ஏன் இஸ்லாமில் இருந்து முஸ்லீம்கள் வெளியேறிக்கொண்டுருக்கிறார்கள்

ஏன் இஸ்லாமில் இருந்து முஸ்லீம்கள் வெளியேறிக்கொண்டுருக்கிறார்கள்

<embed src=”http://godtube.com/flvplayer.swf” FlashVars=”viewkey=57df27213ede1ac4ac78″ wmode=”transparent” quality=”high” width=”330″ height=”270″ name=”godtube” align=”middle” allowScriptAccess=”sameDomain” type=”application/x-shockwave-flash” pluginspage=”http://www.macromedia.com/go/getflashplayer” /></embed>

ஒரு இஸ்லாமிய மத குருவின் மகனாக இருந்து, இயேசுவை கண்டுகொண்டது எவ்விதம்?

ஒரு இஸ்லாமிய மத குருவின் மகனாக இருந்து, இயேசுவை கண்டுகொண்டது எவ்விதம்?

ட்சி: இயேசுவின் கேரளச் சிங்கம் Rev. K.K. Alavi(ஒரு இஸ்லாமிய மத குருவின் மகனாக இருந்து, இயேசுவை கண்டுகொண்டது எவ்விதம்?)

http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=4817#4817

தற்போது, சில இஸ்லாமிய தளங்களில் பல பொய்யான சாட்சிகளை எழுதுகின்றனர். அதாவது ஒரு புகழ்பெற்ற கிறிஸ்தவர் இஸ்லாமை தழுவினார் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்று தேடிப்பார்த்தால், அது ஒரு பொய் என்பது நிருபனமாகும். உதாரணத்திற்கு நேசமுடன் தளத்தில் வெளியான கட்டுரையை படிக்கவும்: நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா…? ஈஸா குர்-ஆன் சந்தேகம்
ஆனால், இதோ இயேசுவிற்காக வாழும் சாட்சி ஒன்று, நம் இந்தியாவிலிருந்து, அதுவும் ஒரு முல்லாவின்(இஸ்லாமிய மத குருவின்) மகனாக பிறந்து இயேசுவை பின்பற்றி எழுந்து பிரகாசிக்கும் சாட்சி. படியுங்கள், இயேசுவை துதியுங்கள், ஜெபியுங்கள்.

இந்த கட்டுரையை கீழ்கண்ட இரண்டு பிரிவுகளாக பிரித்து எழுதுகிறேன்.

1. K.K. ஆலவி அவர்களின் தற்போதைய ஊழியம், (இஸ்லாமியர்களின் பயமுறுத்தல், துப்பாக்கிச் சூடு ) வாழ்க்கை குறிப்பு.

2. K.K. ஆலவி அவர்களின் வாழ்க்கைச் சாட்சி(எப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டார்)
===================================================
1. K.K. ஆலவி அவர்களின் தற்போதைய ஊழியம், (இஸ்லாமியர்களின் பயமுறுத்தல், துப்பாக்கிச் சூடு ) வாழ்க்கை குறிப்பு.

பெயர்: K.K. Alavi
ஊர்: செருக்குன்னு கிராமம் (Cherukunnu) (இப்போது இருப்பது, காலிகட் என்ற ஊரில்)
மாநிலம்: கேரளா, இந்தியா.
பிறந்த நாள்: July 15, 1951

இஸ்லாமிய குழுக்களின் எதிர்ப்புக்கள்:

தன்னுடைய 21வது வயதில் இயேசுவை தன் சொந்த தெய்வமாக ஏற்றுக்கொண்ட நாள் முதல் கொண்டு இவருக்கு பல பிரச்சனைகள் வர ஆரம்பித்தது. இவரை இவர் தந்தை ஒரு தூணில் கட்டிவைத்து ஒரு தடியால் அடித்ததிலிருந்து இவருக்கு பிரச்சனைகள் வர ஆரம்பித்தது. இவர் எதிர்கொண்ட பிரச்சனைகளை சுருக்கமாக கீழே தருகிறேன்.

1. நான்கு முறை இவர் மீது கொலை முயற்சி செய்யப்பட்டுள்ளது.
2. கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் பல பயமுறுத்தல்கள் இவருக்கு வந்தவண்ணமாகவே உள்ளன.
3. இஸ்லாமிய குழுக்களால் இவர் மீது 11 வழக்குகள் தொடரப்பட்டன.
4. ஒரு முறை துப்பாக்கி ஏந்திய ஒருவன் இவர் வீட்டை நோக்கிச் சுட்டான்.
5. சில பத்திரிக்கையாளர்கள் இவரிடம் வந்து “உங்கள் உயிருக்கு ஆபத்து என்று சொல்லும் போது” கீழ்கண்டவாறு இவர் பதில் கூறினார்.
Quote:
“Last month, a few reporters came to me warning that killers were out to take me down,” Alavi said. “All my life I have had threats from fundamentalists. So I wasn’t surprised to hear this from reporters who were tipped off by a source with a radical, Indian Islamic group.”

6. இஸ்லாமிய அமைப்புக்கள் நாங்கள் இப்படி பயமுறுத்தவில்லை என்று சொல்கிறார்கள், ஆனால், இவர்களின் கை இதில் உள்ளது என்று காவல் துறை சொல்கிறது.
Quote:
Though Muslim extremist organizations deny having any part in the attempts on his life, police officials and intelligence agencies have confirmed their role.

7. இவர் இதுவரையில் 20 புத்தகங்கள் எழுதியுள்ளார், முக்கியமாக முஸ்லீம்களை இயேசுவிடம் அழைப்பதற்காக.

8. இவருடைய ஊழியத்தைப் பற்றி.
Quote:
In an Islamic area where Christianity is considered blasphemy, Rev. Alavi has led at least 50 Muslims – estimates range as high as 200 – to a saving knowledge of Jesus Christ. Each year thousands of inquiries pour in. Working out of his home in Calicut, he meets curious and questioning Muslims asking about Jesus.

9. 1981ல் சில சுன்னி முஸ்லீம் கூட்டம் இவரை கொலை செய்ய இவர் வீட்டில் புகுந்த போது, இவர் தப்பியோடு ஒரு “இந்து வழக்கறிஞர்” வீட்டில் தஞ்சம் புகுந்தார். இந்த சகோதரர் இவருக்கு பாதுகாப்பு அளித்தார்.
Quote:
The threats on his life began in 1981. “A mob of Sunni Muslims stormed into my property looking for me with machetes,” he said. “I ran all the way to the police station. Later I took refuge at the home of a Hindu attorney.” The lawyer’s family fed him and eventually provided an escort back to his home

10. 1993ல் National Development Front (NDF) என்ற ஒரு இஸ்லாமிய குழு உருவானது(பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு இந்த குழு உருவானது). இந்த குழு பல கூட்டங்களை நடத்தி இவர் “இஸ்லாமின் ஒரு முக்கிய எதிரி” என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். மட்டுமல்ல பல கேசட்களில் இவரைப் பற்றி பதிவுச் செய்து இந்தியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளில் வினியோகிக்கிறார்கள்.

11. 1998ல் இவர் மீது ஒரு இஸ்லாமிய குழு 11 வழக்குகளை தொடர்ந்தது, முக்கியமாக இவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்று, இவர் ஒரு பெண்ணை கற்பழித்தார் என்றும் வழக்குகள் தொடர்ந்தன. இந்த இஸ்லாகிய குழு “இவர் கற்பழித்தார் என்று நிருபிக்க ஒரு பெண்ணையும் தயார் படுத்தினார்களாம்”.
Quote:
“All were well-planned and backed by renowned lawyers supported by Islamic groups,” he said. “They also produced a woman who claimed I raped her.”

இவர் மீது பொய் வழக்குகள் போட்டு, போஸ்டர்களை ஊரெல்லாம் ஒட்டினார்களாம், இவர் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது.
Quote:
Muslim groups announced these crimes throughout the towns of Manjeri, Calicut, Tirur, and others, he said. Posters appeared on walls saying he smuggled arms. These attacks were hard on his family, including his wife Yasmin Alavi, the daughter of Muslim converts, who is very active in extending hospitality to the hundreds of people who come to the Alavi home. The Alavis have three grown children.
“My family was shaken, but I knew the Lord would protect me,” he said

.
12. இவர் மீது போடப்பட்ட எல்லா வழக்கையும் ஒவ்வொன்றாக கேரள உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்ததாம், சரியான ஆதாரங்கள் இல்லாததால். மட்டுமல்ல, இவருக்கு பாதுகாப்பு அளிக்க முன்வந்ததாம்

13. மரண அச்சுருத்தல்: இவருக்கு பல இஸ்லமைய ஸ்தானபங்களிலிருந்து அச்சுருத்தல்கள் வருகின்றன. இவருடைய சர்ச்(சபை) மீது தாக்குதல் செய்யப்பட்டது, சர்சின் சிலுவையை அழித்துவிட்டார்களாம்.

14. ஒரு முறை இவர் பாஸ்டராக ஊழியம் செய்யும் லூதரன் சர்ச் அதிகாரிகள்,இவர் உயிரை காப்பாற்ற இவரை கட்டாயத்தின் பேரில் பெங்களுருக்கு அனுப்பிவிட்டார்களாம்.
15. சில வருடங்களுக்கு முன், சில இஸ்லாமிய குழுவிலிருந்து சிலர், சிகன்னூர் கிராமத்தின் மௌலவியை கொல்ல சென்றார்களாம், மற்றுமொரு குழு இவரை கொலை செய்ய வந்தார்களாம், இவர் வீட்டில் இல்லாததால், இவர் உயிர் தப்பியது, ஆனால், அந்த சிகன்னூர் இஸ்லாமிய மௌலவியின் இரத்தத்தை அவர் குடித்து சென்றுவிட்டனர். இந்த இஸ்லாமிய மௌலவி, இஸ்லாமியர்களில் தீவிரவாதம் நல்லதல்ல என்று சொன்னதால் அவரை கொன்றார்களாம்.
Quote:
A decade ago, a group of Islamic extremists came looking for him while another team was dispatched to murder Chekannur Maulvi, a liberal Muslim teacher who broke with convention and decried Islamic fundamentalism. Maulvi was murdered that day, but Alavi was away from home and thus spared

16. NDF பட்டியலில் இவரது பெயர் இரண்டாவதாக இருக்கிறதாம்.
Quote:
“Now, sources have alerted me that I’m second on the hit list prepared by the Muslim fundamentalist NDF,” he says.

17. ஒரு முறை இவரது வீட்டில் இரவு 10 மணி அளவில் ஒரு மனிதன் துப்பாக்கியால் சுட்டானாம், குண்டு சுவரில் தேய்த்துக்கொண்டு சென்றதாம். மற்றுமொரு முறை இவர் சபையில் பேசிக்கொண்டு இருக்கும் போது ஒருவன் துப்பாக்கியுடன் சபையின் பக்கத்தில் நின்றுக்கொண்டு இருந்தானாம், ஒரு சகோதரி அவனிடம் பேசப்போனபோது அவன் தப்பி சென்று விட்டான்.
Quote:
Last August, while he was still in Manjeri, someone shot at his house in Calicut at around 10 p.m. “The stone wall still carries the mark,” he said.

On another occasion, as he was speaking in church, there was a man in the church holding a gun. “But he had to flee when a Lutheran sister tried to talk to him,” he said.

18. இவ்வளவு ஆபத்து அவருக்கு இருந்தும் அவர் சொல்கிறார்:
“மனிதனின் பாதுகாப்பு எனக்கு வேண்டாம், தேவன் என்னோடு இருக்கும் போது, யார் என்னை என்ன செய்யமுடியும்?”

In spite of the dangers, Rev. Avali said he has declined the court-approved security offered to him.
“I can claim security from police wherever I go, but I believe if I do that I’ll lose the protection of my guardian angels,” said Rev. Alavi, who has been diagnosed with a weak heart. “So I’ve declined man’s support and have turned to God’s care and protection. Who can kill me if God’s with me?”

Source: All quotations are taken from this page: http://persecution.in/node/170?PHPSESSID=32e2a6e665c6b3aa19c076c0b5fb0e0d

2. K.K. ஆலவி அவர்களின் வாழ்க்கைச் சாட்சி
(எப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டார்)

இவருடைய சாட்சியை 32 மொழிகளில் மொழிபெயர்த்துள்ளார்களாம், கண்டிப்பாக தமிழிலும் இருக்க வாய்ப்பு உள்ளது. யாருக்காவது தமிழில் கிடைத்தால், அதை இத்தளத்தில் பதியும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இவருடைய சாட்சியை ஆங்கிலத்தில் இங்கு படிக்கலாம்: http://www.the-good-way.com/eng/article/a16.htm

இவருடைய சாட்சி தமிழில் கிடைக்கும்வரை, நம் தள சகோதரர்களுக்காக, இவரது சாட்சியின் சுருக்கத்தை தமிழில் தருகிறேன். முழு சாட்சியையும் ஆங்கிலத்தில் படித்துக்கொள்ளவும். இந்த மொழி பெயர்ப்பு, இவரது சாட்சியின் சுருக்கமே தவிர, ஒவ்வொரு வரியையும் மொழிபெயர்க்கவில்லை.

============================
IN SEARCH OF ASSURANCE (நிச்சயத்தைத் தேடி)
by K. K. Alavi

CONTENTS – உள்ளடக்கம்

MY CHILDHOOD – என் பள்ளிப்பருவம்
AN EVENTFUL DAY – ஒரு முக்கியமான நாள்
FURTHER STUDY – மேலும் அதிகமாக படித்து அறிய
CHAINED BY LOVE – அன்பால் கட்டப்பட்டேன்
GOD DELIVERS ME – தேவன் என்னை விடுதலையாக்கினார்
FINDING THE LIGHT – வெளிச்சத்தை கண்டேன்
A GREAT DECISION – ஒரு முக்கியமான முடிவு
IN HIS SERVICE – அவரது ஊழிய பாதையில்
CONCLUSION – முடிவுரை

MY CHILDHOOD – என் பள்ளிப்பருவம்

நான் ஜூலை 15 1951 வெள்ளிக்கிழமையன்று பிறந்தேன். என் தந்தை ஒரு முல்லா(இஸ்லாமிய மத குரு) ஆவார். என் ஊர் கேரளாவிலுள்ள செருக்குன்னு கிராமம். நாங்கள் மதத்தில் மிகவும் கண்டிப்பாக இருப்பதால், கிராமத்தில் எங்கள் குடும்பம் என்றால் எல்லாருக்கும் ஒரு தனிமதிப்பு.

என் தந்தை எல்லாருக்கும் குர்-ஆனை கற்றுக்கொடுப்பார், எனக்கும் கற்றுக்கொடுப்பார். என் தந்தையின் மடியில் உட்கார்ந்து குர்-ஆன் கற்ற நினைவு இன்னும் எனக்கு நினையில் உள்ளது. ஒவ்வொரு நாளின் துவக்கமும், முடிவும் குர்-ஆன் படித்து தான் நாங்கள் துவக்குவோம், முடிப்போம்.

எனக்கு 5 வயதான போது, குர்-ஆன்(அரபி) கற்றுக்கொள்ள, நான் மதரஸாவிற்கு அனுப்பப்பட்டேன். மற்ற பாடங்களையும் கற்றேன். எனக்கு 10 வயதாகும் போது, நான் கோட்டக்கால்(Kottakal) என்ற இடத்திலுள்ள பள்ளிக்கு அனுப்பப்பட்டேன். அங்கு நான் 1 வருடம் 6 மாதங்கள் மட்டுமே படித்தேன், பிறகு நிறுத்தப்பட்டேன், ஏன் என்று உங்களுக்கு பிறகு புரியும்.
AN EVENTFUL DAY – ஒரு முக்கியமான நாள்
ஒரு நாள் பள்ளியிலிருந்து வீட்டிற்குச் சொல்லும் பொது, சந்தையில் சில கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையைப் பற்றியும், இயேசுவின் வாழ்க்கையைப் பற்றியும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள், பல புத்தகங்களை விற்றுக்கொண்டு இருந்தார்கள். முதலில் அவர்களைப் பார்த்து கேலிச் சிரிப்பு சிரித்துவிட்டு, நானும் என் நண்பர்களும் சில புத்தகங்களை வாங்கினோம்.

நான் வாங்கிய புத்தகம் “பாக் என்பவனின் இதயம் (The Heart of Pak)”, என் நண்பன் வாங்கிய புத்தகம் “இரட்சிப்பின் வழி (The Way of Salvation)” ஆகும். அவன் அதை வழியிலேயே கிழித்துவிட்டு எரிந்துவிட்டான். எனக்கு கிறிஸ்தவர்கள் என்றால் பிடிக்காது என்றாலும், நான் கிழிக்காமல் வைத்துக்கொண்டேன். வீட்டிற்குச் சென்று தனிமையில் உட்கார்ந்து அந்த புத்தகத்தை படித்தேன். அது ஒரு கிறிஸ்தவருக்கும் ஒரு பையனுக்கு இடையில் நடந்த உரையாடலாக இருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது, “இதில் சொல்லப்பட்ட இயேசுவா… நாங்கள் நபி என்று கூறும் ஈஸா” என்று வியந்தேன். குர்-ஆன் சொல்லும் இயேசுவும் நான் படித்த இந்த இயேசுவின் வேறுவேறாக இருக்கிறதே. இவர் பாவங்களை மன்னிக்கிறவர் என்று நான் அதில் படித்தேன். இயேசுவின் மன்னிக்கும் குணம் அந்த புத்தகத்தில் வரும் பையனை மாற்றிவிட்டது. இது இயேசுவை நான் நேசிக்கும்படி செய்தது.

இந்த புத்தகம் படிக்கும்போது ஒரு கிறிஸ்தவர் என்னோடு பேசியது போல் இருந்தது. என் இதயம் இந்த பையனுடைய இதயத்தைவிட கேடுள்ளதாக இருந்தது. எப்படி எனக்கு இதிலிருந்து முக்தி கிடைக்கும்? அந்த புத்தகம் எனக்கு ஒரு வழியை சொல்லியது, இருந்தாலும் நான் எப்படி அதை ஏற்றுக்கொள்ளமுடியும்? இறைவன் தவிர வேறு யாரும் பாவத்தை மன்னிக்கமுடியாது, இயேசு ஒரு நபி மட்டும் தான் என்று நான் போதிக்கப்பட்டு இருந்தேன்.

அந்த புத்தகத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் தரமுடியவில்லை. என் பாவத்திலிருந்து எப்படி விடுதலை பெறுவது? நான் மரித்தபிறகு இறைவனின் நியாயத்தீர்ப்பில் எப்படி நிற்பேன் போன்ற கேள்விகள் என்னை துளைத்தன. எனவே, அந்த புத்தகத்தில் இருந்த “தபால் வழி” பைபிள் கோர்ஸ் படிக்கமுடிவு செய்தேன்.

FURTHER STUDY – மேலும் அதிகமாக படித்து அறிய

தபால்காரன் எனக்கு வந்த பைபிள் கோர்ஸ் புத்தகத்தை என் சித்தப்பாவிடம் கொடுத்துவிட்டான். அவர் அதை திறந்து பார்த்தார், அதில் உள்ள கிறிஸ்தவ புத்தகத்தை பார்த்து திகைத்தார், என் அப்பாவிடம் காட்டிவிட்டார். அவர்கள் என் பைபிள் கோர்ஸ் படிப்பை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய முடிவு செய்தனர்.

அன்று மாலை நான் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தேன், என் அப்பா என்னை வராண்டாவில் உள்ள ஒரு தூணுக்கு என்னை கட்டி, ஒரு பிரம்பால் நான் பலவீனப்பட்டு போகும் வரைக்கும் என்னை அடித்தார்.

மறு நாள் காலை என் அப்பா என்னை அழைத்து அன்பாக பேசினார். “நாம் முஸ்லிம்கள் அப்படிப்பட்ட புத்தகங்களை படிக்கக்கூடாது, அவைகள் தடை செய்யப்பட்டவை, முக்கியமாக கிறிஸ்தவர்களின் புத்தகங்கள் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவை. அவைகள் படிப்பதற்கு மிகவும் அருமையான இருக்கும், ஆனால், அவைகளை நாம் படித்தால், நாமும் கிறிஸ்தவர்களாகி விடுவோம். பிறகு நம் குடும்பம் என்ன ஆவது? நம் முழுவாழ்க்கையும் பாழாகும், நம் சமுதாயம் நம்மை ஒதுக்கிவிடும்.இது இஸ்லாமிலே சாபமாகும்.” என்று எனக்குச் சொன்னார். இனி நானும் அப்படிப்பட்ட புத்தகங்களை படிக்கமாட்டேன் என்று என் அப்பாவிடம் சத்தியம் செய்து கொடுத்தேன்.
நான் அந்த புத்தகத்தை கிழித்துவிட்டேன், என் நண்பனைப் போல நான் முன்னமே ஏன் கிழித்துப் போடவில்லை என்று என்னை நானே நொந்துக்கொண்டேன். அன்றிலிருந்து நான் ஒரு தீவிர முஸ்லீமாக தினமும் என் குர்-ஆன் படிப்பதிலும், நமாஜ் செய்வதிலும் கழித்தேன். நாட்கள் செல்லச் செல்ல, அந்த புத்தகம் சொன்னது போல, நான் என் இதயத்தின் பாவ நிலையை நினைக்கும் போதேல்லாம், என் மனதிற்கு அமைதி இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு நாளும் குர்-ஆன் படிக்கும் போதேல்லாம், திரும்ப திரும்ப வாசிக்கப்படும் “இயேசு” என்ற பெயரை நான் எப்படி மறக்கமுடியும். எனவே, இயேசு பற்றிய இஸ்லாமிய புத்தகங்களையும், குர்-ஆனிலும் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று தெரிந்துக்கொள்ள முடிவுசெய்தேன்.

எனக்கு அரபி அதிகமாக தெரியாது என்பதால், நண்பன் யூசுப் மௌலாவி உதவியுடன் படித்து தெரிந்துக்கொண்டேன். அவன் அரபி பள்ளியில் ஒரு ஆசிரியன், எங்கள் குடும்ப நண்பரும் கூட. ஈஸாவிற்கு குர்-ஆனிலும், ஹதீஸ்களிலும் முக்கியமான இடம் இருப்பதை நான் கண்டுபிடித்தேன். குர்-ஆனிலே ” இயேசுவிற்கு என் நபியாகிய முகமதுவைவிடவும் அதிக முக்கியத்துவம் இருப்பதாக” எனக்கு பட்டது. என் குடும்ப நண்பரும், என் குடும்ப நபர்களும் எனக்கு மிகவும் மரியாதையாக எச்சரித்தார்கள், நான் அதிகமாக முகதுவை பற்றி அறிய முயற்சி எடுக்கச் சொன்னார்கள். இருந்தும், இயேசுவின் பிறப்பு, மற்றும் அவரின் அற்புத செயல்களைப் பற்றி குர்-ஆன் சொல்லும் வசனத்தைப் பற்றி நான் அதிகமாக ஆச்சரியப்பட வைத்தது.
Quote:

மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;. (3:45)

“மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.” (3:46)

(அச்சமயம் மர்யம்) கூறினார்; “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்; “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ‘ஆகுக’ எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.” (3:47)

இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான். (3:4

இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர் “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்). (3:49)

“எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்;, ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.” (3:50)

தோராவையும், சுவிசேஷங்களையும் குர்-ஆன் குறிப்பிடுவதை நான் கவனித்தேன். அவைகளை நம்பும்படி குர்-ஆன் வசனம் என்னை உட்சாகப்படுத்தியது: “அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன (5:46)” என்று குர்-ஆன் சொல்கிறது.

இன்னொரு வசனம் என் மனதில் அடிக்கடி வருவது, குர்-ஆன் 10:94 ஆகும்.

(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொளிவீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக் நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது – எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம். (10:94)

இந்த வசனத்தை படித்தவுடன் எனக்கு அந்த கிறிஸ்தவ புத்தக நியாபகம் வந்தது. இஸ்லாம் படி கிறிஸ்தவர்கள் “வேதங்கள் கொடுக்கப்பட்டவர்கள்” ஆவார்கள். முகமதுவின் சந்தேகங்களை கிறிஸ்தவர்களோடு பகிர்ந்துக்கொள்ள குர்-ஆன் அவரை உட்சாகப்படுத்தும் போது, நான் ஏன் என் சந்தேகங்களை கிறிஸ்தவர்களோடு பகிர்ந்துக்கொள்ளக்கூடாது. எனக்கு அவர்களை சந்திக்க வாய்ப்புக்கள் குறைவு.

எங்கள் ஊரின் பக்கத்தில் ஒரு கிறிஸ்தவ மிஷினரி மருத்துவமனை இருந்தது. அங்கு சென்று மிகவும் பயத்துடன் ஒரு மிஷனரியை சந்தித்தோம் நானும் என் நண்பன் அப்துல்லாவும். அவர் எங்களை அன்புடன் வரவேற்று, சிறிது நேரம் பேசிவிட்டு, ஞாயிறு பள்ளிக்கு(Sunday School) வரும் படிச் சொன்னார்.

எங்களுக்கு கிறிஸ்தவ நூலகத்தை(Christian Reading Room) அறிமுகம் செய்தார்கள், அங்கு ஒரு நண்பன் எனக்கு கிடைத்தான். நாங்கள் யோவான் சுவிசேஷ தபால் வழி படிப்பை படித்தோம். பல வாரங்கள் கழித்து ஒரு முறை சிலர் என்னையும், அப்துல்லாவையும் பார்த்துவிட்டார்கள், அப்துல்லாவை அதிகமாக அடித்ததால், அவன் உண்மையை சொல்லிவிட்டான்.

அடுத்த நாள மாலை நான் பள்ளியிலிருந்து விட்டிற்கு வந்தேன், என் அம்மா, சகோதரிகள் அழுதுக்கொண்டு இருந்தார்கள், என் அப்பா என்னை கட்டினார், அடித்தார், பச்சை மிளகாய் அறைத்து என் முகத்திலும், கண்களிலும் தேய்த்தார். பக்கத்து விட்டு அம்மாவினாலும், என் அண்ணியின் உதவியினாலும், நான் விடுவிக்கப்பட்டு, தண்ணிரால் கழுவப்பட்டேன்.

மறு நாள் காலையில் என் அப்பா என்னை அழைத்தார், என்னை கீழ்கண்ட இஸ்லாமிய பிரமாணத்தை சொல்லச் சொன்னார்.

“அல்லாவை தவிர வேறு இறைவன் இல்லை, முகமது அல்லாவின் தூதராவார்”

என் அப்பா, கிறிஸ்தவத்தைப் பற்றியும், அவர்கள் இஞ்ஜிலை திருத்திவிட்டார்கள் என்றும், மற்றும் கிறிஸ்தவர்களின் கெட்ட வாழ்க்கையைப் பற்றியும் எச்சரித்தார். என் எல்லா கிறிஸ்தவ புத்தகங்களை என் சகோதரியிடம் எரித்துவிடும்படிச் சொன்னார். எல்லாம் எரிக்கப்பட்டது. இச்செயல்கள் என்னை அதிகமாக பாதித்தது. நான் கதரி கதரி அழுதேன். எனக்கு மன அமைதியில்லை, கிறிஸ்துவை அதிகமாக அறியும் எல்லா வாய்ப்புக்களும் துண்டிக்கப்பட்டது.
புத்தகம் எரிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று பார்த்தேன். நான் மிகவும் வேதனைப்பட்டேன். அந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட பையனைப்போல, நானும் என் பாவத்தின் பாரத்தை சுமப்பதை உணர்ந்தேன். ஒரு முஸ்லீமாக ” ஒருவன் பாவத்தை ஒருவன் சுமக்கமுடியாது Sura al-An`am 6:165″ என்று நான் போதிக்கப்பட்டுள்ளேன். அப்படியானால், இயேசு எப்படி என் பாவத்தை மன்னிக்கமுடியும்? என்னை வழி நடத்தும்படி இறைவனிடம் வேண்டினேன்.

என் பாவங்கள் என்னை விட்டு நீங்க வில்லை என்பதை நான் உணர்ந்தேன். என் இதயத்தை தொடர்ந்து நான் கடிந்துக்கொண்டேன். நான் என் கிறிஸ்தவ நண்பர்களை சந்திக்கவேண்டும் என்ற ஆவல் மறுபடியும் என்னில் எழும்பிற்று. நான் படும் கஷ்டத்தை அவர்களிடம் சொல்லி ஆறுதல் அடையலாம் என்று எண்ணினேன். அந்த மிஷனரியை நான் சந்தித்தேன். அவர் கிறிஸ்தவத்தில் இப்படிப்பட்ட கஷ்டங்களை நான் அனுபவிக்கவேண்டும் என்றுச் சொன்னார். அவருக்கு குர்-ஆனும், இஸ்லாமும் தெரியும்.

ஒரு யோவான் சுவிசேஷத்தோடு வீட்டிற்கு வந்தேன், யாரும் பார்க்கக்கூடாது என்று காட்டில் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, ஒரு கல்லின் அடியில் வைத்தேன். அவ்வப்போது சென்று படிப்பேன்.

“Do not let your hearts be troubled. Trust in God; trust also in me.” John 14:1
யோவான்: 14:1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும்விசுவாசமாயிருங்கள்.

“என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” என்ன வார்த்தைகள் என்னை மிகவும் அசைத்தது.

அடுத்த வாரம் ஞாயிறு பள்ளிக்கு பேருந்தில் செல்லும் போது என் சித்தப்பா பார்த்துவிட்டார், வீட்டில் எனக்கு என்ன காத்திருக்கும் என்று நினைத்து மிகவும் பயந்துபோனேன். இருந்தும், அன்று ஞாயிறு பள்ளிக்கு சென்று விட்டு தான் வீட்டிற்குச் சென்றேன்.
கிறிஸ்தவ நண்பர்களை நான் சந்திக்கும் முன்பு, எனக்கு கிறிஸ்தவர்களைப் பற்றி கெட்ட எண்ணம் இருந்தது. ஆனால்,இந்த மிஷனரியை சந்தித்த பின்பு, அவரின் நடத்தை, அவரின் வாழ்க்கை முறை, முஸ்லீம்களை பற்றி அவர் கொண்டுள்ள நல்ல எண்ணம் போன்றவைகளை பார்த்து. இஸ்லாமியர்களால் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி சுமத்தப்படும் எல்லா குற்றச்சாட்டுகளும் உண்மையானது அல்ல என்று அறிந்துக்கொண்டேன்.

இந்த மிஷனரியின் அன்பு, இஸ்லாமியர்களின் அன்பை விட அதிகமா? என் நபியாகிய முகமது எனக்காக செய்ததை விட, மேஸீஹா இயேசு இந்த மிஷனரிக்காக அதிகமாக செய்தாரா?

குர்-ஆன் சொல்வது போல, கிறிஸ்தவர்கள் காபிர்களா(அல்லா மிது நம்பிக்கையில்லாதவர்களா)?
Quote:
நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்;. ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும். (5:73)
நான் என்னை அல்லாவிற்கு சமர்பித்து வாழுவதால், கிறிஸ்தவர்களை விட பரிசுத்தவான் என்று நான் நினைத்து இருந்தேன். ஆனால், என் உள்ளத்தின் கேடுகளைப் பற்றி என்று தெரிந்துக்கொள்ள ஆரம்பித்தேனோ, அன்று நான் உணர்ந்தேன், உண்மையில் இறைவனுக்கு சமர்பித்து வாழுவது அந்த மிஷனரி தான், இவரிடம் உள்ள அன்பு இயேசுவிடமிருந்து வந்தது என்று உணர்ந்தேன்.

ஒரு காந்தத்தைப் போல இயேசுவின் அன்பு என்னை இழுத்தது. இயேசு என் எஜமான்(Master) என்று நான் எண்ணினால், எப்படி நான் அவரில் அன்பு கூறுவது என்று சிந்திக்கலானேன். எப்போதெல்லாம் நான் கிறிஸ்தவனாக வேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ, உடனே “இது சாத்தான் கொண்டு வரும் எண்ணம் என்று நான் மறுத்துவிடுவேன், ஏனென்றால், நான் ஒரு முஸ்லீம் இல்லையா.

ஞாயிறு பள்ளியிலிருந்து மிகவும் பயத்தோடு வீட்டிற்கு வந்தேன். என் அப்பா எனக்கு என்ன செய்தாலும், அதை சந்திக்க நான் தயாராகி விட்டேன், ஆனால், இரண்டு நாட்களாக ஒன்றுமே நடக்கவில்லை. மூன்றாவது நாள் பள்ளிக்கூடம் விட்டபிறகு என் அப்பா என்னை பிடித்து ஒரு புதரில் தள்ளி தடியால் நான் செத்துபோகும் அளவிற்கு என்னை அடித்தார். என் தாய் என்னை காப்பாற்ற வந்தார்கள், அவர்களுக்கும் சில அடிகள் விழுந்தன. ஆனால், நான் உயிரோடு அன்று தப்பியது இறைவனின் கிருபையே. மறுபடியும், இஸ்லாமிய பிரமானத்தைச் சொன்னேன், கிறிஸ்தவர்களிடம் ஒரு தொடர்பும் வைத்துக்கொள்ளமாட்டேன் என்று சத்தியம் செய்தேன். அன்று, நான் செய்த சத்தியம், இன்னும் அடி வாங்காமல் தப்பிப்பதற்காகவா?

என் நண்பன் அப்துல்லா இந்த விவரங்கள் அனைத்தையும் எங்கள் மாகானம் அனைத்திலும் பரப்பிவிட்டான். எனக்கு தோந்தரவுகள் அதிகமாயின. மக்கள் என்னை முரைத்து பார்த்தார்கள். பல கெட்டவார்த்தைகளை சொன்னார்கள், சில நேரங்களில் என் மீது கல்லெரிந்தார்கள்.

நான் பள்ளிக்கூடத்தை விட்டு வரும்போது, என்னை பார்த்துச் சொல்வார்கள் ” இதோ போகிறான் பார் சபிக்கப்பட்டவன்”, “இதோ போகிறான் பார் கிறிஸ்தவன்”

On the way home from school they called out, “There goes the cursed one!” and “Here comes Mathai, the Nasrani (Christian)!”

என் உறவினர்களும், நண்பர்களும், ஆசிரியர்களும் என்னிடம் மிகவும் கடுமையாக நடந்துக்கொண்டார்கள். நான் குழம்பிவிட்டேன், உடைந்துவிட்டேன், தனிமையை உணர்ந்தேன், கஷ்டப்பட்டேன். இந்த நேரங்களில், பரிசுத்த சுவிசேஷங்களே என் துணைகள். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், காட்டிற்குச் செல்வேன், சுவிசேஷத்தை படிப்பேன், ஆனால், இரகசியமாக படிப்பது எனக்கு மறுபடியும் பயத்தை உண்டாக்கும். பல முக்கியமான அடிப்படை கொட்பாடுகளில், பைபிளும், இஸ்லாமிய கோட்பாடுகளும் வேறுபடுகின்றன.

ஒரு முஸ்லீமுக்கு கீழே கொடுக்கப்பட்ட இயேசு சொன்ன வார்த்தைகள் எவ்வளவு குழப்பத்தையும்(Puzzle), சிந்தையை ஒளிர்க்கக்கூடியதாக(thought -provoking) இருக்கும்?
யோவான்: 14:6. அதற்கு இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல்ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

யோவான்: 17:3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதேநித்தியஜீவன்.

யோவான்: 1: 12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார்.

யோவான்: 14:23. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக, ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக்கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்துஅவனோடே வாசம்பண்ணுவோம்.

இந்த இயேசு சொன்ன வார்த்தைகளை விவரித்து விளக்குவதற்கு எனக்கு ஒருவரும் இல்லை. எனவே, மறுபடியும் இறைவன் எனக்கு வழிநடத்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

=====================================================

மீதமுள்ள சாட்சியை நாளைக்கு மொழிபெயர்த்து தருகிறேன்… அதுவரை சஸ்பன்ஸ் என்ன என்று தெரிந்துக்கொள்ள விருப்பமா…? ஆங்கிலத்தில் கீழே உள்ள தொடுப்பில் படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

மீதமுள்ள தலைப்புக்கள்:

CHAINED BY LOVE – அன்பால் கட்டப்பட்டேன்
GOD DELIVERS ME – தேவன் என்னை விடுதலையாக்கினார்
FINDING THE LIGHT – வெளிச்சத்தை கண்டேன்
A GREAT DECISION – ஒரு முக்கியமான முடிவு
IN HIS SERVICE – அவரது ஊழிய பாதையில்
CONCLUSION – முடிவுரை

இவருடைய சாட்சியை ஆங்கிலத்தில் இங்கு படிக்கலாம்: http://www.the-good-way.com/eng/article/a16.htm

Rev. K. K. Alavi

Family: Rev. K.K. Alavi, his Wife, and Daughters

http://www.gracelutheranchurch.ca/00040004.jpg
[it is a big image, so, click and see separately)

His Testimony Booklet:
(நாம் இன்று படித்துக்கொண்டு இருப்பது இந்த புத்தகத்தில் உள்ள சாட்சியைத் தான்)

இவருக்காகவும், இவர் குடும்பம், ஊழியத்திற்காகவும் ஒரு நிமிடம் ஜெபிப்போமா...?

Wikipedia: http://en.wikipedia.org/wiki/Christianity_in_India

Muslim - Christian Conflict
Muslims in India who convert to Christianity have been known to be subjected to harassment, intimidation, and attacks. In Kashmir, a Christian convert named Bashir Tantray was killed, allegedly by militant Islamists in 2006.[24]A Christian priest, K.K. Alavi, who is a convert from Islam, recently raised the ire of his former Muslim community and has received many death threats. An Islamic terrorist group named “The National Development Front” actively campaigned against him.[25]


CHAINED BY LOVE - அன்பால் கட்டப்பட்டேன்
GOD DELIVERS ME – தேவன் என்னை விடுதலையாக்கினார்
FINDING THE LIGHT – வெளிச்சத்தை கண்டேன்
A GREAT DECISION – ஒரு முக்கியமான முடிவு
IN HIS SERVICE - அவரது ஊழிய பாதையில்
CONCLUSION - முடிவுரை
============================
CHAINED BY LOVE – அன்பால் கட்டப்பட்டேன்

என் உடலில் ஏற்பட்ட காயங்கள், வலிகள் மறைந்தன, ஆனால், கிறிஸ்தவர்களின், மற்றும் நான் படித்த புத்தகத்தின் பாதிப்பு இன்னும் என்னை விட்டு போகவில்லை. என் கிறிஸ்தவ நண்பர்களை சந்திக்கவேண்டும் என்று ஏதோ ஒன்று என்னை உருத்திக்கொண்டு இருந்தது. நான் அந்த மிஷனரியிடம் சென்று என் காயங்களைன் வடுக்களை காண்பித்தேன். நான் மைசூருக்கு செல்ல எனக்கு உதவி செய்யும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன், மைசூரில் என் அக்காள் தன் குடும்பத்தோடு வாழ்கிறாள். அவர்கள் என்னை அதிகமாக நேசிக்கிறார்கள் என்றுச் சொன்னேன். அதற்கு அந்த மிஷனரி, வேண்டாம், நீ உன் வீட்டுக்கு போ, நீ பெரியவனாகிவிட்ட பிறகு வேண்டுமானால், போகலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். நீ பெரியவானும் வரை உன் வீட்டில் அமைதியோடு, உன் நண்பர்களோடு வாழு என்றுச் சொன்னார். தேவன் தான் உனக்கு பாதுகாப்பு, காப்பாற்றுபவர், உன் நண்பர் ஆவார் என்றுச் சொன்னார்.

நான் ஏழாவது படித்துகொண்டு இருந்த நேரம், ஒரு நாள் நான் கிறிஸ்தவ நூலகத்தில் இருக்க அனுமதி கேட்டு அன்று தங்கியிருந்தேன். இதை அறிந்து பல முஸ்லீம்கள், போலிஸ்களுடன் அங்கு வந்து என்னைப் பற்றி விசாரித்தார்கள். அங்கு பெரிய அமளி உண்டானது. நான் பின்பக்கத்திலிருந்து ஓடிப்போய் ஒரு கால்வாயில் குதித்து குளிப்பது போல நடித்தேன்.

சிறிது நேரத்திற்கு பின்பு என்னை அவர்கள் கால்வாயில் குளிப்பதாக கண்டார்கள், என்னிடம் பல கேள்விகள் கேட்டார்கள், திட்டினார்கள். இதற்கிடையில் என் அம்மா என்னை தேடிக்கொண்டு இருந்தார்கள். எப்போது என் மாமா என்னை அங்கு கண்டுபிடித்து, வீட்டிற்கு கொண்டு வந்தார். என் அப்பா என் சித்தப்பா எல்லாரையும் அழைத்து அனுப்பினார். எங்கள் வீட்டு முன்பு ஒரு பெரிய கூட்டம் கூடியது.

கூட்டத்தைப் பார்த்து என் அப்பா ஒவ்வொருவரையும் கேட்க ஆரம்பித்தார்,” இப்போது நாம் ஆலவிக்கு என்ன செய்யலாம்?”. இவன் கிறிஸ்தவர்களோடு சேராமல் இருப்பதற்கு எவ்வளவோ முயற்சி எடுத்து பார்த்தேன் பயனில்லை என்றார். ஒரு சித்தப்பா, “இவன் தொண்டையை அறுத்து இவனை கொண்று விடலாம்” என்றார். அடுத்தவரும் இதையே சொன்னார். மூன்றாவது ஒருவர், வேண்டாம், இவனுக்கு பட்டினி போட்டு கொன்றுவிடலாம் என்றார். என் அம்மா அழுதுக்கொண்டு, முதலில் என்னை கொள்ளுங்கள், பிறகு என் மகனை கொள்ளுங்கள் என்றார்கள். அப்போது நான் மிகவும் அழுதேன். நான் மிகவும் பயந்தேன், இந்த கூட்டம் என்னை என்ன செய்யும் என்று பயந்துக்கொண்டு இருந்தேன், அந்த வலியை விவரிக்கமுடியாது.

கடைசியாக என்னை பட்டினி போடுவது என்று முடிவு செய்தார்கள், ஒரு சித்தப்பா என்னை அதிகமாக அடித்தார், என் அப்பா தடுக்கும்வரை. என் அப்பா என் கைகளை பின்புறம் வைத்து கட்டினார். இப்படி மூன்று வாரம் நான் இருந்தேன். ஒரு நாளுக்குஒரு முறை தான் சோறு என்று என் அப்பா சொன்னார், ஆனால் அவர் போனபின்பு என் அம்மா எனக்கு உணவு பல முறை கொடுத்துக்கொண்டு இருப்பார்கள்.

ஒரு நாள் என் தந்தை அவர் தம்பியோடு என்னிடம் வந்தார், ஒரு தச்சனை அழைத்துக்கொண்டு வந்தார். நான் முஸ்லீமுடைய பிரமானத்தை சொல்லும்படிக்கு என் சித்தப்பா என்னிடம் கேட்டார், எனக்கு என்ன ஆனதோ தெரியவில்லை, என்னால் அதை சொல்லமுடியவில்லை. என் அம்மாவும், சகோதரியும் சொல்லடா என்று கத்தினார்கள். ஆனால், நான் சொல்லவில்லை. கடைசியாக என் அப்பா, தச்சனிடம் சொன்னார்கள், இவன் கால்களுக்கு இரும்பு விலங்கு போட்டு புட்டிவிடு என்றார், அப்படி செய்யப்பட்டது, இப்படி 6 வாரங்கள் இருந்தேன், என் பழைய நண்பன் அப்துல்லா வந்தான், உன்னை இப்படி செய்யவைத்தது எது என்று கேட்டான், நான் பதில் சொல்லவில்லை, அவனுக்கே தெரியும். இப்படிப்பட்ட நேரங்களில் என்னை உட்சாகப்படுத்தியது யோவான் சுவிசேஷத்தின் வசனங்களே.

யோவான்: 14:1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும்விசுவாசமாயிருங்கள்.யோவான்: 8:32. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

நான் என் கால் விலங்குகளை பார்க்கும் போதெல்லாம், இயேசுவின் வார்த்தைகளை நினைத்துக்கொள்வேன். அவர் எனக்கு மிகவும் அருகாமையில் இருந்தார்.

GOD DELIVERS ME – தேவன் என்னை விடுதலையாக்கினார்

ஒரு நாள் யாரும் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, என் அம்மா வழி சொந்தக்காரர் ஒருவர் என் கால்களின் பூட்டை உடைத்தார் நான் தப்பித்தேன். அப்போதிலிருந்து யாரும் என்னை கட்டிவைக்க நினைக்கவில்லை, என் குடும்பமும், நண்பர்களும் என்னை அன்புடன் கவனித்துகொண்டனர், இப்படி இரண்டு வாரங்கள் இருந்தேன். என் மன அமைதியை கெடுத்து, எனக்கு பயத்தை உண்டாக்கும் வீட்டிலும், சமுதாயத்திலும் நான் ஏன் இருக்கவேண்டும் என்று சிந்திக்கலானேன். நான் வீட்டை விட்டு ஓடிப்போவது என்று முடிவு செய்தேன்.

ஒரு நாள் மதியம் சாப்பாடு சாப்பிட்ட பிறகு என் அம்மாவின் முகத்தை பார்த்தேன், என் கண்கள் கலங்கியது, என் திட்டத்தைப் பற்றி அவர்களுக்கு தெரியாது. நான் குளித்துவிட்டு வருவதாக என் அம்மாவிடம் பொய் சொல்லி வெளியே வந்தேன். தேவன் என்னை மன்னிப்பாராக நான் பொய் சொன்னதற்காக. 10 மைல் தூரம் நடந்து திருச்சூர் இரயில் நிலையத்தை அடைந்தேன், பிறகு காலிகட் இரயிலில் ஏறினேன். அங்கே வேலைக்காக அலைந்தேன், ஒரு டிக்கடையில் வேலை கிடைத்தது.

என் கிறிஸ்தவ நண்பர்கள் நான் கட்டப்பட்டு இருக்கும் போது எனக்காக ஜெபித்ததாக கேள்விப்பட்டேன். அந்த சமயத்தில் இஸ்லாமிய குருக்கள், கிறிஸ்தவ மிஷன் காம்பவுண்டு பக்கம் கூட போக வேண்டாம் என்று முஸ்லீம்களுக்கு கட்டளையிட்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளை கிறிஸ்தவ நர்சரி பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திவிட்டதாக அறிந்தேன்.

என் கிறிஸ்தவ நண்பர்களை மைக் வைத்துக்கொண்டு இஸ்லாமியர்கள் திட்டியுள்ளனர், கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையின் வாசலில் ஒரு பாதுகாவலனை வைத்து, யார் யார் மருத்துவமனைக்குள் போகிறார்கள் என்று கண்காணித்துள்ளனர். மருத்துவ சேவைக்காக மட்டும் முஸ்லீம்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்குள் நிலைமை மறுபடியும் சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளது.

நான் வேலை செய்யும் டீக்கடையின் முதலாலி ஒரு முஸ்லீமாவார், நான் பைபிள் தபால் வழி கல்வி பாடங்கள் படிப்பது அவருக்கு பிடிக்கவில்லை. நான் 5 மாதங்கள் அங்கு வேலை செய்தேன், பிறகு காலிகட்டை விட்டு மைசூருக்குச் சென்றேன். என் அக்காளின் வீட்டில் தங்கியிருந்தேன். என் கிறிஸ்தவ நண்பன் ஜியார்ஜுக்கு கடிதம் எழுதினேன். நான் நன்றாக உள்ளேன், இயேசு சொல்லிக்கொடுத்த பிரார்தனையை தினமும் ஜெபிக்கிறேன் என்று கடிதம் எழுதினேன்.

நான் மைசூரில் என் மாமாவோடு சேர்ந்து ஒரு வருடம் வேலை செய்தேன், பிறகு 18 மாதங்கள் காலிகட் கப்பல் துறைமுகத்தில் வேலை செய்தேன். பிறகு என் ஊருக்குச் சென்றேன், என் நண்பர்களைக் கண்டு சந்தோஷப்பட்டேன். அந்த மிஷனரி தன் நாட்டிற்கு சென்று இருந்தார். பிறகு மைசூருக்கு வந்தேன், என் மாமாவின் உதவியுடன் அப்பரன்டிஸ்( lineman) வேலை “தொலை தொடர்பு” பிரிவில் கிடைத்தது, ஆனாலும், என் இடுப்பு வலியின் காரணமாக சீக்கிரமாகவே அதிலிருந்து வேளியேறவேண்டி வந்தது.

நான் என் உடல் சிகிச்சைக்காக மளபாருக்கு போக முடிவுசெய்தேன், அங்கு என் நண்பன் மிஷன் மருத்தமனையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தான், அந்த மிஷனரியும் இந்தியாவிற்கு வந்து இருந்தார், சுகம் விசாரித்தார், எல்லாவற்றையும் சொன்னேன், அனேகர் உனக்காக ஜெபித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றார். இவர்கள் இருவரின் உதவியுடன், வேலுர் கிறிஸ்துவ கல்லூரி மருத்துவமனையில் எனக்கு சிகிச்சைக்கு அனுமதி கிடைத்தது. இந்த கிறிஸ்தவ மிஷனரி என் ஆவிக்குரிய தந்தையாவார், இவர் மனைவி என் ஆவிக்குரிய தாயாவார்கள்.

வேலூர் மருத்துவ மனையிலிருந்து திரும்பி வந்தேன், மைசூரில் உள்ள என்ற ஸ்தாபனத்தில் சேர்ந்து, இயேசுவின் பிரதிகளை எல்லாருக்கும் கொடுத்தேன். இதைக் கண்ட என் அக்காவும், மாமாவும் அவர்கள் வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். பிறகு மிஷனரியின் உதவியுடன், ஒரு போதகருடன்(at Gundulupet) நான் தங்க ஆயத்தம் செய்தார், நான் 4 மாதங்கள் பைபிளை மிகவும் ஆர்வமாக கற்றுக்கொண்டேன், இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது. பிறகு “India Evangelical Lutheran Church” என்ற ஸ்தாபனத்தோடு சேர்ந்து தென் இந்தியா முழுவதிலும் கைபிரதிகளை கொடுக்கும் ஊழியத்தைச் சேய்தேன். தேவன் அவருடைய ஊழியத்தில் என்னை பயன்படுத்திக்கொண்டு இருந்தார்.

நான் இன்னும் பைபிளை அதிகமாக அறிந்துக்கொள்ள விருப்பமுற்றேன். அதே போல நாகர்கோயிலில் இருக்கும் Concordia Seminary என்ற பைபிள் கல்லூரியில் ஒரு ஆண்டு பைபிள் படிக்க வாய்ப்பு ஜூன் 1970ல் கிடைத்தது. அந்த கல்லூரியின் நூலகத்தில் பல இஸ்லாமிய புத்தகங்கள் இருந்தன, அதை படித்து பல சந்தேகங்களை தீர்த்துக்கொண்டேன்.

FINDING THE LIGHT – வெளிச்சத்தை கண்டேன்

இப்போது தான் பைபிள் கல்லூரியில் அதிகமாக இயேசுவைப் பற்றி கற்றுக்கொண்டேன், இயேசுவைப் பற்றிய குர்-ஆனின் வசனங்களை ஆராய்ந்து பார்த்தேன். பைபிள் அறிவை பெருக்கிக்கொண்டேன்.

என்னுடைய முக்கிய சந்தேகங்களில் ஒன்று, இயேசுவின் பாவமற்ற வாழ்க்கையைப் பற்றியும், நம் பாவங்களை மன்னிக்கும் அவரது அதிகாரத்தைப் பற்றியுமே. இயேசுவின் பாவமில்லாத வாழ்க்கையைப் பற்றிய விவரங்களும், அதே நேரத்தில் குர்-ஆன் சொல்லும் மற்ற நபிகளின் பாவங்களையும் ஆராய்ந்தால், இவைகளுக்கு இடையே உள்ள பெரிய வித்தியாசத்தை காணலாம்.

முகமதுவைப் பற்றி குர்-ஆன் குறிப்பிட்டுச்சொல்லும் போது, கீழ் கண்டவாறு சொல்கிறது:

உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும். (குர்-ஆன் 48:2, cross reference: Sura Ghafir 40:45; Sura Muhammad 47:19)(மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; ….(குர்-ஆன் 35:1Cool

அப்படியானால், இந்த நபிகள் எப்படி மற்றவர்களுடைய பாரத்தை சுமக்கமுடியும்?

ஆனால், குர்-ஆனில் காபிரியேல் தூதன் மரியாளிடம் சொன்னதாக உள்ள வசனம் இது:

“நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார். (19:19)

இதே விவரத்தை ஹதீஸும் சொல்கிறது, “பிறக்கும் எல்லா குழந்தைகளையும் சாத்தான் தன் விரலால் தொடுகிறான், மரியாளையும், இயேசுவையும் அல்ல”.

சுவிசேஷங்களும் கூட இயேசுவின் பரிசுத்தத்தையும், பாவமில்லாமையையும் சொல்கின்றன.

யோவான்: 8: 46. “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான்சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.”

அவர் நம் பாவங்களை சுமந்தார் என்று பைபிள் சொல்கிறது.

1 யோவான்: 3:4. பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.5. அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.”

மற்றவர்களின் பாரங்களை சுமப்பதற்காகவா இயேசுவை பாவமில்லாதவராக இருந்தார்? இயேசு பாவமில்லாதவர் என்று குர்-ஆன் சொல்கிறது. ஆனால், ஏன் பாவமில்லாத ஒரு மகனை அல்லா மரியாளுக்கு அருளினார் என்று குர்-ஆன் எந்த காரணத்தையும் சொல்வதில்லை. குர்-ஆன் இயேசுவிற்கு அளிக்கும் உன்னத நிலை வேறு எந்த தீர்க்கதரிசிக்கும், அப்போஸ்தலருக்கும் அருளவில்லை. இயேசு இறைவனின் வார்த்தை என்றும், இயேசு இறைவனின் ஆவி(ஆத்துமா) என்றும் குர்-ஆன் சொல்கிறது.

வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;. ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் – (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்;. (இது) உங்களுக்கு நன்மையாகும் – ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்;. அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். 4:171மற்றும் காபிரியேல் தூதன் மரியாளிடம் கீழ்கண்டவாறு சொல்கிறார்:
“அவ்வாறேயாகும்; ‘இது எனக்கு மிகவும் சுலபமானதே மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்’ என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். (19:21, cf. Sura al-Anbiya’ 21:91)

இயேசு பற்றி குர்-ஆன் எதை சொன்னாலும், அதினால் இயேசு ஒரு தனித்தன்மை உடையவராக காட்டப்படுகிறார். தேவனோடு அவருடைய உறவாகிய “தேவனுடைய வார்த்தை” என்றும், தேவனிடமிருந்து வந்த ஆத்துமா என்றும் குர்-ஆன் சொல்கிறது. இயேசுவின் படைக்கும் அல்லது உருவாக்கும் செயல்கள், அவர் சுகமாக்கியது, அவர் மரித்தவர்களை உயிரோடு எழுப்பியது ,(குர்-ஆன் Sura Al Imran 3:49), அவர் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது போன்றவைகளைச் சொல்லலாம்.

இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர் Wink “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்). 3:49

மேலும் நான் சில முக்கிய வித்தியாசத்தை பற்றி படித்தேன், பைபிள் சொல்லும் “தேவனுடைய குமாரன்” என்ற பொருளுக்கும், குர்-ஆன் சொல்லும், “தேவனுடைய குமாரன்” என்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இறைவனுக்கு ஒரு குமாரன் இருக்கமாட்டார் என்று குர்-ஆன் சொல்கிறது. அதாவது மனித முறையில் பிறக்கமாட்டார் என்றுச் சொல்கிறது(Lam yalid wa lam yulad). ஆனால், இயேசு தேவனுடைய குமாரன் என்று பைபிள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஏனென்றால், பைபிள் அதை ஆவிக்குரிய பொருளில் சொல்கிறது. Here again I was grateful to the Qur’an for serving as a bridge to a fuller comprehension of the Biblical significance of the term “Son of God” when uniquely applied to Jesus.

கீழ்கண்ட வசனத்தின் அடிப்படையில் முஸ்லீம்கள் இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் போன்றவற்றை மறுக்கின்றனர்.

இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.4:157ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். 4:158

வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். 4:159

மற்றுமொறு இடத்தில் குர்-ஆன் இயேசுவின் மரணத்தைப் பற்றிச் சொல்கிறது, ஆனால், முஸ்லீம்கள் இதற்கு வித்தியாசமான பொருளை கூறுகிறார்கள்.

“Peace on me the day I was born, and the day I die, and the day I shall be raised alive!” (Sura Maryam 19:33)

“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது. 19:33

“(And remember) when Allah said: O Jesus! Lo! I am gathering thee and causing thee to ascend unto Me, and am cleansing thee of those who disbelieve and am setting those who follow thee above those who disbelieve until the Day of Resurrection. Then unto Me ye will (all) return, and I am judge between you as to that wherein ye used to differ.” (Sura Al Imran 3:55)

“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! 3:55

“I spake unto them only that which Thou commandest me, (saying) Worship Allah, my Lord and your Lord. I was a witness of them while I dwelt among them, and when Thou tookest me Thou wast the Watcher over them. Thou art Witness over all things.” (Sura al Ma’ida 5:117)

“நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்); 5:117

But is Pickthall’s interpretation of mutawaffika (“I am gathering thee” Sura Al Imran 3:55) and tawaffaitani (“Thou tookest me” Sura al-Ma’ida) correct? Some respectable Muslim commentaries translate this verb “to cause to die”, indicating that the death of Jesus preceded His ascension into heaven.

குர்-ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பின் ஆசிரியர் பிக்தால் என்பவரின் பொருள் கூறுதல் சரியா? சில இஸ்லாமிய ஆசிரியர்கள் வேறு விதத்தில் பொருள் கூறுகிறார்கள்.

ஆனால், பைபிள் சொல்லும் விவரங்களில் வித்தியாசமான பொருள் கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. இயேசுவை சிலுவையில் அறைந்தது, பிலாத்து யூதாவின் ஆளுநராக இருந்தது போன்றவைகள் அனைத்தும் சரித்திர உண்மைகள்.

என் மனதில் ஒரு கேள்வி இருந்தது, அது என்னவென்றால், முகமது வருவார் என்று இயேசு முன் அறிவித்தார் என்று குர்-ஆன் சொல்லும் வசனமாகும்.

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா, “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் ‘அஹமது’ என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள். (Sura al-Saff 61:6)

அஹமத் என்றால் “புகழ்ச்சிக்கு உரியவர்” என்று பொருள். முகமதுவைப் பற்றி இயேசு சொல்லியுள்ளார் என்று முஸ்லீம்கள் போதிக்கப்படுகிறார்கள்.

முகமது பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துக்கொள்ள நான் பைபிளை முழுவதும் தேடிப்பார்த்தேன், ஒன்றும் கிடைக்கவில்லை, என் பேராசிரியரைக் கேட்டேன், அவரும் ஒன்றும் இல்லை என்றுச் சொன்னார். ஆனால், இஸ்லாமிய அறிஞர்கள் பல ஆதாரங்களை காட்டுகிறார்கள். அவர் காட்டும் வசனங்களில் முக்கியமானது குர்-ஆன் 61:6ம் வசனமாகும்.

இதற்காக அவர்கள் காட்டும் பைபிள் வசனம் யோவான் 14:16 ஆகும்.

யோவான் 14:16. நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூடஇருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத்தந்தருளுவார்.

முஸ்லீம் அறிஞர்கள் சொல்கிறார்கள், கிறிஸ்தவர்கள் periklutos – “Praised One” என்ற வார்த்தையை மாற்றி “Counsellor – Parakletos” என்று மாற்றிவிட்டார்கள் என்று.

The Greek Word for Counsellor is Parakletos . (Greek is the original language of the New Testament.) The commentator said that the original Greek word was periklutos , which means “Praised One”. Christians, he said, substituted parakletos for periklutos to remove the reference to the prophet Muhammad.

எனக்கு கிரேக்க மொழி தெரியாது, எனவே, முகமதுவை நம்பாமல் இருக்கமுடியவில்லை. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, இன்னும் முகமது என் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

நான் ஒரு கிரேக்க பேராசிரியரிடம் என் சந்தேகத்தை கேட்டேன், அவர் எனக்கு விவரித்தார், இஸ்லாமியர்கள் சொல்லுவது போல, அந்த வார்த்தையை யாரும் மாற்றவில்லை. இயேசு பரிசுத்த ஆவியானவரைப் பற்றி சொல்கிறார் என்று விவரித்தார்.

இந்த பிரச்சனைக்கு பதில் தரும்படி தேவனிடம் ஒப்படைத்துவிட்டேன். ஒரு நாள் இரவு ஜெபித்துவிட்டு, தூங்கச் சென்றேன், தூக்கம் வரவில்லை, ஒரு சத்தம் எனக்கு கேட்டது ” எழுந்திரு, படி” என்று, நான் அது என் கற்பனை என்று எண்ணினேன். மறுபடியும் அதே சத்தம் கேட்டது, நான் எழுந்து யோவான் 14:15-17 வசனத்தை பல முறை படித்தேன்.

I placed the problem before God and asked Him to give me clear understanding. One night, after I had prayed and gone to bed, I could not sleep. I heard a voice or felt as though I had heard a voice. It said, “Get up and read!” I thought it was only my imagination. But I heard it again and again. I got up and opened my Bible. Several times I read the passage in John 14:15-17:

யோவான் 14:15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.16. நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூடஇருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத்தந்தருளுவார்.17. உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப்பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள்அவரை அறிவீர்கள்.

இதை படிக்கும் போது ஒரு கேள்வி “நீ எப்போதாவது குர்-ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ ” முகமது ஒரு ஆத்துமா அல்லது ஆவியாக இருக்கிறார் என்றோ, எப்போதும் உன்னுடன் இருக்கிறார் என்றொ, அவர் உனக்குள் வாழ்கிறார் என்றோ படித்தாயா என்ற கேள்வி எழுந்தது.”.

இப்போது நான் புரிந்துக்கொண்டேன், அதாவது இயேசு சொன்ன ஆவியானவர் தேற்றளவாளன் ஒரு மனிதனுக்கு பொருந்தாது, முகமதுவிற்கு பொருந்தாது என்று. இயேசு சொன்ன ஆவியானவர் அப்போஸ்தலர் நடபடிகள் 2:1-11ம் வசனத்தில் நிறைவேறியது என்று அறிந்துக்கொண்டேன். ஆவியானவர் என்னை வழிநடத்தினார், கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. ஆமென்.

அன்றிலிருந்து பைபிளை மிகவும் ஊக்கமாக படிக்க ஆரம்பித்தேன், இயேசு கொடுக்கும் மன அமைதியை, பாவமன்னிப்பின் நிச்சயத்தை முழுவதுமாக உணர்ந்தேன்.

The Holy Bible brought the answers to the problems which worried me. Its living word was able to satisfy my soul. What I had never found before in my religious experience, I now discovered. I became sure that the Holy Bible faithfully and accurately recorded the works and teaching of Jesus – this mystery of God’s eternal Word coming into our world as man. Now I became convinced of the truth of His death, resurrection, ascension, and second coming, which before I had not understood and had even hated. The Bible contains the message of God’s power to save and His love for me and all men, and this brings us peace. This love of God focuses sharply on Jesus, His death and resurrection for sinners – as Paul, echoing Jesus and His other apostles, says in the New Testament,

1 கொரிந்தியர்: 15:3. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,4. அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,5. கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.

நிறைய முஸ்லீம்கள் பைபிள் மாற்றப்பட்டது என்று நம்புகிறார்கள், அவர்கள் அப்படியே நம்பட்டும், ஆனால், அவர்கள் குர்-ஆனின் வசனங்களையும் , பைபிளையும் என்னைப்போல ஆராய்ந்துப்பார்த்தால் நிச்சயமாக சத்தியத்தை தெரிந்துக்கொள்வார்கள்.

A GREAT DECISION – ஒரு முக்கியமான முடிவு

ஜூலை 19, 1970ல் நான் என் மனதை முழுவதுமாக இயேசுவிற்கு ஒப்புவித்தேன், என் பாவங்களை அறிக்கையிட்டு, மன்னிப்பை பெற்றேன், ஞானஸ்நானம் பெற்றேன், ஆவியின் உட்சாகத்தை உணர்ந்தேன், அந்த சந்தோஷம் இன்று வரை எனக்கு உள்ளது.

IN HIS SERVICE – அவரது ஊழிய பாதையில்

என் பைபிள் படிப்பை படித்துக்கொண்டு இருக்கும் போதே, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, “Operation Mobilization” என்ற பிரிவில் இரண்டு ஆண்டுகள் இந்தியா முழுவதிலும் சுவிசேஷம் சொல்ல வாய்ப்பு பெற்றேன், அப்பொது அறிந்துக்கொண்டேன், இயேசுவை பின்பற்றுதல் என்றால் என்ன என்று. பிறகு 1975ல் என் பைபிள் படிப்பை முடித்தேன்.

என்னுடைய அதிகமான பாரம் என் மக்களுக்கு இயேசுவின் நற்செய்தியைச் சொல்வது அவர்கள் எங்கு இருந்தாலும், முக்கியமாக நான் வளர்ந்த ஊரிலிருக்கும் எல்லாருக்கும் சொல்வது. இவர்கள் இயேசுவின் இரட்சிப்பின் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வார்களா?

யோவான் 14:6. அதற்கு இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல்ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.யோவான் 17:3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதேநித்தியஜீவன்.

யோவான் 8:12. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி, நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப்பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

CONCLUSION – முடிவுரை

நான் இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன். அவர் என் வாழ்க்கையை மாற்றி நிம்மதி, சந்தோஷம் , நம்பிக்கையை கொடுத்துள்ளார்.
என் பலவீனங்களில் எனக்கு பெலனையும் கொடுத்துள்ளார். ஒரு உயிருள்ள இறைவனாக என் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை கொடுத்துள்ளார்.
எனக்கு தெரியும் நான் இயேசுவின் பரலோக குடும்பத்தின் ஒரு அங்கத்தினன்.

தாவீது இராஜா சொல்வது போல,

சங்கீதம் 27:10. என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.

என்னுடைய பிரச்சனை நேரங்களில், சோதனை நேரங்களில் நான் அவர் முகத்தை பார்க்கிறேன், இதுவே எனக்கு போதும். நான் தனிமையில், சோர்ந்து இருக்கும் போது, நான் அவரின் கிருபையை நினைத்து துதிக்கிறேன்.

இயேசு சொல்கிறார்:
யோவான்: 15:16. நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என்நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக்கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனிநிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.

நான் அவரை தெரிந்துக்கொள்ளவில்லை, அவர் என்னை தெரிந்துக்கொண்டார். ஆம், அந்த பாக் என்ற பையனின் கதை தான் இந்த ஆலவியின் கதையும் கூட. தேவனுக்கே சதாகாலங்களிலும் மகிமை உண்டாகட்டும், ஆமென்.

தொடர்பு கொள்ள:

Markaz Ul Bishara, PO Box 18
Manjeri, Kerala, India 676 121

“முன்னாள் முஸ்லீம் இயக்கம்”

“முன்னாள் முஸ்லீம் இயக்கம்”

இஸ்லாமில் இருந்து வெளியேறினால் அவன் முர்த்தத்.அவன் கொல்லப்படவேண்டும் என்று முகமது கூறியுள்ளார்.

அதனால் தெரியாமல் இஸ்லாமுக்கு சென்றவர்கள் வெளியே வருவது குதிரை கொம்பே.ஆனால் விடுதலை வேட்க்கை வந்துவிட்டால் மனிதன் உயிரை துச்சமென்று நினைத்து விடுவான்.அதுபோல்தான் இஸ்லாமின் அடிமைத்தனத்தில் இருந்து வெளியேற நினைப்பவர்கள் ஐரோப்பாவில் தனி அமைப்பையே உருவாக்கியுள்ளனர்.

http://ezhila.blogspot.com/2007/09/blog-post_9356.html

ஐரோப்பாவில் வெகு வேகமாக வளரும் “முன்னாள் முஸ்லீம் இயக்கம்”


தங்களை ex-muslim என்று அழைத்துக்கொண்டு முன்னாள் முஸ்லீம்கள் வெளிப்படையாக இஸ்லாமிலிருந்து மேலும் பலர் வெளியேறி வரவேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

A New Brand of Nonbelievers
In a Divided Europe, Ex-Muslims Want to Be Heard
Chairman of the Dutch Ex-Muslim committee Ehsan Jami holds up a t-shirt that reads “I am an ex-muslim too” 11 September 2007 during a press conference where Jami and his counterparts from Germany and England signed the European Statement of Tolerance in The Hague. The Netherlands Committee of Ex-Muslims was founded that day according to their website. (Koen Suyk, AFP/Getty Images) By CHRISTINE BROUWER
LONDON, Sept. 17, 2007

Share As the debate in Western Europe about radical Islam heats up, a new and unlikely group of people are adding their voice to the discussion.

They call themselves “ex-Muslims.”

Related Stories
“Ex-Muslim” group launches in Britain4 Dutch Muslims Convicted in Terror PlotGermans Concerned About Muslim ConvertsGermany: Muslim Group Claims Foiled PlotDanish police arrest 8 Muslims in alleged bomb plotVan Gogh Killer to Face Terrorist ChargeCartoonist Hiding From al-Qaida ThreatTop International stories
Iraqi PM: Shootings ‘Cannot Be Accepted’Bush’s Mideast Conference Taking ShapeMad Monks: Lead Protest of 20,000 People
Raised as Muslims but having renounced their religion, this new brand of nonbelievers say they aim to make the rejection of Islam an acceptable topic for public debate and to confront threats of violence they say are associated with leaving the faith.

“We want to support people who want to change their religion, but their parents, their society have them clasped in it and won’t let them out,” Ehsan Jami, the 22-year-old founder of the Dutch Committee for Ex-Muslims told The Associated Press. “They would realize that they are not standing alone.”

Jami, who is of Iranian origin and works as a city councilman for the Dutch Labor Party, officially launched his Committee in The Hague six days ago, on Sept. 11, a day he says he chose specifically for its symbolic significance.

The group, which has no official member list, but which organizers say counts “hundreds” of sympathizers, follows in the footsteps of similar initiatives founded earlier this year in Britain, Germany and Scandinavia.

The launch of the Dutch Council for Ex-Muslims was met with massive media attention in the Netherlands, and it has reignited a tense national debate on the social and cultural integration of the country’s 1 million Muslims.

Organizers say that by speaking frankly about their split with Islam they hope to break through what they call the public’s “self-censorship” when it comes to the issue of Muslim fundamentalism, which they say threatens what they consider basic European values such as freedom of religion and freedom of speech.

Aggressive Message
But commentators, both Muslim and not, have criticized Jami for what they call his unnecessarily provocative and polarizing statements, such as calling Islam a “religion of oppression” and comparing the faith to fascism or Nazism.

“If the idea is ‘everyone should be free to believe and say what they want,’ then we support that,” said Khalil Aitblal, 29, a spokesman for the Union of Moroccan Mosques in Amsterdam and Surroundings, and a practicing Muslim. “But if the message is to stand out through insulting or denigrating statements, then I have to wonder, what exactly is your message?”

இஸ்லாமில் இருந்து வெளியேறுகிறவர்கள் மீது வன்முறை தாக்குதல்

இஸ்லாமில் இருந்து வெளியேறுகிறவர்கள் மீது வன்முறை தாக்குதல்

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

இஸ்லாமில் இருந்து வெளியேறுகிறவர்கள் மீது வன்முறை தாக்குதல்

இஸ்லலமின் அல்லா இஸ்லாமிலிருந்து வெளியேறுகிறவர்களை கொல்ல சொல்லுவதாக முகமது சொல்கிறார் என்று அவரின் சீடர்கள் ஹதீஷில் சொல்லப்பட்டுள்ளது.கீழே உள்ள புகாரி என்ற இஸ்லாமிய புத்தகத்தில் உள்ள வசனங்கள் ஆகும்.
இஸ்லாமின் கடவுளும்,நபியும் மற்ற மதத்துக்கு செல்பவர்களை கொல்லவே சொல்லியுள்ளார்கள்.அதை எந்த மாற்றமும் இல்லாமல் இப்பொழுது உள்ளவர்கள் செய்து வருகிறார்கள்.
ஹதீஸ் 6922 அலீ (ரலி) அவர்களிடம், இஸ்லாத்திலிருந்து வெளியேறிய(துடன் இஸ்லாத்திற்கும் அரசுக்கும் விரோதமாகச் செயல்பட்ட) சிலர் கொண்டுவரப்பட்டனர். அவர்களை அலீ (ரலி) அவர்கள் எரித்து (விடுமாறு உத்தர)விட்டார்கள். இந்தச் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அளிக்கின்ற (நெருப்பின்) வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள் என்று கூறினார்கள். மாறhக, நபி (ஸல்) அவர்கள் எவர் தமது மார்க்கத்தை மாற்றிறக்கொள்கிறாரோ அவருக்கு மரணதண்டனை அளியுங்கள் என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரணதண்டனை அளித்திருப்பேன் என்று சொன்னார்கள்.
ஹதீஸ் 6878 அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன் என உறுதிமொழி கூறியமுஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. (அவை) ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது 2. திருமணமானவன் விபசாரம் செய்வது, 3. ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறிவிடுவது.
ஹதீஸ் 7157 (யூதராயிந்த) ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டுப் பின்பு யூதராக மாறி விட்டார். அந்த மனிதர் என்னிடம் இருந்த போது முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் பந்தார்கள். இவருக்கு என்ன? என்று முஆத் கேட்டார்கள். நான், இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டுப் பிறகு யூதராகி விட்டார் என்று சொன்னேன். முஆத் (ரலி) அவர்கள், நான் இவருக்கு மரண தண்டனை அளிக்காதவரை அமரமாட்டேன். இதுதான் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தீர்ப்பாகும் என்று சொனனார்.
http://ezhila.blogspot.com/2007/09/4_16.html
இங்கிலாந்தில் கிறிஸ்துவர்களாக ஆகும் முன்னாள் முஸ்லீம்களின் மீது வன்முறை- சேனல் 4
இங்கிலாந்தில் ஏராளமான முஸ்லீம்கள் கிறிஸ்துவர்களாகவும் இந்துக்களாகவும் ஆகி வருகிறார்கள். ஆனால், இவர்கள் மீது இஸ்லாமிலேயே இருக்கும் மக்கள் வன்முறையை பிரயோகிக்கிறார்கள்.இதனை ஆராய்ந்து பலரை பேட்டி கண்டு இங்கிலாந்து சேனல் 4 நிகழ்ச்சி தொகுப்பு செய்திருக்கிறது.

ரோச்சஸ்டர் பிஷப்பாக இருப்பவர் மைக்கல் நாஸிர் அலி. இவரது தந்தையார் பாகிஸ்தானிலேயே இஸ்லாமிலிருந்து கிறிஸ்துவத்துக்கு மதம் மாறியவர்.

மைக்கல் நாஸிர் அலி, சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் அடுத்த தலைவராக ஆகக்கூடிய வாய்ப்புள்ளவராக கருதப்படுகிறார்.

Broadcast: Monday 17 September 2007 08:00 PM

http://www.channel4.com/news/articles/dispatches/unholy+war/802852Dispatches investigates the violence and intimidation facing Muslims who convert to Christianity in Britain

Unholy War
Dispatches investigates the violence and intimidation facing Muslims who convert to Christianity in Britain. Dispatches reporter Antony Barnett meets former Muslims who now live under the threat of reprisals from their former communities. Many are still living in fear. He interviews a family who have been driven out of their home and a convert whose brother was beaten close to death.

The investigation uncovers a network of churches supporting converts from Islam who have to worship under a veil of secrecy. It is estimated there are as many as 3,000 Muslims who have converted to Christianity living in Britain.

Converting to another religion for a Muslim is not just considered a taboo act by some believers. Certain Islamic texts demand converts – also known as apostates – be punished severely for deserting their faith. In several Islamic states, the death penalty is imposed. Here in Britain, Dispatches discovers a form of mob justice is taking place on our streets. A concerned Christian bishop tells Dispatches that it may not be long before a British convert is killed, and implores Muslim leaders to take action.

Dispatches discovers the situation for converts from Islam in Britain is a tinderbox waiting to explode. Increasingly asylum seekers from Islamic countries are exploring different faiths in Britain while a new strand of evangelical Christianity is targeting Britain’s Muslims for conversion.

With radical British Islamic groups calling for apostates to be executed if they achieved their goal of a worldwide Islamic state, it’s a potentially dangerous cocktail that has been exacerbated by the silence of both Muslim and Christian leaders on the subject.

முஸ்லீம் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமிலிருந்து வெளியேற்றம்

முஸ்லீம் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமிலிருந்து வெளியேற்றம்

ஐரோப்பிய முஸ்லீம் இளைஞர்கள் கூட்டம்கூட்டமாக இஸ்லாமிலிருந்து வெளியேறுகிறார்கள்..
http://ezhila.blogspot.com/2007/09/blog-post_9882.html
இஸ்லாமிலிருந்து வெளியேறியோர் இயக்கம் (Committee of Ex Muslims) என்ற அமைப்பு நெதர்லாந்தில் ஆரம்பித்து ஐரோப்பா முழுவதும் வெகு வேகமாக பரவி வருகிறது.

தனிமனிதருக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஐரோப்பாவில் ஏராளமான முஸ்லீம் இளைஞர்கள் வெகுவேகமாக இஸ்லாமிலிருந்து வெளியேறி வருகின்றனர். இது பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பெரும் விவாதத்தையும் சச்சரவையும் தோற்றுவித்துள்ளது.

முன்பு இஸ்லாமை பின்பற்றாதவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் இருந்தனர். தற்போது வெளிப்படையாகவே தங்களை முஸ்லீம்கள் அல்ல என்றே அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.

இதற்கு இந்த “இஸ்லாமிலிருந்து வெளியேறியோர் இயக்கம்” மகத்தான பங்களிப்பு செய்துள்ளது

Young Muslims begin dangerous fight for the right to abandon faith
David Charter in The Hague

http://www.timesonline.co.uk/tol/news/world/europe/article2426314.ece
A group of young Muslim apostates launches a campaign today, the anniversary of the 9/11 attacks on America, to make it easier to renounce Islam.

The provocative move reflects a growing rift between traditionalists and a younger generation raised on a diet of Dutch tolerance.

The Committee for Ex-Muslims promises to campaign for freedom of religion but has already upset the Islamic and political Establishments for stirring tensions among the million-strong Muslim community in the Netherlands.

Ehsan Jami, the committee’s founder, who rejected Islam after the attack on the twin towers in 2001, has become the most talked-about public figure in the Netherlands. He has been forced into hiding after a series of death threats and a recent attack.

Related Links
‘Whoever changes religion – kill him’
The threats are taken seriously after the murder in 2002 of Pim Fortuyn, an antiimmigration politician, and in 2004 of Theo Van Gogh, an antiIslam film-maker.

Speaking to The Times at a secret location before the committee’s launch today, the Labour Party councillor said that the movement would declare war on radical Islam. Similar organisations campaigning for reform of the religion have sprung up across Europe and representatives from Britain and Germany will join the launch in The Hague today.

“Sharia schools say that they will kill the ones who leave Islam. In the West people get threatened, thrown out of their family, beaten up,” Mr Jami said. “In Islam you are born Muslim. You do not even choose to be Muslim. We want that to change, so that people are free to choose who they want to be and what they want to believe in.”

Mr Jami, 22, who has abandoned his studies as his political career has taken off, denied that the choice of September 11 was deliberately provocative towards the Islamic Establishment. “We chose the date because we want to make a clear statement that we no longer tolerate the intolerence of Islam, the terrorist attacks,” he said.

“In 1965 the Church in Holland made a declaration that freedom of conscience is above hanging on to religion, so you can choose whether you are going to be a Christian or not. What we are seeking is the same thing for Islam.”

Mr Jami, who has compared the rise of radical Islam to the threat from Nazism in the 1930s, is receiving only lukewarm support from his party which traditionally relies upon Muslim votes. His outspoken attack on radical Islam has led to a prelaunch walk-out from fellow committee founder Loubna Berrada, who herself rejected Islam.

She said: “I don’t wish to confront Islam itself. I only want to spread the message that Muslims should be allowed to leave Islam behind without being threatened.”

There have been suggestions that Mr Jami might defect to the right-wing Freedom Party, led by Geert Wilders, the most outspoken politician in the Netherlands, who has called for the Koran to be banned. But Mr Jami said: “I have respect for Wilders but we do not have the same ideology. I am for the freedom of religion.

“Banning something is not going to help. I am the opposite – everyone should read the Koran.” Mr Jami is being compared to Ayaan Hirsi Ali, the Somali refugee who became a prominent Dutch politician campaigning for the reform of Islam but who left eventually for an academic career in the United States.

Jannie Groen, a writer for De Volksrant newspaper, said: “[Among Muslims] he is getting the same reaction as Ayaan Hirsi Ali that he is too confrontational but you are seeing other former Muslims now coming forward. So he has been able to put this issue of apostasy on the agenda, even though they do not want to be in the same room as him and he has had to pay a price.”

By the Book

— 14 passages in the Koran refer to apostasy

— According to Baidhawi’s commentary, Sura 4: 88-89 reads: “Whosoever turns back from his belief, openly or secretly, take him and kill him wheresoever ye find him, like any other infidel. Separate yourself from him altogether. Do not accept intercession in his regard.”

— The hadith, tradition and legend about Muhammad and his followers used as a basis of Sharia, tells of some atheists who were brought to “‘Ali and he burnt them. The news of this reached Ibn Abbas who said: ‘If I had been in his place, I would not have burnt them, as Allah’s Apostate forbade it . . . I would have killed them according to the statement of Allah’s Apostate, ‘Whoever changed his [Islamic] religion, then kill him’.”

— According to hadith, a special reward in Paradise is reserved for the killer of apostates

Source: Times archives; Barnabas Fund

ஈரான் நாட்டில் 5 லட்சம் பேர் கிறிஸ்தவர்கள்

ஈரான் நாட்டில் 5 லட்சம் பேர் கிறிஸ்தவர்கள் ஆக மாறியுள்ளனர்

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

ஈரான் நாட்டில் ஒரு முஸ்லீம் வேறு மதத்திற்கு மாறினால் மரண தண்டனை. இருந்தாலும் 5 லட்சத்திலிருந்து ஒரு மில்லியன் வரை புதிதாக இரட்சிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று செய்தி.

அவர்களுக்கு தேவையான பைபிள்கள் சப்ளை செய்ய முடியாமல் தவிக்கும் கிறிஸ்தவ ஸ்தானபங்கள்.

Source: http://www.spcm.org/Journal/spip.php?breve728
Iranians Turn « Massively » To Christianity, Despite Execution Threats

http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=3761#3761

கிறிஸ்துவத்துக்கு மதம் மாறிய முஸ்லீமை கொல்

கிறிஸ்துவத்துக்கு மதம் மாறிய முஸ்லீமை கொல்ல கூக்குரல்

எகிப்தில் ஒரு முஸ்லீம் கிறிஸ்துவத்துக்கு மதம் மாறியுள்ளார்.அத்தோடு, அரசாங்க பதிவேட்டில் தன் மதமாக கிறிஸ்துவத்தை போட வேண்டும் என்று அரசாங்கத்துக்கு மனு செய்திருக்கிறார்.

எகிப்து சட்டத்தில் ஒரு முஸ்லீம் கிறிஸ்துவத்துக்கு மதம் மாறக்கூடாது என்று ஏதும் இல்லை. ஆனால், இஸ்லாமின் படி, ஒரு முஸ்லீம் மதம் மாறினால், அவரை கொல்ல வேண்டுமாம்.

அதனால், இவரை கொல்லவேண்டும் என்று பலத்த கூக்குரல் எழுந்துள்ளது.

A Muslim converts to Christianity foments sectarian antagonism
The Associated PressPublished: August 11, 2007

CAIRO, Egypt: An Egyptian Muslim who converted to Christianity has gone into hiding, facing death threats after he launched an attempt to get official recognition of his change of religion, an unprecedented step in this conservative Islamic nation.

An Islamist cleric has vowed to seek Mohammed Hegazy’s execution as an apostate, his family has shunned him, and Hegazy raised a storm of controversy when pictures of him posing for journalists with a poster of the Virgin Mary were published in the newspapers.

“They think I am crazy or something,” the 25-year-old Hegazy said of his family, speaking to The Associated Press by phone from his hideout.

Hegazy made an unusual public splash because he sought to raise a court case to officially change his religion on his national ID card, likely the first time a Muslim-born convert has sought to do so in Egypt. His first lawyer filed the case, but then quit after the uproar, and his second is still considering whether it’s worth pursuing the attempt.

Hegazy said he received death threats by phone before he went into hiding, in an apartment bare of furniture where he lives with his wife, who is also a convert from Islam and is four months pregnant. He would not say where the apartment was located.

“I know there are fatwas (religious edicts) to shed my blood, but I will not give up and I will not leave the country,” Hegazy said.

There is no law on the books in Egypt against converting from Islam to Christianity, but in this case tradition trumps the law. Under a widespread interpretation of Islamic law, converting from Islam is apostasy and is punishable by death — though killings are rare and the state has never ordered or carried out an execution.

Most Muslims who convert usually practice their new religion quietly, seeking to avoid attention, or flee the country to the West. In Egypt, at the very least they face ostracism by their families, but if their conversion becomes known they can receive death threats from militants, or harassment by police, who use laws against “insulting religion” or “disturbing public order” as a pretext to target them.

The overwhelming taboo against conversion has made even trying to get official recognition unthinkable, leaving it unknown if a court would accept it. Christians who become Muslims are able to get their new religion entered on their ID and face little trouble from officials — though they too are usually thrown out by their families.

The issue of conversion is an inflammatory one in Egypt, which is majority Muslim but has a large Christian community estimated at about 10 percent of the 76 million population. Tensions have run high in recent years, with sectarian clashes in the Mediterranean city of Alexandria and small villages in southern Egypt.

Many Egyptian Christians complain of discrimination, Islamic hard-liners oppose any moves that could be seen as encouraging the spread of Christianity — and the Coptic Church together with the government are extremely wary of any steps that could anger conservative Muslims.

Hegazy — who has taken the Christian name Beshoy, after an Egyptian monk — said he converted to Christianity nine years ago and began attending church in his hometown of Port Said, a city on Egypt’s Suez Canal.

“I started readings and comparative studies in religions,” he said. “I found that I am not consistent with Islam teachings. The major issue for me was love. Islam wasn’t promoting love as Christianity did.”

After his conversion was discovered, police detained him for three days and tortured him, he said. He was harassed several more times, then in 2001 he published a book of poems critical of the security services. He was quickly arrested again and held for three months on suspicion of sedition, disturbing public order and insulting the president, though he was finally released without charge.

Last year, he was finally baptized at a Coptic Orthodox Church, he said. Soon after, he married his wife, a Muslim named Um Hashim Kamel who had converted several years earlier, taking the name Katarina. She too had been ostracized by her family.

He said he wants to officially change his religion on his ID card for two reasons — to set a precedent for other converts and to ensure his child can openly be raised Christian. He wants his child to get a Christian name, birth certificate and eventually marry in a church. That would be impossible if Hegazy’s official religion in Muslim, since a child is registered in the religion of the father.

Hegazy’s first lawyer, Mamdouh Nakhlah, told the AP he initially accepted the case because of an editorial last month by one of Egypt’s highest Islamic clerics, the Grand Mufti Ali Gomaa, who wrote against the killing of apostates, saying there is no worldly retribution for Muslims who abandon their religion.

“The essential question before us is can a person who is Muslim choose a religion other than Islam? The answer is yes,” Gomaa, who is Egypt’s highest authority for issuing fatwas, wrote in the editorial in The Washington Post.

Gomaa’s comments were sharply criticized by Muslim conservatives, who said he was opening the door for Muslims to leave their faith.

Still, Nakhlah said he had hoped Gomaa’s statement could signal the chance to set a legal precedent. He submitted Hegazy’s suit to the courts, but when the uproar in the press , Nakhlah backed out.

“Its very sensitive case and the atmosphere is not suitable,” Nakhlah told a press conference in Cairo on Tuesday.

Hegazy’s new lawyer, Ramsis el-Nagger, says he had not decided whether to pursue the case and is pessimistic the suit could be won “because of all the conflict” around it.

If the case makes it to court, it is opening an unknown realm of Egyptian law. Earlier this year, a court rejected an attempt by a group of Christians who had converted to Islam but then returned to Christianity and sought to restore their original religion on their ID cards.

The judge ruled that the group was treating religion like a “game” and “exploiting religion.” When a higher court agreed last month to hear the group’s appeal, it raised a new storm of controversy, and the appeals court has yet to rule.

அன்புள்ள அப்பா(அல்லா)விற்கு, ஆயிஷா எழுதும் கடிதம்-1

அன்புள்ள அப்பா(அல்லா)விற்கு, ஆயிஷா எழுதும் கடிதம்-1


அன்புள்ள அப்பா(அல்லா)விற்கு, ஆயிஷா எழுதும் கடிதம்-1

[ஆயிஷா பி.எஸ்.சி முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். குடும்பத்தில் மொத்தம் 5 பேர், இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன் மற்றும் தாய். தந்தை கடந்த ஆண்டுதான் காலமானார். குடும்ப பாரம் சுமக்கும் பொருப்பு ஆயிஷாவின் மீது விழுந்தது தான் முத்தமகள் என்பதால். ஒரு சொந்த வீடு தவிர, வேறு சொத்து ஒன்றுமில்லை. தனக்கு வயது 24ஐ தாண்டிவிட்டது. தம்பிக்கு இப்போது வயது 7 ஆகிறது. இரண்டு சகோதரிகளும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். குர்-ஆனை அரபியில் பலமுறை படித்தாகிவிட்டது. முதல் முறை குர்-ஆனை படித்துமுடிக்கும் போது, அப்பா ஒரு விருந்து செய்து சொல்லிக்கொடுத்த ஆசிரியைக்கு மரியாதை செய்தது இன்னும் மனதைவிட்டு மறையவில்லை. ஒரு நாள் ஆயிஷாவிற்கு ஒரு யோசனை வந்தது, இன்றிலிருந்து குர்-ஆனை தமிழில் படிக்கலாம் என்று, தமிழ் குர்-ஆனை வாங்கினாள், படித்தாள், இதோ தன் சந்தேகங்களை கடிதமாக அல்லாவிற்கே எழுதுகிறாள்.]

அன்புள்ள அப்பா(அல்லா)விற்கு, ஆயிஷா எழுதும் கடிதம். நலம் நலமறிய ஆவல். நீர் கொடுத்த வேதத்தை(குர்-ஆன்) நான் அரபியில் பல முறைபடித்துள்ளேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் நான் அதிக பக்தியுடையவளாக என் உள்ளத்தில் உணர்ந்துள்ளேன். என்னுடைய தந்தை எங்களை விட்டு போனபிறகு நாங்கள் தனிமையையும், பாதுகாப்பின்மையையும் உணருகிறோம். இதை போக்கிக்கொள்ளவும், இன்னும் நீர் குர்-ஆனில் என்ன சொல்லியிருக்கிறீர் என்று அறிந்து ஆறுதல் அடைய ஆவலுள்ளவளாய், நான் குர்-ஆனை தமிழில் படிக்க ஆரம்பித்தேன். எப்போதும் போல நான் சுத்தமாக குளித்துவிட்டு, அரபி குர்-ஆனை எவ்வித கண்ணியத்தோடு படிக்கிறேனோ, அதே கண்ணியத்தோடு தமிழ் குர்-ஆனையும் படிக்க ஆரம்பித்தேன்.

இப்படி படிக்கும்போது எனக்கு பல சந்தேகங்கள் வருகிறது. என் மனது சிலவற்றை ஏற்க மறுக்கிறது. அதை யாரிடம் கேட்பேன், எங்கள் அப்பா எங்களோடு இல்லை, எனவே உமக்கு நான் கடிதம் எழுதுகிறேன். எல்லா அனாதைகளுக்கும் தகப்பன் நீர் ஒருவர் தானே. இக்கடிதத்தை நான் என் டைரியில் எழுதிவைக்கிறேன், நீர் படித்து எனக்கு எப்படியாவது பதிலை தரவேண்டும். இறைவன் மனதின் எண்ணங்களை அறிபவன் என்றுச் சொல்வார்கள், எனவே என் டைரியை படிப்பதற்கு உமக்கு சிரமமிருக்காது.

1. சாட்சி சொல்வதில் ஒரு பெண் சரிபாதியாக மதிக்கப்படவேண்டும், குர்-ஆன் 2:282

அல்லா, நான் குர்-ஆன் இரண்டாம் அதிகாரம் படிக்கும்போது 282ம் வசனத்தை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஒரு பெண் சாட்சி சொல்லும்போது பாதியாக மதிக்கப்படுவாள் என்று நீர் சொல்லியிருக்கிறீர்.

குர்-ஆன் 2:282
…(நீங்கள் சாட்சியாக ஏற்கக்கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்;… Quran 2:282 YUSUFALI: … and get two witnesses, out of your own men, and if there are not two men, then a man and two women, such as ye choose, for witnesses, so that if one of them errs, the other can remind her….

ஹதீஸ்களை பார்க்கும் போது, முகமது பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்கள், பக்தியில் குறைவுள்ளவர்கள் என்றுச் சொல்கிறார். நரகத்தில் அதிகமாக காணப்படுவது பெண்கள் தான் என்றுச் சொல்கிறார்.

Narrated Abu Said Al-Khudri: The Prophet said, “Isn’t the witness of a woman equal to half of that of a man?” The women said, “Yes.” He said, “This is because of the deficiency of a woman’s mind.”

Narrated Abu Said Al-Khudri: Once Allah’s Apostle went out to the Musalla (to offer the prayer) o ‘Id-al-Adha or Al-Fitr prayer. Then he passed by the women and said, “O women! Give alms, as I have seen that the majority of the dwellers of Hell-fire were you (women).” They asked, “Why is it so, O Allah’s Apostle ?” He replied, “You curse frequently and are ungrateful to your husbands. I have not seen anyone more deficient in intelligence and religion than you. A cautious sensible man could be led astray by some of you.” The women asked, “O Allah’s Apostle! What is deficient in our intelligence and religion?” He said, “Is not the evidence of two women equal to the witness of one man?” They replied in the affirmative. He said, “This is the deficiency in her intelligence. Isn’t it true that a woman can neither pray nor fast during her menses?” The women replied in the affirmative. He said, “This is the deficiency in her religion.”

சாட்சியாக கருதுவதற்கு ஒரு ஆணுக்கு இரு பெண்கள் சமம் என்று எப்படி நீர் சொல்கிறீர்? இதற்கு காரணம் கேட்டாள் “அறிவில் பெண்கள்” குறைபாடு உள்ளவர்கள் என்று முகமது சொல்கிறார். உம்முடைய தூதரிடம் இதைப்பற்றி கேள்வி கேட்டால், இப்படியிருக்கும் என்று ஒரு வெப்தளத்தில் படித்தேன்.

கேள்வி: “ஓ முகமது, ஏன் நரகத்தில் அதிகமாக பெண்கள் இருக்கிறார்கள்?”
முகமது: “ஏனென்றால், அவர்களுக்கு பொது அறிவு (அ) பகுத்தறிவு (Common-Sense) குறைவு”
கேள்வி: “அவர்களுக்கு பகுத்தறிவு குறைவு என்று உமக்கு எப்படி தெரியும்?”
முகமது: “ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக இருப்பதினால், அவர்களுக்கு அறிவு குறைவு என்று அறிந்துக்கொள்ளலாம்”
கேள்வி: “ஆனால், ஏன் அவர்களின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக உள்ளது?”
முகமது: “ஏனென்றால், அவர்கள் அறிவில் குறைபாடு இருப்பதனால்”.
கேள்வி: “அவர்கள் அறிவில் குறைபாடு இருப்பது உமக்கு எப்படி தெரியும்?”
முகமது: “அவர்கள் அறிவு குறைபாடு இருப்பதை, அவர்களின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக இருப்பதினால், நாம் அறிந்துக்கொள்ளலாம்”.
கேள்வி: “மறுபடியும், ஏன் அவர்கள் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக உள்ளது?”
முகமது: “ஏனென்றால், அவர்கள் மூளையறிவு குறைவு”.
கேள்வி: “குறைபாடு அவர்களில்லை, உம்முடைய வாதத்தில் உள்ளது”.

1) ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதி என்று குர்-ஆன் 2:282ல் சொன்னதால், பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்களா? அல்லது2) பெண்கள் (பிறப்பிலிருந்தே) அறிவில் குறைவுள்ளவர்கள் என்று நீரும், உம் தூதரும் சொல்வதால், ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியா?

இதில் எது உண்மை. இது ஒரு தவறான, நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு வசனமாகும்.

இதை உலகத்தில் யார் சொல்லியிருந்தாலும், போகட்டும் நாக்கிலே எலும்பு இல்லை என்பதால் மனிதன் எதையானாலும் பேசுவான் என்று நான் விட்டுவிட்டுயிருப்பேன். ஆனால், எல்லாம் அறிந்த இறைவனாகிய “நீர் (அல்லா)” சொன்னது தான் என்னால் ஜீரணிக்கமுடியவில்லை.

2. மூளை அல்லது அறிவு என்பது பயிற்றுவிக்கவேண்டியது:

அல்லா, பிறக்கும்போது யாரும் புத்திசாலியாக பிறப்பதில்லை, மற்றும் முட்டாளாக பிறப்பதில்லை. நாம் அந்த மூளைக்குத்தரும் பயிற்சி, படிப்பு, சூழ்நிலை மற்றும் நண்பர்கள் முலமாக மனிதன் (ஆண், பெண்), அறிவாளியாகவோ அல்லது சிறிது அறிவில் குறைவுள்ளவனாகவோ மாறுகிறான். இதில் ஆண்கள் அறிவில் எப்போதும் சிறந்து விளங்குவார்கள், பெண்கள் முட்டாள்களாக இருப்பார்கள் என்றுச் சொல்வது மிகப்பெரிய தவறாகும். பிறக்குப்போது மூளைவளர்ச்சி குன்றியவர்களை நாம் இதில் செர்த்துக்கொள்ளக்கூடாது. அப்படி சேர்த்துக்கொண்டாலும் இதிலும் இருவர் ஆண் பெண் உண்டு.என் மனைவி, அல்லது சகோதரி அறிவில் சிறிது குறைவுள்ளவள், பக்தியில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை என்றுச் சொல்ல முகமதுவிற்கு உரிமை உண்டே தவிர, உலக மொத்த பெண்ணினமே, அறிவில் குறைவுள்ளவர்களாக இருப்பார்கள், எனவே அவர்களின் சாட்சி ஆணின் சாட்சியில் பாதி என்றுச் சொல்ல அவருக்கு உரிமையில்லை.

பகுத்தறிவு, நேர்மை, நீதி, நியாயம், உண்மை, பொய், கடமை இவைகளின் இனம் (Sex) என்ன அல்லா? ஆணா அல்லது பெண்ணா? ஆண்கள் எப்போதும் நேர்மையாகவே இருப்பார்கள், பெண்கள் நேர்மை தவறுவார்கள் என்றுச் சொல்லி, இவைகளுக்கு ஒரு இனத்தை(Sex) கொடுத்த பெருமை இஸ்லாமையேச் சாரும்.

பெண்களை தலைவர்களாக நியமித்தால், அந்த நாடு அல்லது நிறுவனம் முன்னேறாது என்று முகமது சொல்லியிருப்பது இப்போதுள்ள மனிதனுக்குத் தெரிந்தால், அவன் எவ்வித கஷ்டத்தில் இருந்தாலும், ஒரு நிமிடம் தன்னை மறந்து சிரித்துவிடுவான் அல்லா!….

Narrated Abu Bakra: During the battle of Al-Jamal, Allah benefited me with a Word (I heard from the Prophet). When the Prophet heard the news that the people of the Persia had made the daughter of Khosrau their Queen (ruler), he said, “Never will succeed such a nation as makes a woman their ruler.”

இதோ உலகத்தின் சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த சில பெண் முத்துக்கள்:

1. 1901 லிருந்து இன்றுவரை 33 பெண்கள் நோபல் பரிசுகள் பெற்றுயிருக்கின்றனர். 2. மேரி கியுரி இரண்டு முறை நோபல் பரிசு வென்றவர் (1903, 1911)பொலோனியம் மற்றும் ரேடியம் கண்டுபிடித்ததற்காக (உலகத்தின் பெண் தலைவர்களின் பட்டியல் புகைப்படத்துடன் | Prime Ministers | Queens | Presidents | Governer Generals | Women rulers currently in Office | )

3. சரோஜினி நாயுடு, அன்னை தெரேசா, இந்திய பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி, இலங்கை பிரதமர் பண்டாரநாயகே, தமிழ்நாட்டின் முன்னால் உயர்நிதீ மன்றத்தின் நீதிபதி பாத்திமா பீவி அவர்கள், இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ் கிரன் பேடி அவர்கள், இமயமலை சிகரத்தை அடைந்த முதல் ஜப்பானிய பெண் “ஜுன்கோ டெபை – ஆண்டு 1975″ இன்னும் பலர். 4. உம்முடைய சட்டம் நடைபெறும் சவுதி அரேபியாவில் பெண்கள், கார் ஓட்டுவதற்கு முன்பாகவே , காபிர் நாடாகிய (என் அருமை தாய் நாடு) இந்தியாவின் அருமை புதல்வி “கல்பனா சாவ்லா” வின்னிற்கு ராக்கெட்டில் சென்று விட்டாள். உம்முடைய சட்டம் நடைபெறும் நாட்டின் பெண்கள் தேர்தலில் ஓட்டுரிமை பெறுவதற்குள், காபிர் நாடுகளில் பெண்கள் முதலமைச்சர்கள், பிரதமமந்திரிகள் ஆகிவிடுகின்றனர். இவர்களின் அறிவு குறைபாடுள்ளதா? அல்லது நீங்கள் சொன்னது இஸ்லாமிய பெண்களுக்கு மட்டும் தானா? அல்லா, இஸ்லாமிய பெண்களையும் படிக்க வையுங்கள், “ஷீரின் எபாடி” போன்ற பல பெண்கள் நொபல் பரிசுகளை வெல்வார்கள்.5. சரித்திரத்தில் முதன்முறையாக ஒரு இஸ்லாமிய பெண்ணிற்கு “2003 அமைதி நோபல் பரிசு” கிடைத்தது. அவர் தான் “ஷீரின் எபாடி”. நான் ஒன்று சொல்லட்டுமா அல்லா? இந்த பரிசு இப்பெண்மனிக்கு எதற்காகத் கிடைத்தது தெரியுமா? இவர் ஈரானில் உள்ள பெண்களுக்கு எதிராக நடக்கும் இழி செயல்களிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும் காப்பாற்றும்படியாக அதிகமாக உழைத்ததால் தான்.

இவர் வழக்கறிஞராக பல ஆண்டுகள் பெண்களுக்கு சேவைசெய்தார். இவருக்கு நீதிபதியாக பதவி உயர்வு கிடைக்கும்போது, ஈரானின் இமாமகள், இது இஸ்லாமிற்கு எதிரானது, ஒரு பெண்ணின் அறிவுரையை ஆண்கள் கேட்கக்கூடாது என்றும், பெண்களை ஆளுகை செய்கிறவர்களாக நியமிக்கக்கூடாது என்றும் ஹதீஸில் முகமது சொல்லியிருக்கிறார், எனவே இது செல்லாது என்றுச் சொல்லி, இவரை நீதிபதி பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

இவர் தன் முயற்சியை விடாது போராடிக்கொண்டிருந்தார். 15 ஆண்டுகளுக்கு பிறகு இதே இமாம்கள், இதே இஸ்லாம், இது செல்லும் என்றுச் சொல்லி மறுபடியும், இவரை நீதிபதி செய்தார்கள்.இவருடைய 15 ஆண்டுகளின் சேவை இஸ்லாம் சட்டத்தால் வீணாக்கப்பட்டது. எத்தனை பெண்களின் வாழ்க்கை மலர்ந்திருக்குமோ, தெரியாது. இதற்கெல்லாம் நீர் தான் காரணம். உம்முடைய பதில் என்ன அல்லா?

Because of this, we all spent a lot of time investigating whether this was really true. We read, researched, and wrote articles about it. Finally, after 15 years, I’m happy to say that they have accepted that women can be judges. At the moment, we have two female judges in the Appeal Courts. So you see, when they said women couldn’t be judges, they said it was because Islam had said so. But now they say Islam allows female judges, so my point is that with time, interpretations differ. Source: Shirin Ebadi Interview

3. இந்த வசனத்தினால் பெண்களுக்கு என்ன தீமை நடந்துவிடுகிறது என்று கேட்கிறீர்களா?

பாகிஸ்தானில் “ஹுதூத் சட்டம்” என்று ஒரு இஸ்லாமிய சட்டம் இருந்தது. குர்-ஆன் படியும், ஹதிஸ்படியும் தண்டனை (ஷரியா) கொடுப்பது தான் இதன் நோக்கம். இது 1979ல் கொண்டுவரப்பட்டது, 2006ல் ரத்துசெய்யப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் இன்னும் 2,10,000 வழக்குகள் நிலுவையில் உள்ளது.இதன்படி,ஒரு பெண்ணை ஒருவன் கற்பழித்துவிட்டால், அந்தப் பெண், நான்கு ஆண்களை சாட்சியாக் கொண்டுவர வேண்டும், கொண்டுவரமுடியவில்லையானால் அவளுக்கு வேசி என்று பெயர் சூட்டி, தண்டனை அளிக்கப்படும், சில நேரங்களில் கல்லெரிந்தும், ஊரின் நடுவில் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்படுவாள். இப்படி பல பெண்கள், ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டிலும் அழிந்துக்கொண்டுவருகிறார்கள்.
Source : South Asia Media | Wikipedia

In Pakistan, rape is dealt with under Islamic laws known as the Hudood Ordinances. These criminalise all sex outside marriage. So, under Hudood, if a rape victim fails to present four male witnesses to the crime, she herself could face punishment. This has made it almost impossible to prosecute rape cases. According to the country’s independent Human Rights Commission, a woman is raped every two hours and gang-raped every eight hours in Pakistan. These figures are probably an under-estimation as many rapes are not reported. Source: BBC

[19 வயது ஈரானின் நாஜினைன், நிலையை இங்கு படிக்கவும்] Naginin

அல்லா, இதற்கு பதில் சொல்லும்
1. எந்த ஒரு சண்டாளனாவது, நான்கு சாட்சிகளை வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட காரியத்தைச் செய்வானா?
2. இப்படிப்பட்ட சட்டம் நாட்டில் இருந்தால், சில விஷமிகளுக்கு இப்படிப்பட்ட் வேலைகளைச் செய்ய அதிக தைரியம் வருமல்லவா?
3. இப்படிப்பட்ட வழக்குகள் பகிஸ்தானில் 2,10,000 நிலுவையில் உள்ளதே!, இந்த பெண்களின் நிலை என்ன?
4. இதற்கெல்லாம் காரணம் நீரல்லவோ அல்லா?
5. பெண்களின் அறிவு குறைவு என்று தெரிந்த உமக்கு, ஆண்களின் எண்ணங்கள் எப்படியிருக்கும் என்று தெரியாமல் போனதென்ன?

முடிவாக அல்லா, என் கேள்விகளை எல்லாம், உமக்கு தெரிவித்துள்ளேன். இன்னும் பல கேள்விகள் உள்ளது. அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன். ஒன்று மட்டும் நிச்சயம், “எந்த சமுதாயத்தில் பெண்கள் முன்னேறவில்லையோ, அந்த சமுதாயம் முன்னேறமுடியாது.”.

இப்படிக்கு
ஆயிஷா
இந்தியா

ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூசுப் யுஹானா இஸ்லாமை தழுவினார்?

ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூசுப் யுஹானா இஸ்லாமை தழுவினார்?

செப்டம்பர் 14, 2005, பாகிஸ்தான் செய்தித்தாள்களில் ஒரு திடுக்கிடும் செய்தி வெளியானது “பாகிஸ்தானின் ஒரே கிறிஸ்தவ கிரிக்கெட் விரர், இஸ்லாமை தழுவினார்”. உடனே, யூசுப் யுஹான அதனை மறுத்தார்.

மூன்று நாட்கள் கழித்து, செப்டம்பர் 17, 2005 என்று, யூசுப் யுஹனா பகிரங்கமாக ஒரு செய்தியை வெளியிட்டார். தான் ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாமை ஏற்றுக்கொண்டதாகவும், தான் ஒரு முஸ்லீம் என்றும் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பே, தான் “உம்ரா” (சிறிய ஹஜ்) செய்ததாக அறிவித்தார். மற்றும் தன் குடும்பத்தையும், பாகிஸ்தான் கிறிஸ்தவ சமுதாயத்தையும் “இஸ்லாமை தழுவும்படியும்” அவர் அழைப்பு விடுத்தார்.


யூசுப் யுஹானா மற்றும் அவர் மனைவி டானிய இப்போது முஹம்மத் யூசுப் மற்றும் ஃபாதிமா
1. அதிக மரியாதைக்குரிய கிரிக்கெட் வீரர்:

பாகிஸ்தான் கிறிஸ்தவர்களின் பெருமையை உலகத்திற்கு பரைசாற்றியவர் யூசுப் யுஹானா. எல்லா பாகிஸ்தான் கிறிஸ்தவர்களாலும் மிகவும் மதிப்பிற்குரியவராக இருந்தவர் இவர். அவர் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் ஆடுகளத்தில் நுழையும் போதும், வெளியே வரும்போதும் ரசிகர்களின் ஆரவாரம் வானத்தை எட்டும். அவருடைய வெற்றிக்காக அதிகமாக ஜெபித்தவர்களும் உண்டு. ஆனால் அவருடைய செப்டம்பர் 17ம் தேதியின் இந்த அறிவிப்பு, எல்லா பாகிஸ்தான் கிறிஸ்தவர்களை துக்கத்தில் ஆழ்த்தியது, மற்றும் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

2. ஆஸ்திரேலியா மெல்பர்னில் உள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவ சமுதாயம் சந்தித்த ஏமாற்றம்:

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் உள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு, யூசுப் யுஹானாவின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், ஆஸ்திரேலியாவுடன் விளையாட டிசம்பர் 2004 ல் ஆஸ்திரேலியாவிற்கு சென்றுயிருந்தனர். டிசெம்பர் 26ம் 2004 தேதி, இரண்டாம் தொடர் விளையாட்டு மெல்பர்னில் ஆரம்பமானது. அன்று மெல்பர்னில் உள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் சமுதாயம் யூசுப் யுஹானாவிற்கும் அவர் குடும்பத்திற்கும் கிறிஸ்மஸ் விருந்து ஒன்று ஒழுங்குசெய்து அவரோடு கூட உண்டு மகிழ்ந்தனர். அவரின் வெற்றிக்காக ஒரு சிறப்பு பிரார்த்தனையும் ஏறெடுக்கப்பட்டது. மறுநாள் போட்டியில் யூசுப் யுஹானா 111 ஓட்டங்களை எடுத்தார், மற்றும் 50 ஓட்டங்கள், அடுத்து 100 ஓட்டங்கள் எடுக்கும் பொது, அவர் ரசிகர்களைப் பார்த்து தன் கைகளால் சிலுவைக் காட்டி மகிழ்ந்தார்.

யூசுப் யுஹானா மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாமை தழுவினார் என்ற செய்தி கேட்டு, மெல்பர்ன் பாகிஸ்தான் கிறிஸ்தவ சமுதாயம் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானது. அன்று கிறிஸ்துமஸ் விருந்தில் அவர் முஸ்லீமாக இருந்தும், நம் எல்லாரிடமும் கிறிஸ்தவர் போல நடித்தார் என்றுச் சொல்லி மிகவும் வேதனைப்பட்டனர்.

3. யூசுப் யுஹானா பெற்றோர்களின் கதரல்:

யூசுப் யுஹானாவின் பெற்றோர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை தந்தது. அவரது தந்தை திரு. யூசுப் மஸி, செய்தியாளர்களிடம் போசும் போது: “யூசுப் ஒரு பெரிய பாவத்தைச் செய்துள்ளான்” என்றுச் சொன்னார்.

He has committed a great sin

யூசுப் யுஹானாவின் தாய் Daily Times என்ற செய்தித்தாளுக்கு சொல்லும்போது “I don’t want to give Yousuf my name after what he has done”, மற்றும் “We came to know about his decision when he offered Friday Prayers at a local mosque. It was a shock ” என்றார்.

Life ‘ruined’Mohammad Yousuf’s mother says she had been worried about her son’s behaviour for a long time.

She blamed the brother of a former Pakistan Cricket player, Saeed Anwar, for “ruining my son’s life,” according to the Daily Times.

4. தப்லிஹி ஜமாத் மதக்குழுவின் மற்றும் இதர கிரிக்கெட் வீரர்களின் பங்கு:

“தப்லிஹி ஜமாத்” என்பது பாகிஸ்தானின் மிகப்பெரிய இஸ்லாமிய மத குழுவாகும். கிரிக்கெட் வீரர் சயித் அன்வர் மற்றும் அவரின் சகோதரர் இருவரும், இக்குழுவின் மூலமாக இஸ்லாமிய பிரச்சாரம் செய்பவர்களாக இருக்கின்றனர்.

“சயித் அன்வர்” தன் மகனின் வாழ்க்கையை அழித்துவிட்டார் என்று யூசுப் யுஹானாவின் தாய் குற்றம் சாட்டுகிறார்.

“தப்லிஹி ஜமாத்” மூலமாக நடத்தப்படும் மத சொற்பொழிவுகளுக்கு தான் தவறாமல் சென்று வருவதாக யூசுப் யுஹானா ஒத்துக்கொண்டு இருக்கிறார். ஆனாலும், தான் இஸ்லாமிற்கு மாறியது தன் சுய விருப்பத்தின்படியே என்றும், இதில் எந்த “கட்டாயமும்’  இல்லை என்றும் அவர் செய்தியாளர்களுக்கு அறிவித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட்டின் அதிகாரிகள் சொல்லும் போது, “கடந்த பல ஆண்டுகளாக “தப்லிஹி ஜமாத்” குழுவின் உறுப்பினர்கள், இந்த கிரிக்கெட் போர்ட்டின் அலுவலகத்திற்கும், முகாம்களுக்கும் (Camp) வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்” மற்றும் நம் கிரிக்கெட் வீரர்களில் பலர் கடந்த சில ஆண்டுகளாக மதவிஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். Source : BBC

THE HINDU என்ற செய்தித்தாளின் படி, “தப்லிஹி ஜமாத்” உருப்பினர்கள், யூசுப் யுஹானாவையும், அவர் குடும்பத்தையும்(மனைவி), இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக கருதப்படும் “மக்காவில்” வைத்து இவர்களை “இஸ்லாமிற்கு” மாற்றியதாக கூறுகிறது.

“The conversion took place with members of a ‘tableeghi jamaat’ present with him in Mecca where he and his family said the Kalma and later performed Umra.” a criketer was quoted as saying by The News on Saturday.“The truth is Youhana had tried to take the decision to become a Muslim some years back but facing lot of opposition and emotional blackmail from his wife, parents and other relatives, he stalled the inevitable. He then convinced his wife and children of the need to become Muslims and some players had also played a key role in this process,” the report said.

“தப்லிஹி ஜமாத்” மதக் குழு இவருடைய இஸ்லாம் மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்பதை நாம் அறியலாம்.5. அவர் மனைவியின் மனநிலை:

யூசுப் யுஹானா மற்றும் அவர் மனைவி டானிய இப்போது முஹம்மத் யூசுப் மற்றும் ஃபாதிமா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். யுஹான மனைவி டானிய உண்மையிலேயே இஸ்லாமிற்கு மனவிருப்பத்தோடு மாறினாரா அல்லது யுஹானாவின் கட்டாயத்தின் பேரில் மாறினாரா என்பது கேள்விக்குறி? யுஹானா தான் இஸ்லாமிற்கு மாறிய பிறகு தன் குடும்பத்தை மாற்றுவதற்கு மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொண்டார்.

ஒரு கிறிஸ்தவ பெண்ணாக பிறந்து வளர்ந்த டானியா எப்படி இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்?  இரு வேறு கருத்துடைய கணவன் மற்றும் மனைவி இஸ்லாமில் ஒன்று சேர்ந்து வாழ இஸ்லாம் வழி வகுக்குமா? இஸ்லாமில் நம்பிக்கையில்லா மனைவியுடன் வாழ இஸ்லாம் அனுமதிக்குமா? குர்-ஆனில் சொல்லப்பட்டது போல, ஒரு மனைவி தன் கணவன் சொல் கேட்கவில்லை என்றால், அவளை அடிக்கவும் தன் கணவனுக்கு அதிகாரம் உள்ளது. மற்றும் விவாகரத்து செய்ய ஆண்களுக்கு அதிக அதிகாரம் உள்ளது.

 தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இஸ்லாமிய நாட்டில் ஒரு பெண் விவாகரத்து செய்துக்கொண்டு வாழ்வதென்பது மிகவும் கடினமாக காரியம் என்பதனால், தானும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார். இந்த மூன்றாண்டுகள், டானிய இஸ்லாமைப் பற்றி அதிகம் படித்து தெரிந்துக்கொண்டிருக்கவேண்டும். தன் கணவர் தன்னை கட்டாயப்படுத்தவில்லையானாலும், இஸ்லாமும், இஸ்லாமிய சமுதாயமும் இதனை அனுமதிக்காது. இதனை அறிந்த டானிய, இஸ்லாமை ஏற்றுக்கொண்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. கணவனின் முடிவுக்காக தன்னை படைத்தவனை உதரித்தள்ளவேண்டிய நிலைக்கு டானிய நிர்பந்திக்கப்பட்டுள்ளார். யூசுப் யுஹானா தன் பிள்ளைகளையும், படித்துக்கொண்டிருந்த பள்ளிக்கூடத்திலிருந்து, இஸ்லாமிய படிப்பு கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துள்ளார்.

6. மாற்றத்திற்கு முன்பு யுஹானா சந்தித்த சில நிகழ்வுகள்:

1. 2005 தொடக்கத்தில் இந்திய போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வரும்போது, யுஹானாவிற்கு பதிலாக “யூனிஸ் கான்”ஐ துணை தலைவராக நியமித்தார்கள் .

“Early this year, Youhana was replaced by Younis Khan as vice-captain for the tour of India. The Pakistan Cricket Board(P.C.B.) justified the decision claiming it wanted to tackle the malaise of complacency supposedly afflicting the team. Ironically, Youhana was made a scapegoat for the team’s poor performance against the mighty Australians playing on its own turf; Inzamam-ul Haq retained the captaincy even though Imran Khan thought the Pakistan skipper had taken the ruse of a bad back to duck the Australian fast bowlers”.

Youhana’s leap of faith
In the Byzantine ways of Pakistan cricket politics, the conversion of Yousuf Youhana (now Mohammad Yousuf) from Christianity to Islam may see his return to the vice-captaincy of the national side and eventually the captaincy itself.
As vice-captain, Youhana led Pakistan in two Test matches in Australia last season when captain Inzamam-ul-Haq was injured and also in some one-day Internationals.However, he was controversially replaced as vice-captain for the tour to India earlier this year, a move which the Pakistan cricketers and officials refused to comment on.

Reportedly, it was former captain Imran Khan, still wielding considerable clout in Pakistan cricket who objected to Youhana’s position in the side and this led to his being replaced.

He had identified Younis Khan as replacement for Haq as leader of the Pakistan team. According to another Pakistan columnist, Imran had stated that Yousuf did not have the right “character” to lead Pakistan
and hence should be replaced.

2. இதே வருடம் “மே” மாதம், மேற்கிந்திய நாட்டில் நடந்துக்கொண்டு இருக்கும் விளையாட்டுகளிலிருந்து, பாதியிலேயே நாடு திரும்பினார். சக வீரரோடு ஏற்பட்ட வாக்குவாதத்தினால் ஏற்பட்ட விளைவு தான் இது. ஆனால், இவர் நாடு திரும்பியது, தன் தந்தையை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக என்று செய்தி வெளியானது. உண்மை என்னவென்றால், மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்கு அவர் தந்தையின் உடல்நலம் கெடவில்லை.

“Youhana’s tale of woes did not end with that unkind cut. He was sent back from the West Indies in May this year, apparently after an ugly altercation with some senior players. Publicly, though, it was claimed Youhana had returned to Pakistan to tend to his ailing father. It was another matter that Papa Youhana wasn’t sick enough to be admitted to hospital.”

3. நாடு திரும்பிய பிறகு, ஒரு நாள் காலை யுஹானாவின் “மெர்செடெஸ்” கார், கற்ககால் சேதப்பட்டு இருந்தது.

இவைகளையெல்லாம் பார்க்கும் போது, கட்டாயத்தின் பேரிலும், மற்றும் தன் பெயர், புகழை, வேலையை காப்பாற்றிக்கொள்ளவும் யுஹானா இப்படி இஸ்லாமை தழுவியிருக்கலாம் என்று பாகிஸ்தான் தேசிய சர்ச ஸ்தாபானம் கருதுகிறது.

The officials of Pakistan National Council of Churches(P.N.C.C.) says: “It was abominable if Youhana converted under peer pressure or to save his career. Dismissing Youhana’s claims that he had converted three years ago and was only making it public now, then official asked, ‘If he had done it three years ago, why was he making the sign of cross whenever he reached fifty or a hundred as recently as the West Indies tour?”

பாகிஸ்தான் மனித உரிமை கழக தலைவர் ஐ. ஏ. ரஹமான் “யுஹானா நிர்பந்திக்கப்பட்டு இருக்கலாம்” என்று கூறுகிறார்.

“I.A. Rehman, director of the Pakistan Human Rights Commission (P.H.R.C), is concerned about the start batsman’s conversion. ‘It seems to me that Youhana was finding it difficult to keep his place in the side. Everyone is free to change one’s religion but to my mind, there is apparently an element of coercion here,’ Rehman told to Outlook

7. கொலை மிரட்டல்கள் உண்மையா?

யூசுப் யுஹானா இஸ்லாமை தழுவினார் என்று அவருக்கு கிறிஸ்தவ சமுதாயத்திலிருந்து கொலை மிரட்டல்கள் வருகிறது என்று, பாகிஸ்தான் பத்திரிக்கைகள் சொல்வது ஒரு பொய்யான தகவல் ஆகும். கிறிஸ்தவர்கள் உண்மையாக இயேசுவை பின்பற்றுபவர்கள். மற்றவர்களுக்காக எங்கள் உயிர் விடும் படி எங்களுக்கு இயேசு கட்டளையிட்டாரே தவிர, மற்றவர்களின் உயிரை எடுக்க அல்ல? பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் தங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் சொல்வதற்கே அனுமதியில்லாத போது எப்படி அவர்கள் கொலை மிரட்டல்கள் இடமுடியும்?

Pakistan Christian Post சொல்வதை இங்கு பார்க்கலாம்.

Moreover, in third world countries, minorities are free to live, free to earn, free to eat but they are not free to speak and Pakistan is also among the third world countries; Well when we are not dare to express our views, opinions and give our notions about anything how could we threat someone. However we condemn this accusation in this way; If any Muslim Cricketer has converted to Christianity, I think we all can imagine the protest and mishap shall have been done in reaction to that but no serious protest from Christians has been noticed since Youhana conversion to Islam; supporting and appreciating articles has been printing in the newspapers since then but not even a single article has been printed out to put light on the other side of the picture.

8. யுஹானாவிற்கு சில கேள்விகள்:

பாகிஸ்தான் கிறிஸ்டியன் போஸ்ட் முன்வைக்கும் கேள்விகள்:

One action of Mohammad Yousuf former “Yousuf Youhana” has left ten million Pakistani Christians answerable at their works, at their colonies and at their gatherings. therefore I feel, as a Christian, I do possess a right to ask fewquestions to Mr. Mohammad Yousuf as well:

(a) If you have embraced Islam for last three year, why did you make the sign of cross while making 50 and 100 during past 3 years? Answer us, because you do,t have right to disgrace our sacred sign.

(b) Do you know, when you come to play in the ground the spectators raise their voice as, “O BHANGI AA GAYA MAIDAN MAIN HAIJ MALO”. This sentence really hurt us at that time but from now own we will not be hurt any more because you have stopped them to say so.

(c) I know everyone has right to make their personal decision but when someone from the minority gets the high position, his responsibilities also increases with its position, he actually becomes the ambassador (representative) of a certain community. As you were also the ambassador of Christian community but as an ambassador, you deceived us and played with our sentiments. You are a disloyal. Just consider how you could be loyal with Islam, once you were disloyal to Christianity.

And don’t worry; we, Christians are not sorry at all about you but on the contrary we are very happy that our community has got rid of a Deceitful and a Disloyal person.

9. யூசுப் யுஹானா ஏன் மாறினார்?

யூசுப் யுஹானா தன் முன்னேற்றத்தில் சந்தித்த சில சிக்கல்கள், கட்டாயங்கள், மற்றும் துணை காப்டன் பதவியிலிருந்து விலக்கு, இப்படி பல நெருக்கடியின் காரணமாக, தன் பெயர் புகழை காப்பாற்றிக்கொள்ள இப்படி செய்துயிருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

உண்மை காரணம் இறைவனுக்கும், யூசுப் யுஹானாவிற்கும், அவர் குடும்பத்திற்கும், மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்குமே தெரியும். காரணம் எதுவாக இருந்தாலும், ஒரு ஆடு தன் மந்தையிலிருந்து காணாமல் போய்விட்டது. அதை தேட அல்லவா இயேசு இவ்வுலகத்தில் வந்தார், அந்த ஒரு ஆட்டுக்காக அல்லவா தன் உயிரை தியாகம் செய்தார். இப்போது வேண்டுமானால், பெயர், பதவி, புகழ் பெரியதாகத் தெரியலாம், ஆனால், காலம் செல்லும், அப்போது எல்லா ரகசியங்களும் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

அன்பு நண்பர், யூசுப் யுஹானா அவர்களே, ஒரு நாள் வரும் அப்போது தந்தையின் வீட்டை விட்டு வெளியேச் சென்ற இளைய மகன் திரும்பி வருவான், அப்போது கூட அவன் தந்தை தன் இருகரம் நீட்டி அவனை தன் நெஞ்சோடு அனைத்துக்கொண்டு, அவனுக்காக ஒரு விருந்து செய்வார். ஆனால், இஸ்லாமின் தந்தையோ(அல்லா) ஒருவன் தன்னை விட்டுப்போனால், அவனை உடனே கொள்ளும்படிச் சொல்கிறார். எங்களுக்கு இன்னும் நம்பிக்கை உண்டு, அமைதி, அஹிம்சை, பொருமை, மன்னிப்பு, அன்பு, சாந்தம் போன்ற கனிகளை ருசி பார்த்த உம்முடைய இதயம் ஒரு நாள், இவைகளைத் தேடி, மறுபடியும் தன் வீட்டிற்கு வரும்.

உம்முடைய விளையாட்டில் நீர் இன்னும் சிறந்து விளங்க வேண்டும் என்றும், நீர் நீடிய ஆயுளுடன் உம் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழவேண்டும் என்று இயேசுவிடம் வேண்டிக்கொள்கிறேன்.


2005ல் யூசுப் யுஹானா இந்திய மண்ணில் மிகவும் பிசீயாக சூடாக விளையாடிக்கொண்டு இருக்க, திருமதி டானியா யூசுப் யுஹான தன் மகள் மற்றும் மகனுடன் அன்புக்கடலில் மூழ்கிய நிலையில்.

References:

சந்திரக்கடவுள் – அல்லா

அநேகர் நினைக்கின்றனர், யூதர்களும்;, கிறிஸ்தவர்களும், மற்றும் இஸ்லாமியர்களும் ஒரே கடவுளாகிய யெகோவா தேவனை வழிபடுகின்றனர் என்று. ஆனால் உண்மை அதுவல்ல.

யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒரே தேவனை வழிபடுகின்றனர் என்பது உண்மை. ஆனால் இஸ்லாமியர்கள் ? குர்-ஆனில் சொல்லப்படும் அல்லா அரேபியர்களின் புற மத கடவுளா?அல்லா எனும் வார்த்தை அல்-இலா எனும் வார்த்தையில் இருந்து தோன்றியது. அல் என்றால் (the)> இலா என்றால் (God)..முன்பிருந்த அநேக சரித்திர ஆய்வாளர்கள் கருதினார்கள் அல்- இலா எனும் வார்த்தை எல் அல்லது எலோகிம் எனும் வேதாகம வார்த்தையிலிருந்து உருவாகியிருக்க வேண்டுமென்று.

ஆனால் உண்மை அதுவல்லவென்று இப்பொழுது அநேக சரித்திர ஆய்வாளர்கள் அந்த கருத்தை ஏற்க மறுக்கின்றார்கள். காரணம் என்னவென்றால் இஸ்லாமியர்கள் வழிபடும் அல்லாவுக்கும் அரேபியர்களினது புரதான தெய்வமாகிய ஹ_பால்-(அல்லா)க்கும் அநேகம் ஒற்றுமைகள் இருக்கின்றபடியாலும், அதே சமயம் யூதர்களும் கிறிஸ்தவர்களும் வழிபடும் தெய்வமாகிய யெகோவா தேவனுக்கும் இஸ்லாமியர்களினது அல்லாவுக்கும் அநேக வேற்றுமைகள் இருக்கின்றபடியாலும்;, ஆய்வாளர்கள் இப்படி கருதுகின்றனர்.

யெகோவா தேவனை நாங்கள் கர்த்தர்(கடவுள்) என்று சொல்லுவது போல,

ஹ_பால்-ஐ அரேபியர்கள் அல்லா என்று அழைத்தனர்.

அல்லா என்றால் கடவுள் என்று அர்த்தம் -

The God = Jehova

Allah = Hubal

இப்படி சரித்திர, வேத, வரலாற்று, மற்றும் அகழ்வாராய்சியாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் கருதுவதற்கான காரணம் என்னவென்றால்.

முகமதுவுக்கு முன்பு காபாவிலே எப்படி இஸ்லாமியர்கள் வழிபட்டார்களோ, அப்படித்தான் இப்பொழுதும் வழிபடுவதால்.
——————————————————————————–

சந்திரக்கடவுள்கள்

அகழ்வாராய்ச்சியாளர்கள,; நைல் நதி முதல் துருக்கி வரையிலுள்ள மத்திய ஆசியப்பகுதியில் அநேகம் சந்திரதெய்வங்களை கண்டுபிடித்திருக்கின்றனர். ஆதி நாகரிக மக்களாகிய சுமேரிய மக்கள் சந்திரனை தெய்வமாக வழிபட்டிருக்கின்றனர், சந்திரனுக்கு வௌ;வேறு பெயர்களை அவர்கள் வைத்து வழிபட்டனர்: நன்னா, சுயென், அசிம்பாபர்.

இந்த சந்திரதெய்வத்தின் சின்னம்(அடையாளம்): வளர்பிறை நிலவு

மெசொப்பத்தாமிய மக்கள் மத்தியில் சந்திரனை வழிபடும் பழக்கம் எல்லாரிடமும் பிரபல்யமாக இருந்தது. அசீரியர்கள் பாபிலோனியர்கள், அக்காடிய-ர்கள் சுயென் எனும் பெயரை “சின்” ஆக மாற்றி, சந்திரனை தங்கள் பிரியமான தெய்வமாக மாற்றினார்கள். புரதான சிரியாவிலும், கானானிலும் சந்திரதெய்வத்தின் குறியீடு வளர்பிறை நிலவிற்குள் முழுநிலவை வைத்திருந்தனர்.

சந்திரக்கடவுளின் மனைவி சூரியக்கடவுள், அவர்களுக்கு 3 நட்சத்திரங்கள்(பிள்ளைகள்) இருந்தன.

உதாரணம்:- சின்”னுடைய பிள்ளை இஷ்தார்.

எகிப்திலும் சந்திரக்கடவுளை வழிபட்டனர்” சந்திரத்தெய்வத்தின் வேலை: மனிதனையும் கடவுளையும் நியாயம் தீர்ப்பது.

பழையேற்பாட்டுக்காலத்தில் பாபிலோனிய கடைசி அரசன் நபோநிதுஸ் (கி.மு 555- 539) தாய்மா-வைக் கட்டி, மத்திய ஆசியா தான் சந்திரதெய்வத்தின் பிரதான இடம் என்பதை நிரூபித்தான். புரதான சவுதி அரேபியாவில் சந்திரன் தான் முதற்கடவுள் என பல ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். சீனாய் மலை கூட … “சின்” எனும் வசனத்தின் ஒரு பகுதிதான்.

மெக்காவிலும் அதே சந்திரனைத்தான் வழிபட்டனர், ” பெயர் அல்-இலா (ஹ_பால்);. அல்-இலா முகமதுவிற்கு பிறகு அல்லா-வாக மாறியிது.

முகமதுவும், அவனுடைய குடும்பமும் இந்த அல்-இலா(அல்லா)வைத்தான் வழிபட்டு வந்தனர்.

ஏன் அல்லா(அல்-இலா) எனும் பெயரை முகமது அந்நிய தெய்வங்களாக சொல்லவில்லை என்று. மற்ற தெய்வங்களின் பெயர்களை முகமது சொல்லியிருக்கிறான், ஆனால் ஏன் இந்த பெயரை மட்டும் சொல்லவில்லை?

ஏன் என்றால் முகமது அல்லா-வினுடைய பிள்ளைகளையும், மற்ற 360 தெய்வங்களையும் தான் அகற்றியிருக்கிறான். ஆனால் அல்லாவை மட்டும் தனிக்கடவுளாக, எல்லாக்கடவுளுக்கும் மேலான கடவுளாக அதே சந்திரக்கடவுளை மாற்றினான். அல்லா என்றால் அரேபியர்களுக்குத்தெரியும் சந்திரக்கடவுள் தான் என்று.

முகமது அரேபியர்களுக்கு சொல்லும்பொழுது அல்லா-வை சந்திரக்கடவுளாக சொன்னான். யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் சொல்லும்பொழுது அல்லவை யெகோவா தேவன் என்று சொன்னான். ஆனால் யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் கர்த்தராகிய யெகோவா தேவனை சரியாக அறிந்தபடியால் முகமதுவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
——————————————————————————–

அரேபியா- முகமதுவிற்கு முற்பட்ட காலம் (கி.பி 610க்கு முதல்)

காபா – தற்போதைய மெக்கா …

இஸ்லாம் எனும் மார்க்கம் உருவாக முன்பு அரேபியர்கள் மத்தியில் பலவிதமான தெய்வ வழிபாடுகள் இருந்தது. காபாவிலே மட்டும் ஏறக்குறைய 360 தெய்வங்கள் அவர்களுக்கு இருந்தன. ஹ_பால் (ர்ரடியட ) எனும் தெய்வம் அங்கேயிருந்த தெய்வங்களுக்குள் முன்னுரிமையான தெய்வமாக இருந்தது. ஹ_பால் ஒரு சந்திரக்கடவுள.; ஏறக்குறைய கி.மு 2000 ஆண்டளவிலிருந்து சந்திரக்கடவுளை வழிபடுவது அரேபியர்களின் வழக்கமாக இருந்தது. மெக்காவில் தான் இந்த ஹ_பால்- ஐ வைத்து அரேபியர்கள் வழிபட்டனர்.

அங்கே அல்லாவையும் வணங்கினார்கள். ஆனால் அல்லாவிற்கு எந்தவிதமான சிலையையும் அவர்கள் வைக்கவில்லை. இதனால் அரேபியர்கள் ஹ_பால்-ஐ அல்லாவிற்கு பதிலாக கும்பிட்டார்கள், அதனிடமே தங்கள் விண்ணப்பங்களை வைத்தனர். அல்-இலாவுக்கு சிலை இல்லாததால் அரேபியர்கள் ஹ_பால் எனும் சிலையை அல்-இலாவாக பாவித்து வணங்கினர்.

சரியாக சொல்ல வேண்டுமென்றால்: ஹ_பால் தான் அல்லா.

தற்போது இஸ்லாமியர்கள் வழிபடும் அல்லாவை முன்பு : அல்-இலா என்று அழைத்தனர். கி.பி 610ற்கு பிற்பாடு முகமதுவினால் இப்பெயர் அல்லாவாக மாற்றப்பட்டது.

அரேபியர்கள் மத்தியில் ஒரு மரபு வழிக்கதை இருக்கின்றது, அவர்கள் அல்லாவை கும்பிடுகின்ற சமயம் ஹ_பால்-க்கு அருகில் நின்று வணங்குவார்கள் என்று.

ஹ_பால்-ஐ அவர்கள் காபாவின் உச்சியிலே வைப்பார்கள். ஹ_பால் உடன் இன்னும் 3 பெண் தெய்வங்களை அவர்கள் வைத்து வணங்கினார்கள்.

அல்- லத்

அல்- உத்சா

மனாத்

இந்த மூன்றும் அல்லாவின் பிள்ளைகள்.

அல்லா என்றால் – கடவுள். அரேபியர்களை பொறுத்தமட்டில் அல்லா என்றால்: ஹ_பால்.

(ஹ_பால் தான் அல்-இலா என்பதில் சில கருத்து வேறுபாடுகளும் உண்டு. இருவரும் ஒகே கடவுளா அல்லது வௌ;வேறான கடவுளா என்பதில் தான் அந்த கருத்து வேறுபாடு).

——————————————————————————–

முகமதுவின் அல்லா, முகமதுவின் குர்-ஆன்

முகமது உருவாக்கிய புதிய மதத்தில் ஹ_பால்(அல்லா) தான் கடவுள், அத்துடன் வேதாகமத்தை தனக்கு சாதகமாக மாற்றி புதிய மதத்தையும், ஹ_பால் சிலை ஏதும் இல்லாமல் அல்லாவை-யும் உருவாக்கினான்.

குர்-ஆன் உண்மையில் அரேபியர்களின் கலாச்சாரத்தையும், அவர்களுடைய வழிபாட்டு முறைகளையும், முகமதுவின் சொந்த வசனங்களையும், கட்டளைகளையும் மற்றும் பரிசுத்த வேதாகமத்திலிருந்து சில பகுதிகளை அப்படியே உண்மையாகவும், சில பகுதிகளை பொய்யாகவும், சில பகுதிகளை தனக்கேற்றதாகவும் திரிபுபடுத்தி எழுதப்பட்டிருக்கின்றது.
——————————————————————————–

ஆதாரங்கள்

Collier’s Encyclopedia: அல்லாவைப்பற்றி:

அரேபியர்கள் மத்தியில் இஸ்லாம் மதம் உருவாகும் முன்பே அல்லா எனும் முதற்கடவுள் இருந்தது” என்று. (பக்கம் 570)

Britanica: மெக்காவைப்பற்றி: (அரேபிய சரித்திரம், பக்கம் 1045, 1979)

தற்பொழுது நடப்பதுபோல ஹஜ் யாத்திரை, மற்றும் அநேக சடங்கு முறைகள் இஸ்லாம் மதம் உருவாகும் முன்பே மெக்காவில் நடைபெற்றது.

The Joy of Sects, Peter Occhigrosso, 1996Die Hadsch

, F. E. Peters, p 3-41, 1994Muhammad und Muhammadanism, S. W. Koelle, 1889, p. 17-19 First Encyclopedia of Islam, E.J. Brill

, 1987, Islam, p. 587-591Mohammed, Maxime Rodinson, 1961, translated by Anne Carter, 1971, p 38-49 Muhammad’s Mecca

, W. Montgomery Watt, Chapter 3: Religion In Pre-Islamic Arabia, p26-45 History Of The Arabs, Philip K. Hitti, 1937, p 96-101The Hajj

, F. E. Peters, p 3-41, Muhammad and Muhammadanism, S.W. Koelle, 1889, p. 17-19History of the Islamic Peoples

, Carl Brockelmann, p 8-10Meet the Arab, John Van Ess, 1943, p. 29Fabled Cities, Princes & Jin from Arab Myths and Legends

, Khairt al-Saeh, 1985, p. 28-30Mohammed, Maxime Rodinson, 1961, translated by Anne Carter, 1971, p 16-17Karen Armstrong, Muhammad

, (New York: San Francisco, 1992) p. 69.Britannica, Arabian Religions, p1057, 1979 Southern Arabia

, Carleton S. Coon, Washington, D.C. Smithsonian, 1944, p.399History of the Islamic Peoples, Carl Brockelmann, p 8-10 Islam in the World

, Malise Ruthven, 1984, p 28-48Muhammad The Holy Prophet, Hafiz Ghulam Sarwar (Pakistan), p 18-19, Muslimhttp://sathyavaan.blogspot.com/2008/01/blog-post.html