சகோதரி நடிகை நக்மா கிறிஸ்தவளாக மாறியது ஏன்?

சகோதரி நடிகை நக்மா கிறிஸ்தவளாக மாறியது ஏன்?

 

ஏசு தான் எனக்கு சூப்பர் ஸ்டார் – நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்

நடிகை நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். சென்னையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் அவர் பேசினார். “தற்கொலை உணர்வில் இருந்து ஏசு என்னை காப்பாற்றினார்” என்று அவர் கூறினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி பட உலகிலும் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர், நக்மா. சினிமாவில், `மார்க்கெட்’ இழந்ததும் சில காலம் அரசியலில் இருந்தார். பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கினார்.

பெங்களூரில் உள்ள `வாழும் கலை’ என்ற அமைப்பில் சேர்ந்தார். சில வருடங்கள் அந்த அமைப்புக்காக பணியாற்றினார். பின்னர் அந்த அமைப்பில் இருந்தும் அவர் விலகிவிட்டார்.

இப்போது அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். ஊர் ஊராக சென்று கிறிஸ்தவ மத கூட்டங்களில் பேச அவர் முடிவு செய்து இருக்கிறார்.

பிரபல கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ், திரையுலகினருக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு நக்மா `பைபிள்’ பிரசங்கம் செய்து, கூட்டத்தினரை ஆச்சரியப்படுத்தினார்.

ஒவ்வொரு அத்தியாயத்தில் உள்ள வாசகங்களை மேற்கோள் காட்டி பேசி, அனைவரையும் வியக்க வைத்தார். அவர் பேசியதாவது:-

“நான் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் `சூப்பர்ஸ்டார்’ நடிகர்களுடன் நடித்து விட்டேன். ஆனால் எனது உண்மையான சூப்பர்ஸ்டார் ஏசுதான்.

அரசியலில் சில காலம் இருந்தேன். அப்போது எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. நிம்மதி இழந்து தவித்தேன். அழுதேன். தற்கொலை உணர்வுகளும் வந்து போனது. அந்த நேரம் `பைபிள்’ என் கைக்கு கிடைத்தது. படித்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாக என்னை அழுத்திய துக்கங்கள் விலகின. மகிழ்ச்சியும், சந்தோஷமும் மனமெங்கும் பரவின.

எனக்கு இப்போது அம்மா, அப்பா, சொந்தபந்தம் எல்லாமே `பைபிள்’தான். நான் கர்த்தரின் மகள். ஏசு, என் வாயில் இருந்து பிரசங்கம் செய்கிறார். தேவன் என்னிடம் சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன்.

எனக்கு இனி கர்த்தர்தான் உலகம். அவருக்காக ஊழியம் செய்யப்போகிறேன்.”

இவ்வாறு நக்மா பேசினார். தொடர்ந்து அவர், `பைபிள்’ வாசகங்களை சொல்லி பிரசங்கம் செய்தார்.

‘ஏசுவின் இரண்டாம் வருகை’ நிச்சயமாக நடக்கப்போகிறது. அதற்காக நாமெல்லாம் காத்திருக்க வேண்டும்” என்றார் நக்மா.

 

இஸ்லாமிய நண்பர்கள் இந்துக்கள்,பார்பணர்கள்,கிறிஸ்தவர்களை தாக்க அணியும் புதிய முகமூடிகள் அம்பலம்


 

 

சமீபக்காலங்களாக இந்த ஜிஹாதிக்கும்பல்கள் இணைய உலகில் தங்கள் கையாலாகத தனத்தை பல வழிகளில் காட்டி வருகின்றனர்.

அதற்கு அவர்கள் பயன்படுத்திய வழிகள் அநேகமாயிரம்.இந்துக்களை தாக்குவதற்கு பல இணைய தளங்களை ஏற்திய இவர்கள் எங்கே தங்கள் முகமூடியில் எழுதினால் அதிகமான இந்துக்கள் எழும்பி தங்களை தாக்கி அழிக்க முற்படுவார்களோ என்ற திக நண்பர்களில் வேடம் அணிந்து கட்டுரை எழுதி வந்துள்ளனர். இணைய உலகில் தமிழ் கிறிஸ்தவர்கள் எழுத ஆரம்பித்த உடனே இது வரை எமாற்ற எந்த பிரச்சனையும் இல்லாமல் ஏமாற்றி வந்த இந்த கும்பல் உமரின் கட்டுரைகள் அணுகுண்டாக தாக்க ஆரம்பித்த உடன் தங்கள் பொலித்தனங்களை கிறிஸ்தவ எழுத்ததாளர்களை துரத்துவதற்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.அந்த முகமூடிகளை உமர் கிழித்து அடையாளம் காண்பித்தார்.அதை கீழே காணலாம்.

கிறித்துவம் கேள்வி பதில்

கிறித்துவம் கேள்வி பதில்-2

உடனே தங்கள் பாணியில் மிரட்டல்கல்,தாறுமாறாக திட்டல்கள்,முகமதுவின் பாணியில் சாபங்கள் அனைத்து அரங்கேறியது.ஆனால் இந்த சம்பவங்கள் உண்மையாளர்களை ஒன்றும் செய்ய முடியாதபடியால் பழைய முகமூடியை அணிந்து அதாவது பெரியார் தொண்டர் போல காட்டி கிறிஸ்தவர்களை தாக்குவது என்று தொடர்ந்தனர்.ஆனால் அந்த போலி முகமூடிகள் சகோ.உண்மையடியான் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டது.
அதை பாற்றி விவரம் அரிய கீழே வசிக்கவும்

இதில் தங்கள் சாயம் வெளுத்துப் போனதை அறிந்த இந்த இஸ்லாமிய போலிக்கும்பல் அடுத்த ஆட்டத்தை தொடங்கி உள்ளனர்.அது என்ன?

போலி கிறிஸ்தவ தலைப்புகள்.நேற்று கிறிஸ்துநேசன் தளத்தில் வெளியான கட்டுரயின் தலைப்பை தங்கள் தளத்தில் இணைத்து தங்கள் முகமூடி தளமான இதுதான் உண்மை தளத்தின் தொடுப்பை கொடுத்துள்ளார் இந்த போலி சுல்தான்.

இதை பற்றி அறிய

 
இதை கண்ட உண்மைஅடியான் உங்களால் மட்டும் அல்ல எங்களாலும் இதை செய்ய முடியும்.ஆனால் சத்தியம் தங்காளிடம் உள்ளவர்களின் வேலை அதுவல்ல என்பதை கண்பிக்க பதிலடி கொடுத்துள்ளார்.அதை காண
முடிவாக இணைய இஸ்லாமியர்களுக்கு உங்காள் பொய் முகங்கள் உலகத்துக்கு நன்கு வெளியாகிவிட்டது.இனியயவதும் உண்மையான இரட்சகர் இயேசுவின் பக்கம் திரும்புங்கள்.இன்னும் எத்தனைக் காலம் உங்கள் உயிரையும்,உங்கள் எண்ணங்களையும் பொய்யின் பக்கம் வைத்திருப்பீர்கள்.காலம் காத்திருக்காது.உங்கள் பாறை போன்ற தீய மனதை சதையான நல்ல உள்ளமாக மாற்ற இரட்சகர் இயேசு காத்திருக்கிறார்.வேண்டாமே உங்களுக்கு நரக வேதனை.வெளியேறுங்கள் மாயையில் இருந்து வெளியேறுங்கள்

தமிழ் நாட்டில் ஒரு தீவிரவாத முஸ்லீம் கிறிஸ்தவரானது எப்படி?

தமிழ் நாட்டில் ஒரு தீவிரவாத முஸ்லீம் கிறிஸ்தவரானது எப்படி?

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

 

 

                                               அகமது

நான் தமிழ்நாட்டில்

உள்ள ஒரு பட்டணத்தில் ஒரு பாரம்பரிய வைராக்கியமான முஸ்லீம் குடும்பத்தில் 1967ம் ஆண்டு பிறந்தேன் . என்னுடைய தகப்பனார் A .G குலாம் ரசூல் , தாயார் G .ஷாஜதீ பேகம் . எனக்கு ஒரு இளைய சகோதரியும் உண்டு .

நான் பிறந்த போது என் தகப்பனாருக்கு

42 வயது , நான் 12 வயதாக இருக்கும் போது சுகவீனத்தின் நிமித்தம் என் தந்தை மரித்து விட்டார் . நாங்கள் உதவியற்று மிகவும் கஷ்ட்டப்பட்டோம் . தினசரி வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது. அந்தநிலையிலும் நானும் என் சகோதரியும் மாநகராட்சி பள்ளியிலும் மதரஸாவிலும் பயின்று வந்தோம் . மத சம்பந்தமான எல்லா சடங்குகளிலும் , சட்டங்களிலும் வளர்க்கப்பட்டோம் .

எங்களுடைய தினசரி

வாழ்க்கைக்காக நான் மிகவும் பாடுபட வேண்டியிருந்தது. ஹோட்டல் சுத்தம் செய்வது , கார் சுத்தம் செய்வது , சாயப்பட்டறை , பிரிண்ட்டிங் பிரஸ் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்தும் , சிறு வகுப்புமாணவர்களுக்கு டியூஷன் எடுத்தும் நான் பணம் சம்பாதிக்கத் தொடங்கினேன் . என்னுடைய வகுப்பில் எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண்கள் எடுத்தேன் . ஆனால் ஒரு பிரபலமான கம்பெனியில் நான் வேலையாளாக சேர்ந்தேன் ( ஆசியன் பெயிண்ட் (இந்தியா லிமிட்டெட்)

இதன் மூலம் எப்படியாவது என் வாழ்க்கையை உயர்த்திவிட முடியும் என்று நான் எண்ணினேன்

. ஆனால் முஸ்லீம் மதத்தீவிரவாதிகள் மூலம் பெரிய ஆபத்தில் சிக்கிக்கொண்டேன் . அவர்கள் என்னிடத்தில் நெருக்கமாக பழக ஆரம்பித்ததினால் நான் வெகுவிரைவில் உணர்ச்சிப்பூர்வமாக அவர்களைப் பின்பற்றி, அவர்கள் பின் அலைய ஆரம்பித்தேன் . 1990 ல் நான் ஒரு தீவிரவாத அமைப்பில் உறுப்பினராகவும் , காரியதர்சியாகவும் இருந்தேன் . இந்த வருடத்தில் இந்து - முஸ்லீம் பிரச்சினை பெரிய அளவில் வெடித்துக்கொண்டிருந்தது. எங்களுடைய அமைப்பில் இருந்து சில வாலிபர்கள் இன்னும் தீவிரமாக மாறி அல் ஜிகாத் ல் தங்களை இணைத்துக் கொண்டனர் . என்னுடைய குலம் மற்றும என்னுடைய மூதாதையர் நிமித்தம் அவர்கள் எனக்கு ஒரு பெரிய பதவியையும் அளித்தனர். துன்மார்க்கத்தின் ஆவி இந்தக் குழுக்களை ஆண்டுகொண்டிருந்தது, நானும் அதிலே தள்ளப்பட்டிருந்தேன் .

இந்து

-முஸ்லீம் பிரச்சினை பெரிய அளவில் உருவானது , நானும் அதிலே பங்கு வகித்திருந்தேன் .ஆனால் என்னை நல்லவன் போலக் காட்டிக்கொண்டேன் . இதற்கிடையில் என்னுடய சகோதரிக்கு ஒரு முஸ்லீமோடு திருமணம் நடைபெற்றிருந்தது. இந்த சம்பவங்கள் வரை நான் பாவம், மீட்பு ,இரட்சிப்பு , பாவமன்னிப்பு , நித்திய வாழ்க்கை ஆகிய இவைகளைப் பற்றி எந்த தெளிவும் இல்லாமல் இருந்தேன் .ஏனென்றால் நான் 22 வயதாகும் வரை இவைகளைப் பற்றி ஒரு சிறு வார்த்தைக் கூட கேட்டதேயில்லை. முற்றிலும் சமாதானத்தை இழந்தவனாக வாழ்க்கையின் அர்த்தத்தை உணரமுடியாமல் அலைந்தேன் . மிகவும் குழம்பிப்போன நான், தற்கொலை செய்து கொள்ளவும் தீர்மானித்திருந்தேன் .

ஒரு நாள்

, செப்டம்பர் 20, 1992 ல் நான் சென்னைக்கு போகவேண்டியிருந்தது இரவு பிராயணத்திற்காக திருச்சி பஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன் , அப்போது ஒரு நபர் என்னிடம் ஒரு கைப்பிரதியைக் கொடுத்தார் , அதின் தலைப்பு இப்படியாக இருந்தது இயேசு சிலுவையில் அடிக்கப்பட்டாரா? ” , தமிழில் அச்சடிக்கப்பட்டிருந்த அதில் குர் ஆன் வசனத்துடன் வேதத்தை விளக்கி எழுதியிருந்தனர் . உடனடியாக அதின் முகவரியைப் பார்த்தேன் வேகமாக பஸ்ஸைப் பிடித்து அவர்களுடைய வீட்டை சென்றடைந்தேன் . அங்கே ஒரு தம்பதியனர் என்னை வரவேற்றார்கள். காலை உணவுக்குப் பிறகு இயேசு கிறிஸ்துவின் சுவிஷேசத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள் , முதல் முறையாக ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளை கேட்ட போது எனக்குள்ளே வித்தியாசமான உணர்வுகள் ஏற்பட்டது . இயேசு கிறிஸ்து என் பாவங்களுக்காக மரித்தார் , அவர் என் பாவங்களை மன்னிக்கிறார் , புது வாழ்வு, நம்பிக்கை , நித்திய வாழ்க்கையை கொடுக்கிறார் என்ற உண்மையை எடுத்துக் கூறினர் .

நான் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்தேன்

, விஷேசமாக புதிய ஏற்பாட்டை வாசித்தேன் . கொஞ்சம் கொஞ்சமாக தேவனுடைய வார்த்தையின் ழூலமாக என்னுடைய வார்த்தை , வாழ்க்கை மற்றும் சிந்தையில் மாற்றம் ஏற்பட்டது . தேவனுடைய கிருபையினால் இயேசு கிறிஸ்து ழூலமாக நான் எப்படி மீட்கப்பட்டேன் என்பதை உணர்ந்து கொண்டேன் .

என்னுடைய தாயார்

, சகோதரி , அவளுடைய கணவன் மற்றும் என்னுடைய நண்பர்கள் எல்லாரும் என்னை பரிகாசம் செய்தனர் . இறுதியாக என்னுயை தாயார் என்னை வீட்டை விட்டு வெளியேறும் படிக் கூறினார்கள் .அந்த இரவிலே நான் வீட்டை விட்டு வெளியேறி திருச்சிக்கு சென்றேன் , அங்கே அந்த தம்பதிகள் வசித்து வந்தனர் . அவர்களோடு 15 நாள் தங்கினேன் . தேவன் எனக்கு ஜெபிக்க கற்றுக்கொடுத்தார் , உள்ளான மனிதனை பெலப்படுத்தி ஆவியில் களிகூறச் செய்தார் .

ஒரு நாள் அப்படி நான் ஜெபித்துக் கொண்டிருந்த போது அவருடைய ஊழியத்திற்காக ஜெபிக்கும்படியான பாரத்தை என் உள்ளத்தில் தந்தார்

. என்னை தேவ ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தேன் , மே 7 , 1993 ல் நான் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டேன் . தேவனுடைய சித்தப்படி இந்தியாவில் உள்ள ஒரு பெரிய வேதாகமக் கல்லூரிக்கு 1993 வருடம் சென்று ழூன்று வருடம் இறையியல் (Bachealor of Thealogy )படித்தேன், தேவ கிருபையால் 1996 ஏப்ரல் -லில் படிப்பை முடித்தேன். (Grace Bible College, Haryana)

நான் வேதாகமக் கல்லூரிமுடித்து வந்தவுடனே சென்னையில் முஸ்லீம்களுக்கு மத்தியில் ஊழியம் செய்து கொண்டிருந்த ஒரு சுவிஷேசக் குழுவுடன் இணைந்து கொண்டேன்

. ஆகஸ்டு 20 , 1997 ல் இயேசுவை ஏற்றுக் கொண்ட ஒரு இஸ்லாமிய சகோதரி நூர்ஜகானோடு தேவன் என் திருமணத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் .

தேவன் எங்கள் திருமண வாழ்க்கையை ஆசீர்வதித்தார்

, முஸ்லீம்கள் மத்தியில் ஊழியத்திற்காக இருவரும் ஜெபித்தோம் தேவன் வாசலைத் திறந்தார் . அக்டோபர் ,1998 லிருந்து ஊழியம் செய்து வர கர்த்தர் கிருபை கொடுத்திருக்கிறார். தேவன் எங்களுக்கு இரண்டு ஆன் குழந்தைகளை முறையே மே 15, 1998 , ஆகஸ்டு 21 , 2004 ல் கொடுத்தார் . ( சாம் இம்மானுவேல் மற்றும் சந்தோஷ் மார்ட்டின் ) தற்போது எங்கள் முழுக்குடும்பம் , மாமியார் , மைத்துனர் ( இறையியல் படித்துக்கொண்டிருக்கிறார் ) தேவனுக்கு ஊழியம் செய்து வருகிறோம் . எங்களை எதிர்த்த மக்களுக்கு முன்பாக தேவன் எங்கள் நிலைமையை முழுவதும் மாற்றிவிட்டார் . அவரே ஜீவனுள்ள தேவன் என்று நாங்கள் சாட்சி கொடுத்து வருகிறோம் . எங்கள் குடும்பத்திற்காகவும் , ஊழியத்திற்காகவும் ஜெபிக்கும் படி வேண்டிக் கொள்ளுகிறோம்

தந்தை பெரியாரின் தவப்புதல்வர்களே!!!!

தந்தை பெரியாரின் தவப்புதல்வர்களே!!!!

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

அன்புள்ள

இதுதான் உண்மை இணையத்தாருக்கு

உங்களின் இணைய கடிதம் கண்டவுடன் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

                  http://idhuthanunmai.blogspot.com/2008/01/to-z.html

மூடப்பழக்கவழக்கங்களை

துடைத்தெரிய வேண்டிய நீங்கள் அதைவிட்டு உண்மையான சமத்துவ சீர்திருத்தத்தை சொன்ன இயேசு கிறிஸ்துவை சாடி இருப்பது உங்களின் பக்குவமின்மையை அருமையாக எடுத்துக்காட்டியது.

1,

உலகில் முதன் முதலில் உண்மையான ஆன்மீகம் என்றால் என்ன என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் இயேசுகிறிஸ்து மட்டுமே.கடவுளுக்கு மனிதர்கள் அடிமைகள்,சடங்காச்சாரங்களே கடவுளை அடையும் வழிமுறைகள் என்று பரவி இருந்த உலகில் மனிதர்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்,மற்ற மனிதனை நேசிப்பதே கடவுளுக்கு செய்யும் தொண்டு என்று போதித்தவர் இயேசு.

2,

கடவுள் கோவிலில் குடியிருப்பார் அல்லது ஏதோ ஒரு சிலையில் கடவுள் இருப்பார் என்ரு நம்பிக்கை இருந்த காலத்தில் அவர் எங்கும் நிறைந்தவர்,எல்லா மனிதர்களும் கடவுள் குடியிருக்கும் கோவிலாக மாற முடியும்.ஏழை முதல் பணக்காரன் வரை அனைவரும் சமம் என்பதை உலகுக்கு அறிவித்தார் இயேசு.

3,

விபச்சாரம் செய்த ஆணை தப்ப விட்டு பெண்ணை மட்டும் பிடித்து வந்து அவளை கல் எறிந்து கொல்ல ஆசைப்பட்ட சமுதாயதாயத்தில் பாவமே செய்யதவன் இருந்தால் முதல் கல் எறியட்டும் என்று சொல்லி கடவுள் பெயரில் மனிதனை தண்டிக்க எவனுக்கும் அதிகாரம் இல்லை என்பதை இயேசு உலகுக்கு உணர்த்தினார்.

4,

குறிபிட்ட சந்ததி அல்லது ஜாதியில் பிறந்தவன் மட்டுமே கடவுளின் பணி செய்ய முடியும் என்ற நிலையில் இருந்த காலத்தில் சமுதாயத்தில் எந்த நிலையில் இருப்பவனும் இறை பணியாற்ற முடியும் என்று உலகுக்கு காண்பித்தவர் இயேசு கிறிஸ்து.

5,

உலகின் முதல் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியாவ்ர்கள் கிறிஸ்துவின் சீடர்களே என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.ஆனால் அது வரலாற்று உண்மை.

6,

ஆண்கள் தவறு செய்ய பெண்கள் தான் காரணம்.எனவே அவர்கள் தங்கள் கண்களையும்(முகத்தை என்று விவாதம் செய்பவர்கள் உண்டு),கைகளையும்,கால் பாதங்களையும் தவிர அனைத்தையும் மூடிய நிலையில் வெளியே வரவேண்டும் என்று பெண்ணடிமைத்தனத்திற்கு கட்டளையிட்டவர்கள் மத்தியில் பெண்களுக்கு சம உரிமை வழங்கியது கிறிஸ்துவே.

7,

கடவுள் பெயரில் மனிதனை கொல்லுவது,ஜாதியின் பெயரில் மனிதனை தீண்டத்தகாதவன் என்று ஒதுக்குவது இது போல் செய்யும் மதங்கள் நடுவில் மனிதனை நேசிப்பது எப்படி என்று உலகுக்கு காண்பிப்பது கிறிஸ்துவின் வழியே.

8,

ஆண்கள் நான்கு பெண்களை திருமணம் செய்யலாம் ஏன் என்றால் ஆணுக்கு தன்னை அடக்கி கொள்ள முடியாது.வேண்டும் என்றால் வேறு நாட்டில் இருந்து பிடித்து வந்த அடிமைகளை அதாவது மற்ற ஆண்களின் மனைவிகளையும் அனுபவித்துக்கொள்ளட்டும் என்று விபச்சாரத்துக்கு வர்ணம் பூசி ஆண்டவன் பெயரில் அறிவித்தவர்களை எல்லாம் உலகின் அழகிய முன் மாதிரிஎன்று வர்ணிக்கப்படுகிற காலத்தில் திருமணம் என்பது இறைவனால் இணைக்கப்படுவது,அதில் எந்த பிரிவினையும் வரக்கூடாது.ஆணோ,பெண்னோ அந்த உறவில் தவறக்கூடாது என்ற அழகிய .முன்மாதிரியை தந்தவர் இயேசு.

தன்னைப்போல்

பிறரை நேசி,ஏழைக்கு இரங்குகிவன் கர்த்தருக்கே கடன் கொடுக்கிறான்,அனைத்து மக்களையும் நேசிக்கவேண்டும்,.ஒவ்வொரு மனிதனும் விலை மதிப்பற்றவன்.அவனை திட்டுவதே அவனை உண்டாக்கிய கடவுளை அவமதிப்பதாகும் என்றும் ,கடவுளின் பெயரில் மற்றவர்களை கொல்லச்சொல்லும் மதங்கள் நடுவில் மற்றவர்களுக்காக உயிர்தியாகம் செய் என்று கற்றுத்தருவது கிறிஸ்துவின் தெய்வீக வழியாகும்.இந்த அற்புதமான கொள்கைகளை தவிர மக்களுக்கு நன்மை உண்டாக்கும் வேறு கொள்கைகளை தந்தை பெரியார் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இப்படி

இருக்க தேவையில்லாமல் இயேசுவை பற்றி தவறாக எழுதி பெரியாரின் உண்மை வழியை மக்களிடன் இருந்து மறைத்துவிடாதீர்கள்.

பிரிவுகள்

என்பது எல்லா இடங்களிலும் உள்ளது.இந்த உலகத்தில் பிரிவு இல்லாத ஒன்றை நீங்கள் காட்ட முடியுமா? எந்த மதங்களில் பிரிவு இல்லை,எந்த கட்சியில் பிரிவுகள் இல்லை என்ரு சொல்லுங்கள் .ஏன் உங்கள் பெரியாரியத்தில் பிரிவு இல்லையா?அதை பற்றி விளக்கமாக எழுதவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்.

கடைசியாக

ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.பெரியாரை மதிக்கிறோம்,அவர் சொன்ன கருத்துகளில் உள்ள உண்மைகளை மதிக்கிறோம்.கிறிஸ்தவத்தில் தவறுகள் உண்டு.அதை சாடுங்கள் தவறில்லை.ஆனால் இயேசுகிறிஸ்துவையோ,அல்லது அவரது உபதேசத்தை பற்றியோ பெரியாரியம் என்ற பெயரில் நீங்கள் எழுதும் வாய்சவாடல்களை பொருத்துக்கொள்ள முடியாது.தேவையில்லாமல் எழுதுவதை நீங்கள் தொடர்ந்தால் பெரியாரியத்தை பற்றியும் உங்கள் தலைவர் கீ.வீரமணி பற்றியும் எழுத வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

முஸ்லிம்களை மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள்!

முஸ்லிம்களை மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள்!

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

சமரசம் 16-31 ஜனவரி இதழில் ஒரு செய்தி வெளியிடப்பாட்டு உள்ளது அதை முழுமையாக படிக்க http://www.samarasam.com/16-31_Jan_08/index.htm,அதன் தலைப்பு “முஸ்லிம்களை மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள்! “


இந்த கட்டுரை எந்த அளவுக்கு உண்மை என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.ஆனால் ஒரு சில உண்மையான விஷயங்கள் அவர்களாகவே ஒத்துக்கொண்டதும்,ஒரு சில விஷயங்களை நகைச்சுவையாக எழுதியததயும் காண முடிந்தது.

//”சுதந்திரத்திற்கான போர்” எனும் போர்வையில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல்கள், பார்ப்பதற்கு மற்ற போர்களைப் போன்று தோன்றினாலும் திரைமறைவில் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் வெளிப்படையாகத் தங்களது நிர்மாணிக்கப்பட்ட இலக்கிற்காக மிகவும் முனைப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர்.//

போர் புரிந்த அமேரிக்க வீரர்கள் என்னமோ ஒரு கையில் துப்பாக்கியும் மறுகையில் பைபளையும் தூக்கிச் சென்றார்காள் என்று சொல்ல வருகிரார்களோ?

//ஜூலை மாதத்தில் (2007) தாலிபான், தென்கொரியாவைச் சேர்ந்த 21 நபர்களைக் கைது செய்த போதுதான் இவ்வுண்மை முதன் முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. மக்கள் சேவை செய்வதற்கென்றே இவர்கள் பணியாற்றுவது போன்று வெளியுலகிற்குத் தெரிந்தாலும் தாலிபான் அரசின் முடிவிற்குப் பிறகு 2001 லிருந்தே இந்த கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கைதானவர்கள் தாங்கள் சர்வதேச சேவை அமைப்பான ( Shaltarnaw) ‘ஷல்டர்னாவ்’வுக்காக செயல் புரிவதாக ஒப்புக் கொண்டனர், இந்த அமைப்பானது மேற்குலகின் பலமான கிறித்தவ இயக்கமாகும், இது ஆப்கானிஸ்தானில் 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவைச் சேர்ந்தவர்களே இதில் பெரும்பாலோர் உள்ளனர், இவ்வமைப்பானது கடந்த 5 ஆண்டுகளில் பெரும் எண்ணிக்கையிலான ஆண்களையும், பெண்களையும் சேவைக்கென்று ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. இவர்கள் அங்கு கிறிஸ்தவ இலக்குகளை அடைய மிகப் பெரும் பங்காற்றியுள்ளனர்.//

முந்தின வரியில் நீங்கள் எழுதியது அமேரிக்க மதமாற்றத்தை தலைமைதாங்கி நடத்துவது போல் எழுதிவிட்டு அதில் இருந்த அனைவரும் தென்கொரியாவை சேர்ந்தவர்கள் என்று சொல்லுவது முரன்பாடாக தெரிகிறது.


//தாலிபான் அமைப்பு 2006 ல் இதே போன்ற ஒரு இத்தாலியக் குழுவைக் கைது செய்தது, இக்குழு ஓர் ஆப்கானிய நபரை (அப்துர் ரஹ்மான்) கிறிஸ்தவராக மாற்றி பிலிப்பைனுக்குக் நாடு கடத்தியது. இவர்களை (குழு) விடுதலை செய்ய வேண்டுமெனில் அந்நபரை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வர வேண்டும் என்று தாலிபான் கேட்டுக் கொண்டது, ஆனால் இதில் வெற்றி கிடைக்கவைல்லை, //

ஏதோ அந்த நபரின் விருப்பம் இல்லாமல் கடத்திக் கொண்டு போனது மாதிரி திரித்து எழுதுகிறிர்கள்.அந்த நபர் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்காக காவலில் வைக்கப்பட்டதும்,அதன் பின் நடந்தவைகளும் உலகம் அறியும்.
அப்துல் ரஹ்மான் பற்றிய தொடுப்பு;
http://unmaiadiyann.blogspot.com/2007/12/blog-post_4450.html

//’ஷல்டர்னாவ்’ போன்ற மற்ற கிறிஸ்தவ இயக்கங்கள் மருத்துவமனைகளை அமைத்தல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல் மூலம் கிறிஸ்தவப் பிரச்சாரத்துக்காக பல்வேறு விதமான நூல்களை மக்களிடையே விநியோகம் செய்கின்றன. இச்சேவை அமைப்புகள் அயராது உழைத்து நிறைய பேரை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றியுள்ளன. இவர்களின் முக்கிய இலக்கு போரில் காயம்பட்டு இவர்களுடைய மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளே.

ஆப்கனின் பல்வேறு இனத்தலைவர்கள் அதிபர் ஹாமித் கர்சாயியைச் சந்தித்து, இந்தச் சேவை அமைப்புகள் சேவை எனும் போர்வையில் கிறிஸ்தவக் கலாச்சாரத்தையும், குடியையும் வளர்ப்பதாக முறையிட்டனர், அவரோ இவர்களின் நன்மையளிக்கும் செயல்கள் தீமையான செயல்களைக் காட்டிலும் அதிகம் எனக் கூறி எந்த வித நடவடிக்கையும் எடுப்பதை நிராகரித்து விட்டார்.//

ஆப்கான் அதிபருக்கே அறிந்தே கிறிஸ்தவர்களின் சேவை நன்றாக இருந்த படியினாலேயே அதை அனுமதித்து உள்ளார் என்பதை நீங்காளே ஒப்புக்கொண்டதற்கு நன்றி

//ஐக்கிய கூட்டணி செயலாளர் ஜெனரல் மௌலானா பஜ்லுர் ரஹ்மான் இக்கம்பெனிகளைப் பற்றி பின்வரும் உண்மையை கண்டறிந்தார். 2004 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இவ்வமைப்புகள் மூன்று இலட்சம் பேர்களை கிறிஸ்தவர்களாக மாற்றியுள்ளன. மேலும் இவை உளவு நிறுவனங்களாகவும் செயலாற்றி, இரகசிய செய்திகளை சேகரித்து தங்களது தலைமைக்கு அனுப்பும் பணிகளையும் செய்கின்றன.//

இத்தனை நாளும் இஸ்லாம் வேகமாக வளர்கிறது என்று கூப்பாடு போட்டு வந்த முஸ்லீம்கள் ஆப்கானிஸ்தானில் மட்டும் ” மூன்று இலட்சம் பேர்களை கிறிஸ்தவர்களாக மாற்றியுள்ளனர்” என்று சொல்வது யோசிக்க வேண்டிய செய்தி.

//இவர்களின் இந்த அசெயல்களின் விளைவாக இது வரை ½ மில்லியன் பாகிஸ்தானியர்கள் கிறிஸ்தவ வாழ்க்கை முறையை ஏற்று வாழ்ந்து வரும் பேரிடியான செய்தியை மௌலானா பஜ்லுர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.//

இதுவும் யோசிக்க வேண்டிய விசயம் தான்.

//ஆப்கானிஸ்தான் போரின் முடிவுக்குப் பிறகு இவ்வமைப்புகள் புதிய பெயர்களுடன் செயல்பட்டு வருகின்றன. தற்போது இவை பாகிஸ்தானின் பெரிய நகரங்களை குறிப்பாகக் கராச்சியைக் குறி வைத்து இயங்குகின்றன. இங்குள்ள ஏழை எளியவர்களுக்குத் திருமண ஆசை, பண ஆசை காட்டி கிறிஸ்தவ மதத்தில் இணைக்க முயன்று வருகின்றன.//

இது நல்ல நகைச்சுவையாக உள்ளது.திருமண,மற்றும் பண ஆசை காண்பித்து பாக்கிஸ்தானில் இருக்கும் ஒரு முஸ்லீமை கிறிஸ்தவனாக மாற்றினால் அதை அனுபவிக்க அவன் உயிர் மட்டும் இருக்காது என்பதை உலகமே அறியும்.அப்படி இருந்தும் எப்படி உங்களால் மட்டும் இப்படி பொய் பேசமுடிகிறது.

//பாகிஸ்தானிலும் ஆப்கனிலும் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ அமைப்புகளைப் பற்றிய குறைந்தபட்ச தகவல்களே இவை. இதை விட ஆச்சரியமளிக்கும் விஷயத்தை பிரான்ஸிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிக்கை கிறிஸ்தவ பணிகளின் பரவலைப் பற்றி வெளியிட்டுள்லது. தென்கொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஏறத்தாழ அறுபதாயிரம் (60,000) கிறிஸ்தவப் பணியாளர்கள் தற்போது முஸ்லிம்களிடையே முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனராம்,//

இதுதான் கிறிஸ்துவின் அன்பு,தங்களின் உயிரை விட இயேசுவை

இஸ்லாமியர்கள் அறிந்து கொள்வதே மேலானதாக என்னுவது.

ஞானஸ்தானம் பெற்ற 11 ஈரானியர்கள்(முஸ்லீம்கள்)

ஞானஸ்தானம் பெற்ற 11 ஈரானியர்கள்(முஸ்லீம்கள்)

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

TORTURED14.jpg picture by unmaiadiyaan
ஈரனிலுள்ள

கிறிஸ்தவ விசுவாசிகள் உறுதியான நம்பிக்கையும்,வல்லமையான சாட்சிகளாகவும் இருக்கின்றனர்.அவர்கள் ஒவ்வொருவரின் சாட்சியும் இன்றைக்குக் கிறிஸ்தவர்களாக மாறிக்கொண்டிருக்கிற பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியரைத் தொடக்கூடியதாக இருக்கின்றது. சமீபத்தில்

அவர்களில் 11 பேருக்கு ஞானஸ்தானம் கொடுக்கும் சிலாக்கியத்தைத் தேவன் எனக்கு தந்தார். பாதுகாப்புக் கருதி அவர்களது பெயர்கள் மற்றும் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்ட இடத்தை நாங்கள் குறிப்பிடவில்லை. எண்ணிக்கையின் படி இராசியக் கிறிஸ்தவர்கள் அல்லாமல் ஐரோப்பாவில் 60 ஆயிரம் ஈரானியக் கிறிஸ்தவர்களும்,அமேரிக்காவில் 77 ஆயிரம் பேரும் உள்ளனர்.அமேரிக்காவில் மட்டும் இரகசியக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சம் முதல் 3 லட்சமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே இவர்கள் அனைவரும் தங்களது விசுவாசத்தில் உறுதியாக நின்று தங்களுக்கு நேரிடுகிற உபத்திரவங்களைத் தைரியமாக சந்திக்கும்படி தயவு செய்து இவர்களை உங்களது ஜெபத்தில் தாங்குங்கள் . ஈரானில்

1979ல் புரட்சி நடந்ததில் இருந்து இதுவரை இல்லாத அளவு இஸ்லாமியர் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளுகின்றனர்.ஆசியாவில் பல்வேறு பகுதிகளான ஈரான்,சவுதி அரேபியா ,ஏமன்,பூட்டான்,நேப்பாளம் ,மியான்மார்,திபெத்,வங்காள தேசம் ,அப்கானிஸ்தான்,பாக்கிஸ்தான் மற்றும் இலங்கையில் ஊழியம் செய்து வருகிறோம் .சுவிசேம் சந்திக்கப்படாத மக்களை படக்கதை,இலக்கியங்களை பல்வேறு மொழிகளில் கொடுத்து மக்களை சந்தித்து வருகிறோம்.தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள் . SOURCE;TORTURED FOR CHRIST-FEB-2007

கற்பழிப்பில் முகமதுவை பின்பற்றும் பெயர் தாங்கி கிறிஸ்தவர்களும்,கிறிஸ்தவ பாதிரியார்களும்

கற்பழிப்பில் முகமதுவை பின்பற்றும் பெயர் தாங்கி கிறிஸ்தவர்களும்,கிறிஸ்தவ பாதிரியார்களும்

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

எந்த மதங்களை பின்பற்றுகிறவர்களை எடுத்துக்கொண்டாலும் அதில் சொல்லப்பட்ட நல்ல காரியங்களுக்கு மாற்றாக நடக்கிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் .அது சாமியாராக இருக்கலாம்,இமாமாக இருக்கலாம் ,பாதியாராக இருக்கலாம் அல்லது கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகனாகவும் இருக்கலாம்.

ஆனால் இந்த மாதிரி செய்திகளை நாம் முன்னிலை படுத்துவது இல்லை .இணையத்தில் ஓரிரு வலைதளங்கள் பாதிரியார் அதை செய்தார்,கிறிஸ்தவர் இதை செய்தார் என்று பக்கம் பக்கமாக எழுதுவதை காணலாம் .

ஆனால் இந்தியாவில் திருடுவது,கற்பழிப்பது ,கொலை செய்வது இவைகளில் முக்கிய இடம் வகிப்பது எந்த மதத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று உலகில் எல்லாருக்கும் தெரியும். இன்று பத்திரிக்கையை எடுத்து வைத்துக்கொண்டு எல்லா பெயர்களையும் குறித்துக்கொண்டு அவர்கள் சார்ந்த இந்து மதத்தை தாக்கி இந்துக்கள் இப்படி செய்தார்கள் என்று சொல்லி தினமும் 200 ,300 பதிவுகள் பதிக்க ஆரம்பித்தால் இணையதளங்கள் முழுவதும் இந்த தளத்தின் கட்டுரைகளாகவே இருக்கும்.

ஆனால் அந்த மாதிரி மலிவான விளம்பரம் தேடிக்கொள்ளா நாங்கள் ஆசைப்படுவதில்லை .அது போலவே இணையம் முழுவது அலாசினால் “வயாகரா, ஆபாச சிடிகள் கடத்தும் ஹஜ் யாத்ரீகர்கள்! , மருமகளின் கற்பழிப்பும், இஸ்லாமிய ஷாரியாவும், 12 வயது முகம்மதை கற்பழித்து கொலை செய்த இமாம் கைது , அல்லா சொன்னதால் மகளை கற்பழித்தேன், ததஜாவின் காம வேட்டை, பாக்கர் பல முறை விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் , ததஜ வின் களஞ்சியம் கலீல் ரசூலின் காம லீலைகள்
“இது போன்ற பல பதிவுகள் கிடைக்கும் இவைகளில் ஒன்றையும் நாம் பெரிது படுத்தி எழுதுவதில்லை .ஆனால் ஒரு சில முஸ்லீம் தளங்கள் கிறிஸ்தவ தளங்களில் வைக்கப்படும் ஆதாரபூர்வமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கிறிஸ்தவர்களை இழிவு படுத்தும் விதமாக ஒரு சில செய்திகளை வெளியிட்டபடியினால் இந்த பதிவை இடவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம் .


முதலாவது நாம் அறிந்து கொள்ள வேண்டியது
உலகின் எந்த மத புத்தகங்களை காட்டிலும் பாலியல் ஒழுக்கம் பற்றி தெளிவாக எழுதப்பட்டுள்ள ஒரே புத்தகம் பைபிளின் புதிய ஏற்பாடு மட்டுமே என்பதை முதலாவது தெரிவித்துக்கொள்ளுகிறேன
.
பழைய ஏற்பாட்டில் ஒரு சில ஒழுக்கக்கேடுகள் நல்ல மனிதர்களே செய்த போது ,கடவுளுக்கு பிரியமானவர்கள் செய்தார்கள்,அதனால் அவர்களுக்கு தண்டணை கிடையாது ,அதை வெளியே சொல்லாமல் மறைத்து விட்டு,வேறு மாதிரி எழுதிவிடுங்கள் என்ற கட்டளை கிடையாது. தவறு யார் செய்தாலும் தண்டணை அடைந்துள்ளார்கள்.அதை மறைக்காமல் எழுதி பின் வரும் சந்ததிகள் “இறைவன் பார்வையில் அனைத்து மனிதர்களும் சமமே .யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் நிலை நிறுத்தியுள்ளனர்.

புதிய ஏற்பாட்டில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன் வாழ்நாட்களில் பரிசுத்தராக வாழ்ந்து காட்டினார்.அதை பின்பற்றிய அவருடைய சீடர்களும் அபடியே நடந்து காட்டினார்கள். இயேசுகிறிஸ்து ஒரு பெண்ணை தவறாக பார்ப்பதே இறைவன் பார்வையில் தண்டணைக்குரிய பாவம் என்று சொன்னார்கள்.அவரின் சீடர்களும் பாலியல் இச்சைகளுக்கு விலகி ஓடத்தக்கதான அநேக அறிவுரைகளை வழங்கியுள்ளனர் .
ஒரே மனைவி திருமணம் செய்யவேண்டும்,பாலியல் ஒழுக்ககேடுகள் காரணத்தால் மட்டும் விவாகரத்து பெறவேண்டும் ,விதவைகள் மறு திருமணம்,விபச்சாரத்தினால் தள்ளப்பட்ட ஆண்களையோ ,பெண்களையோ திருமணம் செய்ய தடை,திருமணத்துக்கு முன் பாலுறவு தவறு ,இப்படி அநேக சட்டங்கள் இயேசுகிறிஸ்துவும்,அவர் மூலம் கேட்டதை அவருடைய சீடர்களும் பிரசங்கிக்கவும் ,அதே போல் தங்கள் வாழ்க்கையில் நடைமுறை படுத்தவும் செய்தார்கள். இதை தவிர வேதத்தில் வேறு தவறு செய்வதற்கு ஆதாரமான எந்த கட்டளைகளும் இல்லை.

துறவறம் கிறிஸ்தவத்தால் அனுமதிக்கப்பட்ட ஒன்று.ஆனால் வேகிறதை பார்க்கிலும் விவாகம் பன்னுகிறது நல்லது என்ற அறிவுரையும் கூடவே உண்டு .திருமண ஆசையிருந்தால் திருமணம் செய்யலாம்.அதை விட்டு துறவறம் என்று சொல்லிவிட்டு பின்பு தவறான வாழ்க்கைக்குள் செல்லுவது மிகப் பெரிய குற்றம் என்று வேதம் சொல்லுகிறது .

ஆனால் இன்றைக்கு கிறிஸ்தவ பெயர் தாங்கிகளாக உள்ள ஒரு சிலர் மேலே சொல்லப்பட்ட பரிசுத்த வேதத்தின் வார்த்தகளுக்கு விரோதமாக வேற்று மதக்கோட்பாடுகளை பின்பற்றுகிறார்கள்


.
அது என்ன வேற்று மத கோட்பாடு?
பாலியல் இச்சை வரும் போது அந்த நேரத்துக்கு மட்டும் திருமணம் என்ற பெயரில் விபச்சாரம் செய்ய அனுமதி அளித்தவர் முகமது. அந்த வழியை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்ய அவர்களுடைய உண்மையாக முன்மாதிரியான இயேசுகிறிஸ்துவை வைக்காமல் முகமதுவை முன்மாதிரியாக வைத்த கிறிஸ்தவ பெயர் தாங்கிகள்.

தனக்கு இச்சை வந்ததற்காக தன் வளர்ப்பு மகனின் மனைவியை அவளுடைய கணவணை கொண்டு விவாகரத்து செய்ய வைத்துவிட்டு திருமணம் செய்தவர் இந்த முகமது .இதற்கு உறுதுணையாக ஏக இறைவன் என்ற பட்டம் கொடுக்கப்பட்ட அல்லா ஒரு புறம். இப்படி கடவுளின் பெயரை உபயோகித்து தவறு செய்ய தூண்டியது முகமது.இன்றைக்கு இதை பின்பற்றும் பெயர்தாங்கி கிறிஸ்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .

எந்த காரணமும் இல்லாமல் விவாகரத்து செய்ய அனுமதித்தவர் முகமது. சட்டை கழற்ற கூட காரணம் இருக்கும்.ஆனால் திருமணம் என்பதை அதைவிட கேவலமாக்கி நினைத்தால் வைத்துக்கொள்ளலாம் ,இல்லையென்றால் விட்டு விடலாம் என்று போதித்த முகமதுவை பின்பற்றும் பெயர் தாங்கி கிறிஸ்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .உடனே ஒரு சில முஸ்லீம்களின் கூக்குரல் எனக்கு கேட்கிறது.” இன்றைக்கு இந்தியாவில் ஒன்றுக்கு அதிகமாக திருமணம் செய்த முஸ்லீம்களின் எண்ணக்கையை கணக்கு பாருங்கள் என்று அவர்கள் அப்படி செய்யாததற்கு நான் சொல்லும் ஒரே காரணம் அவர்கள் வெறும் பெயர் தாங்கி இஸ்லாமியர்களாக இருப்பது தான்.அவர்கள் பின்பற்றுவது முகமதுவை அல்ல இயேசுகிறிஸ்து சொன்ன வழியையும்,மற்றும் இன்றைய அரசியல் அமைப்பு சட்டத்தின் “இந்து திருமண” சட்டத்தையும் தான்

திருமணம் இல்லாமல் பாலுறவு இல்லை என்று சொன்னது பரிசுத்த வேதாகமம். ஆனால் முகமது வேற்று நாட்டில் இருந்து பலவந்தமாகபிடித்து வந்த பெண்களை எந்தவிதமான திருமண பந்தம் இல்லாமல் உறவு வைத்தும் கொண்டார்.மற்றவர்களையும் தன் வழியை பின்பற்றும்படி அனுமதித்தார் .இவரை பின்பற்றும் பெயர்தாங்கி கிறிஸ்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அடிமைப்பெண்களை இச்சைக்கு வைத்துக்கொள்ளுதல்,அழகான பெண்ணைக் கண்டால் அவளை எப்படியாகிலும் அடைந்து விடுதல் இப்படி முகமதுவின் இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.அப்படியானால் இதை செய்கிற யாரும் பின்பற்றுவது முகமதுவைதானே
அல்லாமல் பரிசுத்தராகிய இயேசுகிறிஸ்துவை அல்ல என்பது நிச்சயம்.

நபிகள் நாயகம் கொலை கொள்ளை கற்பழிப்பில் பங்குகொண்டதாக எழுதிய குர்து எழுத்தாளர் இப்படியும் ஒரு பதிவை இணையத்தில் பார்க்கத்தான் செய்தேன். இவைகளில் இருந்து என்ன தெரிகிறது என்றால்

நீங்கள் பின்பற்ற வேண்டியது இயேசுகிறிஸ்துவையும்,அவரது வழிகளையும் தான் .கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பெயர் தாங்கிகளை அல்ல .

இஸ்லாமியர்கள் என்ற பெயரை தாங்கி அதன் படி நடக்காத நல்ல முஸ்லீம்களை மட்டும் நீங்கள் விரும்ப வேண்டும் ஆனால் இஸ்லாமையும் ,முகமதுவையும் வெறுத்து ஒதுக்க வேண்டும்.

வ்

இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் – 1 ,இஸ்லாமிய தளங்களுக்கு பதில்

இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் – 1 ,இஸ்லாமிய தளங்களுக்கு பதில்

இயேசுவின் பிறப்பு விவரங்கள் – பைபிளிலும் மற்றும் குர்-ஆனிலும்(ஒரு மறுப்புக் கட்டுரை)தமிழ்முஸ்லீம் என்ற வெப்தளத்தில் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் ஒரு கட்டுரையை எழுதுயிருந்தார்கள். இயேசுவின் பிறப்பின் விவரங்கள் பைபிளிலும், குர்-ஆனிலும் வேறு வேறுவிதமாக உள்ளது. இவர் குர்-ஆனில் சொன்னவிவரங்கள் தான் சரியானது, பைபிளில் சொன்ன நிகழ்ச்சிகள் சரியானது அல்ல என்று எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கட்டுரைக்கு மறுப்பை இப்பக்கத்தில் காணப்போகிறோம். பைபிளை படிக்காமலேயே அதில் சொல்லிய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறார் இவர். பைபிளில் அவர் காட்டிய மேற்கோள்கள் தவறாக உள்ளது. பைபிளில் என்ன அதிகாரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று படிக்காமலேயே , இந்த அதிகாரத்தில் இப்படி பைபிளில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறார், நம் இஸ்லாமிய நண்பர்.

இவர் எழுதிய 5 தொடர்களில், முதல் தொடரின் மறுப்பையும், பைபிளைப் பற்றிய அவரின் அறியாமைப் பற்றியும் நாம் இக்கட்டுரையில் காணப்போகிறோம். மற்றும் இயேசுவின் பிறப்பைப் பற்றிய விவரங்கள் பைபிளில் சொல்லப்பட்டது தான் சரியானது என்றும் நாம் காணப்போகிறோம். தேவனுக்கு சித்தமானால், அவரின் மற்ற தொடர் கட்டுரைக்கும் (இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட), என்னுடைய விமர்சனங்களை அல்லது மறுப்பை கூடிய சீக்கிரத்தில் காண்போம்.

அவர் எழுதிய கட்டுரையை இங்கு காணலாம் : இயேசுவுக்கு நேர்ந்ததென்ன? – தொடர் – 1 (http://www.tamilmuslim.com/ )
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

ரங்கிப்பேட்டை ஜி – நிஜாமுத்தீன்

தொடர் – 1
அறிமுகம்.

உலக அளவில் 200 கோடி மக்களால் – அவர்களுக்கு போதிக்கப்பட்டுள்ள படி இரச்சகராகவும், 170 கோடி முஸ்லிம்களால் அவர்களின் வேத அறிவிப்புப் படி இறைத்தூதராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சிறந்த மனிதர் இயேசு என்று அழைக்கப்படக் கூடிய ஈஸா(அலை) அவர்கள்.

இவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சர்ச்சை இரு சமூக, சமூக தலைவர்களுக்கு மத குருக்களுக்கு மத்தியில் நீண்ட நெடுங்காலமாக நடந்து வந்துக்கொண்டிருக்கிறது.

என் மறுப்பு:

மிக மிக உண்மை. இயேசுவின் பிறப்புபற்றி கி.பி. முதலாம் நுற்றாண்டில் அவருடைய சீடர்கள், அவரோடு வாழ்ந்தவர்கள், ஏன் அவருடைய தாயாரே ஏற்றுக்கொண்டதை, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வந்த குர்-ஆன் வேறு விதமாகச் சொன்னதால், இந்த சர்ச்சை இன்னும் உள்ளது.

இயேசுவின் தாய், இயேசுவின் சீடர்களோடு சேர்ந்து ஊழியம் செய்தார்கள். இயேசுவின் சீடர்கள் மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதையும், இயேசுவின் பிறப்பு, மற்றும் மற்ற விவரங்களை இதர மக்களுக்கு சொல்லும்போதும், மரியாள் கூட இருந்தார்கள். குர்-ஆன் சொல்வது போல இருந்துஇருந்தால், மரியாள் தடுத்துயிருப்பார்கள். இயேசுவின் சீடர்கள் மரியாளோடு இயேசுவின் வாழ்வு பற்றி கேள்விகள் கேட்டுயிருப்பார்கள். மரியாள் தான் வளர்த்த பிள்ளையைப்பற்றிய விவரங்களை தெளிவாகவும், சந்தோஷமாகவும் சொல்லியிருந்திருப்பார்கள். இவைகளைப் பற்றித்தான் புதிய ஏற்பாட்டின் சுவிசஷங்கள் சொல்கின்றன.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இதில் இயேசுவை இரச்சகர் – கடவுளின் மகன் என்று கூறி வழிப்படுவோர் வெறும் கற்பனையால் புனையப்பட்ட யூகத்தின் அடிப்படையில்தான் தம்முடைய நம்பிக்கையை வளர்த்து வைத்துள்ளார்கள் என்று அந்த சமூகம் சார்ந்த சில வரலாற்று ஆய்வாளர்கள் துணிந்து தெரிவித்து வருகிறார்கள். பரிசுத் வேதாகாமம் என்று கிறிஸ்துவர்களால் போற்றப்படும் பைபிளில் இயேசுவைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாக வந்துள்ள கருத்துக்களையும் சம்பவங்களையும் அந்த வரலாற்றாளர்கள் தங்களுடைய கருத்துக்கு சாதகமாக ஆதாரமாக எடுத்து வைக்கிறார்கள். உரிய இடத்தில் இறை நாட்டப்படி அதை நாம் விளக்குவோம்.

என் மறுப்பு:

குர்-ஆன் கற்பனையா? அல்லது பைபிள் கற்பனையா என்பது இரண்டையும் ஆராயும் அன்பர்களுக்கு விளங்கும். குர்-ஆனில் உள்ள முரண்பாடுகளுக்கு குர்-ஆனும், ஹதீஸ்களும் இஸ்லாமிய சரித்திர நூல்களுமே சாட்சி. சரித்திர நூல்களும், தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளும் பைபிளில் சொல்லப்பட்டவைகளே உண்மையானவை என்று நிருபிக்கின்றன.

ஆரோனின் சகோதரியான மிரியாம் பற்றி சிறிது தெரிந்துக்கொண்டு, இயேசுவின் தாயை “ஆரோனின் சகோதரியே” என்று கூறுவதிலும், பெர்சிய அரசன் அகாஸ்வோறு அரசனின் மந்திரியாக இருந்த “ஆமான்” என்ற நபரை, எகிப்தின் பார்வோனோடு சம்மந்தப்படுத்தி பேசும் போதும் குர்-ஆன் முரண்படுகின்றது.

சொத்துக்களை பிரித்துகொடுப்பதில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். ஹதிஸ்கள், மற்றும் ஷரியாவின் உதவியில்லாமல் குர்-ஆனில் சொல்லியபடி, சொத்துக்களை பிரித்து கொடுக்கமுடியுமா? மிகத் தெளிவாக உள்ள குர்-ஆனின் தவறை திருத்துவதற்கு சீராக்களும், சரித்திர நூல்களும், ஹதீஸ்களும் தேவைப்படுகின்றன. குர்-ஆன் படி சொத்துக்களை பிரித்துகொடுத்தால், 100 சதவிகிதத்திற்கு அதிகமாக போகிறது. யார் மீதி சொத்துக்களை தருவது. இதைப்பற்றியும் நாம் ஒரு கட்டுரையைக் காண்போம்.

குர்-ஆன் 4:11, 4:12, மற்றும் 4:176 வசனங்கள் சொத்துக்கள் பிரிப்பதைப்பற்றி அல்லாவின் கட்டளையை கொண்டுள்ளது.
இந்த முரண்பாட்டைப்பற்றி இங்கு படிக்கலாம். Inheritance in Koran Koran Contradictions

இயேசுவின் பிறப்பு பற்றியும், அவரின் மரணம், மற்றும் உயிர்த்தெழுதலைப்பற்றியும் எந்த ஒரு முரண்பாடும் இல்லை. இந்நிகழ்ச்சிகளில் உள்ள ஒற்றுமையை இங்கு காணலாம். ( ai url )

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இயேசுவை இறைத்தூதராக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களிடம் அவரை இறைத்தூதர் என்று அறிவிக்கும் குர்ஆன் உள்ளது. இதில் இயேசுவின் பிறப்பு அதிசயம், குழந்தை பருவம், மழலை பருவத்தில் அவர் தம் தாயின் கற்புக்கு கொடுத்த உத்திர வாதம், வாலிபம், பிரச்சாரம், அவரது சீடர்கள், எதிரிகளின் சூழ்ச்சி, இறுதி முடிவு என்று அவர் பற்றிய எல்லா விபரங்களும் கூறப்பட்டுள்ளன. அவரை கடவுளின் குமாரர் என்று – இரச்சகர் என்றோ குர்ஆன் ஏற்கவில்லை. அவ்வாறு கூறுவோரின் கூற்றை குர்ஆன் கடுமையாக மறுத்துள்ளது.

என் மறுப்பு:

குர்-ஆன் வருவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே இயேசு தெளிவாக சொல்லிவிட்டார், தனக்கு பின் அனேக “கள்ள தீர்க்கதரிசிகள்” வருவார்கள், அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று.

குர்-ஆனுக்கு இறைத்தூதருக்கும்(தீர்க்கதரிசிக்கும்), நல்ல இறைவனிடியார்களுக்கும் ( நீதிமானுக்கும்) உள்ள வித்தியாசமே தெரியவில்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு போன்றோர்கள் எந்த இனமக்களுக்காகவும் நபிகளாக அனுப்பப்படவில்லை. அவர்கள் தங்களுக்கு தேவன் காண்பித்த தேசத்தில் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள். இவர்கள் நீதிமான்கள் அவ்வளவு தான். தங்கள் குடும்பங்களுக்கு இவர்கள் எதிர்காலத்தைப்பற்றியும், நீதிமானாக வாழ்வதைப்பற்றியும் எச்சரித்தார்களே தவிர, ஊருக்கெல்லாம் தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்கள் பாவங்களிலிருந்து மனம்திரும்பும்படி யாருக்கும் எச்சரிக்கவில்லை. ஆனால் இவர்கள் தங்கள் இனமக்களுக்கு எச்சரிக்க அல்லாவால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் என்றுச் சொல்கிறது. எலியா, எலிஷா, எசாயா, யோவான் போன்று மக்களை நல்வழிப்படுத்த அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் அல்ல.

இப்படிப்பட்ட குர்-ஆன், இயேசு ஒரு நபி மட்டும் தான் என்றுச் சொல்வதில், கிறிஸ்தவர்களுக்கு எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

சமூகமும் – இயேசுவின் பிறப்பும்

இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி முழுமையான தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் எந்த சமுதாயத்திற்கு வந்து தம் பணியை சிறப்பாக செய்தாரோ அந்த சமுதாயம் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இயேசுவின் வருகைக்கு ஏறத்தாழ 2000 – 2500 வருடங்களுக்கு முன் அப்ரஹாம் (இப்ராஹீம்) என்ற தீர்க்கதரிசி (இன்றைய இராக்கில்) தோன்றினார். அவருக்கு சாராள் (சபுரா) ஆகார் (ஹாஜரா) என்று இரு மனைவிகள்.

என் மறுப்பு:

சாராளுடைய அடிமைப்பெண்தான் ஆகார். ஆகார் என்றுமே ஆபிரகாமின் மனைவியாக தேவன் கருதவில்லை. ஆகாரை சாராளின் அடிமைப்பெண் என்று தான் பைபிள் குறிப்பிடுகிறது.

a) அடிமைப்பெண் மறுமனையாட்டியாகிறாள்: ஆதியாகமம்: 16:1-3

ஆதியாகமம் 16:1-3

16:1. ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர் கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளுக்கு இருந்தாள்.

16:2. சாராய் ஆபிராமை நோக்கி, நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.

16:3. ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான த்ன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.

b) சாராள் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறாள்: ஆதியாகமம்: 16:4-5

ஆதியாகமம் 16:4-5

16:4. அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்

16:5. அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி, எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப் பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.

c) ஆபிரகாம் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார் ஆதியாகமம்: 16:6

ஆதியாகமம் 16:6

16:6. அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி, இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்

d) கர்த்தருடைய தூதனானவர் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார்: ஆதியாகமம்: 16:7-8

ஆகாரும் தன்னை “ஆபிரகாமின் மனைவி என்றுச் சொல்லிக்கொள்ளவில்லை” தன்னை சாராளின் ( நாச்சியார் ) அடிமைப்பெண் என்றே சொல்கிறாள்.

கர்த்தருடைய தூதனானவர் கூட “ஆபிரகாமின் மனைவியே அல்லது ஆகாரே என்றுச் சொல்லாமல்” சாராளின் அடிமைப்பெண்ணே என்றுத் தான் அழைக்கிறார்.

ஆதியாகமம் 16:7-8

16:7. கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு,

16:8. சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள், நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.

e) இஸ்மவேல் ஒரு தீர்க்கதரிசி அல்ல: ஆதியாகமம்: 16:9-12

முகமதுவுடைய நம்பிக்கை என்னவென்றால், ஆபிரகாமிற்கு பிறப்பவர்கள் எல்லாம் தீர்க்கதரிசிகள் என்று நம்பினார். ஆனால், இஸ்மவேல் ஒரு சாதாரண் மனிதனே தவிர ஒரு தீர்க்கதரிசி அல்ல. மற்றுமில்லை, அவன் ஒரு “துஷ்டமனுஷனாக இருப்பான்” என்று கர்த்தர் என்று சொல்லியிருக்கிறார்.

ஆதியாகமம் 16:9-12

16:9. அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர், நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.

16:10. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்க்கும் என்றார்.

16:11. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.

16:12. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.

f) ஆபிரகாமின் மற்றொரு மனைவி: ஆதியாகமம்: 25:1-2

ஆபிரகாமிற்கு இரண்டு மனைவிகள் மட்டுமல்ல, அவருக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். இவர்களுடைய பிள்ளைகளைப்பற்றி குர்-ஆன் ஒன்றுமே சொல்லவில்லையே. இவளுடைய பிள்ளைகள் தீர்க்கதரிசிகள் ( இறைத்தூதர்கள் ) இல்லையோ?

ஆதியாகமம் 25:1-2

25:1. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.
25:2. அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள் .

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இதில் ஆகார் என்ற இரண்டாவது மனைவியான ஹாஜராவிற்கு இஸ்மவேல் என்ற இஸ்மாயீல் முதல் மகனாக பிறக்கிறார்கள். இஸ்மவேலையும் (இஸ்மாயீல்) அவர் தாயார் ஆகார் (ஹாஜராவையும்) ரையும் இறைப்பணிக்காக அரபு தேசத்தில் (சவூதி அரோபியாவில்) இருக்கும் மக்கா என்ற ஊரில் ஆப்ரஹாம் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். இந்த விபரம் குர்ஆனிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை போதிக்கும் புகாரி என்ற பெரு நூலிலும், பைபிளின் பழைய ஏற்பாட்டின் ஆதியாகாமத்தின் அதிகாரங்கள் 12, 13. 14, 15, 16. 17 ஆகியவைகளிலும் விரிவாக கூறப்பட்டுள்ளது.

என் மறுப்பு:

அருமை அருமை. அவ்வளவு தெளிவாகச் சொல்கிறீர்கள். குர்-ஆனில், ஹதீஸ்களில் உள்ளது என்றுச் சொன்னால், பரவாயில்லை போனால் போகட்டும் என்று விட்டுவிடலாம். பழைய ஏற்பாட்டில் கூட உள்ளதாமே! மக்காவில் ஆபிரகாம் இஸ்மவேலை விட்டு வந்த செய்தி. இதை படிக்கும் இஸ்லாமியர்கள் பழைய ஏற்பாட்டில் தேடிபார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தானே உங்களுக்கு.

இறைபணிக்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் ஆபிரகாம் விட்டு வந்தார் என்று பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளதா? அல்லது வீட்டைவிட்டு துரத்திவிட்டார் அல்லது அனுப்பிவிட்டார் என்று உள்ளதா?

அவ்வளவு ஏன், நீரே பழைய ஏற்பாட்டை தொடவில்லை என்று நன்றாக புரிகிறது. ஆபிரகாம், ஆகாரையும், இஸ்மவேலையும், தன் வீட்டைவிட்டு அனுப்புவிடும் செய்தியை மாற்றி மக்காவில் கொண்டுவிட்டதாக சொல்கிறீர். இது மட்டுமா, ஆதியாகமம் 21ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட காரியத்தை, நீர் ஆதியாகமம் 17வது அதிகாரம் வரையில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறீர்.

ஆதியாகமம்: 21:12-21

21:12. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி, அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.
21:13. அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.
21:14. ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.
21:15. துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு,
21:16. பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
21:17. தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.
21:18. நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
21:19. தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
21:20. தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான்.
21:21. அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்

ஆபிரகாம் மக்காவிற்கு இஸ்மவேலோடு வந்தார், அங்கு காபாவை புதுப்பித்தார் என்ற குர்-ஆனின், ஹதீஸ்களின் வாதத்திற்கு இதுவரையில் எந்த சரித்திர ஆதாரமும், அகழ்வாராச்சி ஆதாரமும் இல்லை.

1. ஊர் என்ற தேசத்திலிருந்து, பாலும், தேனும் ஓடும் தேசத்திற்கு போகும்படி சொன்ன அல்லா, ஏன் பிறகு இங்கிருந்து மக்காவிற்கு போகச்சொல்கிறார்?

2. 100 வயதுள்ள ஆபிரகாம், ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு, ஆகாரோடு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள மக்காவிற்கு பாலைவனத்தில் எப்படி சென்றார் என்பது தான் ஆச்சரியம். ஒரு பாம்பு வழிகாட்டியதோ?

3. மக்காவில் தீர்க்கதரிசனம் உரைத்து, மக்கா மக்களை நேர்வழியில் நடத்துவதற்காகவா?

4. இவர்கள் காபாவை புதுப்பிக்கும்போது மக்காவில் யாரும் வாழவில்லை. ஒரு மனிதனும் இல்லை. ஊரிலே யாரும் இல்லாத போது, அங்கு காபாவை பாதுகாக்க அல்லது ஒரு பொருப்பாளியாக இஸ்மாயில் எதற்கு? கி.மு. 2000 லிருந்து கி.பி வரை மக்காவில் மனித நடமாட்டம் இல்லை என்று சரித்திரம் சொல்கிறது.

Tabari VI:52 “The Ka’aba had not had any custodians since its destruction in the time of
Noah. Then Allah commanded Abraham to settle his son by the Ka’aba, wishing thereby to
show a mark of esteem to one whom he later ennobled by means of his Prophet Muhammad.”
“Abraham and his son Ishmael were custodians of the Ka’aba after the time of Noah. At the time, Mecca was uninhabited….”

இஷாக், மற்றும் டபரி போன்றவர்களின் தொகுப்பில் இதைப்பற்றிச் சொல்லியுள்ளது. ஆனால் நீர் சொன்னது போல எந்த ஹதீஸிலும் இல்லை. புகாரி ஹதீஸிலும் இந்நிகழ்ச்சி பற்றிய செய்தி இல்லை. (ஷகீனா வழிகாட்டியதாக வரும் செய்தி)

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

(முக்கிய குறிப்பு) கிறிஸ்துவ மத குருமார்கள்; இயேசுவிற்குபிறகு எந்த நபியும் இல்லை என வாதிக்கிறார்கள். இதற்கு காரணம் ஆப்ரஹாமின் முதல் மகன் இஸ்மவேலின் வரலாற்றை அவர்கள் கண்டுக் கொள்ளாததேயாகும். இரண்டாவது மகனான ஈசாக்குவின் பக்கமே அவர்களின் கவனம் செலுத்தப்படுகிறது. அதனால் இஸ்மவேலைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை உரிய இடத்தில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்)

என் மறுப்பு:

அருமை நண்பரே, ஆபிரகாமின் முதல் மனைவி மூலம் பிறந்த ஈசாக் மட்டுமல்ல, ஆகார் மூலமாக பிறந்த இஸ்மவேல் கூட ஒரு நபி என்று சொல்கிறீர். இவரை கிறிஸ்தவ குருக்கள் சிந்திக்கவில்லை என்றுச் சொல்கிறீர். ஆபிரகாமின் வேறு ஒரு மனைவியைப் பற்றி உமக்குத் தெரியுமா? அவர்கள் பிள்ளைகள் பற்றி அல்லா என்ன சொல்லியுள்ளார்? அவர்கள் பக்கம் உங்கள் கவனம் ஏன் போகவில்லை ?

a) ஆபிரகாமின் மற்றொரு மனைவி:

ஆபிரகாமிற்கு இரண்டு மனைவிகள் மட்டுமல்ல, அவருக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். இவர்களுடைய பிள்ளைகளைப்பற்றி குர்-ஆன் ஒன்றுமே சொல்லவில்லையே. இவளுடைய பிள்ளைகள் தீர்க்கதரிசிகள் ( இறைத்தூதர்கள் ) இல்லையோ?

ஆதியாகமம்: 25:1-2

25:1. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.
25:2. அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.

b) நபிக்கள் வருவது ( நபித்துவம் ), வேதம் கொடுக்கப்படுவது ஈசாக்கு வம்சத்திற்கு – குர்-ஆன் சாட்சி :

குர்-ஆனில் சொல்லப்பட்ட நபித்துவத்தைப்பற்றி 4 வசனமும் இஸ்ரவேல் மக்களைப்பற்றியே பேசுகிறது. நபித்துவமும், வேதமும் ஈசாக் வம்சத்திற்கு மட்டுமே உரியது என்று குர்-ஆன் சொல்கிறது, இஸ்மவேல் வம்சத்திற்கு அல்ல. 2500 ஆண்டுகளாக ( ஆபிரகாமிலிருந்து ( 2000 கி.மு), முகமது (570 கி.பி.) வரை) எல்லா நபிகளும் ஈசாக்கு வம்சத்திலிருந்து தான் வந்துள்ளார்கள். ஒரு நபிகூட இஸ்மவேல் வம்சம் இல்லை. இஸ்மவேல் நபி என்றால், அவரின் பிள்ளைகள் அல்லது மற்ற வம்சத்தார்கள் யார் நபியாக இருந்தார்கள்? யாருடைய பெயரையாவது சொல்லமுடியுமா?

c) இதோ ஈசாக்கு வம்சத்திற்குத் தான் நபித்துவம், வேதம் என்று குர்-ஆன் சொல்லும் சாட்சி: 6:89, 11:28, 29:27, 57:26

குர்-ஆன் 6:89, 11:28, 29:27, 57:26

6:89 இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்; ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம்.

11:28 (அதற்கு) அவர் (மக்களை நோக்கி) ‘என் சமூகத்தவர்களே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடமிருந்து (பெற்ற) தெளிவின் மீது இருந்து அவனிடமிருந்து (நபித்துவம் என்னும்) ஓர் அருளையும் அவன் எனக்கு தந்திருந்து அது உங்களுக்கு (அறியமுடியாமல்) மறைக்கப்பட்டு விடுமானால் நீங்கள் அதனை வெறுத்துக் கொண்டிருக்கும் போது அதனை(ப் பின்பற்றுமாறு) நான் உங்களை நிர்பந்திக்க முடியுமா?” என்று கூறினார்.

29:27 மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார்.

57:26 அன்றியும், திடமாக நாமே நுூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக இருந்தனர்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

ஆப்ரஹாம் (இப்ராஹீம்) அவர்களின் முதல் மனைவியான சாராள் என்ற சபுராவிற்கு ஈசாக்கு என்ற இஸ்ஹாக் அவர்கள் இரண்டாவது குழந்தையாக பிறக்கிறார்கள். இவர்களின் சந்ததி பல கிளைகளாக பிரிந்து பெருகி பல இடங்களில் வாழ்ந்தார்கள். இவர்களில் ஒவ்வொரு சந்ததியினருக்கும் நேர்வழிக் காட்ட இறைவன் புறத்திலிருந்து தீர்கதரிசிகள் – இறைத்தூதர்கள் வந்துள்ளார்கள்.

ஈசாக்(இஸ்ஹாக்)குடைய மகனாக யாகோப்(யஃகூப்) என்ற தீர்கதரிசி பிறக்கிறார்கள். இவர்களே ‘இஸ்ராயீல்’ என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களின் சந்ததியில் வந்தவர்கள்கள் தான் யூதர்கள் என்று அழைக்கப்படக்கூடிய இஸ்ரவேலர்கள்.

அப்ரஹாம்(இப்ராஹீம்) அவர்கள் தம் மக்களுக்கு செய்த உபதேசத்தையே அவர்களின் மகன் ஈசாக்(இஸ்ஹாக்) அவர்களும், அவர்களுக்கு பின் மகன் வழி பேரன் யாகோப்(யஃகூப்) அவர்களும் செய்கிறார்கள். இந்த விபரங்கள் அனைத்தும் குர்ஆனில் வருகிறது.

‘(ஆப்ரஹாம் ஆகிய) அவருக்கு அவருடைய இறைவன் ”எனக்கு நீர் கீழ்படியும்” என்று கூறியதும் ”அகிலத்தாரின் இரச்சகனுக்கு நான் கீழ்படிந்து விட்டேன்” என்று கூறினார் (அல் குர்ஆன் 2:131)

இதையே தம் மக்களுக்கு அவர்கள் நல்லுரையாகவும் கூறினார்கள்.

(இஸ்ரவேலாகிய) யஃகூபும் ” என் மக்களே! நிச்சயமாக இறைவன் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே உங்களுக்கு தேர்ந்தெடுத்துள்ளான். எனவே நீங்கள் (அந்த ஏக இறைவனுக்கு) முற்றிலும் கீழ் படிந்தவர்களாக அன்றி மரணித்து விட வேண்டாம்” என்கிறார்கள். (அல் குர்ஆன் 2:132)

யாகோபிற்கு மரணம் நெருங்கியதும் அவர் தம் மக்களிடம் கேட்கிறார் ”எனக்கு பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?”

மக்கள் பதில் சொல்கிறார்கள் ”நீங்கள் வணங்கிய அந்த வணக்கத்திற்குறியவனும் உங்கள் (குடும்ப) முன்னோர்களான அப்ரஹாம்(இப்ராஹீம்) இஸ்மவேல்(இஸ்மாயீல்) ஈசாக்(இஸ்ஹாக்) ஆகியோர் வணக்கத்திற்குறியவனாக ஏற்று வணங்கிய அந்த ஒரே அறைவனையே வணங்குவோம்” (அல் குர்ஆன் 2:133)

என் மறுப்பு:

ஆபிரகாம், ஈசாக் பட்டியலில் இஸ்மவேலும் சேர்ந்துவிட்டார். பைபிளில் ஒரு இடத்திலும் ஆபிரகாம், ஈசாக் பட்டியலில் இஸ்மவேலின் பெயரை சேர்த்து ” நான் ஆபிரகாமின், இஸ்மவேலின், ஈசாக்கின் தேவன்” என்றுச் சொன்னதில்லை.
இப்படிச் சொன்னால், கிறிஸ்தவர்கள் மாற்றி எழுதிவிட்டார்கள் என்றுச் சொல்வீர்கள்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இப்படி பல இறைத்தூதர்களிடமிருந்து அறிவுரைகளைப் பெற்ற யூதர்கள் பின்னாளில் கடின சித்தம் உள்ளவர்களாகவும் எத்தகைய கொடுமையை செய்வதற்கும் அஞ்சாதவர்களாகவும் மாறிப்போனர்கள். இத்தயை மக்களிடம் தான் இயேசு(ஈஸா) அவர்கள் பிரசாரம் செய்வதற்காக வருகிறார்கள் கடைசியாக.

என் மறுப்பு:

பிரச்சாரம் செய்வதற்காக மட்டுமல்ல, உலகத்தின் எல்லா மக்களுக்காகவும் மரிப்பதற்காகவும், பிறகு உயிரோடு எழுந்திருப்பதற்காகவும் வந்தார்.

குர்-ஆன் 19:33

“இன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது. — இயேசு.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இயேசுவிற்கு முன்னால் மோஸே (மூஸா) அவர்கள் அதே மக்களை வந்து சந்திக்கிறார்கள்.

”நாம் மூஸாவிற்கு திட்டமாக வேதத்தை கொடுத்தோம். அவருக்கு பின்னால் தொடர்ச்சியாக இறைத்தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். மரியாளின் (மர்யமின்) குமாரர் இயேசு(ஈஸா)விற்கு nதிளிவான அத்தாட்சிகளை வழங்கியும் பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு அவரை பலப்படுத்தியும் வைத்தோம். (யூதர்களே) உங்கள் மனம் விரும்பாததை (நம்முடைய) எந்த தூதர் உங்களிடம் கொண்டு வந்தாலும் நீங்கள் பெருமையடிக்கிறீர்கள். ஒரு சாராரை பொய்படுத்தினீர்கள் ஒரு சாராரை கொலையும் செய்தீர்கள்.” (அல் குர்ஆன் 2:87)

மோஸே அவர்களுக்க பிறகு இறைவன் தொடர்சியாக யூதர்களுக்காக தீர்கதரிசிகளை அனுப்பிக் கொண்டிருந்தான். அப்படி அனுப்பப்பட்ட தீர்கதரிசிகள் யூதர்களால் ”பொய்பிக்கப்பட்டார்கள்” அல்லது ”கொலை செய்யப்பட்டார்கள்” என்ற விபரம் மேற்கண்ட வசனத்தில் கிடைக்கின்றன. பொய்பிப்பதற்கும் கொலை செய்யப்பட்டதற்கும் என்ன காரணம்? அதே வசனத்தில் விடையும் கிடைத்து விடுகிறது. ‘உங்கள் மனம் விரும்பாததை எந்த தூதர் உங்களிடம் கொண்டு வந்தாலும்..’ என்ற இறைவனின் வார்த்தைகள், யூதர்கள் அவர்களின் மன விருப்பத்திற்கு மாற்றமாக – அவர்களை நல்வழிப்படுத்தக் கூடிய எந்த செய்தியையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை.

என் மறுப்பு:

நல்லது, தொடருங்கள்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

ஒரு கொள்கை நமக்கு பிடிக்காவிட்டால் அதை விட்டு நாம் ஒதுங்கிப் போகலாம் அல்லது அதை விமர்சிக்கலாம் இதை நாம் உலகில் இன்றும் பார்க்கிறோம். ஆனால் தாம் விரும்பாத ஒரு கொள்கையை – செய்தியை சொல்பவர்களை கொலை செய்யும் மனப்பக்குவம் பெற்றவர்களை கண்டிருக்கிறோமா… யூதர்கள் அந்த காரியத்தில் ஈடுபட்டார்கள். இதையும் அந்த வசனத்திலிருந்தே அறியலாம்.

என் மறுப்பு:

ஆமாம், யூதர்கள் அப்படிச்செய்தார்கள், உண்மை தான். இன்னொரு பிரிவினரும் இப்படிச் செய்தார்கள். அவர் தான், முகமதுவும் அவரது தோழர்களும்.

தன்னை விமர்சித்து கவிதை எழுதிய ஐந்து பிள்ளைகளின் தாய்க்கு முகமது என்ன செய்தார்? இங்கு படிக்கவும்.
The Death of `Asma’ Bint Marwan
“ஒரு கொள்கை நமக்கு பிடிக்காவிட்டால் அதை விட்டு நாம் ஒதுங்கிப் போகலாம் அல்லது அதை விமர்சிக்கலாம் இதை நாம் உலகில் இன்றும் பார்க்கிறோம். ” — இதனை நான் ஆமோதிக்கிறேன்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இந்த சூழலில் தான் அந்த சமூகத்திற்கு வழிகாட்ட இயேசு(ஈஸா) தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

எவ்வளவுதான் கெட்ட சமுதாயமாக இருந்தாலும் அதிலும் அபூர்வமாக இறைவனுக்கு அஞ்சி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடிய சில நல்ல மனிதர்கள் இருந்து விடுவது இயல்புதான். அந்த நல்லவர்கள் மூலமாகவும், தாம் நல்லவர்களாக உருவாக்கும் தம்முடைய சந்ததிகள் மூலமாகவும் – வரும் தலைமுறைக்கு – நல்ல விஷயங்கள் போய் சேர இது வழிவகுக்கிறது இறைவன் தான் இந்த ஏற்பாட்டை செய்கிறான்.

இறைவனின் இந்த ஏற்பாட்டின் அடிப்படையில்தான் யூத வம்சத்தில் பிறந்த இயேசு(ஈஸா) அவர்களின் பாட்டி – அதாவது மரியாள்(மர்யம்) உடைய தாயார் – நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். இறைவனுக்கு அஞ்சி அவனுக்கு மட்டும் வழிபட்டு நடந்த அந்த அம்மையாரின் பிரார்த்தனைக்காகவும்,

‘இயல்பாக’ சராசரியாக வந்த தூதர்கள் அனைவரும் பொய்பிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் ‘பிறப்பிலேயே அற்புதம் மிக்க ஒரு இறைத்தூதரை யூதர்களுக்காக அனுப்புவோம்’ என்ற இறைவனின் ஏற்பாட்டின் படியுமே இயேசு(ஈஸா) அவர்களின் பிறப்பு நிகழ்கிறது.

என் மறுப்பு:

பிறப்பிலே அற்புதம் மட்டுமில்லை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவருடைய பிறப்பு, மரணம், உயிர்தெழல் போன்ற எல்லாம் தூள்ளியமாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.

வாழும் கலை ரவிசங்கர் ஜீ உடன் விவாதம் செய்தவர் நாளை சென்னைக்கு வருகிறார்.

வாழும் கலை ரவிசங்கர் ஜீ உடன் விவாதம் செய்தவர் நாளை சென்னைக்கு வருகிறார்.


Dr.ஜாகிர் நாயகின் முகமூடிகள் சமீப காலமாக கிழிந்து வருகிறது.இருந்தாலும் அவர் பொய்,பித்தலாட்டங்களை அறிவுப்பூர்வமாக அரங்கேற்றி வருகிறார்.

அவரின் வருகை குறித்து உமர் அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு கொடுத்த எச்சரிக்கை


http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=8400#8400

வருகின்ற 11 (நாளை) முதல் 20 தேதி வரை Dr.ஜாகிர் நாயகின் பீஸ் முகாம் சென்னையில் நடக்க உள்ளது.

எதற்காக ஜெபிக்கவேண்டும் என்ற விவரங்களுக்கு இந்த குறிப்புக்கள் உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

1. இஸ்லாமியர்கள் “அமைதி(Peace) கூட்டம்” என்ற போர்வையில் பல கூட்டங்களை நடத்தி மக்களை குழப்பாமல் இருக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.

2. இப்படிப்பட்ட கூட்டங்களில் கிறிஸ்தவர்கள் கலந்துக்கொண்டு, பைபிள் பற்றி இஸ்லாமிய அறிஞர்களின் தவறான கருத்துக்களைச் சொல்லி, கிறிஸ்தவர்களை குழப்பாமல் இருக்க ஜெபித்துக்கொள்வோம்.

3. இதில் பேசப்போகும் ஜாகிர் நாயக் மட்டுமல்ல, மற்ற எல்லா அறிஞர்களும், ஜிஹாத், மற்றும் இஸ்லாமிலிருந்து வெளிவருபவனை கொலை செய்யவேண்டும் என்ற ஷரியா சட்டம் சரியானது தான் என்று வாதாடுபவர்கள், மற்றும் அதை பிரச்சாரம் செய்பவர்கள். இவர்கள் “அமைதி” என்று பேசினால், அது எப்படி உண்மையாக இருக்கமுடியும். இதை எல்லா மக்களும் அறிந்துக்கொள்ள ஜெபிக்கவேண்டும்.

4. அமைதி கூட்டம் என்று சொல்லி, இங்கு மிகவும் ஆர்வமாக பேசும் இஸ்லாமிய அறிஞர்கள், முதலாவது இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிக்கேட்கச் சொல்லுங்கள். இஸ்லாமியர்களின் வார்த்தைகளில் மக்கள் மயங்கி உண்மையை விட்டு விலகாமல் இருக்க ஜெபிப்போம்.

சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷம் போடுவான் என்று வேதம் சொல்வதை எல்லா கிறிஸ்தவர்களும் உணரவேண்டும் என்று நாம் ஜெபிக்கவேண்டும்.

யாராவது இக்கூட்டங்களில் கலந்துக்கொள்ள விரும்பினால், முதலாவது நம் தளங்களில் எழுதப்பட்டுவரும் கட்டுரைகளை, குறைந்தது நாம் இஸ்லாம் அறிஞர்களுக்கு அளித்துக்கொண்டு வரும் பதில் கட்டுரைகளையாவது படித்துவிட்டு செல்லும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதை உண்மை என்று நம்பாதீர்கள். அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தால், கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 50 கட்டுரைகளையும், பதில்களையும் நாம் சேர்ந்து அவர்களுக்கு கொடுத்துள்ளோம். ஆனால், இந்த இஸ்லாமிய அறிஞர்கள் மட்டும் அமைதியாக இருந்துவிடுகிறார்கள். பதில் சொல்லமாட்டார்கள், ஆனால், பைபிள் பற்றி, கிறிஸ்து பற்றி பொய்யான தகவல்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

எனவே, மற்றவர்களுக்காக ஜெபிப்பது மட்டுமல்ல, எச்சரிக்கை செய்வதும் ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய கடமை என்று சொல்லிக்கொள்கிறேன்.

இக்கூட்டங்களில் பங்கு பெருபவர்கள், கிறிஸ்தவத்தைப் பற்றிய ஏதாவது புத்தகங்கள் கிடைக்குமானால் கொண்டு வாருங்கள். அதில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டை இங்கு பதிவு செய்யுங்கள். யூத இராஜ சிங்கமாம் இயேசுவின் நாமத்திற்கு மகிமை உண்டாகும் படி அதற்கு பதில் தர முயற்சி செய்வோம்.

கிறிஸ்தவர்கள் பதில் சொல்லாமல் பயந்துப்போய் மௌனமாய் இருக்கமாட்டார்கள் என்பதை “இவ்வுலகத்தின் அதிபதி” அறியட்டும்

இஸ்லாம்:இயேசுவின் பெயரில் முடவனை சுகமாக்கிய முஸ்தபா,ஆவியானவரால் நடத்தப்படும் அக்பர்

இஸ்லாம்;முடவனை சுகமாக்கிய முஸ்தபா,ஆவியானவரால் நடத்தப்படும் அக்பர்

இந்த சாட்சியை ஆங்கிலத்தில் முழுமையாக படிக்கலாம்.அதன் தொடுப்பு;http://www.islamreview.com/testimonials/akbar.shtml
இங்கே அதை சுருக்கி கொடுக்கிறேன்.இந்த கட்டுரைகளை மொழிபெயர்க்க முழு அனுமதி அளித்துள்ள தள நிர்வாகத்துக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
என்னுடைய வாழ்க்கை சாட்சி

இந்தியாவில் இருந்து அக்பர்

என்னுடைய பெயர் அக்பர் ,தந்தை முகமது காஜா மொஹினுதீன்,தாய் நவான்பீ

என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன்,என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று அப் பவுல் ரோமர் 10:20ல் எழுதியபடி நாங்கள் அவரை தேடாமல் இருந்தும் எங்களுக்கு தம்மை வெளிப்படுத்தினார் .எனது ஒவ்வொரு மூச்சும் அவரை வாழ்த்த வேண்டும்.இனிய பாடல்களை பாடவேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன் . என்னுடைய

சாட்சி என்னுடைய குடும்பத்தில 6 வது மகனாக நான் பிறந்தேன்.எனது தந்தை மத்திய இரயிவேயில் புகைவண்டி ஓட்டுனராக இருந்தார் .என் தாய் இல்லத்தரசியாக இருந்தார்கள் .அவர்கள் சிறந்த குர் ஆன் ஆசிரியையாகவும் இருந்தார்கள் .இஸ்லாமின் நம்பிக்கைகள்,கொள்கைகள் மற்றும் போதனைகள் மீது மிகுந்த பற்றுடையவர்கள்.இஸ்லாம் மீது உள்ள இப்படிப்பட்ட நம்பிக்கையிலும்,பயத்திலும் என் பெற்றோர் என்னை வளர்த்தார்கள் .

தேவன்

வெளிப்பட்டார் என்னுடைய மூத்த அண்ணன் முஸ்தபா ஒரு நாள் சாலையி நடந்துகொண்டிருக்கும் போது தன்னுடைய பெயரைச் சொல்லி கூப்பிடுகிற ஒரு சத்தத்தை கேட்டார்

.”

முஸ்தபா “,முஸ்தபா என்னை நோக்கிப்பார்,நான் உன் தேவனாகிய கர்த்தர்“. அவர் சுற்றி முற்றிப் பார்த்தார் .ஆனால் அவரைத்தவிர வேறு யாரும் அந்த இடத்தில் இருக்கவில்லை. இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது .மீண்டும் இரண்டாவது தடவை சத்தம் வந்த போது , அது மேலே இருந்து வந்தது என்பதை முஸ்தபா உணர்ந்து கொண்டார். ஆனால் அது யாருடைய சத்தம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே மின்சார சக்தி போன்ற ஒரு வல்லமை அவரை ஆட்கொண்டு கிறிஸ்தவக் கூடுகை நடந்துகொண்டிருந்த ஒரு சிறு கூடாரத்திற்கு வழிநடத்தியது. அங்கே பிரசங்கியார் இயேசுகிறிஸ்துவைக் குறித்து பிரசங்கித்துக்கொண்டு இருந்தார்.முஸ்தபாவை சுற்ரியிருந்த வல்லமை சொன்னதுஇந்த மனிதர் பிரசங்கிக்கிறவர் தான் உன்னோடே வ்ழியில் பேசினார்“.தன்னோடு பேசினது இயேசு என்று அறிந்தவுடன் ,அவரை தனது இரட்சகராகவும்,ஆண்டவராகவும் முஸ்தபா ஏற்றுக்கொண்டார்.பரிசுத்த ஆவியானவர் அவர் உள்ளத்தில் இடைப்பட்டார்.என்னுடைய சகோதரன் இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகு தொடர்ந்து ஏழு நாட்கள் அவர் இயேசுவை தரிசித்தார்.அன்றிலிருந்து அவருக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டது.அதற்கு பிறகு அவர் குர்ஆன் படிப்பதில்லை.எங்களோடு மசூதிக்கு வருவதில்லை.என் பெற்றோர் அவருக்கு கிறிஸ்துவில் இருந்த விசுவாசத்தை கண்டுபிடித்தனர் .

அவருடைய

கிறிஸ்தவ விசுவாசம் எங்களுக்கு விசனமாய் இருந்தது .இஸ்லாமியர்களான நாங்கள் இயேசுகிறிஸ்துவை தேவகுமாரன் என்று விசுவாசிக்கவில்லை.ஒரு நபியாகவே நம்புகிறோம்.

ஆனால்

என் சகோதரன் இயேசுவை தேவகுமாரன் என்று விசுவாசிப்பதினால் என் பெற்றோர் என் சகோதரன் மீது மிகவும் கோபமடைந்தனர்.அநேக நாட்கள் குர் ஆன் மற்றும் வேதத்தைப் பற்றிய விவாதங்களும் நடந்தன.யாரும் வேதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் என் சகோதரன் இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கும்போது அற்புதங்கள் நிகழ்வதை என் பெற்றோர் கவனித்தார்கள்.கேன்சர் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள்,குருடர்கள்,முடவர்கள் ,பிசாசினால் பீடிக்கப்பட்டவர்கள் அனைவரும் அவர் இயேசுவின் நாமத்தினால் ஜெபித்தபோது சுகமானார்கள்.

ஒரு

நாள் என்னுடைய அத்தை முறையான உறவினர் ஒருவர் எங்களை பார்க்கவந்தார்கள் .அவர்கள் ” blood hemorrhage என்ற இரத்தம் சம்மந்தமான நோயினால் அவதிப்பட்டு வந்தார்கள். அநேக நாட்களாய் தொடர்ச்சியாக இரத்தம் வெளியேறியதால் மிகவும் பலவீனமாக இருந்தார்கள்.என் தாயார் அவர்களை ஒரு நல்ல மருத்துவரிடம் கூட்டி செல்வார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அப்பொழுது என் தயார் என் சகோதரனிடம் அவர்களுக்காக ஜெபிக்கும் படி கூறினார்கள் .முஸ்தபா அவர்கள் தலையில் கை வைத்து ஜெபிக்க ஆரம்பித்தவுடனயே அவர்கள் தரையிலே விழுந்தார்கள்.”நான் இவளை விடமாட்டேன்,நான் இவளை விடமாட்டேன்என்ற கூச்சல் அவர்களிடமிருந்து வந்தது.அவர்கள் ஒரு அசுத்த ஆவியினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டோம் .என் சகோதரன் இயேசுவின் நாமத்தை சொன்னபோதெல்லாம் ஆவர்களுக்குள் இருந்த பிசாசு நடுங்கியது .தன்னுடைய கண்களை இறுக ,இறுக மூடிக்கொண்டார்கள்.”நீ யார்‘” என்று அந்த ஆவியை பார்த்து என் சகோதரன் கேட்டபோது,”இந்த பெண்ணுடைய எதிரியால் அனுப்பப்பட்ட ஒரு ஆவி நான், இவளை இந்த நோயால் கொல்லும்படி நான் வந்தேன்“” உன்னால் தான் நான் இவளை விட்டு போகிறேன், வேறு யாராவது இருந்தால் இவளை கொன்றிருப்பேன்.என்று கூறிக்கொண்டு அந்த அசுத்த ஆவி அவர்களை விட்டு வெளியேறியது .அதற்கு பிறகு அவர்கள் பூரண சுகமடைந்தார்கள். அந்த வலியும் இல்லை,ரத்த வெளியேற்றமும் இல்லை. நிறைவான மகிழ்ச்சி அடைந்தார்கள் .

என்

கண்காண இவைகளை பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு அநேக கேள்விகள் எழும்பினது ?

ஏன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அசுத்த ஆவி விலகியது? மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரகளில் ஏன் போவதில்லை?முகமதுவின் நாமத்துக்கு ஏன் அசுத்த ஆவிகள் கீழ்படிவது இல்லை? இயேசுவின் நாமத்துக்கு கீழ்படிவதேன்?இயேசுவின் நாமத்தில் என்ன வல்லமையும் ,அதிகாரமும் உள்ளது ?இப்படி பல சிந்தனைகளும், கேள்விகளும் எனக்குள் நிரம்பியது.

சத்தியத்தை

தேடுதல் திறந்த

இதயத்தோடு உண்மையை தேடி நான் வேதத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.வாசித்துக்கொண்டிருந்த போது மாற்கு 16:16-18 வசனங்களுக்கு வந்தேன்.17வது வசனத்தில் சுமார் 2000 வருடங்களுக்கு முன் இயேசு சொல்லொயிருக்கிறார்.”என்னை விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன ,என் நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவார்கள்இதை படித்தபோது என் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டது.எத்தனை ஆச்சரியம் அந்த வார்த்தைகள் இன்றும் ஜீவனுள்ளதாயிருக்கிறது.என் கண் காண அவை நிறைவேறியது .

இந்த

சம்பவம் இயேசுகிறிஸ்துவின் வார்த்தை மீது எனக்கு ஒரு விசுவாசத்தை கொண்டு வந்தது.இயேசுவுக்கு சுவிஷேசம் கொடுக்கப்பட்டது.ஆனால் அவை அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டும் தான் என்று என்னுடைய இஸ்லாமிய மதத்தலைவர்கள் எனக்கு கற்றுகொடுத்திருந்தனர்.”அப்படியானால் இன்றைக்கும் இயேசுவின் அந்த வார்த்தை எப்படி கிரியை செய்கின்றது ?கண்டிப்பாக வேதத்தில் இயேசு கூறிய அனைத்தும் உண்மையாகத்தான் இருக்க முடியும்.”என்று சொல்லி நான் தொடர்ந்து வேதத்தை வாசித்தேன்.இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், கிறிஸ்தவக்கொள்கைகளைப் பற்றியும் முஸ்லீம்கள் கூறும் ஆதாரமில்லாத கூற்றுகளுக்ககெல்லாம் எனக்கு பதில் கிடைத்தது.நான் தேவனுடைய வார்த்தையை வேதத்தில் வாசித்ஹ போதுஅது என்னை சரி படுத்தியது.இஸ்லாமிய மத அறிஞர்களால் கிறிஸ்தவத்திற்கு எதிராக நான் கற்றிருந்த எல்லா தவறான உபதேசங்களையும் புரிந்து கொள்ள உதவியது .

இயேசுகிறிஸ்துவின்

வார்த்தைகளால் என் வாழ்க்கையில் முதல்முறையாக என் மீது மிகுந்த அன்பாயிருக்கிற பிதாவினிடத்தில் பேசவும், உறவு வைத்துக்கொள்ளவும் அறிந்து கொண்டேன்.முதல் முறையாக என் ஆவியில் இருந்த வெற்றிடம் நீங்கி தேவ அன்பும்,பிரசன்னமும் என்னை நிறைத்தது.சிலுவையில் மரித்து உலகத்தின் பாவத்தை எடுத்துப்போடுவதற்க்காக இயேசுவை அனுப்பினதின் மூலம் வெளிப்பட்ட தேவ அன்பையும் ,அவருடைய தீர்மானத்தையும் , அவருடைய நீயாயத்தீர்ப்பையும் நன்றாக புரிந்து கொண்டேன்.

1998

டிசம்பர் 24-ம் தேதி நான் இயேசுவை என்னுடைய சொந்த இரட்சகராகவும்,ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டு ஞானஸ்தானம் பெற்றேன்.அந்த நாளிலிருந்து சுவிஷேசத்தை பிரசங்கிக்கவும்,அழிகின்ற மக்களுக்கு சத்திய வார்த்தைகளை அறிவிக்கவும் என் இருதயத்திற்குள் தேவனுடைய அழைப்பு எரிகின்ற நெருப்பைப்போல் ஏவத்தொடங்கியது.எனவே maltinationational company யிலிருந்து என்னுடைய வேலையை இராஜினாமா செய்துவிட்டு தேவனுடைய பணிக்கு என்னை அர்ப்பணித்தேன்.

ஊழியம்

நானும்

என் சகோதரன் முஸ்தபாவும் சேர்ந்து சுவிசேஷத்தை பிரசங்கிக்கத் தொடங்கினோம்.இந்த செய்தி எங்கள் பட்டணம் முழுவதும் பரவியது.அது என் பெற்றோருக்கு பெரிய அவமானமாக இருந்தது.இஸ்லாமிய சமுதாயத்தில் முன்னுதாரனமாக இருந்த எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் என் பெற்றோருக்கு அவமானமாயிருந்தது.

ஆனால்

நாளடைவில் தேவன் அவர்களுடைய இருதயத்தை திறந்ததினிமித்தம் என் குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக அனைவரும் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு இயேசுவிடம் வந்தார்கள்.

என்

தாயும்,தகப்பனும் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்

என்னுடைய மகன்கள் பிரசங்கிப்பது உண்மையென்றால் நான் அதை பற்றி அறிந்துகொள்ளவேண்டும்என்று என் தாய் தேவனிடத்தில் கேள்வி கேட்டார்கள்.அப்படி அவர்கள் ஜெபித்தபோது ஒரு தரிசனம் கண்டார்கள்.அந்த தரிசனத்தில் தன் முழு சரீரத்தில் காயங்களோடு இயேசு காட்சி அளித்தார்.அவருடைய காயங்களிலிருந்து இரத்தம் புரண்டோடியது.அதை கண்ட என் தாயால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.உடனே அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.ஆனாலும் என் தந்தைக்கு பயந்து அவர்கள் ஒரு இரகசிய விசுவாசியாக இருந்தார்கள்.ஒரு

நாள் ரெயிலை ஓட்டிக்கொண்டிருந்த என் தகப்பனார் ஓரிடத்தில் எஞ்சினை பரிசோதிக்கும் படி இறங்கி,பரிசோதித்துவிட்டு மீண்டும் ஏறியிருக்கிறார்.ஏதோ கடித்தது போல் இருந்தது .அதை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிய போது அவருடைய பாதம் மிகவும் வீங்கியிருந்தது.மருத்துவரிடம் சென்றோம்.”இது elephantiasis என்ற வியாதி இதை சுகப்படுத்த மருந்து எதுவும் கிடையாதுஎன்று கூறிவிட்டார்.என் தகப்பனார் மிகவும் மனமுடைந்து போனார்.

நாங்கள்

இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு இயேசுகிறிஸ்துவைப் பற்றியும்,அவர் சுகப்படுத்துவதையும் கூறினோம்.உடனே என் தந்தை சொன்னார்,”அவர் என்னை சுகமாக்கினால் நான் அவரில் விசுவாசம் வைத்து என் இரட்சகராகவும்,தேவனாகவும் ஏற்றுக்கொள்வேன்“.நாங்கள் அவருக்காக ஜெபித்து ஒரு பாட்டிலில் எண்ணையைக் கொடுத்தோம்.”இந்த எண்ணை சிலுவையில் இயேசு உங்களுக்காக சிந்திய இரத்தத்தை பிரதிபலிக்கிறது.விசுவாசத்தோடு தடவுங்கள்என்று சொன்னோம்.

அதை

எடுத்து சென்ற அவர் வேலை நடுவில் தனக்கு நேரங்கிடைக்கும் போதெல்லாம் அதை தடவினார்.இரண்டு நாள் கழித்து வீட்டிற்கு திரும்பியபோது அவருடைய பாதத்தில் வீக்கம் முழுவதும் சுகமாயிருந்தது .இந்த அற்புதத்தின் மூலம் இயேசுவை தனது இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.ஞானஸ்தானமும் பெற்றார் . சமுதாயத்திலிருந்து

ஒதுக்கி வைக்கப்பட்டோம் . எங்கள்

பகுதியிலிருந்த முஸ்லீம்களால் சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டோம். அருகில் இருந்தவர்களும்,உறவினர்களும் எங்களை கைவிட்டனர்.தேவனுக்காக பாட்னுபவிப்பதை ஆசீர்வாதமாக கருதினோம் .அவருக்காக பாடுபட்டதும்,இப்போது அனுபவிக்கிறவைகளும் அவருடைய சிலுவை மரணத்திற்கு முன் ஒன்றுமில்லை .எங்களுடைய

பட்டணத்திலேயே தேவ அழைப்பின் பேரில் சபையை நிறுவி ஊழியம் செய்தோம் .ஆத்துமாக்கள் பெருகினர்.ஊழியமும் வளர்ந்து பெருகியது.முஸ்லீம்கள்

மத்தியில் ஊழியம் செய்வதற்கு மும்பையில் ஒரு புதிய பணித்தளத்திற்கு தேவன் வழிநடத்தினார்.நானும் என் மனைவி சூசனும் 2005- ல் மும்பைக்கு இடம் பெயர்ந்தோம் .

இயேசுவுக்காக

இஸ்லாமியர்களை ஆதாயம் செய்யும் ஊழியம் ; இந்த

ஊழியம் இஸ்லாமியர்கள் மத்தியில் நடக்கிறது.இந்த Winning Muslims For Christ Ministry யின் தரிசனம் ,சபைகளில் இஸ்லாமியர்களைக் குறித்த பாரத்தை அளிப்பதும் ,இஸ்லாமியர்களுக்கான ஊழியத்தை செய்வதற்கு சபைகளை பக்குவப்படுத்துவதும்.இந்த ஊழியத்தின் பயிற்சி முகாம்களையும் ,கருத்தரங்குகளையும்,சிறப்பு வகுப்புகளையும் நடத்தி சபைகளையும்,தனி னபர்களையும் முஸீம் சுவிசேஷத்திற்கு தயார்படுத்துகிறது.

« பழைய வரவுகள்