ஆக, எப்போது நாம் இயேசுவின் மரணம் உயிர்த்தெழல் போன்ற மனிதன் இரட்சிக்கப்ட தேவையான விவரங்களை சொல்கிறோமோ, அவைகளை மிகவும் கடினமாக இஸ்லாம் எதிர்க்கிறது[19]. Islam, then, looks exactly like the religion we predicted that Satan would form, for it denies what is necessary for people to come to God.

எனவே, கிறிஸ்தவத்தை நம்புகிறவர்கள் இஸ்லாம் போன்ற மார்க்கம் உருவாக வாய்ப்பு உள்ளது என்பதை சுலபமாக எதிர்பார்க்கலாம். பைபிளில் சொல்லப்பட்ட சில தீர்க்கதரிசன வசனங்களை(எதிர் காலத்தில் நடக்கும் என்று சொல்லப்பட்ட வசனங்கள்) நாம் பார்க்கலாம்:

இயேசு சொன்னார்: அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்[20], பவுல் கூட இப்படி சொல்கிறார் :”…சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள் .”[21] (The phrase “deceitful spirit” is reminiscent of the Qur’anic claim that Allah deceived people about the death of Jesus.) உண்மை சுவிசேஷத்தை கெடுக்க பொய் போதகர்களும், தீர்க்கதரிசிகளும் வருவார்கள் என்று, பைபிள் அடிக்கடி போதிக்கிறது. இந்த எச்சரிக்கையை முகமதுவின் காலத்தில் சிலர் கவனித்ததாக தெரிகிறது.

முடிவுரை

Final Thoughts

சரித்திரத்தை சிறிது திரும்பிபார்ப்போமானால் அனேகர் தங்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை கவனிக்கலாம். உண்மையில் இன்று கூட தங்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள், நாளைக்கும் சிலர் வரவாய்ப்பு உள்ளது. ஒரு வேளை எதிர்காலத்திலே ஒரு தீர்க்கதரிசி எழும்பி, தனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்று சொல்வார் என்று வைத்துக்கொள்வோம்[22]. நிச்சயமாக முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஒரு வேளை இந்த தீர்க்கதரிசி முஸ்லீம்களைப் பார்த்து கீழ்கண்டவாறு சொல்கிறார் என்று நினைத்துக்கொள்வோம்.

“சகோதரர்களே, நீங்கள் முகமதுவின் போதனையை நம்புகிறீர்கள், இதோ நான் சொல்கிறேன், இஸ்லாம் என்பது மக்களை ஏமாற்றுவதற்கு இறைவனால் உருவாக்கப்பட்டது”. ஏனென்றால், இஸ்லாமுக்கு முன்பு இருந்த அரேபியர்கள், மிகவும் கொடுமையான பழக்கங்களை கொண்டு இருந்தனர், அதாவது தங்கள் மகள்களை கொன்றுபோட்டனர், மற்றும் நூற்றுக்கணக்கான பெண்களை திருமணம் செய்தனர். இறைவன் அவர்களுக்கு தண்டனை கொடுக்க முடிவுசெய்தார், எனவே, அவர்களை வழிவிலகச் செய்தார், உண்மையை விட்டு பொய்யானவற்றை நம்பும்படிச் செய்தார். இதோ நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் இறைவனின் மிகப்பெரிய நபியாவேன், தீமையிலிருந்து உங்களை காப்பாற்ற வந்துள்ளேன்.

முஸ்லீம்கள் இவரை நம்புவார்களா? நிச்சயமாக நம்பமாட்டார்கள். ஏன் முஸ்லீம்கள் இந்த புதிய நபியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்? முஸ்லிம்கள் அவர் சொல்வதை நம்பமாட்டார்கள் ஏனென்றால், இறைவன் தெரிந்தே பல மில்லியன் மக்களை ஏமாற்றினார் என்று அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதே போலத்தான் இயேசுவின் மரணத்தின் செய்தியை நம்பினார்கள் முஸ்லீம்கள். ஆக, மக்களை மற்றும் தன் நபியை பின்பற்றிய சீடர்களையும் ஏமாற்றும் இறைவனின் மீது தங்கள் நம்பிக்கையை வைத்தால், தங்களுக்கு நிச்சயமாக உண்மை சொல்லப்பட்டிருக்கும் என்று எப்படி நம்புகிறார்கள். (So if Muslims believe in a God who deceives people, even those who follow his prophets, how can Muslims be confident that they have been given the truth?)

முஸ்லீம்கள் தங்கள் இறைவனைப்பற்றியும், தங்கள் தீர்க்கதரிசிகளைப் பற்றியும் அதிகமாக பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். ஆனால், நாம் சரியாக ஆராய்ந்துபார்ப்போமானால், இஸ்லாம் மிகப்பெரிய மதத்தின் இறைவனாகிய அல்லாவை ஏமாற்றுபவன் என்று குற்றம் சாட்டுகிறது. இப்போது நாம் சிறிது நின்று நிதானித்து சிந்திக்கவேண்டும். ஏன் தன்னைப் பற்றி கவுரவமாக பெருமைப்படும் மதம், தன் இறைவன், ஒரு பொய்யான மதத்தை ஆரம்பித்தார் என்று பறைசாற்றுகிறது. ஏன் இயேசுவை மதிக்கிறோம் என்று சொல்லும் மக்கள், அவர் மிகப்பெரிய படுதோல்வி அடைந்தார் என்று சொல்லிக்கொள்கிறார்கள்? இஸ்லாம் மிகவும் வேகமாக கிறிஸ்தவத்தை அழித்துவிட முயற்சி செய்ததாக தெரிகிறது, ஆனால், அதனால், தன்னைத்தானே அழித்துக்கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் இருக்கிறது. வேறு வகையில் சொல்லவேண்டுமானால், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்தெழுதலைப் பற்றிச் சொல்லும் போது, இஸ்லாம் இறைவனை(அல்லாவை) ஒரு “ஏமாற்றுபவர்” என்று சுட்டிக்காட்டுகிறது. இது இஸ்லாமிய கோட்பாடு இறைவனுக்கு பொருந்தக்கூடியது அல்ல. This desperation only makes sense if Christianity is true, and if Islam was designed by Satan to keep people from being saved.

முஸ்லீம்கள் இவைகள் அனைத்தையும் மறுக்கக்கூடும். அவர்கள் தங்கள் இறைவனுக்கு காட்டும் மதிப்பும், தங்கள் தீர்க்கதரிசிக்கு காட்டும் மரியாதையும் தொடரக்கூடும். ஆனால், அவர்கள் கிறிஸ்தவத்தை விவரிப்பதிலே சில விபரீதங்களைச் சொல்கிறார்கள். இறைவன் உலகத்தை திசைதிருப்பிவிட்டான்(astray) என்று அவர்கள் சொல்வது தான், புதுமையாக உள்ளது. இஸ்லாம் உண்மையாக இருக்குமானால், அல்லாவும், இயேசுவும் தோல்வி அடைந்தவர்கள் என்பது நிச்சயம். ஆனால், கிறிஸ்தவம் உண்மையாக இருக்குமானால், இறைவனும், இயேசுவும் வெற்றிப்பெற்றவர்கள். சிலுவையிலே இரட்சிகப்படுவதற்கான வாசல் திறந்தே இருக்கிறது, தங்கள் கதவுகளை திறக்கமாட்டோம் என்று மூடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் சேர்த்து.

பொய்யான தீர்க்கதரிசிகள் வருவார்கள் என்று இயேசு தன்னை பின்பற்றினவர்களுக்கு எச்சரித்தார். அவர்களை நம்பவேண்டாம் என்று கட்டளையும் கொடுத்துள்ளார். அவர்களை எப்படி நாம் கண்டுபிடிப்பது என்றுச் சொன்னால், அவர்களுடைய போதனைகள் இறைவனுக்கு தகுதியில்லாத குணத்தை இறைவனுக்கு உள்ளது போல காட்டக்கூடியதாக இருக்கும். இறைவன் உண்மையுள்ளவர், மற்றும் அன்புள்ளவர். இஸ்லாமை நாம் கூர்ந்து ஆராய்ந்தால், இந்த இரண்டும் இறைவனுக்கு இல்லை என்று நம்மை நம்பச்சொல்லும்.

Contact Author David Wood : wood_apologetics@hotmail.com

Notes:
1 See Qur’an, 24:25
2 Qur’an 19:23-26, 30-33,
3 Qur’an 42:13.
4 Qur’an 43:59, 63-64.
5 Qur’an 3:52.
6 Qur’an 5:111.
7 Qur’an 57:26.
8 1 Corinthians 15:3-5.
9 See 1 Clement 42:3.
10 See Polycarp, To the Philippians 1:2, 2:1-2, 9:2, 12:2.
11 See Josephus, Antiquities 18.64, and Tacitus, Annals 15.44.
12 Lucian of Samosata, The Death of Peregrine, 11-13.
13 Talmud, Sanhedrin 43a.
14 Qur’an 4:157-158. According to Muslim tradition, Allah made Judas Iscariot look like Jesus, so that Judas was crucified in Jesus’ place.
15 To associate partners with God is to commit the sin of shirk.
16 Qur’an 61:14.
17 For instance, John Dominic Crossan, of the notoriously anti-Christian “Jesus Seminar,” says “That [Jesus] was crucified is as sure as anything historical can ever be” (Jesus: A Revolutionary Biography [San Francisco: HarperCollins, 1991] p. 145).
18 This spirit being is not to be confused with the popular image of a harmless red figure with a pointy tail and a pitchfork!
19 One may wonder why I have not included belief in God among the doctrines necessary for salvation. I’m certainly not denying the necessity of belief in God. However, I do draw a distinction between a necessary doctrine and a necessary and sufficient doctrine. Belief in God is necessary for salvation, but it is not sufficient to produce it. In contrast, the Christian doctrines of confession of the lordship of Christ and belief in his resurrection from the dead are necessary and sufficient. That is, these doctrines are sufficient to guarantee the salvation of the Christian. Yet it is these doctrines that Islam most vehemently opposes.
20 Matthew 24:11.
21 1 Timothy 4:1.
22 Even Islam has had its share of self-proclaimed new prophets. Most notably, Mirza Ghulam Ahmad announced his prophethood towards the end of the 19th Century. He also claimed to be the second coming of Jesus. Millions of people have followed him. However, the vast majority of Muslims consider these “Ahmadiyyas” to be a heretical sect. The Ahmadiyyas, though they profess to be Muslims, aren’t even allowed to take the pilgrimage to Mecca. The Ahmadiyya movement is significant in that Ahmadiyyas say that true Islam was corrupted, just as Muslims claim that Christianity was corrupted. Hence, Ahmadiyyas claim that God sent another prophet to restore the true message of God. Muslims reject this, because they don’t believe that Islam has been corrupted. They conclude that Mirza Ghulam Ahmad must have been a false prophet. But this is the same reason Christians reject Muhammad. We don’t believe that Christianity has been corrupted, so Muhammad must have been a false prophet.

http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/davidwood/allahstartschristianity.htm

Isa Koran Home Page Back – Author David Wood’s Page page

setstats1

ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல ஈசாக்குரான் இணையம் பதில்


ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது “கர்த்தரை”, முகமதுவை அல்ல என்று ஈசாக்குரான் இணையம் இதி தான் இஸ்லாம் இணையத்துக்கு பதில் அளித்து உள்ளது
முகமது இறைத்தூதுவராக வந்தார் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். அது மட்டுமல்ல, மற்ற வேதங்களில் அவர் வருகைப் பற்றி எழுதப்பட்டுள்ளது என்று அவர்கள் தேடிக்கொண்டும், மாற்று மத வேதங்களில் சில வசனங்கள எடுத்துக்கொண்டு, இந்த வசனம் முகமதுவின் வருகைப் பற்றி சொல்கிறது என்று தவறாக சொல்லிக்கொண்டு வருகின்றனர்.

இப்படி இஸ்லாமியர்கள் சொல்கின்ற வசனங்களில் “பைபிளின் பழைய ஏற்பாட்டின்” ஆபகூக் புத்தகமும் ஒன்று. ஆபகூக் 3:3ம் வசனத்தில் வரும் “பரிசுத்தர் பாரான் வனாந்திரத்திலிருந்து வந்தார்” என்ற வாக்கியம் “முகமதுவை” குறிக்கும் என்று இஸ்லாமியர்கள் சொல்கின்றனர்.

இவர்களின் இந்த வாதம் தவறானது. இந்த வசனம் குறிப்பிடும் நபர் தேவனாவார் . இவர்களின் இந்த வாதம் சரியானதா இல்லையா என்பதை இக்கட்டுரை அலசுகிறது.

ஆபகூக் 3:3ம் வசனம் குறிப்பிடுவது “தேவன் அல்லது இறைவனைத் தான், முகமதுவை அல்ல” என்பதற்கான காரணங்கள்:

1. பாரான் என்பது மக்கா தான் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். இது தவறான ஆதாரமற்ற வாதம் என்பதை கீழே உள்ள கட்டுரை தெளிவாக விளக்குகிறது. இக்கட்டுரையை முதலாவது படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கட்டுரை-1: பாரான் என்பது மக்கா அல்ல!

2. இஸ்லாமியர்கள் உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது “முகமதுவைத் தான்” என்று சொல்கிறார்கள். இந்த வாதமும் தவறானது என்றும், இஸ்லாமியர்கள் பைபிள் வசனங்களுக்கு புது பொருள் கூறுகிறார்கள் என்றும், உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது “கர்த்தரைத் தான்” முகமதுவை அல்ல என்பதை அறிய கீழ்கண்ட கட்டுரையை படிப்பவர்கள் அறிந்துக்கொள்ளலாம்.

கட்டுரை-2: உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடும் நபர் “கர்த்தர்” முமகது அல்ல!

மேற்கண்ட இரண்டு கட்டுரைகள், இந்த தற்போதைய கட்டுரைக்கு அடித்தளமாக அமையும். எனவே அவைகளை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது ஆபகூக் 3:3ம் வசன விளக்கத்திற்குச் செல்வோம்.

இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ் முஸ்லீம் தளம் முன்வைத்த வாதம்:

பரிசுத்தர் பாரான் மலையிலிருந்து வந்தார் என்று ஆபகூக் கூறுகின்றது. முஹம்மத் அவர்கள் பாரான் மலையில் இருந்த போதுதான் கேப்ரீல் (ஜிப்ரீல்) என்ற தேவதூதர் முஹம்மதிடம் வந்து வேத வசனங்களை வெளிபடுத்தினார். கேப்ரீலை இஸ்லாம் பல்வேறு இடங்களில் ‘அவர் பரிசுத்தர்’ என்று சொல்லிக் காட்டுகின்றது.

Source

1. அல்லா அனுப்பியது “தோரா, ஜபூர், இஞ்ஜில்” மட்டும் தான் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர், பின் ஏன் ஆபகூக் லிருந்து ஆதாரம்?

இஸ்லாமியர்களின் நம்பிக்கைப் படி மோசேவிற்கு “தோராவையும் (ஆதியாகமம் – உபாகமம்)”, தாவீதுக்கு “ஜபூர் – சங்கீதம் ” என்ற வேதத்தையும், இயேசுவிற்கு “இஞ்ஜில்” என்ற வேதத்தையும் அல்லா இறக்கினான். இவைகள் தவிர பைபிளில் உள்ள மற்ற தீர்க்கதரிசன புத்தகங்கள் அல்லா இறக்கவில்லை என்றும், இன்னும் புதிய ஏற்பாட்டில் சுவிசேஷங்களுக்கு அடுத்துள்ள புத்தகங்கள் வேதங்கள் அல்ல என்று நம்புகின்றனர்[1].

இஸ்லாமியர்கள் ஒன்றை கவனிக்கவேண்டும், அதாவது “ஆபகூக்” என்ற புத்தகம் அல்லா இறக்கியதாக நம்பும் “தோரா, ஜபூர் மற்றும் இஞ்ஜில்” போன்ற மூன்று வேதங்களிலும் வராது.

என் கேள்வி:

1. இஸ்லாமியர்கள் பைபிளில் உள்ள மற்றும் அல்லா இறக்கியதாகச் சொல்லும் தோரா(ஆதியாகமம் -உபாகமம்), ஜபூர் ( சங்கீதம் ) மற்றும் இஞ்ஜில் வேதத்தையே நம்புவதில்லை. ஆனால், அல்லா இறக்கியதாகச் சொல்லாத “ஆபகூக்” என்ற பைபிள் புத்தகத்திலிருந்து மட்டும் ஏன் அவர்கள் ஆதாரத்தை முன்வைக்கின்றனர்?

2. பைபிளின் “ஆபகூக்” புத்தகத்தைப் பற்றி, ஏதாவது வசனத்தை அல்லா குர்-ஆனில் சொல்லியுள்ளாரா?

3. ஆபகூக் 3:3ம் வசனத்தை நம்பும் இஸ்லாமியர்கள், இந்த ஆபகூக் புத்தகம் முழுவதும் திருத்தப்படவில்லை என்று நம்புகிறார்களா?

4. தீர்க்கதரிசி ஆபகூக் போல பைபிளின் மற்ற தீர்க்கதரிசிகளாகிய ஏசாயா, எரேமிய, தானியேல் இன்னும் பல தீர்க்கதரிசிகள் புத்தகங்களையும் இஸ்லாமியகள் நம்புகிறார்கள் என்று நாம் நினைக்கலாமா?

2. ஆபகூக் புத்தகத்தின் சாராம்சம் (சாராம்சத்திற்கு வெளியே பொருள் தேடும் இஸ்லாமியர்கள்):

ஆபகூக் புத்தகம் முழுவதும் ஒரு முறை படித்துப்பாருங்கள். மக்களின் துன்மார்க்க வாழ்க்கையை பார்த்து தேவனிடம் முறையிடுகிறார்(ஆபகூக் அதிகாரங்கள் 1, 2) மற்றும் மூன்றாம் அதிகாரத்தில் தேவனின் அதிசய செயலை நினைத்து அவர் மீது சார்ந்துக்கொள்கிறார். தேவன் மூலமாக வரும் இரட்சிப்பை நினைத்து துதிபாடுகிறார்.

ஆபகூக் 1:2-4

2. கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே!

3. நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.

4. ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்கிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது

எதிர்காலத்தில் ஒரு தீர்க்கதரிசி வருவார் என்று ஆபகூக் 3:3ல் சொல்லப்படவில்லை. தேவன் கடந்த காலத்தில் செய்த அற்புதத்தைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் சொல்வது போல, முகமது பாரானிலிருந்து வருவார் என்று ஆபகூக் சொல்லவில்லை, இது இஸ்லாமியர்களின் கற்பனையே தவிர வேறில்லை.

ஆபகூக் புத்தகத்தில் உள்ள மூன்று அதிகாரங்களை படிக்கும்படி இஸ்லாமியர்களை கேட்டுக்கொள்கிறேன். அப்போது தான் சில இஸ்லாமிய அறிஞர்களின் இந்த வாதம் தவறானது என்பது புரியும்.

3. ஆபகூக் 3ம் அதிகாரம் ஒரு பாடலே (விண்ணப்பம்) ஒழிய, முகமது வருகையின் தீர்க்கதரிசனமல்ல?

ஆபகூக 3:1ம் வசனம் தெளிவாகச் சொல்கிறது, இந்த மூன்றாம் அதிகாரம் “ஒரு பாடலாகிய விண்ணப்பம்” என்று, இஸ்லாமியர்களின் கூற்றுப்படி இது ஒரு ” எதிர் காலத்தில் நடக்க இருக்கின்ற தீர்க்கதரிசன வார்த்தைகள் அல்ல “. பார்க்க ஆபகூக் 3:1

ஆபகூக் 3:1 ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம்.

A prayer of Habakkuk the prophet upon Shigionoth

இந்த பாடல் ஒரு வகையான வாத்தியத்தில் (அல்லது) ஒரு குறிப்பிட்ட இராகத்தில் பாடின பாடலாகும். அந்த வாத்தியம் அல்லது இராகம் சிகாயோனில் [2] என்று குறிப்பிடப்படுகிறது. இந்த வாத்தியத்தில் தாவீது இராஜா கூட ஒரு சங்கீதம் பாடினார், இதை ஏழாம் சங்கீதம் தலைப்பு பகுதியில் காணலாம். இந்த வார்த்தை ஏழாம் சங்கீதத்தில் ஒருமையில் கொடுக்கப்பட்டுள்ளது. (Note: Shiggaion = singular, Shigionoth = Plural)

சங்கீதம் 7ன் தலைப்பு பகுதி: பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தைகளினிமித்தம் தாவீது கர்த்தரை நோக்கி பாடின சீகாயோன் என்னும் சங்கீதம்.

A shiggaion of David, which he sang of the LORD concerning Cush, a Benjamite. (NIV Study Bible)

இந்த ஆபகூக் மூன்றாம் அதிகாரத்தின் முதல் சில வசனங்கள்(13 வசனங்கள்) ஒரு பாடல் தான் என்பதற்கு இன்னும் ஒரு ஆதாரம், ஆபகூக் 13ம் & 3:3 ம் வசனத்தின் கடைசியில் உள்ள “சேலா” என்ற வார்த்தையை பார்த்தால் புரியும்.

ஆபகூக் 3:13 உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காவுமே நீர் புறப்பட்டீர். கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; சேலா.

இந்த “சேலா ” என்ற வார்த்தை ஜபூர் என்ற சங்கீத புத்தகத்தில் 39 சங்கீதங்களுக்கு வருகிறது (சங்கீதம் 3,4,7,9,20, 140,143 etc…). இது பாடல்களுக்கு, அல்லது இசைக்கு சம்மந்தப்பட்ட ஒரு வார்த்தையாகும். இதனை சங்கீதத்தை(Psalm) படிப்பவர்கள் கவனிக்கலாம்.

இந்த விவரங்கள் நமக்கு தெளிவாகச் சொல்கிறன, இந்த ஆபகூக் 3ம் அதிகாரம் ஒரு விண்ணப்பம் அல்லது பாடலாகிய விண்ணப்பம் என்று. எனவே, ஆபகூக் 3:3ம் வசனம் முகமதுவினுடைய வருகையின் தீர்க்கதரிசனம் அல்ல என்பது தெளிவு.

4. ஆபகூக் 3:3 வசன “பரிசுத்தர்” என்பது தேவதூதரோ அல்லது மனிதனோ அல்ல, அவர் “கர்த்தர்”

இந்த வசனத்தில் ஆபகூக் தேவனைப் பற்றியும் அவருடைய மகிமையைப் பற்றியும் பேசுகிறார். இந்த இடத்தில் பரிசுத்தர் என்பது முகமதுவோ அல்லது இது தான் இஸ்லாம் தள கட்டுரை சொல்வது போல தேவதூதரோ அல்ல, இந்த வசனத்தில் சொல்லப்பட்ட பரிசுத்தர் “தேவன்” ஆவார் .

பாரான் என்பது மக்கா அல்ல. இது சீனாய் தீபகர்பத்தில் உள்ள பாரான் வனாந்திரமாகும். ( பாரான் என்பது மக்கா அல்ல என்ற கட்டுரையை இங்கு படிக்கவும் .)

ஆபகூக் 3:3 தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா . அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.

இந்த இடத்தில் ஆபகூக் கடந்த கால(Past not Future) நிகழ்ச்சியை குறிப்பிடுகிறாரே தவிர, தன் காலத்திலிருந்து 1200 ஆண்டுகளுக்கு பிறகு வரும் முகமதுவை குறித்து அவர் குறிப்பிடவில்லை. (ஆபகூக் காலம் கி.மு. 6ம் நூற்றாண்டாகும்). “வந்தார்” என்ற வார்த்தை கடந்த காலத்தை குறிக்கும், “வருவார்” என்று ஆபகூக் கூறவில்லை என்பதை கவனிக்கவும்.

இந்த ஆபகூக் பலமுறை கர்த்தர், தேவன், தேவரீர் என்று அடிக்கடி சொல்வதை காணலாம். அதாவது இவர் தேவனிடம் தொடர்ந்து விண்ணப்பம் செய்கிறதை பார்க்கலாம்.

பரிசுத்தர் என்ற வார்த்தையை தேவன் தன்னை குறிப்பிட பலமுறை பயன்படுத்தியுள்ளார். சில நேரங்களில் பக்தர்கள் “தேவன்” என்ற வார்த்தையும், “பரிசுத்தர்” என்ற வார்த்தையையும் சேர்த்தே (அடுத்ததடுத்து) பயன்படுத்தியுள்ளனர்.

ஆபகூக் 1:12-13 12 கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும் என் பரிசுத்தருமானவர் அல்லவா ? நாங்கள் சாவதில்லை, கர்த்தாவே, நியாயத்தீர்ப்பு செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர். 13 தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மெளனமாயிருக்கிறதென்ன?

12 O LORD, are you not from everlasting? My God, my Holy One, we will not die. O LORD, you have appointed them to execute judgment; O Rock, you have ordained them to punish.

13 Your eyes are too pure to look on evil; you cannot tolerate wrong. Why then do you tolerate the treacherous? Why are you silent while the wicked
swallow up those more righteous than themselves?

எசேக்கியேல்: 39:7 இவ்விதமாய் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவிலே என் பரிசுத்த நாமத்தைத் தெரிவிப்பேன்; என் பரிசுத்த நாமத்தை இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்கவொட்டேன்; அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய கர்த்தர் என்று புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்.

Ezekiel 39: 7 ” ‘I will make known my holy name among my people Israel. I will no longer let my holy name be profaned, and the nations will know that I the LORD am the Holy One in Israel.

ஓசியா: 11:9 என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாக வரேன்.

Hosea 11:9 I will not carry out my fierce anger, nor will I turn and devastate Ephraim. For I am God, and not man— the Holy One among you. I will not come in wrath

இந்த மேலே சொல்லப்பட்ட வசனங்களைக் கண்டும் நீங்கள் இன்னும் “பரிசுத்தர்” என்று ஆபகூக் 3:3ல் சொல்லப்பட்டது “தேவன்” தான் என்பதை நம்பவில்லையானால், நான் இன்னும் எத்தனை வசனங்களை ஆதாரமாக காட்டினாலும் நம்பமாட்டீர்கள்.

5. ” தேவன்” என்பதை “முகமது” என்று சொல்வது இஸ்லாமியர்களுக்கு “ஷிர்க்” ஆகும்

இஸ்லாமியர்கள் தொடர்ந்து செய்துக்கொண்டு வரும் ஒரு பெரிய தவறு என்னவென்றால், பைபிளில் எங்கெல்லாம் (தங்களுக்கு சாதகமான வசனங்களில்) “தேவன்” அல்லது “இறைவன்” என்று வருகிறதோ, அங்கெல்லாம் அந்த வார்த்தை குறிப்பிடுவது “முகமது” தான் என்று சொல்லிவருகிறார்கள்.

இது இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி “ஷிர்க் – SHIRK” ஆகும். அதாவது, அல்லாவிற்கு இணையாக மனிதனை ஒப்பிடுவது. இதை இவர்கள் தெரிந்து செய்கிறார்களோ தெரியாமல் செய்கிறார்களோ எனக்கு தெரியாது. முகமதுவை நபி என்று நிருபிக்க வேறு வழி ஏதாவது தேடினால் அவர்களுக்கு நல்லது, இல்லையென்றால் இறைவனுக்கு இணைவைத்த பாவத்திற்கு ஆளாகவேண்டி வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

6. பாரான் மலை அரேபியாவின் “ஹிரா” மலை அல்ல.

பாரான் என்பது மக்கா அல்ல என்பதை நாம் முன்பே பார்த்தோம். இங்கு இது தான் இஸ்லாம் தள நண்பர் எழுதுகிறார், பாரான் மலை என்பது “ஹிரா” மலையாகும் என்று. இதற்கு எந்த ஆதாரமும் காட்டமுடியாது.

இஸ்லாமியர்களின் வாதம் தவறானது என்று இது வரை நாம் பார்த்த விவரங்கள் மிகத்தெளிவாகச் சொல்கிறது. இவர்களுடைய வாதம் வெறும் ஆதாரமில்லாத வாதமே ஒழிய வேறில்லை.

7. ஆபகூக் இந்த வாதத்தைப் பற்றி இதர இஸ்லாமிய அறிஞர்கள்:

டாக்டர் ஜமால் பதாவி: இவர் இந்த வசனத்தைப் பற்றி பேசும் போது ஒருபடி மேலே சென்று, பைபிளின் பொருள் மாறும்படி சில வார்த்தைகளை அடைப்பிற்குள் எழுதி தன் வாதத்தை முன்வைக்கிறார்.

Dr. Jamal Badawi also claimed that, “Habakkuk 3:3 speaks of God (God’s help) coming from Te’man (an Oasis North of Medina according to J. Hasting’s Dictionary of the Bible), and the holy one (coming) from Paran. That holy one who under persecution migrated from Paran (Mecca) to be received enthusiastically in Medina was none but prophet Muhammad.” Source : http://bibleandquran.com/quran-word-of-god8.htm

தேவன் என்று வரும் வார்த்தையை தேவனின் உதவி அதாவது God’s Help என்று அடைப்பு குறிக்குள் போட்டுவிட்டு இவர் பொருள் கூறுகிறார். “God’s Help” என்று எழுதினால் தான், முகமதுவிற்கு உதவியாக இருக்கும் என்று இவர் எழுதுகிறார்.

இன்னொரு இஸ்லாமிய சகோதரர் தேவன் என்ற வார்த்தைக்கு பக்கத்தில் His Guidance என்று எழுதி வசனத்தை வெளியிடுகிறார். உண்மையில் அந்த வசனத்தில் தேவன் என்ற வார்த்தை உள்ளதே தவிர “தேவனின் உதவி” அல்லது God’s Guidance என்று இல்லை. இவைகள் எல்லாம் இஸ்லாமிய அறிஞர்களின் திருவிளையாடல்கள். Source: http://www.answering-islam.de/Main/Muhammad/Foretold/mish1a.html

முடிவுரை:

முடிவாக முகமதுப் பற்றி ஒரு வசனமும் பைபிளில் இல்லை. அப்படி இருந்து இருந்தால், அதை கிறிஸ்தவர்கள் தான் முதலாவது நம்பியிருப்பார்கள். மாற்று மத வேதங்களை எப்படியெல்லாம் திருத்திச் சொல்லவேண்டுமோ அப்படியெல்லாம் இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் திருத்திச் சொல்கிறார்கள். இதனால் ஒரு பிரயோஜனமும் இருக்காது.

இயேசுவிற்கு அடுத்து இன்னொருவர் வரவேண்டிய அவசியமே இல்லை. வேண்டுமானால், கள்ள தீர்க்கதரிசிகள் வருவார்கள், பல பொய்யைச் சொல்வார்கள், ஏன் பல அற்புதங்களையும் செய்வார்கள் என்று பைபிள் சொல்கிறது. இயேசு தான் வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் என்பதை இஸ்லாமிய அன்பர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஜெபத்துடன் முடிக்கிறேன்.


[1] இஸ்லாமியர்கள் பைபிளிலுள்ள எந்த புத்தகத்தையும் அல்லாவின் வேதம் என்று நம்புவதில்லை, அல்லாவே அவைகளை இறக்கினான் என்று குர்-ஆனில் சொல்லியிருந்தாலும். தோரா, ஜபூர், இஞ்ஜில் கூட திருத்தப்பட்டது என்று சொல்லிவருகிறார்கள், பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனாலும், இவர்களுக்கு முகமதுவை நபி என்று காட்ட (மக்களை குழப்ப) பைபிள் வசனங்கள் வேண்டும்.

[2] Q: In Hab 3:1, what is a shigionoth?

A: It is either a musical instrument, or possibly a style of music. We do not have any more details of the instrument today. It appears to be the plural form of Shiggaion, which Psalm 7 mentions. Source : http://www.muslimhope.com/BibleAnswers/hab.htm

பள்ளிக்கூட தலைமையாசிரியர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொலை


தாய்லாந்து பௌத்த பள்ளிக்கூட தலைமையாசிரியர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொலை செய்து எரிப்பு

தாய்லாந்து பௌத்த பள்ளிக்கூட தலைமையாசிரியர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். பிறகு அவரது உடலை இஸ்லாமிய பயங்கரவாதிகள் தீ வைத்து கொளுத்தினர்.

இவர்கள் அவர்கள் இருக்கும் வன்முறை மார்க்கத்தை விட்டுவிட்டு அமைதி மார்க்கம் வர இறையை இறைஞ்சுவோம்

School headmaster shot and burned in Thailand’s restive south
The Associated PressPublished: August 24, 2007

BANGKOK, Thailand: Suspected insurgents fatally shot a school headmaster and then set his body on fire Friday in Thailand’s violence-plagued south, police said.

Nong Bunsak, the 50-year-old headmaster of Ban Sano school, was shot while he was driving a car to pick up his wife, who taught at a nearly school in Pattani’s Yarang district, said police Sub. Lt. Dutsadee Siltrakul.

Suspected insurgents on motorcycles fired at his vehicle, forcing him to stop and attempt to run away, police said. They then shot him before setting his body aflame.

Drive-by shootings and bombings occur almost daily in Thailand’s three southernmost Muslim-majority provinces of Yala, Narathiwat and Pattani, where an Islamic insurgency that flared in January 2004 has killed more than 2,400 people.

Teachers, along with other government officials, have been prime targets of insurgent attacks. More than 60 public school teachers have been killed since 2004.

இது தான் இஸ்லாமின் பாரான் மலை கட்டுரைக்கு ஈசா குரான் மீண்டும் பதில்

BIBLE FAQ: உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, “கர்த்தரையா (யேகோவா)” அல்லது “முகமதுவையா” ?

இது தான் இஸ்லாம் தளம் “பாரான் மலையின் அக்னி பிரமாணம்” என்று ஒரு கட்டுரையை எழுதினார்கள். அதில் கீழ் கண்ட வாதங்களை முன் வைத்தார்கள்.


1. பைபிளில் வரும் “பாரான்” என்ற இடம், அரேபியாவின் “மக்கா” ஆகும்.

2. உபாகமம் 33:1-2 வசங்களில் சொல்லப்பட்டவர் முகமது ஆவார்.

3. ஆபகூக் 3:3ல் சொல்லப்பட்ட “பரிசுத்தர்” முகமது ஆவார்.


இஸ்லாமியர்கள் பொதுவாக கொண்டுள்ள இந்த மூன்று தவறான வாதங்களுக்கு பதில் கொடுத்துவிட்டு, கடைசியாக “இது தான் இஸ்லாம்” தள கட்டுரைக்கு பதில் தருகிறேன். எனவே, என் பதிலை(மறுப்பை) கீழ் கண்ட நான்கு தனி கட்டுரைகளாக முன்வைக்கிறேன்.


1. பைபிளின் “பாரான் வனாந்திரம்”, அரேபியாவின் “மக்கா” அல்ல. – (இந்த கட்டுரையை இங்கே படிக்கவும்)

2. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, “கர்த்தரையா – யேகோவா” அல்லது “முகமதுவையா” ?

3. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடும் “பரிசுத்தர்” யார்?

4. இது தான் இஸ்லாம் கட்டுரை “பாரான் மலையில் அக்னி பிரமாணம்” : ஈஸா குர்-ஆன் பதில் (மறுப்பு)


2. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, “கர்த்தரையா” அல்லது “முகமதுவையா” ?
(பாரான் மலையின் அக்னி பிரமாணம் கட்டுரைக்கு பதில் 2 (Part 2 of 4))

இஸ்லாமியர்கள் சில பைபிள் வசனங்கள் இறைவனின் வார்த்தை தான், அவைகளை யாரும் திருத்தவில்லை என்று சொல்கிறார்கள். முக்கியமாக அந்த வசனங்களில் அவர்கள் “முகமதுவை” பார்க்கிறார்கள், அதனால் தான் அவைகள் அவர்களுக்கு ஆதாரமாக தென்படுகிறது.

உபாகமம் 33:2ம் வசனத்தில் முகமதுவைப் பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது என்றுச் சொல்கிறார்கள்.

உபாகமம் 33:2ல் வரும் “பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடு பிரசன்னமானார் ” என்ற சொற்றொடர் “முகமது மக்காவிற்கு தன் தோழர்களோடு நுழைந்த நிகழ்ச்சியோடு ” ஒப்பிடுகிறார்கள்.

இஸ்லாமியர்களுடைய இந்த கருத்து ஆதாரமற்றது என்றும், பைபிளின் இந்த வசனத்திற்கும் முகமதுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் இந்த கட்டுரையில் தகுந்த ஆதாரங்களோடு நாம் காணலாம்.

உபாகமம் 33:2ம் வசனத்தில் சொல்லப்பட்டவர் முகமது அல்ல என்பதற்கான ஆதாரங்கள் அல்லது காரணங்கள்.

1. இஸ்லாமியர்கள் நினைப்பது போல “பாரான்” என்பது “மக்கா” அல்ல என்பதை இந்த கட்டுரையை படித்தால் புரிந்துக்கொள்ளலாம். இது இஸ்லாமியர்களின் ஆதாரமற்ற ஒரு வாதமே ஒழிய உண்மையல்ல. ( படிக்க : பைபிளின் பாரான் அரேபியாவில் உள்ள மக்கா அல்ல)

2. முகமது இஸ்மவேலின் வம்சத்தில் வந்தவர் அல்ல. படிக்கவும் 1) Ishmael is not the father of Muhammad and 2) Ishmael is not the father of Muhammad Revisited.

இனி உபாகமம் 33:2ம் வசனத்தை நம் ஆய்விற்கு எடுத்துக்கொள்வோம்.

உபாகமம் 33:1-2

உபாகமம்: 33:1-2 1. தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது,2. கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி , சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது .

இந்த வசனத்தில் நாம் முக்கியமாக ஆராயவேண்டிய வாக்கியங்கள் இவைகள்:

1. கர்த்தர்…..பிரசன்னமானார்.

2. சீனாய்…. சேயீர்…. பாரான்:

3. பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்:

4. அக்கினி மயமான பிரமாணம்

இப்போது மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு தலைப்பையும் நாம் சிந்திப்போம், இதன் மூலம் இவ்வசனத்தில் சொல்லப்பட்ட செய்திகள் முகமதுவிற்கும் இஸ்லாமிற்கும் எவ்விதத்திலும் சம்மந்தமில்லாதது என்பது விளங்கும்.

1. கர்த்தர்…..பிரசன்னமானார்.

இந்த வசனம் ஒரு மனிதனைப் பற்றியோ, இறைத்தூதரைப் பற்றியோ சொல்வதில்லை. குறைந்தபட்ச அறிவை பயன்படுத்தி இவ்வசனத்தை பார்த்தாலே போதும், இதில் சொல்லப்பட்டவர் “கர்த்தர்” அல்லது “தேவன்” என்பது விளங்கும்.

இஸ்லாமியர்கள் சொல்வது போல பாரானிலிருந்து பிரசன்னமானவர் “முகமது” அல்ல, அவர் கர்த்தர்.

தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலர்கள் வனாந்திரத்திலே சஞ்சரிக்கும் போது, பகலிலே “மேக ஸ்தம்பமாகவும் “, இரவிலே “அக்னி ஸ்தம்பமாகவும் ” அவர்களின் 40 வருட பயணத்தின் போது அவர்களோடு வந்தார். இஸ்ரவேலர்கள் எத்தனைமுறை கோபப்படுத்தினாலும், அவர்களை விட்டு விலகாமல் அவர்களோடு வந்தார். இதையே மோசே அவர்களை ஆசீர்வதிக்கும் போது, முதலாவது சொல்கிறார்.

இஸ்லாமியர்கள் ஒன்றை கவனிக்கவேண்டும், ஏதோ முகமதுவை பைபிளில் கண்டுபிடிக்கிறேன் என்றுச் சொல்லி, “தேவன்” வரும் இடத்தில் முகமதுவை ஒப்பிட்டுச் சொல்வது, இஸ்லாமியர்கள் தினமும் தங்கள் வாயில் உச்சரிக்கும் “லாயிலாஹா இல்லல்லாஹூ” என்ற வாக்கியத்தையே அவர்கள் புறக்கனிக்கிறவர்களாக மாறிவிடுகின்றனர். அல்லாவோடு முகமதுவை ஒப்பிடுவது போல ஆகிவிடுகிறது. எனவே, அல்லாவிடம் மன்னிப்பை கோரும் படி கேட்டுக்கொள்கிறேன்.

2. சீனாய்…. சேயீர்…. பாரான்:

தேவன் இஸ்ரவேல் மக்களை மோசே தலைமையில் கானானுக்கு அழைத்துக்கொண்டு வரும் போது, அவர்களுக்கு சீனாய மலையில் கட்டளைகளை கொடுத்தார். அந்த கட்டளைகள் கொடுக்கும் நிகழ்ச்சி இஸ்ரவேல் மக்களின் மனதில் நீங்கா பாதிப்பை உண்டாக்க வேண்டுமென்றும், மோசேவுடைய மதிப்பு மரியாதை இன்னும் அதிகரிக்கவேண்டுமென்று தேவன் விரும்பினார்.

தேவன் சீனாய் மலையில் தன் மகிமையோடு இறங்கி பேசியதை பைபிளின் வார்த்தைகளில் பாருங்கள்.

யாத்திராகமம்: 19:9 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி, நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான். யாத்திராகமம் 19:11 மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார் .

யாத்திராகமம்: 19:12 ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும்,அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான் .13. ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும்சரி, மனிதனானாலும்சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார்.

யாத்திராகமம் 19:16 மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள் .17. அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள். யாத்திராகமம் 19:18 கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. யாத்திராகமம் 19:19 எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார் . யாத்திராகமம் 19:20 கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.

இந்நிகழ்ச்சியை உங்கள் கற்பனையில் கொண்டுவாருங்கள். சீனாய் மலை புகைக்காடாய் தென்படுகிறது, அக்கினி தென்படுகிறது. இடியும், மின்னலும் தன் உக்கிரத்தை காட்டுகின்றன, மக்கள் மலையை தொடக்கூடாது, தொட்டால் நிச்சயம் மரணம். ஆனால், மோசே மலையில் ஏறிப்போகிறார். இதை கண்ட மக்களின் மனதில் ஒரு விதமாக பயம் வியாபிக்கிறது.

தேவனின் சத்தம் பல லட்ச இஸ்ரவேல் மக்களை களங்கடித்தது, எனவே அவர்கள் மோசேயிடம் வேண்டிக்கொண்டார்கள், நீர் பேசும், தேவன் எங்களோடு பேசவேண்டாம் என்று.

யாத்திராகமம்: 20:18 ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,19. மோசேயை நோக்கி, நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.20. மோசே ஜனங்களை நோக்கி, பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான். யாத்திராகமம் 24:17 மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது .18. மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.

இப்படி இந்நிகழ்ச்சி இஸ்ரவேல் மக்களின் இதயங்களில் பதிந்துவிடுகிறது. பிறகு அவர்கள் சேயீர் வானாந்திர வழியாக, பாரான் வனாந்திர வழியாக கானானை அடைகின்றனர். பாரானில் அதிக நாட்கள் தங்குகின்றனர். மோசே வேவுக்காரர்களை அனுப்பி கானான் பற்றிய சில விவரங்களை தெரிந்துக்கொள்கிறார்.

பழைய ஏற்பாட்டு பக்தர்கள் தங்கள் பாடல்களில், ஜெபங்களில் இந்நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிடுவார்கள்.

அ) தொபோராள் பெண் தீர்க்கதரிசினி தன் பாடலில் நினைவுகூறுகிறார்.

நியாயாதிபதிகள்: 5:3 ராஜாக்களே, கேளுங்கள்; அதிபதிகளே, செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப்பாடி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.4. கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது .5. கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்கள் கரைந்தது; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக சீனாயும் கரைந்தது.

ஆ) தாவீது இராஜா நினைவு கூறுகிறார்:

சங்கீதம்: 68:7 தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று அவாந்தரவெளியிலே நடந்துவருகையில்,(சேலா.)8. பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய் மலையும் அசைந்தது.

இ) நெகேமிய நினைவு கூர்ந்து ஜெபிக்கிறார்:

நெகேமியா: 9:11 நீர் அவர்களுக்கு முன்பாகச் சமுத்திரத்தைப் பிரித்ததினால், கடலின் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள்; வலுவான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்.12. நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும் அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினி ஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.13. நீர் சீனாய் மலையிலிறங்கி வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.

ஈ) ஆபகூக் தன் வேண்டுதலில்(பாடலில்) நினைவுகூறுகிறார்:

ஆபகூக்: 3:3 தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.4. அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மனறந்திருந்தது.5. அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் செடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.6. அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது ; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.

இப்படியாக, இஸ்ரவேல் மக்கள் அந்த நிகழ்ச்சியை தங்கள் பாடல்களிலும், வேண்டுதல்களிலும் நினைவு கூர்ந்து தேவனை மகிமைப்படுத்தினார்கள். சீனாய், சேயீர், பாரான் என்றுச் சொல்லி, தேவன் எழுந்தார், நடந்தார், கட்டளை கொடுத்தார் என்றும், மலைகள் நடுங்கியது, அதிர்ந்தது என்று பாடல்களிலே பாடினார்கள். இந்த நிகழ்ச்சிக்கும் முகமதுவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது மட்டுமல்ல, சீனாய், சேயீர், பாரான் என்ற மூன்று இடங்களும் சீனாய் தீபகர்பத்தில் உள்ளதை குறிக்கிறது.

( பாரான் மக்கா அல்ல என்ற கட்டுரையை பார்க்கவும் )

3. பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்:

இஸ்லாமியர்கள், இந்த வாக்கியத்தில் வரும் “பரிசுத்தவான்கள்” என்பதையும், “பதினாயிரங்களானவர்கள்” என்பதையும் தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்கள். முகமதுவோடு மக்காவில் பிரவேசித்த அவருடைய தோழர்கள் பத்தாயிரம் பேரைத் தான் இந்த வசனத்தில் “பரிசுத்தவான்கள்” என்று குறிப்பிட்டுள்ளது என்று எண்ணுகின்றனர். மற்றும் “பதினாயிரங்களான” என்ற வார்த்தையை அவர்கள் 10,000 என்று எண்ணிக்கொண்டுள்ளனர்.

இவ்வசனத்தின் உண்மை பொருளை இப்போது பார்க்கலாம்.

அ) இவ்வசனத்தில் “பரிசுத்தவான்களோடே” என்பது மனிதரை அல்ல, தேவ தூதர்களைக் குறிக்கிறது

கீழுள்ள பைபிள் வசனங்களைப் பார்க்கவும்.

அப் 7:53 தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும் , அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.

கலாத்தியர்: 3:19. அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது .

எபிரெயர்: 2:2 ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க

ஆ) Ten -thousand மற்றும் Ten thousands வெவ்வேறானவை, ஒன்றல்ல.

இஸ்லாமியர்கள் சொல்வது போல, இந்த வசனத்தில் வரும் எண்ணிக்கை சரியாக Ten Thoousand – 10,000 (singular) என்று வராமல் Ten Thousands (Plural) என்று சொல்லப்பட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பில் “பதினாயிரங்களோடே” என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆங்கிலத்தில் சரியாக மொழி பெயர்த்துள்ளனர். சரியாக 10,000 எண்ணை குறிப்பிடவேண்டுமானால், TEN THOUSAND என்று எழுதுவோம், பல ஆயிரங்கள் என்றுச் சொல்லவேண்டுமானால், TEN THOUSANDS OR TENS OF THOUSNAD என்று குறிப்பிடலாம். இந்த வசனத்தில் வரும் “பதினாயிரங்கள்” என்பது இஸ்லாமியர்கள் சொல்வது போல, சரியாக 10,000 அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ளது கணக்கிலடங்கா (myriads) எண்ணிக்கை என்று பொருள்.

ஆதாரம் தேவையானால், இதோ சங்கீதம் 68:17.

சங்கீதம் 68:17 தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது, ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்தவண்னாமாய் அவைகளுக்குள் இருக்கிறார்.

Psalm 68: 17 The chariots of God are tens of thousands and thousands of thousands ; the Lord has come from Sinai in to his sanctuary.(NIV) Source: http://www.biblegateway.com/passage/?search=psalm%2068:17&version=31

இந்த சங்கீதம் சொல்கிறது, அவர் சீனாய் மலையில் இறங்கும் போது, எப்படி பல ஆயிர இரதங்களின் மத்தியில் இருந்தாரோ அது போல என்றுச் சொல்கிறது. பொதுவாக தேவன் இறங்குகிறார் என்றால், அந்த இடத்தில் தேவதூதர்கள், இரதங்கள், அக்கினி, மகிமை என்று பலவிதங்களில் வருனிப்பார்கள் . இதை நாம் பைபிளில் பல சந்தர்பங்களில் பார்க்கலாம்.

சீனாய் மலையில் தேவனொடு கூட அக்கினி, மகிமை, இடி,மின்னல் போன்றவைகளை மக்கள் கண்டு நடுங்கினர். சலொமோன் தேவாலயம் கட்டி பிரதிஸ்டை செய்யும் போது, இதே போல மகிமை ஆலயத்தை சூழ்ந்துக்கொண்டது(1 இராஜா 8:10-11).

இங்கு வரும் “பதினாயிரங்களோடே – Ten Thousands” என்ற வார்த்தை வரும் எபிரேய வார்த்தை பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை இங்கு ( Response to Osama Abdulla ) படிக்கலாம். இக்கட்டுரையில் ஒசாமா அப்துல்லா என்பவரின் இதே கேள்விக்கு மிகதெளிவாக எபிரேய வார்த்தையின் விவரங்களோடு, இலக்கணத்தோடு பதில் கொடுக்கப்பட்டுள்ளது. எபிரேய வார்த்தையைப் பற்றி தனி கட்டுரை வேண்டுமானால், பார்க்கலாம். அதைப்பற்றி இங்கு எழுதினால், கட்டுரை இன்னும் நீண்டதாக மாறும். எனவே, இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்கவும்.

பதினாறு ஆங்கில மொழி பெயர்ப்புகளில் இரண்டு மொழி பெயர்ப்பில் மட்டுமே தவறாக “TEN THOUSAND” என்று உள்ளது, மீதியுள்ள 14 மொழி பெயர்ப்புகளில் “TEN THOUSANDS ” என்றும் “MYRIADS” என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.

First, it should be stated that the New American Standard and Today’s English Version are the only ones that read the singular “ten thousand” in Deut. 33:2. So Osama is wrong regarding the rendering of the RSV, the Webster’s Bible and the WEB. The following English translations also render the word as “ten thousands”: ASV, DRA, ESV, GNV, KJV, NKJ, RWB; likewise, the Greek Septuagint (LXX) renders it as plural. The following English translations render the word as “myriads” [plural]: DBY, JPS, NIB, NIV, NRS, YLT. The following English translations translate the word as a place-name: BBE, NAB, NLT, TNK. One English translation (NJB) paraphrases the text as though no number is there. Of all the 16 translations that render the word as a number, roughly two (NAS and TEV) renders the plural word as a singular. One cannot build a case on an incorrect translation. Standard Hebrew grammar, syntax, and lexicography expect the plural form of the word to be translated plural. (Formats are mine -Isa Koran) Source : http://www.answering-islam.org/Responses/Osama/holy_ones.htm

எனவே, இந்த வசனத்தில் பதினாயிரங்கள் என்பது கணக்கிலடங்கா அல்லது ஆயிரமாயிரமானவர்கள் என்று பொருள்படுமே தவிர, சரியாக 10,000 என்று பொருள் அல்ல.

இ) இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் கூற்றுப்படி 12000 பேர் மக்காவில் நுழைந்தார்கள்

இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் இபின் இஷாக் தன் “ சூரத் ரசூலுல்லா ” என்ற முகமதுவின் சரிதையில் சொல்கிறார் “முகமது மக்காவில் 12000 மனிதர்களோடு நுழைந்தார்”.

Source: http://www.faithfreedom.org/Articles/sira/23.htm

Then the apostle marched out with two thousand Meccans and the ten thousand companions who had gone with him before to the conquest of Mecca . The apostle said, gazing at the greatness of this army of Allah, ‘This day we shall not be overcome because our number is small!’ They marched to meet the Hawazin.

4. அக்கினி மயமான பிரமாணம்

இஸ்லாமியர்கள் சொல்வார்கள், அக்னி மயமான பிரமாணம் என்பது “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற இயேசுவின் கட்டளை” சரியாக பொருந்தாது, முகமது கொண்டுவந்த பிரமாணமாகிய “கணுக்கு கண், பல்லுக்கு பல்” என்பது தான் என்று சொல்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் ஒன்றை மறந்துப்போகிறார்கள், அது என்னவென்றால், “ஒரு கன்னத்தில் அறைந்தால்…” கட்டளையை கொடுத்தவர் மோசே அல்ல.

மோசே கொண்டுவந்த கட்டளை கூட “அக்னி மயமாக கட்டளைகள்” தான். அதாவது, பழைய ஏற்பாட்டு காலத்தில் மோசே முலமாக தேவன் கொடுத்த கட்டளை “கணுக்கு கண், பல்லுக்கு பல்” என்பதாகும்.

மக்களை குழப்புவதற்கு இஸ்லாமியர்கள் “இயேசுவின் கட்டளைகளை” இயேசுவிற்கு முன் 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மோசேவோடு சம்மந்தப்படுத்தி, மோசே கொண்டுவந்தது, அக்னி மயமான கட்டளைகள் கிடையாது என்று சொல்கிறார்கள். ஆனால், மோசேயின் கட்டளைப் போலவே, முகமது கொண்டுவந்ததும் “கண்ணுக்கு கண்” கட்டளைகள் தான்.(ஆனால், முகமதுவிற்கு இறக்கப்பட்ட கட்டளைகள் மோசேவிற்கு இறக்கப்பட்ட கட்டளைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு, ஜிஹாத், திருமண, விவாகரத்து கட்டளைகள் இன்னும் பல)

ஆனால், ஒரு விவரத்தை மறந்துப்போகிறார்கள், தேவன் கொடுக்கும் கட்டளைகள் அனைத்தும் “அக்னி மயமான கட்டளைகள்” தான். சீனாய் மலையில் அக்னி மலையை சூழ்ந்துக்கொண்டிருக்க பெற்ற கட்டளைகள் என்பதனால், அப்படி ” அக்னி மயமான பிரமானம் (கட்டளை)” என்று குறிப்பிடப்பட்டதே தவிர, இஸ்லாமியர்கள் சொல்வது போல் அல்ல.

தேவனுடைய வார்த்தைகள் அக்கினி போல் இருக்கிறது என்று தேவன் சொல்கிறார்.

எரேமிய 23:29. என் வார்த்தை அக்கினியைப் போலும் , கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

தேவனுடைய வார்த்தகள் நம் எலும்புகளிலும், இதயத்திலும் அக்கினிப்போல எரியும்.

எரேமியா 20:9 ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன் ; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.

தேவன் தன் வார்த்தைகளை அக்கினி போல ஆக்குவார்

எரேமியா 5:14 ஆகையால் சேனைகளின் தேவனாகி கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும் .

இப்படி பல வசனங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

சங்கீதம் 29:7 கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்.

உபாகமம் 4:15 கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில் , நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.

தேவன் இடிமுழக்கங்கள் மூலமாகவும், பேரொளி மூலமாகவும் பேசுவார்(பதில் அளிப்பார்) என்பதற்கான சில குர்-ஆன் வசனங்கள். இவ்வசனங்களில் இறைவனோடு இடிமுழக்கத்தையும், பேரொளியையும், சம்மந்தப்படுத்தி சொல்லப்பட்டதாலும், சீனாய் மலை(தூர் – ஸினாய்) பற்றிய மோசேயின் நிகழ்ச்சி சொல்லப்பட்டதாலும் இவ்வசனங்களை மேற்கோள் காட்டினேன்.

இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், ‘மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது. (2:55)

நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார். (7:143)

இன்னும், நாம் அவரை தூர் (ஸினாய்) மலையின் வலப்புறத்திலிருந்து கூப்பிட்டோம்; மேலும் இரகசியத்தில் பேச நாம் அவரை நம்மிடம் நெருங்கி வரச் செய்தோம். (19:52) Source : http://chittarkottai.com/quran/surawise.php

எனவே, அக்னி பிரமாணம் என்பது ஒன்றும் இஸ்லாமிய பிரமாணங்களை குறிக்காது . தேவனுடைய வார்த்தைகள் அனைத்தும் அக்னி போல, நம்மை சுடும், நம்மை நல்வழிப்படுத்தும், நம் அழுக்குகளை எரித்துவிடும். எனவே, இஸ்லாமியர்களின் வாதத்திற்கும் இவ்வசனத்தின் அக்னி பிரமானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வசனம் ஒரு தீர்க்கதரிசனமல்ல, அது கடந்த கால நிகழ்ச்சியின் ஒரு நினைவு:

முடிவாக, மோசே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிக்கும் போது, அவர்களை நடத்திக்கொண்டு வந்த தேவனின் செயலை ஒருமுறை அவர்களுக்கு நியாபகம் செய்கிறாரே தவிர, எதிர் காலத்தில் நடைபெறும் ஒரு தீர்க்கதரிசனத்தைச் சொல்லவில்லை. இவ்வசனத்தை கவனித்தால் தெரியும், “பிரசன்னமானார்” என்பது கடந்த கால நிகழ்ச்சியே தவிர எதிர கால நிகழ்ச்சி அல்ல.

எப்பிராயீமின் பதினாயிரங்கள், மனாசெயின் ஆயிரங்கள்:

இதே உபாகமம் 33ம் அதிகாரம் 17ம் வசனத்தை சிறிது கவனித்தால், நான் சொல்வது மிகத்தெளிவாகப் புரியும். அதாவது மோசே இஸ்ரவேலின் ஒவ்வொரு வம்சத்தையும் ஆசீர்வதிக்கிறார். எப்பிராயீம் மற்றும் மனாசே என்ற வம்சத்தை ஆசீர்வதிக்கும் போது, “பதினாயிரங்கள்” (33:2ல் சொல்லப்பட அதே வார்த்தை), “ஆயிரங்கள்” என்று ஆசீர்வதிக்கிறார். இஸ்லாமியர்கள் சொல்வதைப் போல, “பதினாயிரங்கள்” என்றுச் சொன்னால், சரியாக பத்தாயிரம் தான் என்றுச் சொன்னால், எப்பிராயீமின் பிள்ளைகள்(தலையீறுகள்) வெறும் பத்தாயிரம் அளவிற்கு மட்டும் தான் பெருகுவார்கள் என்று பொருள்படும். இது சரியான பொருளாக இருக்காது. உன் வம்சத்தின் பெருக்கம் பதினாயிரங்கள் என்று ஆசீர்வாதம் கூறினால், வெறும் பத்தாயிரம் என்று நினைப்பது தவறான புரிந்துக்கொள்ளுதல்(Interpretation) ஆகும்.

உபாகமம் 33:17 அவன் அலங்கரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; அவைகளாலே ஜனங்களை ஏகமாய் ஜனத்தின் கடையாந்தரங்கள்மட்டும் முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்

முடிவுரை: முதலில், பாரான் என்பது மக்கா அல்ல. இதற்கு ஆதாரம் இல்லை. இரண்டாவதாக, சீனாய், சேயீர், மற்றும் பாரான் என்பது இஸ்ரவேல் மக்கள் கடந்து வந்த பாதையாகும். பரிசுத்தர்கள் என்பது, தேவ தூதர்களைக்குறிக்கும். பதினாயிரங்கள் என்று தமிழில் மொழி பெயர்த்தது, சரியாக 10000 என்பதல்ல, இது பல ஆயிரங்கள் என்று பொருள்.

முக்கியமாக இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் குறிப்பிடுவது போல, 12000 பேரோடு அவர் மக்காவிற்குள் நுழந்தார், 10000 பேரோடு அல்ல. பைபிள் முழுவதும் நாம் தேடுவோமானால், அக்கினியை தன் வார்த்தையாக தேவன் அதிகமாக பயன்படுத்துவதை காணலாம்.

மற்றுமொரு விவரம் என்னவென்றால், இவ்வசனம் சொல்வது, பதினாயிரங்களோடே பாரானிலிருந்து பிரசன்னமானார் (வெளிப்பட்டார்) என்பது, ஆனால், முகமது தன் 12000 மனிதர்களை மக்காவிலிருந்து வெளியே (மதினாவில்) சம்பாதித்துக்கொண்டு, மக்காவிற்குள்(பாரனுக்குள்) நிழைகிறார். இது எப்படி இவ்வசனத்திற்கு பொருந்தும்?

எனவே, மோசே சொன்ன பாரானிலிருந்து பிரசன்னமானார் என்பது கர்த்தரை குறிக்குமே ஒழிய “முகமதுவையோ, அல்லது அவரது பிரமானங்களையோ” குறிக்காது.

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/paran/deut332.htm

இஸ்லாமியர் அல்லாதவரோடு விவாதம் செயவது எப்படி?


இஸ்லாமியர் அல்லாதவரோடு விவாதம் செயவது எப்படி? – நகைச்சுவை

சில நேரங்களில் நாம் இஸ்லாமியர்களோடு விவாதம் செய்யவேண்டி வருகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் அவர்கள் எவ்விதம் தப்பித்துக்கொள்வார்கள் என்று ஆயிஷா அஹமத் என்பவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமே இது. சிரியுங்கள், சிந்துயுங்கள், ஜாக்கிரதையாக இருங்கள்.

HOW TO DEBATE AND FRUSTRATE INFIDELS
Author: Ayesha Ahmed

அன்புள்ள இஸ்லாமிய சகோதர்கள் சகோதரிகளுக்கு:

நாம் குஃபார் நாட்டில் வாழுகிறோம். நம்மோடு விவாதம் செய்யவும், மற்றும் இஸ்லாமையும், நம் நபி அவர்களையும் விமர்சிக்கும் நபர்களையும் அனுதினமும் நாம் சந்திக்கவேண்டியுள்ளது. இதே ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தால், நாம் என்ன செய்வோம்? அவர்கள் சொல்வதை மிகவும் சத்தமிட்டு சொல்லிவிடுவோம், மீதியான வேலையை ஒரு கோபமான கூட்டம் பார்த்துக்கொள்ளும். விமர்சிப்பவன் ஒரு நிமிடத்திலே எரிந்துவிடுவான், விமர்சிப்பவன் ஒரு நிமிடத்திலே எரிந்துவிடுவான், அவன் கதை முடிந்துவிடும். ஆனால், அந்த வசதி இப்போது நமக்கு இல்லை. இன்ஷா அல்லா, எதிர்காலத்தில், சிறையில் உள்ள குற்றவாளிகளை இஸ்லாமியர்களாக மாற்றிய பிறகு, சட்டத்திற்குட்பட்டும், படாமலும் இம்மிக்ரேஷன் செய்துக்கொண்டும், இன்ஷா அல்லா ஒரு பெரும்பான்மை
மக்களாக மாறுவோம், அப்போது ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட பிரச்சனை நமக்கு இருக்காது. இருந்த போதிலும், இப்போதைக்கு கீழ்கண்ட வழிமுறையை எல்லா முஸ்லீம் சகோதரர்களும், சகோதரிகளும் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்தவும். ஜஜகல்லா கைர். இன்ஷா அல்லா, உங்கள் பாதை மிகவும் தெளிவாக இருக்கும்.

1. ஒரு புகழ்பெற்ற கேள்வி இருக்கிறது, “ஏன் இஸ்லாமை விமர்சிப்பவர்களையும், இஸ்லாமை விட்டு வெளியேருபவர்களையும் கொல்லும் படி இஸ்லம் சொல்கிறது” அவர்களின் இந்த விவரம் பொய்யானது என்று அழுத்திச் சொல்லுங்கள். இந்த வசனத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டுங்கள் “உங்களுக்கு உங்கள் மதம், எனக்கு என் மதம்”.

2. “இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்பட்டது” என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள் “இது யூதர்கள் மற்றும் இந்துக்கள் பரப்பிய மிகப்பெரிய பொய்யாகும், ஆனால் குர்-ஆன் மிகத்தெளிவாகச் சொல்கிறது “இஸ்லாமில் கட்டாயமில்லை” என்று பதில் சொல்லுங்கள்.

3. யாராவது குர்-ஆனின் மிக கொடூரமான வசனங்களை எடுத்திக்காட்டினால், அவர்கள் வசனங்களை பாதிபாதியாகவும், மற்றும் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக எடுத்து காட்டுகிறார்கள் என்று குற்றம் சாட்டுங்கள் .

4. ஒருவேளை அவர்கள் முழு வனத்தையும், மற்றும் முந்தைய பிந்தைய வசனங்களையும் எடுத்துக் காட்டினால், அவர்கள் பயன்படுத்திய “குர்-ஆன் மொழிபெயர்ப்பு” தவறானது என்றுச் சொல்லுங்கள்.

5. ஒருவேளை அவர் பத்து வித்தியாசமான மொழிபெயர்ப்புகளை கொண்டுவந்து காட்டினால, சரியான பொருள் குர்-ஆனை அரபியில் படித்தால் தான் புரியும் என்றுச் சொல்லுங்கள்.

6. ஒரு வேளை அவர் அரபி மொழியில் மிகவும் புலமைமிக்கவராக இருந்தால், அந்த வசனங்களின் பொருள் வெளிப்படையாக தெரிவது போல் எழுத்தின் படி இல்லாமல் சில மறைந்த பொருளும் உண்டு என்றுச் அழுத்திச் சொல்லுங்கள்.

7. அவர் இன்னும் விட்டுக்கொடுக்காமல் திடமாக இருந்தால், இந்த வசனங்களின் பொருள் சீராவும், ஹதீஸ்களும் படிக்காமல், எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்று தெரிந்துக்கொள்ளாமல் படித்தால் புரியாது என்றுச் சொல்லுங்கள்.

8. ஒருவேளை அவர், ஹதீஸ்களையும், சீராவையும் மேற்கோள் காட்டி, எந்த சூழ்நிலையில் அவைகள் சொல்லப்பட்டது என்றும் மற்றும் முகமது செய்த கொலைகள், கற்பழிப்புகள், வழிப்பறி கொல்லைகள் போன்றவற்றிற்கு ஆதாரங்களை முன்வைத்தால், ஹதீஸ்கள், மற்றும் சீரா எல்லாம் கேட்டு எழுதியவைகள், அவைகள் தவறானவை, குர்-ஆன் மட்டும் தான் சரியானது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுங்கள்.

9. இதற்கு அவர், “குர்-ஆன் என்பது மனிதன் உருவாக்கியது, குர்-ஆன் புனிதமானது என்று ஏதாவது ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்” என்று உங்களை கேட்டால். டாக்டர் புகைலி எழுதிய “குர்-ஆனில் அறிவியல்” என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டுங்கள். மற்றும் டாக்டர் புகைலி சொல்வது போல தற்கால விஞ்ஞானம் குர்-ஆனில் சொல்லப்பட்டுள்ளது என்றும், மகாத்மா காந்தி தினமும் குர்-ஆனை படித்தார் என்றும், அதைப்பற்றி அவர் புகழ்ந்து பேசினார் என்றும் அவருக்குச் சொல்லுங்கள்.

10. இதற்கு அவர், டாக்டர் புகைலி என்பவர் சவுதி அரேபியாவின் சம்பளத்தின் கீழ் வேலை செய்தார். அவராவது, மகாத்மா காந்தியாவது தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டு முஸ்லீமாகவில்லை. மற்றும் டாக்டர் புகைலின் ஆராய்ச்சியை பல ஆராய்ச்சியாளர்கள், மேதாவிகள் தவறானது என்றும், அவருக்கு சவால் கொடுத்தும், அவர் சொன்ன கருத்துகள் தவறானது என்றும் எப்போதோ நிரூபித்துவிட்டார்கள் என்று அவர் சொன்னால். அந்த மேதாவிகளை ஜாகிர் நாயக்கிடம் விவாதத்திற்கு வரும் படி அவருக்குச் சொல்லுங்கள்.

11. இன்னும் அந்த பூச்சி(நபர்), விட்டுக்கொடுக்காமல் இருந்தால், உடனே தலைப்பை மாற்றி விட்டு, மற்ற மதங்களில், வேதங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.

12. அவர் தன் வாதத்திலேயே தொடர்ந்தால், அவரை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுங்கள், அவமானப்படுத்துங்கள், அவனை யூதனே, சைனா பன்றியே, அல்லது இந்து நாயே என்று திட்டுங்கள்.

13. இதற்கும் அவர் மசியவில்லையானால், இஸ்லாம் மீது மண் தூவுவதற்கு எவ்வளவு பணம் யூதர்களிடமிருந்து பெற்றாய் என்று கேளுங்கள் .

14. இதற்கும் அவன் சீற்குலையவில்லையானால், அவன் அம்மாவையும், சகோதரிகளையும் அழையுங்கள், மற்றும் கெட்டவார்த்தைகளை பயன்படுத்துங்கள்.

15. இன்னும் அவன் பிடிவாதமாக இருந்தால், அவன் மீது இப்படியாக சாபம் கூறுங்கள் “நீ நரகத்தில் எரிவாய், கடைசிநாளில் நீ வேதனைப்படுவாய், அல்லா உன்னை உன் கல்லரையில் பிடிப்பார் ……”.

16. மேல் சொன்ன எல்லா வழிமுறையும் தோல்வியானால், அவனை காயப்படுத்தி கொன்றுவிடுவதாக பயமுறுத்து. மற்றும் நீ அந்த விவாதத்தில் வென்றுவிட்டதாகவும், காரணம் குர்-ஆன் உண்மையிலேயே ஒரு இறைவனுடைய வேதம் என்பதால் என்று தம்பட்டம் அடித்து ஊரேல்லாம் சொல்லு.

17. முடிந்தால், இந்த வெற்றியை நீ எளிதாக வென்றுவிட்டதாக இஸ்லாமிய வெப்தளங்களுக்கு தெரிவித்துவிடு. இப்படிப்பட்ட செய்திகள், இமாம்களுக்கும், வெப்தளத்தைல் படிப்பவர்களுக்கும், இன்னும் சிறைச்சாலைகளில் உள்ள குறைவான அறிவுடையவர்களுக்கும் இஸ்லாமைப்பற்றிச் சொல்ல பெரும் உதவியாக இருக்கும்.

Source : http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1146

முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் மதம் மாறலாம்!


முஸ்லீம்கள்,கிறிஸ்தவர்கள் மதம் மாற நார்வே இஸ்லாமிய,மற்றும் கிறிஸ்தவ கவுனஸில்கள் அனுமதி அளித்திருக்கிறது

மதத்தில் இருப்பதும் மதத்திலிருந்து வெளியேறுவதும் வேறொரு மதத்தில் இணைவதும் ஒரு தனி நபரின் உரிமை என்று கிறிஸ்துவ கவுன்ஸிலும் இஸ்லாமிய கவுன்ஸிலும் இணை அறிவிப்பை செய்திருக்கின்றன.

Religion: Joint declaration on the right to conversion

The Islamic Council of Norway and the Church of Norway Council on Ecumenical and International Relations have presented a joint declaration on the freedom of religion and the right to conversion.
/ np
23.08.2007 07:49

The decleration states that everyone is free to adopt the religious faith of their choice.
- We denounce, and are committed to counteracting all violence, discrimination and harassment inflicted in reaction to a person’s conversion, or desire to convert, from one religion to another, be it in Norway or abroad, the declaration says.

- Freedom of religion is a fundamental principle which must be reflected in attitudes toward people of another faith. The right to change one’s religious faith is central to freedom of religion, says Olav Fykse Tveit, General Secretary for the Church of Norway Council on Ecumenical and International Relations.

- By issuing this declaration we hope to contribute to the international process on this important matter, he says.

(NRK/Church of Norway)

Rolleiv Solholm

கிறிஸ்தவ பிரச்சாரமும் இஸ்லாமிய அழைப்புப்பணியும்


இஸ்லாமின் சாட்சி: கிறிஸ்தவ சேவைப் பற்றி :

தமிழ் முஸ்லீம் தளத்தில், கிறிஸ்தவ பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார்கள்.

தலைப்பு: கிறிஸ்தவ பிரச்சாரமும் இஸ்லாமிய அழைப்புப்பணியும்
சுட்டி: http://www.tamilmuslim.com/Kirusthuvam/mission.htm

முதலில் இந்த செய்தி மொத்தத்தையும் படியுங்கள்:

Quote :
——————————*************———————————-
கிறிஸ்தவ பிரச்சாரமும் இஸ்லாமிய அழைப்புப்பணியும்

முஹம்மது ஸலாஹுதீன் அல்-மதீனா – தகவல்: அப்துல்அலீம் சித்தீக்

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நியூஸ் வீக் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சமீபத்தில் ஒகாஸ் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி:

1970ல் ஆசியா கண்டத்தில் உள்ள மொத்த கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை சுமார் 100 மில்லியன், 2000ல் அது 300 மில்லியனை எட்டியது. ஆப்ரிக்காவில் 1970ல் 100 மில்லியனாக இருந்த அவர்களின்
எண்ணிக்கை 2000ல் 300 மில்லியனையும் தாண்டியது.

1966 வாக்கில் 23,300 கிறிஸ்தவ பிரச்சார அமைப்புகள் ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் இயங்கி வந்தன. அவைகளின் பணியில் உதவி செய்ய 193 பில்லியன் டாலர் பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருந்தது. அவைகளின் அன்றாட பணியில் 3,600 வானொலி மற்றும் டிவி நிலையங்களிலிருந்து 447 மில்லியன் மணி நேர ஒலி, ஒளி பரப்புக்கள் ஒரு வருடந்தோறும் நடைபெறுகின்றன. 10 மில்லியன் பைபிள் பிரதிகளை அவர்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிட்டனர். 1,130 உலக மொழிகளில் அவர்கள் பைபிளை மொழிபெயர்த்து வினியோகித்தனர்.

உலகெங்கிலும் உள்ள சர்ச்சுகள் 500 பல்கலைகழகங்கள், 104,000 பள்ளிக்கூடங்கள் மற்றும் பயிற்சி மையங்களுக்கு பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளன. மேலும் 10,677 துவக்கப்பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் இவற்றின் நிர்வாகத்தில் இயங்கி வருகின்றன. இவை அத்தனையிலும் சுமார் 6 மில்லியன் முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவை மட்டுமல்லாது 1,500 மருத்துவ நிலையங்களும் சேவையில் உள்ளன. கிறிஸ்துவ பிரச்சாரக் குழுக்கள் மூலம் 3,100 சஞ்சிகைகள், சுற்றறிக்கைகள் மற்றும் மாத இதழ்கள் அச்சிட்டு வினியோகிக்கப்படுகின்றன. இவர்களின் பணியில் மொத்தம் 340 மில்லியன் கம்ப்யூட்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த கம்ப்யூட்டர் மயமாக்களுக்காக மட்டும் 1970 வரை 200 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

மேலே தரப்பட்டுள்ள தகவலுக்கு முற்றிலும் மாற்றமாக இஸ்லாமிய அழைப்பு மற்றும் நிவாரண அமைப்புகளால் மேற்படி கிறிஸ்தவ குழுக்கள் செலவிடும் தொகையில் ஒரே ஒரு சதவீதம் மட்டும்தான்

கல்விக்காகவும் மற்றொரு சதவீதம் மட்டும் நிவாரணப் பணிகளுக்காகவும் செலவிட முடிகிறது. கிறிஸ்தவ பிரச்சாரம் வறுமையிலும் நோயிலும் வாடும் முஸ்லிம்களை குறி வைத்து செயல்படுகிறது. இஸ்லாமிய அமைப்புகளின் பெரும்பாலான பொருளாதாரமும், நேரமும் போர்களினாலும், ஆக்ரமிப்புகளினாலும், சீரழிந்து வருகின்ற முஸ்லிம்களின் நிவாரணப் பணிகளிலேயே செலவிடப்படுகிறது. இது போதாதென்று, இஸ்லாமிய அமைப்புகளின் நிதி பற்றாக்குறை வேறு அவைகளின் பட்ஜெட்டை வெகுவாக பாதிக்கிறது.

அமெரிக்க பாராளுமன்ற அறிக்கையில் இந்த நிதி பற்றாக்குறை 14 லிருந்து 17 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை எல்லாம் விட அதிர்ச்சி தரும் தகவல் என்ன தெரியுமா? உலகின் மொத்த அகதிகள் எண்ணிக்கையில் 75 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் என்பதுதான்.

1970 லேயே 200 பில்லியன் டாலர்கள் கிறிஸ்தவ பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது என்றால் 2001ல் அது எத்தனை மடங்கு பெருகி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. இஸ்லாமிய அமைப்புகளின் நிலைமையோ அந்தோ பரிதாபம்.. சமீபத்திய தீவிரவாத மற்றும் போர் நடவடிக்கைகளினால் பாரபட்சமின்றி அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் நிதி நடவடிக்கைளும் வல்லரசினால் முடக்கப்பட்டுள்ள நிலையில் ஏகத்துவ பிரச்சாரமும், நிவாரணப் பணிகளும் வரலாறு காணாத அளவுக்கு பின்னடைவை சந்தித்துள்ளது.

————————-***************————————-

இது தான் கிறிஸ்தவம் இஸ்லாமிய சகோதரர்களே.

சரி கிறிஸ்தவர்கள் இப்படி செலவு செய்யும் போது, தங்கள் நேரத்தை இப்படி செலவிடும் போது, இஸ்லாமியர்கள் (எல்லாருமல்ல) என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்கள், தங்கள் பணம் என்னவாகிறது?

1. யார் புர்கா போடவில்லையோ அவர்கள் முகத்தில் ஆசிட் போடலாமா என்று பார்த்தார்கள்(ஆப்கானிஸ்தான்), ஆசிட் வாங்க பணம் செலவிடப்பட்டது.

2. யார் இஸ்லாமை அவமானப்படுத்தினானோ அவனைத் தேடி பிடித்து, அவனை கொலை செய்தார்கள். இதற்கு தங்கள் நேரத்தை செலவிட்டனர்.

3. இன்னும் தற்கொலை படைக்கு, தேவையான வெடிமருந்துக்களை எவ்வளவு வாங்கலாம், எங்கே வாங்கலாம், யார் யாருக்கு பயிற்சி அளிக்கலாம் என்று யோசித்தார்கள், செலவிட்டார்கள்.

4. ஒரு சின்ன திருட்டு செய்தாலும், அவன் கையை எடுத்தார்கள், தகாத உறவுமுறையை வைத்து இருந்தவர்களை கல்லெரிந்து கொன்றார்கள்.

கிறிஸ்தவர்கள் செலவிட்டதில், முஸ்லீமகள் செலவிட்டது ஒரு சதவிகிதம். (100 : 1), ஏணி வைத்தாலும் எட்டாது, அந்த இரண்டு உலக வர்த்தக மைய கட்டிடங்கள் ஒன்றோடு ஒன்று நிற்க வைத்தலும் எட்டாது.

உலக மொத்த அகதிகளில் 75% பேர் முஸ்லீம்கள். உண்மையாகவே நாங்கள் வேதனை அடைகிறோம். இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம், அவர்களுக்காக.

இந்த 75% அகதிகளுக்கு அதிகமாக உதவி செய்பவர்கள் யார் என்று கணக்கு பார்த்தால், கண்டிப்பாக “கிறிஸ்தவ ஸ்தாபனங்களே” அதிகமாக இருக்கவேண்டும்(செஞ்சிலுவைச் சங்கம், ….)

இருந்தாலும், இன்னும் நாங்கள்(கிறிஸ்தவர்கள்) வெட்கப்படுகிறோம், எங்கள் பைபில் உள்ள பணத்தை இன்னும் நாங்கள் பிடித்துக்கொண்டு இருக்கிறோமே என்று, அதையும் உலக அமைதிக்காக, சேவைக்காக செலவிட எங்கள் கரங்கள் நீட்டப்பட்டால் நலமாக இருக்குமே.

http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=248

ஷியாக்கள் முஸ்லீம்கள் இல்லையா?


மெக்காவில் ஷியாக்களுக்கு எதிரான போதனை!

மெக்காவில் ஷியாக்களை முஸ்லீம்கள் இல்லை என்றும், அவர்களை தாக்கியும் பிரச்சாரம் செய்த இஸ்லாமிய போதகர் பற்றிய குற்றச்சாட்டுகளை ஈரான் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

Iran probes ‘anti-Shia sermon’ in Mecca

TEHRAN: Iran is probing complaints that a prayer leader in the city of Mecca verbally attacked Shiite Muslims amid efforts by Tehran and Riyadh to improve their occasionally strained relations.

The hardline Jomhouri Islami newspaper on Tuesday claimed that television broadcasts of last Friday’s prayer sermon in Mecca were cut short after the prayer leader implied that Shiites had “nothing to do with Islam”.

Jomhouri Eslami reported that prayer leader Sheikh Saleh Al-Taleb had said in Mecca on Friday that “one of the non-Arab nations is provoking a sectarian crisis,” in a reference to Shiite Iran. According to the allegations, also repeated on Iranian state television, he added, “The role played by this group has nothing to do with the prophet,” in reference to Shiite Islam.

There was no confirmation from Saudi Arabia concerning the text of the sermon.

“I did not actually listen to actual words, but our embassy in Riyadh is pursuing the matter,” Foreign Ministry spokesman Mohammad Ali Hosseini said.

“There were some speeches regarding the (Shiite) imams, our embassy has discussed it with the officials there. We hope that the sanctity of the different Islamic sects is preserved and we all follow a unified path.”

The head of Iran’s organisation for hajj has also protested to the authorities in Riyadh that Saudi security forces were mistreating Iranian pilgrims visiting Mecca. afp

« பழைய வரவுகள்