இஸ்லாம்:இயேசுவின் பெயரில் முடவனை சுகமாக்கிய முஸ்தபா,ஆவியானவரால் நடத்தப்படும் அக்பர்

இஸ்லாம்;முடவனை சுகமாக்கிய முஸ்தபா,ஆவியானவரால் நடத்தப்படும் அக்பர்

இந்த சாட்சியை ஆங்கிலத்தில் முழுமையாக படிக்கலாம்.அதன் தொடுப்பு;http://www.islamreview.com/testimonials/akbar.shtml
இங்கே அதை சுருக்கி கொடுக்கிறேன்.இந்த கட்டுரைகளை மொழிபெயர்க்க முழு அனுமதி அளித்துள்ள தள நிர்வாகத்துக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
என்னுடைய வாழ்க்கை சாட்சி

இந்தியாவில் இருந்து அக்பர்

என்னுடைய பெயர் அக்பர் ,தந்தை முகமது காஜா மொஹினுதீன்,தாய் நவான்பீ

என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன்,என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று அப் பவுல் ரோமர் 10:20ல் எழுதியபடி நாங்கள் அவரை தேடாமல் இருந்தும் எங்களுக்கு தம்மை வெளிப்படுத்தினார் .எனது ஒவ்வொரு மூச்சும் அவரை வாழ்த்த வேண்டும்.இனிய பாடல்களை பாடவேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன் . என்னுடைய

சாட்சி என்னுடைய குடும்பத்தில 6 வது மகனாக நான் பிறந்தேன்.எனது தந்தை மத்திய இரயிவேயில் புகைவண்டி ஓட்டுனராக இருந்தார் .என் தாய் இல்லத்தரசியாக இருந்தார்கள் .அவர்கள் சிறந்த குர் ஆன் ஆசிரியையாகவும் இருந்தார்கள் .இஸ்லாமின் நம்பிக்கைகள்,கொள்கைகள் மற்றும் போதனைகள் மீது மிகுந்த பற்றுடையவர்கள்.இஸ்லாம் மீது உள்ள இப்படிப்பட்ட நம்பிக்கையிலும்,பயத்திலும் என் பெற்றோர் என்னை வளர்த்தார்கள் .

தேவன்

வெளிப்பட்டார் என்னுடைய மூத்த அண்ணன் முஸ்தபா ஒரு நாள் சாலையி நடந்துகொண்டிருக்கும் போது தன்னுடைய பெயரைச் சொல்லி கூப்பிடுகிற ஒரு சத்தத்தை கேட்டார்

.”

முஸ்தபா “,முஸ்தபா என்னை நோக்கிப்பார்,நான் உன் தேவனாகிய கர்த்தர்“. அவர் சுற்றி முற்றிப் பார்த்தார் .ஆனால் அவரைத்தவிர வேறு யாரும் அந்த இடத்தில் இருக்கவில்லை. இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது .மீண்டும் இரண்டாவது தடவை சத்தம் வந்த போது , அது மேலே இருந்து வந்தது என்பதை முஸ்தபா உணர்ந்து கொண்டார். ஆனால் அது யாருடைய சத்தம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே மின்சார சக்தி போன்ற ஒரு வல்லமை அவரை ஆட்கொண்டு கிறிஸ்தவக் கூடுகை நடந்துகொண்டிருந்த ஒரு சிறு கூடாரத்திற்கு வழிநடத்தியது. அங்கே பிரசங்கியார் இயேசுகிறிஸ்துவைக் குறித்து பிரசங்கித்துக்கொண்டு இருந்தார்.முஸ்தபாவை சுற்ரியிருந்த வல்லமை சொன்னதுஇந்த மனிதர் பிரசங்கிக்கிறவர் தான் உன்னோடே வ்ழியில் பேசினார்“.தன்னோடு பேசினது இயேசு என்று அறிந்தவுடன் ,அவரை தனது இரட்சகராகவும்,ஆண்டவராகவும் முஸ்தபா ஏற்றுக்கொண்டார்.பரிசுத்த ஆவியானவர் அவர் உள்ளத்தில் இடைப்பட்டார்.என்னுடைய சகோதரன் இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகு தொடர்ந்து ஏழு நாட்கள் அவர் இயேசுவை தரிசித்தார்.அன்றிலிருந்து அவருக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டது.அதற்கு பிறகு அவர் குர்ஆன் படிப்பதில்லை.எங்களோடு மசூதிக்கு வருவதில்லை.என் பெற்றோர் அவருக்கு கிறிஸ்துவில் இருந்த விசுவாசத்தை கண்டுபிடித்தனர் .

அவருடைய

கிறிஸ்தவ விசுவாசம் எங்களுக்கு விசனமாய் இருந்தது .இஸ்லாமியர்களான நாங்கள் இயேசுகிறிஸ்துவை தேவகுமாரன் என்று விசுவாசிக்கவில்லை.ஒரு நபியாகவே நம்புகிறோம்.

ஆனால்

என் சகோதரன் இயேசுவை தேவகுமாரன் என்று விசுவாசிப்பதினால் என் பெற்றோர் என் சகோதரன் மீது மிகவும் கோபமடைந்தனர்.அநேக நாட்கள் குர் ஆன் மற்றும் வேதத்தைப் பற்றிய விவாதங்களும் நடந்தன.யாரும் வேதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் என் சகோதரன் இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கும்போது அற்புதங்கள் நிகழ்வதை என் பெற்றோர் கவனித்தார்கள்.கேன்சர் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள்,குருடர்கள்,முடவர்கள் ,பிசாசினால் பீடிக்கப்பட்டவர்கள் அனைவரும் அவர் இயேசுவின் நாமத்தினால் ஜெபித்தபோது சுகமானார்கள்.

ஒரு

நாள் என்னுடைய அத்தை முறையான உறவினர் ஒருவர் எங்களை பார்க்கவந்தார்கள் .அவர்கள் ” blood hemorrhage என்ற இரத்தம் சம்மந்தமான நோயினால் அவதிப்பட்டு வந்தார்கள். அநேக நாட்களாய் தொடர்ச்சியாக இரத்தம் வெளியேறியதால் மிகவும் பலவீனமாக இருந்தார்கள்.என் தாயார் அவர்களை ஒரு நல்ல மருத்துவரிடம் கூட்டி செல்வார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அப்பொழுது என் தயார் என் சகோதரனிடம் அவர்களுக்காக ஜெபிக்கும் படி கூறினார்கள் .முஸ்தபா அவர்கள் தலையில் கை வைத்து ஜெபிக்க ஆரம்பித்தவுடனயே அவர்கள் தரையிலே விழுந்தார்கள்.”நான் இவளை விடமாட்டேன்,நான் இவளை விடமாட்டேன்என்ற கூச்சல் அவர்களிடமிருந்து வந்தது.அவர்கள் ஒரு அசுத்த ஆவியினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டோம் .என் சகோதரன் இயேசுவின் நாமத்தை சொன்னபோதெல்லாம் ஆவர்களுக்குள் இருந்த பிசாசு நடுங்கியது .தன்னுடைய கண்களை இறுக ,இறுக மூடிக்கொண்டார்கள்.”நீ யார்‘” என்று அந்த ஆவியை பார்த்து என் சகோதரன் கேட்டபோது,”இந்த பெண்ணுடைய எதிரியால் அனுப்பப்பட்ட ஒரு ஆவி நான், இவளை இந்த நோயால் கொல்லும்படி நான் வந்தேன்“” உன்னால் தான் நான் இவளை விட்டு போகிறேன், வேறு யாராவது இருந்தால் இவளை கொன்றிருப்பேன்.என்று கூறிக்கொண்டு அந்த அசுத்த ஆவி அவர்களை விட்டு வெளியேறியது .அதற்கு பிறகு அவர்கள் பூரண சுகமடைந்தார்கள். அந்த வலியும் இல்லை,ரத்த வெளியேற்றமும் இல்லை. நிறைவான மகிழ்ச்சி அடைந்தார்கள் .

என்

கண்காண இவைகளை பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு அநேக கேள்விகள் எழும்பினது ?

ஏன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அசுத்த ஆவி விலகியது? மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரகளில் ஏன் போவதில்லை?முகமதுவின் நாமத்துக்கு ஏன் அசுத்த ஆவிகள் கீழ்படிவது இல்லை? இயேசுவின் நாமத்துக்கு கீழ்படிவதேன்?இயேசுவின் நாமத்தில் என்ன வல்லமையும் ,அதிகாரமும் உள்ளது ?இப்படி பல சிந்தனைகளும், கேள்விகளும் எனக்குள் நிரம்பியது.

சத்தியத்தை

தேடுதல் திறந்த

இதயத்தோடு உண்மையை தேடி நான் வேதத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.வாசித்துக்கொண்டிருந்த போது மாற்கு 16:16-18 வசனங்களுக்கு வந்தேன்.17வது வசனத்தில் சுமார் 2000 வருடங்களுக்கு முன் இயேசு சொல்லொயிருக்கிறார்.”என்னை விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன ,என் நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவார்கள்இதை படித்தபோது என் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டது.எத்தனை ஆச்சரியம் அந்த வார்த்தைகள் இன்றும் ஜீவனுள்ளதாயிருக்கிறது.என் கண் காண அவை நிறைவேறியது .

இந்த

சம்பவம் இயேசுகிறிஸ்துவின் வார்த்தை மீது எனக்கு ஒரு விசுவாசத்தை கொண்டு வந்தது.இயேசுவுக்கு சுவிஷேசம் கொடுக்கப்பட்டது.ஆனால் அவை அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டும் தான் என்று என்னுடைய இஸ்லாமிய மதத்தலைவர்கள் எனக்கு கற்றுகொடுத்திருந்தனர்.”அப்படியானால் இன்றைக்கும் இயேசுவின் அந்த வார்த்தை எப்படி கிரியை செய்கின்றது ?கண்டிப்பாக வேதத்தில் இயேசு கூறிய அனைத்தும் உண்மையாகத்தான் இருக்க முடியும்.”என்று சொல்லி நான் தொடர்ந்து வேதத்தை வாசித்தேன்.இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், கிறிஸ்தவக்கொள்கைகளைப் பற்றியும் முஸ்லீம்கள் கூறும் ஆதாரமில்லாத கூற்றுகளுக்ககெல்லாம் எனக்கு பதில் கிடைத்தது.நான் தேவனுடைய வார்த்தையை வேதத்தில் வாசித்ஹ போதுஅது என்னை சரி படுத்தியது.இஸ்லாமிய மத அறிஞர்களால் கிறிஸ்தவத்திற்கு எதிராக நான் கற்றிருந்த எல்லா தவறான உபதேசங்களையும் புரிந்து கொள்ள உதவியது .

இயேசுகிறிஸ்துவின்

வார்த்தைகளால் என் வாழ்க்கையில் முதல்முறையாக என் மீது மிகுந்த அன்பாயிருக்கிற பிதாவினிடத்தில் பேசவும், உறவு வைத்துக்கொள்ளவும் அறிந்து கொண்டேன்.முதல் முறையாக என் ஆவியில் இருந்த வெற்றிடம் நீங்கி தேவ அன்பும்,பிரசன்னமும் என்னை நிறைத்தது.சிலுவையில் மரித்து உலகத்தின் பாவத்தை எடுத்துப்போடுவதற்க்காக இயேசுவை அனுப்பினதின் மூலம் வெளிப்பட்ட தேவ அன்பையும் ,அவருடைய தீர்மானத்தையும் , அவருடைய நீயாயத்தீர்ப்பையும் நன்றாக புரிந்து கொண்டேன்.

1998

டிசம்பர் 24-ம் தேதி நான் இயேசுவை என்னுடைய சொந்த இரட்சகராகவும்,ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டு ஞானஸ்தானம் பெற்றேன்.அந்த நாளிலிருந்து சுவிஷேசத்தை பிரசங்கிக்கவும்,அழிகின்ற மக்களுக்கு சத்திய வார்த்தைகளை அறிவிக்கவும் என் இருதயத்திற்குள் தேவனுடைய அழைப்பு எரிகின்ற நெருப்பைப்போல் ஏவத்தொடங்கியது.எனவே maltinationational company யிலிருந்து என்னுடைய வேலையை இராஜினாமா செய்துவிட்டு தேவனுடைய பணிக்கு என்னை அர்ப்பணித்தேன்.

ஊழியம்

நானும்

என் சகோதரன் முஸ்தபாவும் சேர்ந்து சுவிசேஷத்தை பிரசங்கிக்கத் தொடங்கினோம்.இந்த செய்தி எங்கள் பட்டணம் முழுவதும் பரவியது.அது என் பெற்றோருக்கு பெரிய அவமானமாக இருந்தது.இஸ்லாமிய சமுதாயத்தில் முன்னுதாரனமாக இருந்த எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் என் பெற்றோருக்கு அவமானமாயிருந்தது.

ஆனால்

நாளடைவில் தேவன் அவர்களுடைய இருதயத்தை திறந்ததினிமித்தம் என் குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக அனைவரும் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு இயேசுவிடம் வந்தார்கள்.

என்

தாயும்,தகப்பனும் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்

என்னுடைய மகன்கள் பிரசங்கிப்பது உண்மையென்றால் நான் அதை பற்றி அறிந்துகொள்ளவேண்டும்என்று என் தாய் தேவனிடத்தில் கேள்வி கேட்டார்கள்.அப்படி அவர்கள் ஜெபித்தபோது ஒரு தரிசனம் கண்டார்கள்.அந்த தரிசனத்தில் தன் முழு சரீரத்தில் காயங்களோடு இயேசு காட்சி அளித்தார்.அவருடைய காயங்களிலிருந்து இரத்தம் புரண்டோடியது.அதை கண்ட என் தாயால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.உடனே அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.ஆனாலும் என் தந்தைக்கு பயந்து அவர்கள் ஒரு இரகசிய விசுவாசியாக இருந்தார்கள்.ஒரு

நாள் ரெயிலை ஓட்டிக்கொண்டிருந்த என் தகப்பனார் ஓரிடத்தில் எஞ்சினை பரிசோதிக்கும் படி இறங்கி,பரிசோதித்துவிட்டு மீண்டும் ஏறியிருக்கிறார்.ஏதோ கடித்தது போல் இருந்தது .அதை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிய போது அவருடைய பாதம் மிகவும் வீங்கியிருந்தது.மருத்துவரிடம் சென்றோம்.”இது elephantiasis என்ற வியாதி இதை சுகப்படுத்த மருந்து எதுவும் கிடையாதுஎன்று கூறிவிட்டார்.என் தகப்பனார் மிகவும் மனமுடைந்து போனார்.

நாங்கள்

இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு இயேசுகிறிஸ்துவைப் பற்றியும்,அவர் சுகப்படுத்துவதையும் கூறினோம்.உடனே என் தந்தை சொன்னார்,”அவர் என்னை சுகமாக்கினால் நான் அவரில் விசுவாசம் வைத்து என் இரட்சகராகவும்,தேவனாகவும் ஏற்றுக்கொள்வேன்“.நாங்கள் அவருக்காக ஜெபித்து ஒரு பாட்டிலில் எண்ணையைக் கொடுத்தோம்.”இந்த எண்ணை சிலுவையில் இயேசு உங்களுக்காக சிந்திய இரத்தத்தை பிரதிபலிக்கிறது.விசுவாசத்தோடு தடவுங்கள்என்று சொன்னோம்.

அதை

எடுத்து சென்ற அவர் வேலை நடுவில் தனக்கு நேரங்கிடைக்கும் போதெல்லாம் அதை தடவினார்.இரண்டு நாள் கழித்து வீட்டிற்கு திரும்பியபோது அவருடைய பாதத்தில் வீக்கம் முழுவதும் சுகமாயிருந்தது .இந்த அற்புதத்தின் மூலம் இயேசுவை தனது இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.ஞானஸ்தானமும் பெற்றார் . சமுதாயத்திலிருந்து

ஒதுக்கி வைக்கப்பட்டோம் . எங்கள்

பகுதியிலிருந்த முஸ்லீம்களால் சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டோம். அருகில் இருந்தவர்களும்,உறவினர்களும் எங்களை கைவிட்டனர்.தேவனுக்காக பாட்னுபவிப்பதை ஆசீர்வாதமாக கருதினோம் .அவருக்காக பாடுபட்டதும்,இப்போது அனுபவிக்கிறவைகளும் அவருடைய சிலுவை மரணத்திற்கு முன் ஒன்றுமில்லை .எங்களுடைய

பட்டணத்திலேயே தேவ அழைப்பின் பேரில் சபையை நிறுவி ஊழியம் செய்தோம் .ஆத்துமாக்கள் பெருகினர்.ஊழியமும் வளர்ந்து பெருகியது.முஸ்லீம்கள்

மத்தியில் ஊழியம் செய்வதற்கு மும்பையில் ஒரு புதிய பணித்தளத்திற்கு தேவன் வழிநடத்தினார்.நானும் என் மனைவி சூசனும் 2005- ல் மும்பைக்கு இடம் பெயர்ந்தோம் .

இயேசுவுக்காக

இஸ்லாமியர்களை ஆதாயம் செய்யும் ஊழியம் ; இந்த

ஊழியம் இஸ்லாமியர்கள் மத்தியில் நடக்கிறது.இந்த Winning Muslims For Christ Ministry யின் தரிசனம் ,சபைகளில் இஸ்லாமியர்களைக் குறித்த பாரத்தை அளிப்பதும் ,இஸ்லாமியர்களுக்கான ஊழியத்தை செய்வதற்கு சபைகளை பக்குவப்படுத்துவதும்.இந்த ஊழியத்தின் பயிற்சி முகாம்களையும் ,கருத்தரங்குகளையும்,சிறப்பு வகுப்புகளையும் நடத்தி சபைகளையும்,தனி னபர்களையும் முஸீம் சுவிசேஷத்திற்கு தயார்படுத்துகிறது.

“நீ என்னை துக்கப்படுத்துகிறாய்!” ஒரு அமேரிக்க விமானியின் கதரல்

இக்கட்டுரை தமிழ் கிறிஸ்தவ தளத்திற்காக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது "ஈஸா குர்-ஆன்" தளத்தில் பதிக்கப்போகும் கட்டுரையல்ல. ஈஸா குர்-ஆன் தளம் "பைபிள் குர்-ஆன்" வசன அடிப்படை, கொள்கை அடிப்படை சம்மந்தப்பட்ட கட்டுரைகளை வெளியிடும். இக்கட்டுரையை மற்றவர்கள் தங்கள் தளங்களில் மறுபதிவு செய்யலாம், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தள தொடுப்பை மூலமாக கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. Faith Freedom.org தளத்தில் கீழ்கண்ட குறிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது.

This letter has been floating on the internet for a while. Though the origin and authorship of the letter cannot be determined with any certainty, and perhaps, its content has been altered several times, the letter conveys a message that many Americans wish to say publicly. – FFI

Source : YOU WORRY ME

"நீ என்னை துக்கப்படுத்துகிறாய்!"
"YOU WORRY ME!"

அமெரிக்கா விமானி – Captain John Maniacalco எழுதியது

நீ என்னை துக்கப்படுத்துகிறாய். நீ அப்படி செய்யமாட்டாய் என்று நான் விரும்புகிறேன். நான் நேசிக்கும் இந்நாட்டின் தெருக்களில் நான் நடக்கும் போது, உன்னுடைய கலை மற்றும் கலாச்சாரம் இன்னும் இந்நாட்டின் மனித வள அழகைப்போல மாறவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், நீ இன்னும் எங்களோடு கலவாமலேயே இருக்கிறாய். நான் இதை கவனித்தேன். நீ என்னை துக்கப்படுத்துகிறாய்.

என்னால் எந்த உதவியும் செய்யமுடியாது, அதனால் உன்னை வெறும் கவனிக்கச் செய்கிறேன். உன் தாய்நாட்டிலிருந்து வரும் முஸ்லீம்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள், என் உடன் பிறந்த குடிமக்களையும், நண்பர்களையும் கடந்த 20 ஆண்டுகளாக தாக்கிக்கொண்டு, கொன்று குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கை என்ன என்றும், வெறுப்பு எதற்கு என்றும் எனக்கு புரியாத புதிராக உள்ளது. ஆனால், ஒன்று மட்டும் எனக்குத் தெரியும், அவர்களுடைய இந்த மனிதாபமற்ற செயலுக்கு காரணமாக எதைச் சொல்லியும் அவர்கள் நியாயப்படுத்த முடியாது.

செப்டம்பர் 11ம் தேதி, 19 அரேபிய முஸ்லீம்கள் எங்கள் நாட்டின் நான்கு விமானங்களை கடத்தினார்கள். அவர்கள் பல பிள்ளைகளுக்கு முன்பாக பல பெண்களின் தொண்டைகளை அறுத்தார்கள். பலபேரை மிகக்கொடூரமாக கத்தியால் குத்தி கொன்றார்கள். அவர்கள் அந்த நான்கு விமாங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, உயரமாக கட்டிடங்களில் அவைகளை மோதவிட்டு, பல ஆயிரமான கர்வப்படக்கூடிய தகப்பன்களை, நேசிக்கின்ற மகன்களை, அனுபவமிக்க தாத்தா பாட்டிக்களை, பெருமைப்படக்கூடிய மகள்களை, உயிர் நண்பர்களை, பிரியமான ஆசிரியர்களை, பயிற்சியாளர்களை, பயமில்லாத அரசாங்க ஊழியர்களை மற்றும் பல பிள்ளைகளின் தாய்மார்களை கொன்றார்கள். பாலஸ்தீன நாட்டினர் விழாக்கொண்டாடினார்கள், ஈராக்கியர்கள் மட்டில்லா மகிழ்ச்சி கொண்டார்கள், இப்படி பல அரேபிய நாடுகள் மகிழ்ந்தார்கள்.

ஆகையால், நான் உன்னை இப்போது கவனித்தேன், இனி நான் துக்கப்படப்போவதில்லை. இப்படிப்பட்ட தீவிரவாதிகளால் அழிக்கப்பட்ட ஆயிரமாயிரமான மனிதர்களைப் போல இனியும் இதே போல வெறுப்புடனும், பழிவாங்கும் எண்ணத்துடனும் இப்போதுள்ள மனிதர்கள் அழிக்கப்பட நான் விரும்பவில்லை. ஆனால், எனக்கு உன்னுடைய உதவி வேண்டும்.

ஒரு சாதாரண அமெரிக்க குடிமகனாக, என் தாய் நாட்டையும், குடும்பத்தையும் இந்த நியாயமற்ற உலகத்திலிருந்து பாதுகாப்பதற்காக, நான் ஒன்றை தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, உனக்கும், அரேபிய/முஸ்லீம் தீவிரவாதிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நான் எப்படி தெரிந்துக்கொள்வது?

ஒரு உண்மையான "அரேபிய/முஸ்லீம் – அமெரிக்க குடிமகனையும்", "அரேபிய/முஸ்லீம் – அமெரிக்க தீவிரவாதியையும்" எப்படி நான் வேறுபடுத்துவது அல்லது கண்டுபிடிப்பது. இந்த "அரேபிய முஸ்லீம் அமெரிக்க தீவிரவாதிகள்", நாங்கள் செல்லும் பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள், எங்கள் அழகிய தோட்டங்களையும் (Parks) இரசிக்கிறார்கள், எங்கள் நாட்டு அரசியல் சட்டத்தின் பாதுகாப்பின் கீழ், எங்கள் சமுதாயங்களில் எங்களோடு ஒன்றுகலந்து வாழ்கிறார்கள், ஆனால், அதே நேரத்தில் தனக்கு அக்கம் பக்கத்தில் வசிக்கும் நல்ல குடும்பங்களையும், பிள்ளைகளையும் கொல்லும் அடுத்த தீவிரவாத தாக்குதல் பற்றி திட்டம் தீட்டுகிறார்கள். இந்த செப்டம்பர் 11ம் தேதி நிகழ்ச்சி, இதற்கான பதிலை மாற்றிவிட்டது. என் உயர்ந்த நாட்டையும், அதன் எல்லா மதநம்பிக்கையையும், அதன் குறைபாடுகளையும் பார்த்து இந்நாட்டில் வாழும் நீங்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது அல்ல. இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு அரப்-முஸ்லீமும் தான் யார் என்பதை நிர்ணயிக்க இது தான் சரியான நேரம். இதை நீங்கள் தான் கண்டுபிடித்து எனக்குச் சொல்ல வேண்டும்.

நான் தெரிந்துக்கொள்ளவேண்டும், உரிமையுடன் கேட்கிறேன், நீங்கள் அமெரிக்காவை நேசிக்கிறீர்களா இல்லையா? நீங்கள் அமெரிக்காவின் தேசியக்கொடிக்கு முன்பாக உறுதிமொழி கொடுத்து அதை மதிக்கிறீர்களா? நம் நாட்டு தேசியக்கொடியை உங்கள் வீட்டின் முன்பும், உங்கள் வாகனத்தின் முன்பும் வைக்க கர்வப்படுகிறீர்களா? உங்களின் தினசரி தொழுகைகளில் இந்த நாட்டை ஆசீர்வதிக்கும்படியும், இந்த நாடு மேலும் வளர்ச்சியடையவும், பாதுகாப்பாக இருக்கவும் வேண்டும் என்று அல்லாவிடம் வேண்டிக்கொள்கிறீர்களா?

அல்லது ஏதாவது ஒரு ஜிஹாதில் அழிக்கப்படவேண்டும் என்று அல்லாவிடம் வேண்டிக்கொள்கிறீர்களா? இந்த நாடு கொடுக்கும் சுதந்திரத்திற்கு இந்த நாட்டிற்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்களா? இந்த சுதந்திரம் பல நூறு ஆயிர தேசபக்தர்கள் தங்கள் உயிரை கொடுத்து, இரத்தத்தை விலையாக கொடுத்து சம்பாதித்தார்கள். அதே போல நீங்களும் உயிரை தியாகம் செய்து இந்த சுதந்திரத்தை பேணிக்காப்பதற்கு விரும்புவீர்களா? அமெரிக்காவை நீங்கள் நேசிக்கிறீர்களா?

நீங்கள் இந்த உறுதி மொழியை எடுத்துயிருந்தால், எனக்கு நீங்கள் வேண்டும், அதைப் பற்றி எனக்கு தெரிவியுங்கள். உங்கள் இஸ்லாமிய தலைவர்கள் இப்போதே உங்கள் நம்பிக்கையைப் பற்றிய உண்மையை மக்களுக்கு தெரிவிக்கட்டும், உங்களின் இந்த உறுதி மொழியையும் தெரிவிக்கட்டும், மற்றும் ஒரு இஸ்லாமிய சமுதாயமாக இந்த அமெரிக்க நாட்டின் பாதுகாப்பிற்காக என்ன செய்ய இருக்கிறீர்கள் என்று உங்கள் "நடைமுறை திட்டங்களை" மக்களுக்கு அறிவிக்கட்டும். தயவு செய்து, ஏற்கனவே மரித்த அப்பாவி மக்களுக்காக நாம் இப்போது கண்ணீர்வடிக்க வேண்டாம், காரணம் உங்கள் அன்பான குணத்தை நான் அறிந்துக்கொண்டேன். அந்த கோர செயலுக்கு நீங்கள் காரணம் அல்ல. நடந்த முடிந்த தாக்குதல் பற்றி நாம் இனி கவலைப்படுவதினால் ஒரு நன்மையும் நமக்கு வராது. நான் இனி கவலைப்பட்டு கலங்குவதில் விருப்பம் காட்டமாட்டேன். இனி நாம் நடைமுறையில் என்ன செய்யப்போகிறோம் என்பதில் தான் நான் நாட்டம் கொள்கிறேன்.( I am not interested in any more sympathy. I am only interested in action)

நம்முடைய மிகப்பெரிய நாட்டிற்கு, இந்த பிரச்சனைகளின் காலங்களில், யுத்தங்களின் காலங்களில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? என் நாட்டின் தேசியக்கொடியை அரப்-முஸ்லீம்கள தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு, அதை அசைத்துக்கொண்டு வீரமாக நடப்பதை காணவிரும்புகிறேன். நீங்கள் "அல்லா அமெரிக்கவை ஆசீர்வதிப்பார்" என்று தொடர்ந்து சொல்வதை நான் கேட்கவிரும்புகிறேன். என் நாட்டின் இராணுவத்தில் வாலிப அரப்-முஸ்லீம்கள் சேவை செய்வதை நான் காண விரும்புகிறேன். இந்த பாதிப்பில் நம்பிக்கை இழந்த மக்களுக்கு உங்கள் மூலமாக பணத்தாலோ, நேரத்தாலோ இன்னும் அன்பான வார்த்தைகளாலோ அவர்களுக்கும், இந்த நாட்டிற்கும் ஆதரவாக இருப்பீர்கள் என்ற உறுதிமொழியை எதிர்பார்க்கிறேன். நம் நாட்டின் FBI இந்த உலக வர்த்தக மையம் தொடர்பாக 400 பேரிடம் பேசவேண்டுமென்று விரும்புகிறது. இவர்களில் பலபேர் உங்கள் இஸ்லாமிய சமுதாயத்தின் மத்தியில் இன்றும் வாழ்கிறார்கள், பழகுகிறார்கள். அவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அவர்களை இப்போதே எங்களிடம் ஒப்படையுங்கள். இப்படிப்பட்ட செயல்களை உங்களிடமிருந்து நான் இதுவரை காணவில்லை. இதற்கு பதிலாக அவர்களை இன்னும் பாதுகாப்பாக இரகசியமாக உங்கள் சமுதாயத்திலேயே பதுக்கி வைத்துள்ளீர்கள். நீங்கள் தெருக்களிலிருந்து மாயமாகிவிட்டீர்கள். உங்கள் வீடுகளின் கதவுகளின் பக்கத்தில் பாதுகாப்பு வீரர்களை வைக்கவேண்டிய நிலை வந்தது. உங்கள் மீது வழக்கு தொடருவோம் என்று பயமுறுத்தப்படுகிறீர்கள். உங்களை பழிவாங்குவார்கள் என்று திடீரென்று கதறிஅழுகிறீர்கள்.

சில அரப்-முஸ்லீம் பிரதிநிதிகள் மக்களின் மத்தியில் மேடையில் தோன்றி, அவர்களின் இந்த கொடூரச் செயலை பாதுகாக்கவே பேசுகிறார்கள். எந்த காரியம் செய்தாலும், அதற்கு முன்பு ஜாக்கிரதை படுவது அமெரிககாவின் பொறுப்பு என்று சொல்கிறார்கள். அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் தங்கள் இஸ்லாமிய சகோதரர்களின் பாதுகாப்பே அவர்களுக்கு பெரிதாகத்தெரிகிறது. மற்றும் அமெரிக்காவை ஆதரிப்பதாகச் சொல்கிறார்கள், மற்றும் பல இஸ்லாமிய தலைவர்களகிய Khadafi, Hussein, Farrakhan, and Arafat போன்றவர்களை பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையிலேயே இஸ்லாம் "சகிப்புத்தன்மையையும்", "அமைதியையும்", மற்றும் மற்ற "எல்லா மக்களை நேசிக்கவேண்டும்" என்றும் சொல்வது உண்மை என்றுச் சொன்னால், எனக்கு இப்படிபட்ட வசனங்கள் எந்த அதிகாரத்தில், எந்த வசனத்தில் இப்படி சொல்லப்பட்டுள்ளது என்று தெரிய விரும்புகிறேன். மற்றும் அந்த அருமையாக வாக்கியங்களுக்கு சில இஸ்லாமிய தலைவர்கள், இமாம்கள் என்ன பொருள் கூறுகிறார்கள் அல்லது அவர்களும் குர்-ஆன் சொல்வது போலவே "சகிப்புத்தன்மை", அமைதி போன்றவற்றை வழி மொழிகிறார்களா என்று தெரிந்துக்கொள்ள ஆசையாக உள்ளது. உண்மையிலேயே குர்-ஆனின் போதனைகள் நன்மையாயும், தூய்மையாயும், உண்மையாயும் இருக்கும் போது, இஸ்லாமிய தலைவர்கள் அவைகளுக்கு தீவிரவாத, சகிப்புத்தன்மையில்லாத பொருள் கூறுவதினால் என்ன நன்மை என்றுச் சொல்லுங்கள்?

What good is it if the teachings in the Koran are good, and pure, and true, when your "leaders" are teaching fanatical interpretations, terrorism, and intolerance?

உண்மையிலேயே இஸ்லாம் நல்ல மதமாக இருந்தாலும், உலகத்தில் உள்ள பெரும்பான்மையான முஸ்லீம்கள் முகமதுவுடைய போதனைகளை தவறாகவும், இஸ்லாம் மதத்திற்கு "களங்கம்" விளைவிக்கும் வகையிலே பொருள் கூறுவது, ஒரு முக்கிய பிரச்சனையாக மாறுகிறது. இஸ்லாமின் இந்த தோற்றத்தைத் பலமுறை நமக்கு இவர்களால் காட்டப்பட்டுள்ளது.

இந்த தோற்றத்தின் அஸ்திபாரம் வன்முறையும், மரணமும், தற்கொலைபடையுமாகும். இந்த தோற்றத்தின் உறுப்பினர்கள் உலக சிறைச்சாலைகளிலிருந்து வருகிறார்கள். இந்த தோற்றத்தின் உறுப்பினர்கள் (5 வயதிற்கு உட்பட்டு கூட இருப்பார்கள்), இவர்கள் ஒவ்வொரு நாளும், வாரமும், வருடமும் உலகத்தின் தெருக்களில் சென்று, எங்கள் ஜனாதிபதிகளின் உருவப்படத்தை எரிப்பதிலும், அமெரிக்க தேசியக்கொடியை எரிப்பதிலும், காற்றிலே வானத்திற்கு நேராக துப்பாக்கிச் சூடு செய்வதிலும் ஈடுபடுகிறதை காண்கிறோம். இந்த தோற்றத்தின் உருப்பினர்கள், ஒரு அமைதியான மதத்திலிருந்து மாறி, தான் பிறந்த தன் தாய் நாடான அமெரிக்காவிற்கு எதிராக ஆயுதங்களை தூக்குகிறார்கள். இந்த தோற்றம் அதன் சட்டங்கள் வித்தியாசமானவைகள், பயணம் செய்யும் இவர்களில் சிலர் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தங்கள் முகத்தை காட்ட மறுக்கிறார்கள், இஸ்லாமின் பெயரால்.

செப்டம்பர் 11 மற்றும் இது போல உள்ள தாக்குதலை இனி நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இது எங்கள் அரசியல் சாசனம் கொடுத்த அடிப்படை உரிமையாகும்.

நான் தெரிந்துக்கொள்ள விரும்புவேன், நான் மட்டுமல்ல இந்த நாட்டில் உள்ள உண்மையாக ஒவ்வொரு குடிமகனும் தெரிந்துக்கொள்ள வேண்டும், அதாவது இந்த நாட்டில் வாழும் "அரப்-இஸ்லாமியர்களாகிய" நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்? (உங்கள் அபிப்பிராயம் என்ன?) உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்கும் இந்த நாட்டின் அரசியல் சாசனம் கொடுத்த அடிப்படை உரிமை, இந்த உரிமைக்காக பல ஆயிரமாயிர நம் சகோதரர்கள், சகோதரிகள் தங்கள் இரத்தத்தை சிந்தியுள்ளார்கள். நான் உன்னிடத்தில் இறைஞ்சுகிறேன். நீ என்னுடன் என் சகோதரனாக, என் அயல் வீட்டுக்காரனாக, என் நண்பனாக, என்னுடன் வாழும் சக குடிமகனாக இந்நாட்டில் இருக்க நான் விரும்புகிறேன். ஆனால், இதில் எந்த உள்நோக்கமோ இருக்கக்கூடாது. உனக்கு இந்நாட்டின் மீது அக்கரை அல்லது பக்தி எவ்வளவு உள்ளது என்று நிருபிப்பது இனி உன்னை சார்ந்தது. நீ எங்கே நிற்கிறாய் என்று எனக்கு சொல் .


அதுவரைக்கும் "நீ என்னை துக்கப்படுத்துகிறாய்!"
Until then… "YOU WORRY ME!"