அல்லாவின் வார்த்தைகளை திருத்தபோகும் இஸ்லாமிய உலகம்

அல்லாவின் வார்த்தைகளை திருத்தபோகும் இஸ்லாமிய உலகம்

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

உமர் குறிப்பு: எனக்கு ஒரு சகோதரர் இந்த செய்தியை அனுப்பி, இதை மொழிபெயர்த்து பதிக்கும் படி கேட்டுக்கொண்டதின் பேரில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது மேலோட்டமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, எந்த கேள்விக்கும் ஆங்கில மூலம் தான் ஆதாரம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த செய்திக்கு என் கருத்தை கட்டுரையின் கடைசியில் கொடுத்துள்ளேன்.

Turkey strives for 21st century form of Islam
21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாமுக்காக போராடுகிறது துருக்கி தேசம்

1. ஷரியா சட்டத்தை திருத்தி எழுதவும் மற்றும் குர்‍ஆனை வரையறைக்கவும் முடிவு
2. இஸ்லாமிய நம்பிக்கையின் மற்றும் மேற்கத்திய கோட்பாடுகளின் உருகுநிலை

ஆசிரியர்: Ian Traynor, Europe editor
பத்திரிக்கை: The Guardian,
செய்தி வெளிவந்த நாள்: Wednesday February 27 2008

துருக்கி தேசம் மிகவும் தைரியமாக ஷரியா சட்டத்தின் அடிப்படையை திருத்தி எழுத முயற்சி எடுத்துள்ளது. அதே நேரத்தில் இந்த நவீன காலத்திற்கு ஏற்றாற்போல அதிகாரபூர்வமாக “குர்‍ஆனின் வசனங்களுக்கு புதிய விளக்கத்தை(Quran Re-interpretation)” கொடுக்க முயற்சி எடுத்துள்ளது.

துருக்கி நாட்டில் அமைதியான இஸ்லாமிய அரசாங்கம் நடத்திக்கொண்டு இருக்கும் பிரதம மந்திரி ” Recep Tayyip Erdogan” என்பவர் “இஸ்லாய சட்டத்துறையில்” நவீன கால கோட்பாடுகளுக்கேட்ப சீர்திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார். 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாமை உருவாக்குவோம் என்றுச் சொல்லி, ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய கோட்பாடுகள், தத்துவங்கள் மூலமாக இஸ்லாமிய நம்பிக்கையையும், பாரம்பரியத்தையும்(ஹதீஸ்) சிறிது தாழ்வான நிலைக்கு கொண்டுவர முயற்சி எடுத்துள்ளார்.

இதன் பயனாக, மிகவும் ஆர்வமான இந்த சோதனையை செய்யஇருக்கும் நிபுனர்கள், “பெண்களுக்கு எதிராக உள்ள வேறுபாடு காணும் இஸ்லாமிய கண்டிப்பை குறைப்பார்கள் என்றும்”, இஸ்லாமிய சட்டத்தில் உள்ள சில மிகவும் கடினமான தண்டனைகளாகிய கல்லெரிந்து கொல்லுதல், கைகள் கால்களை வெட்டி எடுத்துவிடுதல்(amputation) போன்ற தண்டனைகளை இரத்து செய்வார்கள் என்றும் தெரிகிறது. இஸ்லாம் நவீன கால மார்க்கம் என்பதை வரையறை வகுப்பார்கள் என்றும் தெரிகிறது. ஐரோப்பிய ஐக்கியத்தில்(European Union) அங்கம் வகிக்கவேண்டும் என்ற ஆர்வத்தால், மத்திய கிழக்கு நாடுகளின் மீது சார்ந்துக்கொண்டு, மேற்கத்திய நாடுகளுக்கும் கிழக்கத்திய நாடுகளுக்கும் இடையில் மையமாக உள்ள துருக்கி நாடு முடிவு செய்துள்ளது.

அங்காரா பல்கலைக்கழகத்தின்(Ankara University) இஸ்லாமிய அறிஞர்களின் தீர்த்திருத்த குழு, மத இலாகாவின் இயக்குனரின் கீழ் வேலை செய்யப்போகிறார்கள். இந்த மத இலாகா ஒரு அரசாங்க பிரிவாகும் இது துருக்கி நாட்டில் உள்ள 8000 மசூதிகளை மேற்பார்வையிடுகிறது, மட்டுமல்லாமல் “இமாம்களை” நியமிக்கிறது. இஸ்லாமிய சட்டதுறைக்கும், ஷரியா சட்டத்திற்கும் அடிப்படையாக உள்ள “ஹதீஸ்களின்” பல வசனங்களுக்கு “புதிய விளக்கத்தை அல்லது மறுவிளக்கத்தை (ReInterpretation)” கொடுப்பார்கள், மட்டுமல்லாமல், முகமது நபி அவர்களைப் பற்றி சொல்லப்பட்ட ஆயிரமாயிரமாக உள்ள செய்திகளுக்கும்(aphorisms), அபிப்பிராயங்களையும்(comments) குறித்து உண்மையான விளக்கத்தை கொடுக்கப்போகிறார்கள். மறுபரிசீலனை செய்துக்கொண்டு இருக்கும் ஒரு குழுவில் அங்கம் வகிக்கும் முஸ்தபா அக்யோல் சொல்லும் போது “நாங்கள் கிட்டத்தட்ட எங்கள் வேலையை முடித்துவிட்டோம்” என்றார். இவர் எர்டகோனின் ஆளும் கட்சியின் “விடுதலை முகாம் (Liberal Camp)” பற்றி விமர்சனம் செய்தவர்.

இவர் சொல்கிறார் “அவர்களுக்கு பெண்கள் சம்மந்தப்பட்ட, அதாவது பெண்களுக்கு எதிராக உள்ள ஹதீஸ்கள் பற்றி பிரச்சனை உள்ளது. அவர்கள் இப்படிப்பட்ட ஹதீஸ்களை தொகுப்புகளிலிருந்து நீக்கிவிடக்கூடும், மற்றும் இவ்வித ஹதீஸ்கள் “அதிகார பூர்வமற்றது” என்று அறிவிக்கக்கூடும். இப்படி செய்வது மிகவும் “தைரியமான” செயல் தான். அல்லது, இவ்வித ஹதீஸ்களின் கீழே சில “பின் குறிப்புகளை” கொடுத்து, இந்த ஹதீஸ்களை வேறு வகை சரித்திர கண்ணோட்டத்தில் படித்து புரிந்துக்கொள்ளவேண்டும் என்று எழுதக்கூடும்”.

“International Institute of Strategic Studies” என்ற நிறுவனத்தில் வேலை செய்யும் “Fadi Hakura” என்ற துருக்கி நிபுனர் இந்த திட்டத்தைப் பற்றி விவரிக்கும் போது, “இது துருக்கி சுன்னி இஸ்லாமை இப்போதுள்ள சமூக மற்றும் நன்னெறி சார்ந்த வழிகளுக்கு முழுவதும் ஒத்துப்போவதாக” மாற்றும் திட்டம் என்று கூறினார்.

“அவர்கள் இதை ஒரு புரட்சி(Revolution) என்று பார்க்க மாட்டார்கள், ஆனால், உண்மை இஸ்லாமுக்கு(Original Islam) திரும்புவதாக கருதுவார்கள், கடந்த பல நூற்றாண்டுகளாக மிகவும் அளவுக்கு அதிகமாக தீவிர நிலையிலிருந்து மறுபடியும் திரும்புவதாக கருதுவார்கள். இது ஒரு வகையில் “கிறிஸ்தவ சீர்திருத்தம்” போல தோன்றினாலும், இவை இரண்டும் ஒன்று அல்ல.”

Ali Bardokoglu அவர்களின் தலைமையில், இஸ்லாமிய நிறுவனங்களை மேற்பார்வையிடுகிறவர்களும், ‘Erdogan’ வினால் நியமனம் செய்யப்பட்டவர்களாகிய, இஸ்லாமிய விடுதலை அறிஞர்களும், அங்காரா பல்கலைக்கழக தத்துவ அறிஞர்களும் சேர்ந்து “ஐந்து தொகுப்புகள் அடங்கிய ஒரு புதிய புத்தகத்தை” எழுத உள்ளனர். இந்த தொகுப்பில், “குர்‍ஆனுக்கு ஒரு புதிய உரையை கொடுக்கப்போகிறார்கள், பரிசுத்த வசனங்களை எந்த குறையும் இல்லாமல், அந்த வசனம் என்ன சூழ்நிலையில், எந்த இடத்தில் சொல்லப்பட்டது என்று வேர் வரை சென்று, புதிய செய்தியை இந்த காலத்து முஸ்லீம்களுக்கு ஏற்றதாக கொடுக்கப்போகிறார்கள். அவர்கள் தவறான(Ditching) சில ஹ‌தீஸ்களை கண்டுபிடிக்கப்போகிறார்கள், இந்த ஹதீஸ்கள் நபி அவர்கள் சொன்னார்கள் என்று நபி அவர்கள் மரித்த பல நூற்றாண்டுகளுக்கு பின்பு சேர்க்கப்பட்டது.

துருக்கியில் உள்ள ரோமன் கத்தோலிக்க சபை குழுவின் நிபுனர்(Roman Catholic Jesuit expert) மற்றும் இஸ்லாமில் நிபுனத்துவம் பெற்ற பீலிக்ஸ் கோர்னெர்(Felix Koerner) இந்த அங்காரா பேராசிரியர்களோடு ஒத்துழைக்கிறார். இவர் மேற்கத்திய மதங்கள் பற்றியும், தத்துவ கோட்பாடுகள் பற்றியும் இவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார். மற்றும் கிறிஸ்தவ சீர்திருத்தத்தின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களை எப்படி இந்த நவீன இஸ்லாமில் புகுத்தலாம் என்பதை இவர் சொல்லிக்கொடுக்கிறார். “இது நவீன ஐரோப்பிய எண்ணங்களையும் மற்றும் இஸ்லாமிய ஒட்டமன் குர்‍ஆனின் பாரம்பரியங்களையும் சேர்த்த கலவையாகும்” என்றார். “இதில் அரசியல் நோக்கமும் உண்டு, இந்த அரசாங்கத்திற்கு நவீன தத்துவங்களில் அதிக நம்பிக்கையுண்டு” என்றார்.

அரசியல் சாசனம்படி துருக்கி ஒரு மதசார்பற்ற நாடு. எர்டொகன் தன் கட்சியைப் பற்றி சொல்லும் போது, ஐரோப்பிய கிறிஸ்தவ ஜனநாயக கட்சிக்கு (European Christian democratic party ) சமமாக தன் “எகே கட்சி (AK Party)” உள்ளது என்கிறார். இக்கட்சி பழமைவாத கட்சியாக இருந்தாலும், மத கோட்பாடுகளுக்கு முக்கியத்தும் கொடுத்த கட்சியாக இருந்தாலும், ஜனநாயகத்தையும், சகிப்புத்தன்மையையும், சுதந்திரத்தையும் நம்புகின்ற கட்சி என்கிறார். ஸ்பெயின் உதவியுடன், மற்றும் ஜபடெரோ அரசாங்கத்தின்(Zapatero government) உதவியுடன் “முஸ்லீம்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும்” இடையே ஒரு நல்ல உறவு முறையை உருவாக்கும் முயற்சி தான் இது. பல ஆண்டுகளாக போராடி தீவிர மதசார்பற்ற நாடாகிய துருக்கியில், மேற் படிப்பு கல்லூரிகளில் பெண்கள் துணியால் தலையை சுற்றி மூடிக்கொள்வதற்கு இருந்த தடையை இவர் நீக்கிவிட்டார். அதாவது பெண்கள் இனி கல்லூரிகளுக்கு தங்கள் தலையை மூடிக்கொண்டு (முகத்தை மறைக்காமல்) செல்லலாம். இவரது பல எதிர்கட்சிக்காரர்கள், இது மதசார்பற்ற துருக்கி கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமுக்கு சாய்ந்துப்போகிறது என்று குற்றம் சாட்டினார்கள்.

பலரின் கருத்துப்படி, இந்த இஸ்லாமிய சீர்திருத்த திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது, மற்றும் இது அடிப்படையானது, இது முடிவடைய பல ஆண்டுகள் பிடிக்கும் என்றனர். இந்த திட்டம் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது, அதாவது, மரண தண்டனை இரத்து செய்யப்பட்டது, பெண்களுக்கு எதிராக நடக்கும் “கவுரவ கொலைக்கு – Honour Killing” எதிராக பல முயற்சிகள் எடுக்கப்படுகிறது மற்றும் பல நூறு பெண்களை இமாம்களாக மாற்றுவதற்கு பயிற்சியும் நியமனமும் கொடுக்கப்படுகிறது.

சிறு குறிப்பு: ஹதீஸ்கள் என்பதி முகமது நபியின் மற்றும் அவரது தோழர்களின் வாழ்க்கை பற்றிய விவரங்கள் ஆகும். இது மத சடங்குகளுக்கும், சட்டத்திற்கு, சரித்திர சரிதைகளுக்கும் மூலமாக திகழுகிறது. நபி என்ன சொன்னாரோ, செய்தாரோ அதைத் தான் ஹதீஸ் என்கிறோம். பெரும்பான்மையான முஸ்லீம்கள் குர்‍ஆனை புரிந்துக்கொள்வதற்காக அடுத்தபடியான முக்கியமான‌ புத்தகங்களாக ஹதீஸ்களை கருதுகின்றனர். இஸ்லாமிய கோட்பாடுகளின்படி ஒரு மனிதனின் நடத்தை எப்படி இருக்கவேண்டும் என்று வழிமுறையை பரிசுத்த புத்தகமாகிய குர்‍‍ஆன் சொல்கிறது, ஆனால், அந்த குறிப்பிட்ட நடத்தை என்ன என்பதைப் பற்றி குறிப்பாக குர்‍ஆன் சொல்வதில்லை. ஷரியா அல்லது இஸ்லாமிய சட்டத்தை வகுப்பதில் ஹதீஸ்களின் பங்கு 90% உள்ளது. இதில் முக்கியமானவைகள் என்று சொல்லவேண்டுமானால், மிகவும் விமர்சனத்திற்கு உட்படும் இஸ்லாமிய தண்டனைகளாகிய “விபச்சாரத்திற்கும், இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களுக்கும் கொடுக்கும் தண்டனைகளும், பெண்கள் பற்றிய சட்டங்கள், மற்றும் ஜிஹாத் பற்றிய கோட்பாடுகளும் பெரும்பான்மையாக ஹதீஸ்களிலிருந்து வருகிறது.

Source: http://www.guardian.co.uk/world/2008/feb/27/turkey.islam

=============தமிழாக்கம் முற்றிற்று===========================

இந்த செய்தி குறித்து உமரின் கருத்து:

Quote:
செய்தி:
=====
துருக்கி தேசம் மிகவும் தைரியமாக ஷரியா சட்டத்தின் அடிப்படையை திருத்தி எழுத முயற்சி எடுத்துள்ளது. அதே நேரத்தில் இந்த நவீன காலத்திற்கு ஏற்றாற்போல அதிகாரபூர்வமாக “குர்‍ஆனின் வசனங்களுக்கு புதிய விளக்கத்தை(Quran Re-interpretation)” கொடுக்க முயற்சி எடுத்துள்ளது.

துருக்கி அரசாங்கமே, ஏன் உங்களிடம் இந்த 14 நூற்றாண்டுகளாக “குர்‍ஆனுக்கு” சரியான விளக்கம் இல்லையா? உங்களிடம் தான் “பழைய குர்‍ஆன்” இருக்கின்றதே, உங்களுக்கே குர்‍ஆனின் வசனங்கள் புரியாமல், இந்த 21ம் நூற்றாண்டில் ஒரு புதிய விளக்கம் தேவைப்படுகிறதா? இல்லை, சீர்திருத்துகிறேன் என்ற போர்வையில், மதசார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்கின்ற துருக்கியில் , தீவிர இஸ்லாமிய நாடாக மாற்ற திட்டமா?

Quote:
செய்தி:
=====
துருக்கி நாட்டில் அமைதியான இஸ்லாமிய அரசாங்கம் நடத்திக்கொண்டு இருக்கும் பிரதம மந்திரி ” Recep Tayyip Erdogan” என்பவர் “இஸ்லாய சட்டத்துறையில்” நவீன கால கோட்பாடுகளுக்கேட்ப சீர்திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார். 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாமை உருவாக்குவோம் என்றுச் சொல்லி, ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய கோட்பாடுகள், தத்துவங்கள் மூலமாக இஸ்லாமிய நம்பிக்கையையும், பாரம்பரியத்தையும்(ஹதீஸ்) சிறிது தாழ்வான நிலைக்கு கொண்டுவர முயற்சி எடுத்துள்ளார்.

எதற்கு நவீன கோட்பாடுகளை “இஸ்லாமிய சட்டத்துறையில்” கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் உதித்தது? இஸ்லாமிய சட்டம் தான் இறைவனாகிய அல்லா கொடுத்தது தானே? இது எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்றல்லவா எங்களுக்கு இஸ்லாமிய அறிஞர்களால் அறிமுகப்படுத்தப்படுகிறது?

அது என்ன 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாம்? அப்படியானால், ஒவ்வொரு நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாம் உள்ளதா? அல்லது காலத்திற்கு ஏற்றாற் போல நீங்களாகவே புதிய சட்டங்களை புகுத்திக்கொள்கிறீர்களா? உலக இஸ்லாமிய அறிஞர்கள் 7ம் நூற்றாண்டில் சொல்லப்பட்ட இஸ்லாம் சட்டம் எக்காலத்திலும் பொருந்தும் என்று பெருமைப்படுகிறார்கள்? நீங்கள் என்னடா என்றால், 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாம் என்றுச் சொல்கிறீர்கள்?

Quote:
செய்தி:
=====
இஸ்லாமிய சட்டத்தில் உள்ள சில மிகவும் கடினமான தண்டனைகளாகிய கல்லெரிந்து கொல்லுதல், கைகள் கால்களை வெட்டி எடுத்துவிடுதல்(amputation) போன்ற தண்டனைகளை இரத்து செய்வார்கள் என்றும் தெரிகிறது.

ஏன் இரத்து செய்யவேண்டும், 14 நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்ட இஸ்லாமிய சட்டத்தின் தண்டனைகள் தவறு என்று முடிவு கட்ட உங்களுக்கு 1400 ஆண்டுகள் தேவைப்பட்டதா?

இந்த புதிய சட்டத்தில் ‘தண்டனைகளை தளர்த்துகிறோம்” என்றுச் சொல்லி, திருடனின் இரண்டு கைகளுக்கு பதிலாக இரண்டு விரல்களை வெட்டுவீர்களோ? கல்லெரிந்து கொல்வதற்கு பதிலாக வில்லெரிந்து கொல்வீர்களோ?

Quote:
செய்தி:
=====
இவர் சொல்கிறார் “அவர்களுக்கு பெண்கள் சம்மந்தப்பட்ட, அதாவது பெண்களுக்கு எதிராக உள்ள ஹதீஸ்கள் பற்றி பிரச்சனை உள்ளது. அவர்கள் இப்படிப்பட்ட ஹதீஸ்களை தொகுப்புகளிலிருந்து நீக்கிவிடக்கூடும், மற்றும் இவ்வித ஹதீஸ்கள் “அதிகார பூர்வமற்றது” என்று அறிவிக்கக்கூடும். இப்படி செய்வது மிகவும் “தைரியமான” செயல் தான். அல்லது, இவ்வித ஹதீஸ்களின் கீழே சில “பின் குறிப்புகளை” கொடுத்து, இந்த ஹதீஸ்களை வேறு வகை சரித்திர கண்ணோட்டத்தில் படித்து புரிந்துக்கொள்ளவேண்டும் என்று எழுதக்கூடும்”.

பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டும், இன்னும் “இந்த ஹதீஸ் அதிகாரபூர்வமற்றது” என்று சொல்லிக்கொண்டு இருப்பதை விட, அதற்கு ஒரு புதிய அர்த்தத்தை கொடுப்பதை விட, மனிதனாக சிந்தித்து முடிவு எடுக்கலாம் இல்லையா?

Quote:
செய்தி:
=====
“International Institute of Strategic Studies” என்ற நிறுவனத்தில் வேலை செய்யும் “Fadi Hakura” என்ற துருக்கி நிபுனர் இந்த திட்டத்தைப் பற்றி விவரிக்கும் போது, “இது துருக்கி சுன்னி இஸ்லாமை இப்போதுள்ள சமூக மற்றும் நன்னெறி சார்ந்த வழிகளுக்கு முழுவதும் ஒத்துப்போவதாக” மாற்றும் திட்டம் என்று கூறினார்.

ஏனய்யா? இத்தனை ஆண்டுகள், நூற்றாண்டுகள், “துருக்கி சுன்னி இஸ்லாம்”, சமுதாயத்திற்கும் நன்னேறிக்கு ஒத்துப்போகலையா? அப்படியானால், சமுதாயத்திற்கு ஏற்காத சட்டத்தையா இந்த ஆண்டுகள் பின்பற்றினீர்கள்? உங்களுக்கு இப்படிச் சொல்ல மனதிற்கு சஞ்சலமாக இல்லை?

Quote:
செய்தி:
=====
“அவர்கள் இதை ஒரு புரட்சி(Revolution) என்று பார்க்க மாட்டார்கள், ஆனால், உண்மை இஸ்லாமுக்கு(Original Islam) திரும்புவதாக கருதுவார்கள், கடந்த பல நூற்றாண்டுகளாக மிகவும் அளவுக்கு அதிகமாக தீவிர நிலையிலிருந்து மறுபடியும் திரும்புவதாக கருதுவார்கள். இது ஒரு வகையில் “கிறிஸ்தவ சீர்திருத்தம்” போல தோன்றினாலும், இவை இரண்டும் ஒன்று அல்ல.”

நடக்கட்டும், உண்மை இஸ்லாம் என்றால் என்ன என்பதை உங்கள் புதிய சட்டம் வெளிவந்தபிறகு தானே தெரியும்? உங்கள் புதிய சட்டங்களும், மற்ற இஸ்லாமிய நாடுகளின் சட்டங்களும் ஒன்றா அல்லது வேறுவேறா என்பதை அப்போது தெரிந்துக்கொள்வோம்.

Quote:
செய்தி:
=====
அங்காரா பல்கலைக்கழக தத்துவ அறிஞர்களும் சேர்ந்து “ஐந்து தொகுப்புகள் அடங்கிய ஒரு புதிய புத்தகத்தை” எழுத உள்ளனர். இந்த தொகுப்பில், “குர்‍ஆனுக்கு ஒரு புதிய உரையை கொடுக்கப்போகிறார்கள், பரிசுத்த வசனங்களை எந்த குறையும் இல்லாமல், அந்த வசனம் என்ன சூழ்நிலையில், எந்த இடத்தில் சொல்லப்பட்டது என்று வேர் வரை சென்று, புதிய செய்தியை இந்த காலத்து முஸ்லீம்களுக்கு ஏற்றதாக கொடுக்கப்போகிறார்கள்.

இந்த 14 நூற்றாண்டுகளாக உலக இஸ்லாமிய அறிஞர்கள், இமாம்கள், பேராசிரியர்கள் குர்‍ஆனுக்கு சொல்லப்பட்ட “உரை” தவறு என்று சொல்கிறீர்களா? இவர்கள் சொல்லியுள்ள உரையில் ஒன்று கூடவா “துருக்கி அரசாங்கத்திற்கு” சரியானது என்று தெரியவில்லை? அப்படியானால், இதுவரை சொல்லப்பட்ட எல்லா உரைகளும் பொருள்களும், அர்த்தங்களும் சரியானது அல்ல என்பதா உங்கள் கருத்து? சரி, நீங்கள் வேர் வரை சென்று உரை சொல்லுங்கள் பார்க்கலாம்?

உங்களுக்கு தேவைப்பட்டால், எங்கள் தமிழ் நாட்டில் புகழ் பெற்ற இரண்டு குர்‍ஆன் மொழிப்புக்கள் உள்ளது, நம் இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபீதீன் அவர்கள் பல புதுமைகளை தன் மொழிபெயர்ப்பில் கொண்டு வந்துள்ளார், இவருடைய மொழிபெயர்ப்பை முயற்சித்துப்பாருங்களேன்.

உங்கள் புதிய உரையில், பெண்களை விண்வெளிக்கு அனுப்புவது சட்டத்திற்கு ஏற்றது என்று சொல்லப்போகிறீர்களா? அல்லது “நீ உன்னை நேசிப்பது போல, உனக்கு அடுத்துள்ள முஸ்லீமை மட்டுமல்ல, மற்ற எல்லா மத மனிதர்களையும் நேசிப்பாயாக!” என்ற புதிய கட்டளையை கொடுக்கப்போகிறீர்களா? இப்படி சொல்வீர்களானால், இதை விட உலகத்திற்கு வேறு என்னவேண்டும் சொல்லுங்கள்?

Quote:
செய்தி:
=====
துருக்கியில் உள்ள ரோமன் கத்தோலிக்க சபை குழுவின் நிபுனர்(Roman Catholic Jesuit expert) மற்றும் இஸ்லாமில் நிபுனத்துவம் பெற்ற பீலிக்ஸ் கோர்னெர்(Felix Koerner) இந்த அங்காரா பேராசிரியர்களோடு ஒத்துழைக்கிறார். இவர் மேற்கத்திய மதங்கள் பற்றியும், தத்துவ கோட்பாடுகள் பற்றியும் இவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார். மற்றும் கிறிஸ்தவ சீர்திருத்தத்தின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களை எப்படி இந்த நவீன இஸ்லாமில் புகுத்தலாம் என்பதை இவர் சொல்லிக்கொடுக்கிறார்.

ஒரு காபிரிடம் அறிவுரை கேட்கிறீர்களே, உங்களுடைய சட்டம் இதை அனுமதிக்குமா? “வேத அறிவு உடையவர்களிடம் சென்று உங்களுக்கு புரியாததை கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்” என்று அல்லா கட்டளையிட்டதை இப்போது தான் பின்பற்ற எண்ணம் பிறந்ததோ? அதுவும் ஷரியா சட்டம் பற்றி , அதில் புகுத்தவேண்டிய சட்டங்கள் பற்றி ஒரு காபிரிடம் கேட்டு தெரிந்துக்கொள்வது என்பது உங்கள் மனது ஏற்றுக்கொள்கிறதா?

எப்படியோ இஸ்லாம் மூலமாக உலகத்திற்கு நல்லது நடந்தால் யார் வேண்டாமென்றுச் சொல்வார்கள்?

தொடரும் இஸ்லாமிய மதமாற்றம்

தொடரும் இஸ்லாமிய மதமாற்றம்

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

ஹம்ரான்

அம்ப்ரி

http://unmaiadiyann.blogspot.com/2008/02/blog-post_19.html

சகோதரிகள் ரஷியா பேகம், ஷகிலா பேகம்,தௌலத் பேகம்

நஸரத் அமன்

பால்

ஷேக் சின்ன காசிம்

பில்குயிஸ் ஷேக்(பாக்கிஸ்தான்)

முன்னால் பாலஸ்தீன தீவிரவாதி கமால் சலீம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்

ஞானஸ்தானம் பெற்ற 11 ஈரானியர்கள்(முஸ்லீம்கள்)

பிஷப் ஜான் சுபானுடைய சாட்சி

முடவனை சுகமாக்கிய முஸ்தபா,ஆவியானவரால் நடத்தப்படும் அக்பர்

http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_08.html

படித்து விட்டீர்களா?

இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தவர்கள்

http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_05.ह्त्म्ल

முகமதுவின் கொலைகள் இஸ்லாமின் பயமுறுத்தல்கள்-உமரின் மொழிபெயர்புக் கட்டுரை

முகமதுவின் கொலைகள் இஸ்லாமின் பயமுறுத்தல்கள்-உமரின் மொழிபெயர்புக் கட்டுரை

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}


                

முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்

திய வான் கோவின் கொலை

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

MUHAMMAD’S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM
The Murder of Theo Van Gogh
By Samuel Green

2004ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி, “திய வான் கோ ” ஒரு முஸ்லீமால் கத்தியால் குத்தப்பட்டு மற்றும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். இவர் இஸ்லாமை வெளிப்படையாக எதிர்த்தார், இஸ்லாமைப் பற்றி விமர்சித்தார் மற்றும் இஸ்லாமில் பெண்களின் நிலை என்ன ? என்பதை சித்தரிக்கும் விதத்தில் ஒரு படத்தை தயாரித்தார். இந்த காரணங்களுக்காக இவர் கொலை செய்யப்பட்டார். சில நடுநிலை முஸ்லீம்கள் இக்கொலையை கண்டித்தார்கள், மற்றும் சிலர் இக்கொலை நியாயமானது தான் என்று நம்புகின்றனர். இந்த இரண்டு விதமான கருத்துக்களை உடைய குழுக்களை இஸ்லாம் சமுதாயத்தில் நாம் காணமுடியும். இதனால், இந்த இரண்டு குழு மக்களின் கருத்துக்களில் எது “உண்மையான சரியான இஸ்லாம்” என்பதை புரிந்துக்கொள்வதில் குழப்பம் நிலவுகிறது.

ஆதாரபூர்வமான இஸ்லாம் எது? இந்த ஒரு கேள்வியில் தான் முஸ்லீம்கள் ஒருவரில் ஒருவர் வெவ்வேறு கருத்துடையவர்களாக உள்ளார்கள். அதனால், இஸ்லாமை தோற்றுவித்தவராகிய முகமதுவின் வாழ்க்கையை சிறிது அலசிப்பார்ப்பது நியாயமானதாக உள்ளது. உண்மையில் முகமதை சேர்த்துக்கொள்ளாத எந்த இஸ்லாமிய கோட்பாடும் தவறு தான் (In fact, any definition of Islam that excludes Muhammad is false). முகமதுவின் வாழ்க்கை சரிதையை(சீரா ) முதன் முதலில் எழுதியவர் மதினாவில் பிறந்த இபின் இஷாக் (85 – 151 ஹிஜரி) என்பவர் ஆவார். இக்கட்டுரையில் முகமது தன்னை எதிர்த்தவர்களிடம் எப்படி நடந்துக்கொண்டார் என்பதை கற்றுக்கொள்ளப்போகிறோம். இதற்காக இரண்டு எடுத்துக்காட்டை காண்போம்.

அபு அபக்கை கொல்லச் சென்ற சலிம் பி உமர்:

அபு அபக் என்பவர் அபயா (Abu `Afak was one of B. (tribe) `Amr b. `Auf of the B. `Ubayda clan) இனத்தை சார்ந்தவர். நபி “அல்-ஹரித் பி. சமித் ” என்பவரை கொன்றதினால், இவர் முகமதுவின் மீதுள்ள தன் வெறுப்பை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

பல ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன், ஆனால் இப்படிப்பட்டதை இது வரை நான் காணவில்லை,
ஒரு குழு அல்லது மக்கள் கூட்டம்,
தங்கள் கூட்டாளிகளை காரியமாக அழைக்கும் போது
தாங்கள் கைவைத்த வேலையில் அதிக அக்கரை காட்டுபவர்கள்,
மலைகளை கவிழ்த்துவிட்டவர்கள், எப்போதும் தோற்காதவர்கள்
கய்லாவின் பிள்ளைகள் ஒரு குழுவாக கூடினார்கள்,
ஒரு பயணி இவர்களிடம் வந்தான், இவர்களை இரண்டாக பிரித்துவிட்டான்,
எல்லா காரியங்களிலும் “அனுமதிக்கப்பட்டது”, “தடுக்கப்பட்டது” என்றான்,
துப்பாவை நம்பினவனையா நீங்கள் இராஜாவாக அங்கீகரிக்கப்போகிறீர்கள்.

இக்கவிதையை ஆங்கிலத்தில் (மூலத்தில்) படித்தால் தான் உண்மையான பொருள் புரியும்.

Long have I lived but never have I seen
An assembly or collection of people
More faithful to their undertaking
And their allies when called upon
Than the sons of Qayla when they assembled,
Men who overthrew mountains and never submitted.
A rider who came to them split them in two (saying)
“Permitted”, “Forbidden” of all sorts of things.
Had you believed in glory or kingship
You would have followed Tubba`.

எனக்காக இந்த முட்டாளை யார் ஒரு கைபார்க்கப்போகிறீர்கள்?” என்று நபி கேட்டார். இதைக்கேட்டு, சலிம் பி. உமர் சென்று அபு அபக்கை கொன்றுவிட்டு வந்தான். இந்த நிகழ்ச்சியைக் குறித்து உமாம பி. முஜைரியா கீழ் கண்டவாறு சொன்னார்.

இறைவனின் மதத்திற்கு, மாமனிதர் அஹமதிற்கு எதிராக நீ பொய் சொன்னாய்!
உன் தந்தை உன்னை கெட்ட மகனாக பெற்றார்
நீ மேலே செல்ல ஒரு நம்பிக்கையாளர் உனக்காக‌ இரவிலே கட்டளையிட்டார்
“வயதை பாராதே, அபு அபக்கின் கணக்கை முடித்துவிடு” என்றார்.
மரண இரவில் உன்னை கொன்றவன் மனிதனோ அல்லது ஜின்னோ எனக்கு தெரிந்தாலும், நான் சொல்லேன்.

(Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 675.)

ஆங்கிலத்தில்:

You gave the lie to God’s religion and the man Ahmad!
By him who was your father, evil is the son he produced!
A hanif gave you a thrust in the night saying
“Take that Abu `Afak in spite of your age!”
Though I knew whether it was man or jinn
Who slew you in the dead of night (I would say naught)

(Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 675.)

இங்கு நாம் முகமதுவிற்கு வெளிப்படையான எதிர்ப்பு இருப்பதை காணமுடிகிறது. ஒரு குறிப்பிட்ட இனமக்களில் ஒரு முக்கியமான தலைவரை முகமது கொன்றுவிட்டார். அந்த இன மக்களைச் சேர்ந்தவர் தான் இந்த அபு அபக் என்பவர். இவர் அதிக வயது சென்ற முதியவர். இவர் முகமதுவிற்கு எதிர்த்து நிற்கும் படி தன் இன மக்களை உட்சாகப்படுத்துகிறார். இவர் செய்கின்ற செயல்கள் எப்போது முகமதுவின் முன்னிலையில் கொண்டுவரப்படுகிறதோ, அப்போது முகமதுவின் பதில் மிகவும் சுலபமாக இருந்தது. முகமது சொன்னார் ” எனக்காக இந்த முட்டாளை யார் ஒரு கை பார்க்கப்போகிறார்கள்?”. சலிம் பி. உமர் முகமதுவின் விருப்பத்தை அபு அபக்கை கொன்றதின் மூலமாக நிறைவேற்றினார்.

இன்னொரு எடுத்துக்காட்டோடு இபின் இஷாக்கின் விவரங்கள் தொடர்கிறது:

“மர்வானின் மகள் அஸ்மா” வை கொலை செய்ய உமர் பி. அடிய்யாவின் பயணம்:


இந்தப்பெண் உமய்யா பி. ஜையத்தை சார்ந்தவள். அபு அபக் கொல்லப்பட்டதை குறித்து இந்தப்பெண் தன் வெறுப்பை வெளிப்படுத்தினாள். இந்தப் பெண் கதமா(யாஜித்) இனைத்தைச் சார்ந்த ஒரு மனிதனின் மனைவியாவார். (`Abdullah b. al-Harith b. al-Fudayl from his father said that she was married to a man of B. Khatma called Yazid b. Zayd). இஸ்லாமையும் அதை பின் பற்றுபவர்களையும் குறித்து இந்த பெண் அவதூறாக கீழ்கண்டவாறு சொன்னாள்:

நான் மாலிக், நபித் மற்றும் அல்‍ கஜ்ரஜை நிந்திக்கிறேன்.
முரத் அல்லது மதஜ்க்கு சம்மந்தப்படாத,
உங்களில் ஒருவராக இல்லாத அந்நியருக்கா நீங்கள் கீழ்படிகிறீர்கள்
நீர்த்த ஆகாரத்திற்காக பசியோடு காத்திருக்கிறவன் போல
உங்கள் தலைவரை கொன்றுவிட்ட பிறகு அவரிடமிருந்து நன்மையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
அவரிடமிருந்து ஏதாவது சிறிது கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவர்களின் நம்பிக்கை அற்றுப்போக்கும் படியாக,
திடீரென்று அவரை தாக்கத்தக்க சுயமரியாதையுள்ள ஒரு மனிதனும் இல்லையா?

ஹசன் பி. தபித் அவளுக்கு பதில் அளித்தார்:

வெயில் மற்றும் வகிஃப் மற்றும் கத்மா இன மக்களே
கஜ்ரஜ் இனத்தைவிட தாழ்ந்து போனீர்களோ
அவள் மடத்தனமாக கவலையுற்று தனக்குள் அழுதுக்கொண்டு இருக்கும் போது,
மரணம் வந்துக்கொண்டே இருக்கிறது.
புகழ்பெற்ற ஆரம்பம் கொண்ட மனிதரை அவள் கலக்கிவிட்டாள்,
அவர் வரும்போதும் போகும் போதும் உயர் குணம் உடையவர்.
இரவின் நடுஜாமத்திற்கு முன்பே, தன் இரத்தம் சொட்ட மரித்தாள்
இதனால், எந்த குற்ற உணர்வும் இல்லை.

ஆங்கிலத்தில்:

I despise B. Malik and al-Nabit
And `Auf and B. al-Khazraj.
You obey a stranger who is none of yours,
One not of Murad or Madhhij.
Do you expect good from him after the killing of your chiefs
Like a hungry man waiting for a cook’s broth?
Is there no man of pride who would attack him by surprise
And cut off the hopes of those who expect aught from him?

Hassan b. Thabit answered her:

Banu Wa’il and B. Waqif and Khatma
Are inferior to B. al-Khazraj.
When she called for folly woe to her in her weeping,
For death is coming.
She stirred up a man of glorious origin,
Noble in his going out and his coming in.
Before midnight he dyed her in her blood
And incurred no guilt thereby.

அந்த பெண் சொன்னதை நபி கேள்விப்பட்டவுடனே, “எனக்காக இந்த மர்வானின் மகளை யார் பூமியிலிருந்து நீக்கப்போகிறார்கள்?” என்று கேட்டார். அப்போது “உமர் பி. அதிய அல்கத்மி” என்பவர் நபியோடு இருந்ததால், நபி சொன்னதை கேட்டுக்கொண்டு இருந்தார், மற்றும் அன்று இரவே, அந்த பெண்ணின் வீட்டிற்குச் சொன்று, அவளை கொன்றுவிட்டார். மறுநாள் காலை அவர் நபியிடம் வந்து, அவர் என்ன செய்தார் என்றுச் சொன்னார். அதற்கு நபி “ஓ உமர், நீ இறைவனுக்கும் அவரது நபிக்கும் உதவி புரிந்தாய்!” என்றார். நான் அப்பெண்ணை கொன்றதால் ஏதாவது தீய விளைவுகளை நான் சந்திக்க வேண்டிவருமா? என்று உமர் நபியவர்களிடம் கேட்டார். அதற்கு நபி அவர்கள் “அவளைப் பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள் ” (Two goats won’t butt their heads about her) என்றார். பிறகு உமர் தன் மக்களிடம் சென்றுவிட்டார்.

மர்வான் மகளின் இந்த கொலை நிகழ்ச்சிக்கு பிறகு “கத்மா” இன மக்களின் இடையில் மிகப்பெரிய கிளர்ச்சி உண்டானது. இந்த பெண்ணிற்கு 5 மகன்கள் இருந்தார்கள். நபி அவர்களிடமிருந்து உமர் சென்று “நான் மர்வான் மகளை கொன்றுவிட்டேன், ஓ கத்மா இன மக்களே, உங்களால் முடிந்தால் என் முன் நில்லுங்கள், என்னை கத்திருக்க வைக்காதீர்கள்” என்று சொன்னார். இது தான் “கத்மா” இன மக்களிடையே இஸ்லாம் மிகவும் வலுவானதாக காணப்பட்ட முதல் நாள். இதற்கு முன்பாக முஸ்லீமானவர்கள் அது வரை தங்கள் நம்பிக்கையை மறைத்துவைத்திருந்தார்கள். இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்களில் முதல்மையானவர்கள் “உமர் பி. தபித்” என்பவர் ஆவார் மற்றும் இவர் “The Reader” என்று அழைக்கப்பட்டார். அப்துல்லா பி. அஸ் மற்றும் குஜைமா பி தபித்” என்பவர்களும் முஸ்லீமானவர்களில் முதன்மையானவர்கள் ஆவார்கள். மர்வான் மகளின் கொலை நடந்த அடுத்த நாளிலிருந்து, “கத்மா” இன மக்கள் இஸ்லாமின் சக்தியை கண்டதால், இஸ்லாமியர்களாக மாறினார்கள். (இபின் இஷாக் பக்கங்கள் 675 – 676.)

“அபு அஃபக்” என்பவரின் கொலைக்கு பிறகு, இன்னொரு பெண் மிகவும் தைரியமாக முகமதுவிற்கு எதிராக வெளிப்படையாக‌ பேசினாள். அப்பெண்ணின் பெயர் “மர்வானின் மகள் அஸ்மா” என்பதாகும். மறுபடியும் முகமது எப்படி தன்னை எதிர்த்தவர்களை சமாளித்தார் என்று நாம் பார்க்கலாம். முகமது ” எனக்காக இந்த மர்வானின் மகளை யார் பூமியிலிருந்து நீக்கப்போகிறார்கள்?” என்று கேட்டார். “உமர் பி. அதிய அல்-கத்மி” என்பவர் அப்பெண்ணை அன்று இரவு கொன்று முகமதுவின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

இந்த நிகழ்ச்சிகளில் பல முக்கியமான விவரங்கள் அடங்கியிருக்கின்றன. இதில் முதன்மையானது முகமதுவின் குணத்தைப்(Character) பற்றியது. தன்னை எதிர்ப்பவர்களை தன் வழியிலிருந்து நீக்கிவிட, “கொலை” என்னும் ஆயுதத்தை பயன்படுத்தும் நபர்களைப் போல குணம் படைத்தவர் தான் முகமது. தன்னை எதிர்ப்பவர்கள் “அபு அஃபக்” போன்ற ஒரு வயதான முதியவராக இருந்தாலும் சரி, அல்லது “மர்வானின் மகள் அஸ்மாவாகிய” பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் இவரை எதிர்த்தால், முகமது அவர்களோடு இப்படித்தான் நடந்துக்கொள்வார். இப்படி முகமது செய்த பல எடுத்துக்காட்டுகளை சொல்லிக்கொண்டுப் போகலாம்[1], மற்றும் முகமது சில நேரங்களில் “கொடுமைப்படுத்துதல் – Torture” என்ற ஆயுதத்தையும் பயன்படுத்தியுள்ளார்[2]. இவைகளை கருத்தில் கொண்டு பார்ப்போமானால், மற்ற அரசர்கள் போல, தன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள “கொலையையும், கொடுமைப்படுத்தி பயப்படுத்துவதையும்” முகமது பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாக புரியும். முகமது நாடுகளை வெற்றிக்கொண்டார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை, மற்றும் அவர் சொல்கிறார்:

நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும் படி நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இஸ்லாமை தழுவுங்கள் அப்போது நீங்கள் பாதுகாப்பாக‌ இருப்பீர்கள். (Sahih Muslim, book 19, number 4380) [3]

(I extend to you the invitation to accept Islam. Embrace Islam and you will be safe. (Sahih Muslim, book 19, number 4380) [3] )

முகமது இப்படியாக தான் ஆட்சியை அமைத்தும், மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட எடுத்துக்காட்டை கொடுத்து சென்று இருக்கும்போது, “முகமது ஒரு அமைதியின் சொரூபம் ” என்று எப்படி முஸ்லீம்கள் சொல்கிறார்கள்?

இரண்டாவதாக, இந்த நிகழ்ச்சிகள் இஸ்லாம் அரேபிய இன மக்களின் இடையில் எப்படி பரவியது என்பதை படம் பிடித்து காட்டுகிறது. இந்த நிகழ்ச்சிகள் மிகவும் தெளிவாகச் சொல்கிறது, இந்த இரண்டு கொலைகளுக்குப் பிறகு, “கத்மா இன மக்களின் இடையில் இஸ்லாம் மிகவும் சக்தி மிகுந்ததாக மாறியது”. உணமையில், “மர்வான் மகளின் கொலை நடந்த அடுத்த நாளிலிருந்து, “கத்மா” இன மக்கள் இஸ்லாமின் சக்தியை கண்டதால், இஸ்லாமியர்களாக மாறினார்கள் “. “இஸ்லாமின் சக்தியாக (Power of Islam)” அவர்கள் கண்டது என்ன? அது தான் தன்னை எதிர்ப்பவர்களை “கொலை செய்யும் சக்தி”. இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரையில், இஸ்லாம் மற்றவர்களை பயப்படவைத்தும், கொடுமைப்படுத்தியும் பரவியது என்பது மிகவும் தெளிவாக புரிகிறது, இதற்கு முகமது தன் அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளார்.

“திய வான் கோ” இஸ்லாமுக்கு எதிராக வெளிப்படையாக பேசினார், அபு அஃபக் மற்றும் மர்வானின் மகள் அஸ்மா எப்படி கொலை செய்யப்பட்டார்களோ அதே போல இவரும் கொலை செய்யப்பட்டார். பெரும்பான்மையான முஸ்லீம்கள் “திய வான் கோவின்” கொலையை அங்கீகரிக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், இஸ்லாமை தோற்றுவித்தவரை நாம் காணும் போது, இப்படித்தான் அவர் தன்னை எதிர்த்தவர்களை தீர்த்துக்கட்டியிருக்கிறார் என்பதை கவனிக்கமுடியும். நாம் பின்பற்ற வேண்டிய “மாதிரி” இது அல்ல. யார் யாரெல்லாம் அவரை எதிர்க்கிறார்களோ அவர்களை எல்லாம் கொலை செய்வது, என்பது ஒரு பலவீனமான மனிதனின் அடையாளமாகும். எதிர்த்தவர்களை கொலை செய்யாமல், அவர்களை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றிய “அமைதியின் ஞானத்தை” பற்றி அறிந்துக்கொள்ள விரும்புவீர்களானால், நீங்கள் இயேசுவின் வாழ்க்கையை படிக்கும் படி நான் கேட்டுக்கொள்கிறேன் . If you really want to know about the wisdom of peace that can deal with opposition without killing them, then may I suggest you read the life of Jesus.)

பின் குறிப்புகள்:

[1] Other examples of Muhammad having his opponents assassinated or approving of their murder:

Sunan Abu-Dawud, book 38, number 4348
Sunan Abu-Dawud, book 38, number 4349
Sahih al-Bukhari, volume 5, book 59, number 369
Sahih al-Bukhari, volume 5, book 59, numbers 370-372

[2] Read about Muhahammad’s use of torture.
[3] For otther examples see Sahih al-Bukhari, Volume 4, Book 53, Number 392

Christian-Muslim Discussion Papers © 2005

மூலம்: MUHAMMAD’S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM, The Murder of Theo Van Gogh, By Samuel Green


ஆசிரியர் சாமுவேல் கிரீன் அவர்களின் கட்டுரைகள் தமிழில்:

1. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD’S USE OF TORTURE)

2. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?(COMPARING THE BIBLE AND THE QUR’AN(How to do it Accurately)
ஆசிரியர் சாமுவேல் கிரீன் அவர்களோடு தொடர்பு கொள்ள: மெயில் விலாசம்
ஆசிரியருடைய இதர கட்டுரைகள் ஆங்கிலத்தில் படிக்க : இங்கே சொடுக்கவும்.

தமிழாக்க குறிப்பு: இக்கட்டுரையில் அதிக அளவில் கவிதை வரிகள் வருவதினால், எந்த கருத்து விவாதத்திற்கும், பொருளுக்கும் ஆங்கில(மூல) கட்டுரையை அடிப்படையாக கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கவிதைவரிகள் தமிழாக்கத்தில் பொருள் மாறுபட வாய்ப்புக்கள் உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

“பின்னாகப் போ சாத்தானே” என்றார்-TNTJ தலைவருக்கு ஈசாகுரான் பதில்

“பின்னாகப் போ சாத்தானே” என்றார்-TNTJ தலைவருக்கு ஈசாகுரான் பதில்

(பிஜே அவர்களின் “இயேசு இறைமகனா?” என்ற புத்தகத்திற்கு ஈஸா குர்‍ஆன் மறுப்பு)

பிஜே அவர்களின் குற்றச்சாட்டு:

“இயேசுவிற்கு சரியாக மனிதர்களை மதிப்பிடத் தெரியவில்லை, தனக்கு பின் கிறிஸ்தவத்தை தலைமை தாங்க பேதுருவை இயேசு தெரிவு செய்தது தவறு”

முன்னுரை: பிஜே அவர்களின் இயேசு இறைமகனா? என்ற புத்தகத்திற்கு “ஈஸா குர்ஆன்” தளம் மறுப்பு எழுதிக்கொண்டு வருகிறது. இக்கட்டுரையில் “தவறாக மதிப்பிடுதல் கடவுள் தன்மை அன்று ” என்ற தலைப்பின் கீழ் பிஜே அவர்கள் எழுதிய விவரங்களுக்கு பதில்/மறுப்பு தரப்படுகிறது.ஈஸா குர்ஆன் பதில்:

இக்கட்டுரைக்கான பதிலை நான் இரண்டு பாகங்களாக பிரித்து சொல்லவிரும்புகிறேன்.
பாகம் – 1: பிஜே அவர்கள் எழுதிய வரிகளில் உள்ள விவரங்களுக்கு பதில்

பாகம் – 2: இயேசுவிற்கு பிறகு தலைமைத்துவம் பெற தகுதியானவர் பேதுரு தான். பிஜே அவர்களின் கணிப்பு தவறானது.


பாகம் – 1 : பிஜே அவர்கள் எழுதிய வரிகளில் உள்ள விவரங்களுக்கு பதில்பிஜே அவர்கள் எழுதிய எல்லா விவரங்களுக்கும் நாம் ஒவ்வொன்றாக பதிலைக் காண்போம்.1. பைபிள் வசனங்களை தவறாக புரிந்துக்கொள்ளும் பிஜே அவர்கள்:

பிஜே அவர்கள் இயேசுவைப் பற்றி பல தவறான கருத்துக்களையும், பைபிள் வசனங்களுக்கு புதுப்புது அர்த்தங்களையும் கண்டுபிடித்து தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

பிஜே அவர்கள் எழுதியது:3. தவறாக மதிப்பிடுதல் கடவுளின் தன்மை அன்று துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும் நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் (நீதிமொழிகள் 17:15)

கெட்டவனை நல்லவன் என்றும் நல்லவனைக் கெட்டவன் என்றும் தீர்ப்பது கடவுளுக்குரிய இலக்கணமன்று. இவ்வாறு தீர்ப்பது கடவுளுக்குப் பிடிக்காததும் கூட. இயேசுவிடம் இந்தத் தகுதி இருந்ததா என்றால் இல்லை என்று பைபிள் சொல்கிறது.

ஈஸா குர்ஆன் பதில்:இயேசு தன் சீடனாகிய பேதுருவை தனக்கு பின்பு தன் ஆடுகளை மேய்க்க நியமித்தது மிகவும் பொருத்தமானதும், இதில் இயேசு வெற்றியைப் பெற்றார் என்பதையும், இயேசுவின் சபையை நடத்துவதற்கு 12 சீடர்களில் “சீமோன் பேதுரு” தான் மிகச் சரியான ஒரு நபர் என்பதையும் பிஜே அவர்களுக்கு விளக்குவதற்கு முன்பாக பிஜே அவர்கள் குறிப்பிட்ட நீதிமொழிகள் வசனத்திற்கு பதிலைத் தருகிறேன்.
பிஜே அவர்களே, நீதிமொழிகள் 17:15ம் வசனத்தின் பொருள் என்னவென்றால், ஒரு நீதிபதி அல்லது அரசன் மக்களுக்கு தீர்ப்புச் சொல்ல “நீதிபதி இருக்கையில்” உட்கார்ந்து தீர்ப்புச் சொல்லும் போது, குற்றவாளியை குற்றவாளி என்றும், நீதிமானை நீதிமானாகவும் தீர்ப்பு செய்யவேண்டும் என்றுச் சொல்கிறது, அப்படியில்லாமல் மாற்றித்தீர்ப்பு செய்பவன் கர்த்தருக்கு அருவருப்பானவன் என்று இவ்வசனம் சொல்கிறது.

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் தான் ஒரு “நீதிபதியாக” வரவில்லை அதற்கு பதிலாக நம்மை இருட்டிலிருந்து மீட்கவே வந்தார் என்று பல முறை அவர் சொல்லியுள்ளார். அதே நேரத்தில் தன்னுடைய இரண்டாம் வருகையில் தான் ஒரு “நீதிபதியாக” இருந்து உலக மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்வார் என்றும் சொல்லியுள்ளார்.

ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற் போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். (யோவான் 12:47 )

அதாவது, இலஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு நீதிபதி நியாயத்தை புரட்டுபவனைப் பற்றி இவ்வசனம் சொல்கிறது. முக்கியமாகச் சொன்னால், நியாயம் தீர்க்க உட்காரும் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து என்றுச் சொல்லக்கூடிய ஒரு அமைப்பிலிருந்து, உச்ச நீதி மன்ற நீதிபதி வரை, பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்டு, நல்லவனை கெட்டவன் என்றும் கெட்டவனை நல்லவன் என்றும் நியாயம் தீர்ப்பவன் தேவனுக்கு அருவருப்பானவன் என்று இவ்வசனம் சொல்கிறது. இதையே ஏசாயா 5:23ல் “இப்படிப்பட்டவனுக்கு ஐயோ” என்று சொல்லப்படுகிறது.

பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ!(ஏசாயா: 5:23)

ஆக, நீங்கள் இயேசுவின் முதல் வருகையில் அவரை நீதிபதியாக பார்த்தது மிகவும் தவறான பார்வையாகும். ஆனால், அவரது இரண்டாம் வருகையில் நீங்கள், நான், உங்கள் முகமது மற்றும் மற்ற உலக மக்கள் எல்லாரும் அவருக்கு முன்பாக நியாயத்தீர்ப்பிற்காக நிற்போம். அப்போது அவர் நீதி செலுத்துவார். எனவே, இவ்வசனம் இயேசுவின் முதல் வருகைக்கு சம்மந்தப்பட்ட வசனம் அல்ல.இயேசு தன்னை நீதிபதியாக தன்னை காட்டிக்கொள்ளவும் இல்லை. அன்பே உருவான தெய்வமாக தன்னை முதலாவது காட்டவே அவர் வந்தார். அதனால், ஒரு விபச்சார பெண்ணை நீயாயம் தீர்க்கும்படி யூத ஆசாரியர்கள் சொன்னாலும், அப்பெண்ணை மன்னித்து, இனி அப்படி செய்யாதே என்றுச் சொல்லி, அனுப்பிவிட்டார். அதுபோல பல சந்தர்பங்களில் அவர் முதலில் மன்னித்து பிறகு சுகப்படுத்தியுள்ளார். ஆனால், அவரது இரண்டாம் வருகையில், அவரது வாயிலிருந்து “நியாயத்தீர்ப்பு” மட்டும் தான் வெளிப்படும். விபச்சாரக்காரர்களையும், திருடர்களையும், கொலை செய்பவர்களையும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களை கொல்பவர்களையும், பெண்களை கற்பழிப்பவர்களையும் அவர் நியாயம் தீர்ப்பார், இதிலிருந்து யாரும் தப்பமுடியாது.

எனவே, உம்முடைய கருத்து அல்லது புரிந்துக்கொள்ளுதல் மிகவும் தவறானதாகும்.

இருந்த போதிலும், ஒரு பேச்சுக்காக நீங்கள் சொல்வது போல இயேசு நியாயம் தீர்த்தார் என்று வைத்துக்கொண்டாலும், அப்போது கூட நீங்கள் இயேசுவை குற்றப்படுத்த முடியாது. ஏனென்றால், இயேசுவின் சீடர்களில் தலைமைத் துவத்திற்கு மிகவும் பொருத்தமானவர் “பேதுரு” தான் என்பதை பேதுருவின் வாழ்க்கையிலிருந்து நாம் கண்டுக்கொள்ளமுடியும் . உங்களுடைய “கணிப்பு” தவறு என்பதை பைபிளின் உதவியோடு இப்போது விளக்குகிறேன்.

2. எதற்காக பேதுருவை “பின்னாகப்போ சாத்தானே” என்று இயேசு சொன்னார்?

பேதுருவை இயேசு ஒரு சமயத்தில் “பின்னாகப்போ சாத்தானே” என்றுச் சொன்னார். பேதுரு இடறலாகவும், தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்காமல் மனுஷருக்கு ஏற்றவைகளை சிந்திக்கிறார் என்று இயேசு சொன்னார். இதை பிஜே அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தன் புத்தகத்தில் எழுதிவிட்டார். அதாவது பிஜே அவர்கள் குறிப்பிட்ட இவ்விவரங்கள் இஸ்லாமுக்கு ஒரு மிகப்பெரிய அடியாக மாறப்போகிறது என்பதை பிஜே அவர்கள் அறியவில்லை.

பிஜே அவர்கள் எழுதியது:அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். (மத்தேயு 16:23)

பேதுரு என்ற சீடனைச் சாத்தான் என்றும்
இயேசுவையே தடம் புரளச் செய்தவன் என்றும்
கடவுளுக்குரியவைகளைச் சிந்திக்காதவன் என்றும்

இயேசு எடை போட்டிருக்கிறார்

அ) ஏன் இயேசு பேதுருவை “பின்னாகப்போ சாத்தானே ” என்றுச் சொன்னார்?ஆ) யார் இயேசுவிற்கு இடறலாக இருக்கிறார்கள்?

இ) எப்படிப்பட்டவர்கள் தேவனுக்குரியதை தேடாமல் மனுஷனுக்குரியதை தேடுகிறார்கள்?

இப்படி இயேசு பேதுருவிற்கு சொல்வதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான், அதாவது ” இயேசுவின் சிலுவைப்பாடு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் போன்றவைகள் இயேசுவிற்கு நேரிடக்கூடாது என்று அவரிடம் பேதுரு சொன்னதால் தான்”.இப்பொழுது பிஜே அவர்கள் குறிப்பிட்ட மத்தேயு 16:23ம் வசனத்தின் முந்தைய இரண்டு வசனங்களைப் (மத்தேயு 16:21-22) பாருங்கள், அப்பொழுது உங்களுக்கே புரியும்.

மத்தேயு 16:21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.மத்தேயு 16:22 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.

மத்தேயு 16:23 அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

பிஜே அவர்கள் குறிப்பிட்ட மற்றும் இயேசு பேதுருவோடு சொன்ன வார்த்தைகளின் படி:

இயேசுவிற்கு சிலுவைப்பாடுகள் வரக்கூடாது என்று சொல்பவர்களைப் பார்த்து ,இயேசு சிலுவையில் மரிக்கக்கூடாது அல்லது மரிக்கவில்லை என்றுச் சொல்பவர்களைப் பார்த்து,

இயேசு மரித்து உயிர்த்தெழக்கூடாது அல்லது உயிர்த்தெழவில்லை என்று சொல்பவர்களைப் பார்த்து,

இயேசு “பின்னாகப் போ சாத்தானே” என்றுச் சொல்கிறார்.

இப்படிப் பட்டவர்கள் “தனக்கு இடறலாக இருக்கிறார்கள்” என்று இயேசு சொல்கிறார்,

இப்படிப் பட்டவர்கள் “தேவனுக்குரியதை தேடாமல், மனுஷருக்குரியதை தேடுகிறவர்கள் ” என்று இயேசு சொல்கிறார்.

இயேசுவின் மீது வைத்த அன்பின் காரணத்தினாலும், தன் குருவிற்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்ற கரிசனையினாலும், நிறைந்தவராய் பேதுரு, இயேசுவை தனியே அழைத்து, “இப்படி உமக்கு பாடுகள், மரணம்” வரக்கூடாது என்றுச் சொன்னார்.ஆனால், இயேசு சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பது தேவனின் திட்டம், இதை சரியாக புரிந்துக்கொள்ளாமல் பேதுரு பேசியதால், தான் இயேசு பேதுருவைப் பார்த்து “எனக்கு பின்னாகப்போ சாத்தானே” என்றுச் சொல்கிறார். ஆனால், இயேசு மரித்து உயிரோடு எழுந்துவிட்ட பிறகு, இதே பேதுரு எருசலேம் மக்களுக்கு சாட்சியாக எழுந்து நின்று இயேசுவின் சிலுவை மரணம் உயிர்த்தெழுதல் பற்றி சாட்சி சொல்கிறார், பல இடங்களுக்கும், ஊர்களுக்கும் சென்று இயேசு மரித்தார், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று சாட்சி பகிர்ந்தார், இந்த காரணத்திற்காகவே மரித்தார். இதனை நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் (புதிய ஏற்பாடு) பார்க்கலாம்.

பேதுரு ஒரு முறை தவறு செய்தார், அதற்காக இயேசு அவரை கடிந்துக்கொண்டார், உண்மை தெரிந்த பிறகு பேதுரு மாறிவிட்டார், அவ்வளவு தான், ஆனால், பிஜே அவர்கள் சொல்வது எப்படி உள்ளதென்றால், இயேசு தொடர்ந்து பேதுருவை “நீ சாத்தான்” என்று முத்திரை குத்திவிட்டதாகவும், பேதுருவோடு சேராதீர்கள் என்று இயேசு மற்றவர்களுக்குச் சொன்னதாகவும், பேதுருவினால் இயேசு தடம் புரண்டு போய்விட்டதாகவும், பிஜே அவர்கள் கற்பனை செய்துக்கொண்டு எழுதுகிறார். இந்த பேதுருவைக்கொண்டு, இந்த பேதுருவின் ஊழியத்தின் மூலமாக இயேசு இஸ்லாமையும், இருட்டின் அதிகாரத்தையும் இன்று வரை தட‌ம் புரட்டிக்கொண்டு இருக்கிறார் என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

பிஜே அவர்களுக்கு நான் எழுதும் இரண்டாவது பதிலில் இயேசு எப்படி பேதுருவை ஆரம்பத்திலிருந்து தயார்படுத்தினார் என்பதையும், எப்படி அவரை உட்சாகப்படுத்தினார் என்பதையும், பேதுரு எப்படி தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதில் முழுமூச்சாக உழைத்தார் என்பதையும் காணலாம்.

3. முகமதுவையும், இஸ்லாமைப் பின்பற்றுகிறவர்களையும் பார்த்து இயேசு “பின்னாகப்போ சாத்தானே” என்றுச் சொல்கிறார்:

இதுவரையில் நாம் பார்த்த விவரங்களின் படி, கிறிஸ்தவத்தின் அடிப்படையாகிய “இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை” மறுப்பவர்களை, அல்லது இவைகள் நடக்கக்கூடாது என்றுச் சொல்பவர்களை அல்லது இவைகள் நடக்கவில்லை என்றுச் சொல்பவர்களைப் பார்த்து இயேசு ” எனக்கு பின்னாகப்போ சாத்தானே” என்றுச் சொல்கிறார், என்பது நமக்கு தெளிவாக விளங்கி இருக்கும்.
இஸ்லாம் படி, முகமது “இயேசு சிலுவையில் மரிக்கவில்லை” என்றுச் சொன்னார். இயேசு உயிர்த்தெழவில்லை என்றுச் சொன்னார். எனவே, பேதுருவிற்கு இயேசு சொன்ன அதே வார்த்தைகள் இவருக்கும் பொருந்தும். இப்படிச் சொல்லும் எல்லாருக்கும் பொருந்தும்.

இப்படி நான் என் சொந்தமாகச் சொல்லவில்லை, பைபிளில் இயேசு சொன்ன வசனங்கள் இப்படிச் சொல்கின்றன. இந்த வசனங்களை பிஜே அவர்களும் குறிப்பிட்டார்கள், பேதுருவிற்கு இயேசு இப்படி சொல்லியுள்ளார் என்று பிஜே அவர்களே சாட்சியும் கொடுக்கிறார் .

எனவே, பிஜே அவர்களின் வார்த்தைகளின் படி, முஸ்லீம்களைப் பார்த்து இயேசு “பின்னாகப் போ சாத்தானே” என்றுச் சொல்கிறார். முஸ்லீம்கள் இயேசுவிற்கு இடறலாக இருக்கிறார்கள் என்று இயேசு சொல்கிறார். முஸ்லீம்கள் இறைவனுக்கு ஏற்றதை சிந்திக்காமல், மனிதர்களுக்குரியதை சிந்திக்கிறார்கள் என்று இயேசு சொல்கிறார்.

இப்படி நான் எழுதுகிறேன் என்று என் மீது கோபம் கொள்ளவேண்டாம். அதற்கு பதிலாக பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனத்தின் அடிப்படையில் சிந்தித்துப்பாருங்கள்,

ஏன் பேதுருவைப் பார்த்து இயேசு இந்த மூன்று வார்த்தைகளைச் சொன்னார்?

இப்படி சொல்லும் மற்றவர்களுக்கும் இந்த வார்த்தைகள் பொருந்துமா? இல்லையா? என்று சிந்தித்துப்பாருங்கள்.

குர் ஆனைப் பொருத்தவரையில்:

இயேசு சிலுவையில் அறையப்படவில்லை,இயேசு மரிக்கவில்லை, இயேசுவை அல்லா உயிரோடு எடுத்துக்கொண்டார்,

இயேசு உயிர்த்தெழவில்லை

இயேசுவின் வார்த்தைகளின் படி பைபிளைப் பொருத்தவரையில்:

இயேசுவின் சிலுவை பாடுகள்,அவரது மரணம்,

உயிர்த்தெழுதல்

இவைகளை மறுத்தவர்கள்:

அது யாராக இருந்தாலும் சரி, தன்னோடு 3 ஆண்டுகளுக்கு அதிகமாக சீடனாக இருந்தவனானாலும் சரி, தனக்கு பின் தன் ஊழியத்தை நேர்த்தியாகச் செய்து சாட்சியாக மரிக்கப்போகிறவனானாலும் சரி, இயேசுவிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின் தோன்றும் எந்த மார்க்கமானாலும் சரி, “இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ” போன்றவைகளை மறுப்பவர்களைப் பார்த்து இயேசு கூறும் வார்த்தைகள் இவைகள்:

“பின்னாகப்போ சாத்தானே”“நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்”

“நீ இறைவன் சம்மந்தப்பட்ட விவரங்களுக்கு செவி சாய்க்காமல், மனுஷனுக்கு சம்மந்தப்பட்டதற்கு செவி கொடுக்கிறாய்”

என்பதாகும்.

இதன் படி, “இஸ்லாமைப் பார்த்து” எனக்கு பின்னாகப்போ சாத்தானே என்று இயேசு சொல்கிறார். 
“இஸ்லாம் இறைவனின் சித்தத்திற்கு இடறலாக இருக்கிறது” என்று இயேசு சொல்கிறார். 
“இஸ்லாமின் கோட்பாடுகள், இறைவனுக்கு ஏற்றதைப் பற்றி சொல்வதில்லை, மனுஷனுக்கு ஏற்றதைப் பற்றி சொல்கிறது” என்று இயேசு சொல்கிறார்.

பிஜே அவர்களின் வார்த்தைகளின் படி, இயேசு பேதுருவை சாத்தான் என்று சொல்லி எடை போட்டாராம், இப்போது இதே வார்த்தைகள் இஸ்லாமையும், முஸ்லீம்களையும் எடை போட்டுக்கொண்டு இருக்கின்றன.நான் இந்த பதிலில் சொன்ன விவரங்கள் சரியானவை அல்ல என்று யாராவது நினைப்பீர்களானால், எனக்கு தெரிவியுங்கள். பேதுருவிற்கு இயேசு சொன்ன வார்த்தைகள் எப்படி இஸ்லாமுக்கு பொருந்துகிறது என்றுச் சொல்லியுள்ளேன். இஸ்லாமுக்கு பொருந்தாது என்று சொல்வீர்களானால்? எப்படி பொருந்தாது? என்று விவரமாக எனக்கு பதில் அளிக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.

பிஜே அவர்கள் எழுதியது:அது மட்டுமின்றி இயேசுவையே அவன் மூன்று தடவை மறுப்பான் என்றும் இயேசு கூறியதாக நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன.

ஈஸா குர்‍ஆன் பதில்:

பிஜே அவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும். ஒரு மனிதனை தவறாக மதிப்பிடுவது வேறு, ஒரு மனிதம் இப்படி நடந்துக்கொள்வான் என்று முன்கூட்டியே சொல்வது வேறு.
இந்த இடத்தில், இயேசு பேதுருவை தவறாக மதிப்பிடவில்லை, அதற்கு பதிலாக தான் ஞானத்தின் ஊற்று என்பதை நிருபித்தார், எதிர் காலத்தில் நடப்பதை துள்ளியமாக சொன்னார்.

ஒரு வேளை, பேதுருவைப் பார்த்து இயேசு, “நீ என்னை மறுதலிக்கமாட்டய் என்று நான் நினைத்தேன்(மதிப்பிட்டேன்), ஆனால், என் நம்பிக்கையை வீணாக்கிவிட்டாய்” என்று சொல்லியிருந்தால், நீங்கள் சொல்வது போல “மனிதர்களை மதிப்பிட அல்லது எடை போட இயேசுவிற்கு தெரியவில்லை” என்று நான் ஏற்றுக்கொண்டு இருப்பேன்.

ஆனால், நடந்தது என்ன?

பேதுரு சொல்கிறார்: நான் உம்மை எப்பொதும் மறுதலிக்கமாட்டேன் (எனக்கு இயேசு தெரியாது என்று சொல்லமாட்டேன்) என்றுச் சொல்கிறார். என் உயிர் போனாலும் நான் அப்படி சொல்லமாட்டேன் என்றுச் சொல்கிறார்.இதற்கு இயேசு பதில் சொல்கிறார்: அப்படியா? “எனக்கு இயேசு என்றால் யார் என்று தெரியாது” என்று நீ சொல்லுவாய்(மறுதலிப்பாய்) என்றார்.

உண்மையில் நடந்தது என்ன? இயேசு சொன்னது போல பேதுரு மறுதலித்தார். அதாவது இயேசு சொன்னது தான் நடந்தது, இயேசு எடை போட்டது சரியாக நடந்தது. இயேசு மதிப்பிட்டது சரியாக நடந்தது.பிஜே அவர்களே இந்த நிகழ்ச்சி இயேசு எல்லாம் அறிந்தவர் என்று தெளிவாகச் சொல்லும் போது, உமக்கு மட்டும், இயேசுவிற்கு மனிதர்களை மதிப்பிடத்தெரியவில்லை என்று எப்படி தெரிந்தது?

ஒரு வேளை, இயேசு சொன்னது போல நடக்காமல், பேதுரு இயேசுவை மறுதலிக்காமல் இருந்து இருந்தால், நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். அதாவது, இயேசு “இப்படி பேதுரு நடந்துக்கொள்வான் “என்று மதிப்பிட்டு இருந்து, ஆனால், அதற்கு எதிர்மாறாக பேதுரு நடந்து இருந்திருந்தால். அதனால், எதிர் காலத்தைப் பற்றிய அறிவு இயேசுவிற்கு இல்லை, மனிதர்களை தவறாக இயேசு மதிப்பிட்டு விட்டார் என்று சொல்லலாம். ஆனால், அப்படி நடக்கவில்லையே? இயேசு சொன்னதே நடந்ததே, இயேசு சொன்னது போலவே பேதுரு மறுதலித்தாரே, பிறகு பேதுரு மனங்கசந்து அழுதார் என்று பைபிள் சொல்கிறதே? பிஜே அவர்களுக்கு மட்டும் எப்படி எல்லாம் எதிர்மறையாக தெரிகிறது.

இயேசு சொன்னது போலவே அப்படியே 100 சதவிகிதம் நடந்தது. இயேசு இறைவன் என்பதை நிருபிக்கும் ஒரு நிகழ்ச்சி எப்படி பிஜே அவர்களுக்கு வேறுமாதிரியாக தென்படுகிறது. இயேசு சொன்னது போல பேதுரு நடந்துக்கொண்டுள்ளார், அப்படியானால், தோல்வி அடைந்தது யார்? பேதுருவா? இயேசுவா? பேதுரு தானே, அதனால், தான் அவர் மனம் கசந்து அழுதார், மறுபடியும் விழுந்த இடத்திலிருந்து எழுந்து நின்றார். வெற்றிப் பெற்றது இயேசு அல்லவா? பிஜே அவர்களுக்கு எப்படி இது தெரியாமல் போனது?

4. இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் என்று பிஜே அவர்களுக்கு தெரியுமா?

பிஜே அவர்களுக்கு இயேசுவின் சீடர்கள் எத்தனைப்பேர் என்று கூட தெரியவில்லை

பிஜே அவர்கள் எழுதியது:பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். (மத்தேயு 16:19)

பேதுருவை விடச் சிறந்த சீடர்கள் ஒன்பது பேர் இருக்கும் போது பேதுருவைச் சரியாக எடை போடாமல் அவனிடம் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலை வழங்கியது கடவுள் செய்யக் கூடியதா? இயேசு கடவுளாக இருக்க முடியாது என்பதை இதிலிருந்து ஐயமற அறியலாம்.

Formats mine

ஈஸா குர்ஆன் பதில்:அருமையான பிஜே அவர்களே, இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்று உமக்குத் தெரியுமா?

அதாவது, கிறிஸ்தவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யாத சாதாரண மனிதர்களுக்கும், இயேசுவின் சீடர்கள் 12 பேர் என்று தெரிந்து இருக்கும், ஆனால், கிறிஸ்தவத்தில் ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதி, பல மேடைப் பேச்சுக்கள் ஆற்றிய உமக்கு தெரியாமல் போனது தான் மிகவும் வேதனைக்குரிய விசயம்.

1. எப்படி பேதுரு தவிர, இயேசுவிற்கு இருந்த மீதமுள்ள சீடர்கள் 9 பேர் என்றுச் சொல்கிறீர்?2. இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் என்ற சீடனை நீக்கிவிட்டாலும், பேதுரு அல்லாமல், இயேசுவிற்கு 10 சீடர்கள் இருந்தார்கள் அல்லவா? உமக்கு இந்த 9 எப்படி வந்தது?

3. பேதுரு தவிர சிறந்த சீடர்கள் என்று 9 பேரை எப்படி நீங்கள் தீர்மானித்தீர்கள் (கண்டுபிடித்தீர்கள்), பிஜே அவர்களே?

4. அதாவது, சில சீடர்கள் பற்றிய முழுவிவரங்கள் நான்கு சுவிசேஷங்களில் அதிகமாக சொல்லப்படவில்லை. அப்படி இருக்கும் போது, 10 பேரில், மிகவும் சிறந்தவர்கள் 9 பேர் என்று எப்படி உங்களால் கண்டுபிடிக்கமுடிந்தது?

5. சில சீடர்கள் அதிகமாக இயேசுவோடு பேசியதையோ, மற்ற விவரங்களையோ சுவிசேஷங்களில் காணமுடியாது? அப்படி இருக்கும் போது, சிறந்தவர்கள் என்று எப்படி சொல்கிறீர்கள் நீங்கள்?

கேட்க யாரும் இல்லை என்று நீங்கள் எது சொன்னாலும், கேட்டுக்கொண்டு தமிழ் கிறிஸ்தவர்கள் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டீர்களா?பிஜே அவர்களே நான் உங்களுக்கு முன்பாக ஒரு சவாலை வைக்கிறேன், பேதுருவைத் தவிர மீதமுள்ள 10 சீடர்களில், எப்படி 9 பேர் சிறந்தவர்கள் என்பதை நீங்கள் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளீர்கள்? சில சீடர்கள் பற்றிய இதர விவரங்கள் அதிகமாக பைபிளில் சொல்லாப்படாத போது, எந்த தகுதிகளை வைத்து பேதுருவை விட சிறந்தவர்கள் என்று நீங்கள் முடிவு செய்தீர்கள் என்பதை விளக்குங்கள்?

ஆனால், மற்ற சீடர்களை விட இயேசுவின் சபையை நிர்வாகிக்கும் தகுதி பேதுருவிற்குத் தான் அதிகமாக உள்ளது என்பதை, இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் விளக்குகிறேன். சீடர்களின் இடையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதங்கள் வரக்கூடாது என்று இயேசு சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தாலும், தலைமையை ஏற்றுக்கொள்ளும்படி ஒருவரை தயார்படுத்தினார். இதற்கான தகுதிகள் பேதுருவிற்கு இருந்தது என்பதையும் நான் விளக்குகிறேன்.

ஏன் பரலோகத்தின் திறவுகோலை பேதுருவிடம் இயேசு கொடுத்தார்? அதற்கு பேதுரு தகுதியானவரா? பேதுரு தன் கடமையை சரியாக செய்தாரா? என்பதை அடுத்த பாகத்தில் விளக்குகிறேன்.

முடிவுரை:கடைசியாக நான் பிஜே அவர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது:

1. பேதுரு “இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்” நடக்கக்கூடாது என்று அறியாமையினால் சொன்னதினால், தான் இயேசு “பின்னாகப்போ சாத்தானே” என்றுச் சொன்னார்.2. இப்படிச் சொன்னது “இயேசு” இவ்வுலகில் வந்த நோக்கத்தை பேதுரு எதிர்த்ததால் தானே தவிர‌ , மற்றபடி, பேதுருவை இயேசு “சாத்தான்” என்று முத்திரை குத்திவிட்டதாக அர்த்தமில்லை.

3. அதே இயேசு பல முறை பேதுருவை புகழ்ந்துள்ளார், “நீ ஒரு திடமான‌ கல்” என்று சொல்லியுள்ளார், என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று சொல்லியுள்ளார். இயேசுவை “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று பேதுரு அறிக்கையிட்டபோது, இயேசு பேதுருவைப் பார்த்து, “நீ பாக்கியவான்” என்றார், உனக்கு இதை பிதா வெளிப்படுத்தினார் என்றுச் சொன்னார் (மத்தேயு 16:13 18). இவைகள் எல்லாம், உங்களுக்கு தெரியவில்லையா பிஜே அவர்களே. ஒரு முறை கடிந்துக்கொண்டதை மிகவும் இமயமலை போல பெரிது படுத்தி காட்டுகிறீர்கள்?

4. இயேசுவின் வார்த்தைகளின் படி, சிலுவை மரணத்தை, உயிர்த்தெழுதலை மறுக்கும் இஸ்லாமைப்பார்த்து “எனக்கு பின்னாகப்போ சாத்தானே” என்று ஈயேசு சொல்கிறார் என்பதை அறியுங்கள்.

5. முதலாவது இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு புத்தகங்கள் எழுதுங்கள். முகமதுவிற்கு எத்தனை மனைவிகள் இருந்தார்கள் என்று தெரிந்துக்கொள்ளாமல் நான் ஒரு எண்ணிக்கை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம் ஏனென்றால், இஸ்லாமியர்கள் அங்கீகரிக்கும் எண்ணிக்கை வேறு, ஹதீஸ்கள், முகமதுவின் வாழ்க்கை வரலாறு சொல்லும் எண்ணிக்கை வேறு. ஆனால், இயேசுவின் சீடர்கள் எத்தனை பேர் என்பது உங்களைப்போன்ற மக்கள் மத்தியிலே மார்கங்களைப் பற்றி பேசி, பதில்கள் சொல்பவர்கள் சரியாக தெரிந்துக்கொண்டு இருக்கவேண்டும் என்பதை அறியுங்கள்.

6. பரலோகத்தின் சாவியை பேதுருவின் கையில் இயேசு கொடுத்தேன் என்றுச் சொன்னது மிகச்சரியான கூற்று என்பதையும், இயேசுவிற்கு பின்பு, கிறிஸ்தவ சபை தலைமைத்துவம் பெற தகுதியானவர் பேதுரு என்பதையும் என் இரண்டாம் பதிலில் சொல்கிறேன்.

மற்றபடி, நீங்கள் முன்வைத்த விவரங்கள் வேதவசனங்களை புரிந்துக்கொள்ளாமல், மேலோட்டமாக படித்து, ஏதோ ஒரு குறை சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டது என்பதை என் பதில்களை படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள். உங்கள் புத்தகமாகிய “இயேசு இறைமகனா?” என்ற புத்தகத்திற்கு நான் எழுதும் மறுப்பைப் பற்றி விமர்சிக்க விரும்புகிறவர்களை, பதில் சொல்ல விரும்புகிறவர்களை நான் வரவேற்கிறேன்.

“பேதுரு ஒரு பேரொளி”, “பேதுரு ஒரு சிறந்த தலைவர்” என்ற விவரங்களோடு அடுத்த பாகத்தில் சந்திக்கும் வரை , தேவனின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.

பிஜே அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள்:1. பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்

2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில்

3. பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில்

4. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் – 1

5. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் – 2

6. Answering – PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ?

இஸ்லாம் இணைய பேரவைக்கு பகிரங்க எழுத்து வடிவ விவாத அழைப்பிதழ்.(உமர்,உண்மை அடியான்,மற்றும் குழுவினர்)

இஸ்லாம் இணைய பேரவைக்கு பகிரங்க எழுத்து வடிவ விவாத அழைப்பிதழ்.(உமர்,உண்மை அடியான்,மற்றும் குழுவினர்)

;}

அருமை இணைய வாசகர்களே,உண்மை தெய்வம் இயேசுகிறிஸ்துவையும்,அவருடைய சிலுவை மரணத்தையும் மறுதலிக்கும் நோக்கில்  உலகில் தோற்றுவிக்கப்பட்ட வழிகளில் இஸ்லாமும் ஒன்று .இயேசு போதித்த அன்பு,பரிசுத்தம் இவை அனைத்துக்கும் கொஞ்சமும் இடம் இல்லாமல் உருவாக்கப்பட்ட மதம் இஸ்லாம் .அதை உலக மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர்.
ஆனால் ஒரு சில இஸ்லாமியர்களின் புரட்டுகளை நம்பி ஒரு சிலர் முஸ்லீம்களாக மாறுவது நடக்கத்தான் செய்கிறது.ஆனால் அப்படி மாறினவர்கள் எலிப் பொரியில் மாட்டினவர்களாய் வெளியே வரவும் முடியாமல் ,உள்ளே இருக்கவும் முடியாமல் தவிக்கிறாவ்ர்கர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படிப்பட்ட இவர்கள் முகத்தில் கரி பூசும் வகையில் கடந்த ஆறு மாதகாலமாக அவர்களின் அனைத்து தாக்குதல்களுக்கும் இணையத்தில் பதில் சொல்லப்பட்டு வருகிறது .ஆனால் கடந்த ஒரு சில நாட்களுக்கு நம்முடைய உண்மை அடியான் தளத்திலும்,மற்ற ஒரு தளத்திலும் ஒரு ஹதீஸ் பற்றிய செய்தி வெளியிட்டு இருந்தோம் .அதில் முகமதுவை திட்டியதற்காக கர்பிணிப்பெண்ணைக் கொலை செய்தவனுக்கு மண்ணிப்பு வழங்கி தன் கோர முகத்தை உலகத்துக்கு பதிவு செய்த முகமதுவை அடையாளம் காட்டினோம் .
அதற்கு பதில் அளித்த இஸ்லாம் இணைய பேரவை என்ற இணையம்

அப்படியே எல்லா முஸ்லீம்களும் நபியை திட்டினால் கொலையா செய்கிறார்கள் ,அப்படி கொலை செய்வதாக இருந்தால் இணையத்தில் இஸ்லாமுக்கு எதிராக விமர்ச்சனம் செய்யும் எல்லோரையும் தீர்த்துக்கட்டியிருப்போம் அல்லவா? என்பது போல் மிரட்டல் தொனியில் பேசிவிட்டுமுகமது வெறும் இறைத்தூதர் மட்டும் அல்ல அவர் ஒரு நாட்டை ஆளுபவர்.நாட்டை ஆள்கிறவர்களை யார் திட்டினாலும் சும்மா இருக்க மாட்டார்கள்என்றெல்லாம்  சொல்லி ஒரு ஹதீஸை ஆதாரமாக வைத்தார்கள்.

அதன் தொடுப்பு;http://www.iiponline.org/

ஆனால் அவர்கள் வைத்த ஹதீஸ் அவர்களுக்கு வினையாக முடிந்தது

.ஏன் என்றால் அவர்களின் முதல் ,மற்றும் இரண்டாவது கலிபாக்களே முகமதுவை திட்டுகிறவர்களை கொல்ல வேண்டும் என்று சொல்லுவதை காண முடிந்தது.மேலும் ஆளுகிற கலிபாவை திட்டினால் கூட பொருத்துக்கொள்ள வேண்டும் முகமதுவை திட்டினால் பொருக்க கூடாது என்பதையும் அந்த ஹதீஸ் எடுத்துக்காட்டுவதை நாம் சுட்டினோம் .

அந்த ஹதீஸ்:

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கர் (ரழி) ஆட்சி காலத்தில் இதே போன்று ஒருவன் அபூபக்கர் (ரழி) அவர்களை திட்டிக் கொண்டே இருந்தான். அப்போது உமர் (ரழி) அவர்கள் அவனுக்கு மரணதண்டனை அளிக்குமாறு ஆட்சித் தலைவராக இருந்த அபூபக்கர் (ரழி) அவர்களிடம் முறையிடுகிறார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள் மரணதண்டனை என்பது நபிகளாரை விமர்ச்சித்தால்தான் என்று விளக்கி விடுகிறார்கள். (பார்க்க :  அபூதாவூது 4349).

அதற்கு சரியான பதிலை தராத அந்த இணையம் நம்மை நேரடி விவாதத்துக்கு அழைத்துள்ளது.

ஆனால் நேரடி விவாதம் என்பதெல்லாம் கதைக்கு உதாவது என்பதால் அதை நான் ஏற்க வில்லை

,ஆனால் நண்பர் உமர் அவர்களும்,நானும் எழுத்து வடிவ விவாதத்துக்கு இஸ்லாமிய இணைய பேரவைக்கு அழைப்பு விடுகிறோம். தாங்கள் பின்பற்றுவது உண்மையான மார்கம் என்று நம்புவார்களானால்,தைரியம் இருந்தால் நம் அழைப்பை ஏற்று எழுத்து விவாதத்துக்கு வரட்டும் .நாங்கள் தயார்.அவர்கள்…..? அருமை இஸ்லாமிய இணய பேரவை நண்பர்களுக்கு,உங்களின் நேரடி விவாத அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றோம்.ஆனால் நேரடி விவாதத்துக்கு எங்களால் வர இயலாது.அதற்கான காரணங்களை உமர் அவர்கள் கீழே விளக்கியுள்ளார்.

நாங்கள் உங்களுக்கு ஒரு அழைப்பிதழ் கொடுக்கிறோம்

.எழுத்து வடிவ விவாதத்துக்கு நாங்கள் தயாராக உள்ளோம்,நீங்கள் உண்மையை வைத்திருந்தால் எங்களுடன் விவாதத்துக்கு வாருங்கள். உங்களின் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல எங்கள் குழு தயாராக உள்ளது.

ஏற்கனவே உமர் அவர்கள் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.அதன் தொடுப்பு; http://unmaiadiyann.blogspot.com/2007/11/blog-post_20.html
ஏன் எங்களால் நேரடி விவாதத்துக்கு வரமுடியாது,
விளக்கம் உமர்
நான் ஏற்கனவே “ஈஸா குர்‍ ஆன் தளத்தின்” சார்ப்பில் “ஒரு எழுத்து” விவாதத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தேன். ஆனால், அதற்கு இது வரை பதில் வரவில்லை.ஆனால், இப்போது ஒரு மேடை விவாதத்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். இதை முக்கியமாக “உண்மையடியானுக்கு” விடுத்துள்ளார்கள், அதே நேரத்தில் இவ்விவாத அழைப்பு எல்லாக்கும் என்றும் சொல்லியுள்ளார்கள்.இவ்விவாத அழைப்பிற்கு ஈஸா குர்‍ ஆனின் பதில்:நான் எழுத்து விவாதத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன். மேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது. எழுத்து விவாதத்திற்கு விருப்பமிருந்தால், நான் விவாதிக்க தயார்.

நேரடி மேடை விவாதத்திற்கு ஈஸா குர்‍ஆன் வராததிற்கு காரணங்கள்:

1. நான் ஒரு முழு நேர ஊழியன் கிடையாது, வாரம் ஒரு நாள் எனக்கு கிடைக்கும் ஒரு சில மணித்துளிகளை நான் என் கட்டுரைகளுக்கு பயன்படுத்துகிறேன். எனவே, மேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது.2. மேடை விவாதத்தில் “முஸ்லீம்கள்” முன்வைக்கும் ஆதாரங்கள் உணமையா பொய்யா? என்று என்னால் கண்டுபிடிக்க முடியாது. இதுவே எழுத்து விவாதமாக‌ இருந்தால், எனக்கு அதிக நேரமிருக்கும் அந்த நேரத்தில் என்னால் சில விவரங்களை கண்டுபிடிக்கமுடியும்.(சில முஸ்லீம் அறிஞர்கள் சொல்லும் விவரங்கள் நிச்சயமாக உண்மையாக இருக்கும் என்று நமப நான் தயாராக இல்லை, அது ஜாகிர் நாயக் அவர்களாக , ஜைனுல் ஆபீதீன் அவர்களாக அல்லது மற்ற யாராக இருந்தாலும் சரி. நாங்கள் சொல்வதை ஏன் நம்பமாட்டீர்கள்? என்று கேட்காதீர்கள். காரணம், உங்கள் உயிரினும் மேலான முகமதுவின் வார்த்தைகளையே நாங்கள் நம்பவில்லை என்று தான் இந்த இக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன, அப்படி இருக்கும் போது உங்களை எப்படி நம்பமுடியும்? நூலையே நாங்கள் நம்பவில்லை அப்படியிருக்கும் போது, சேலையை எப்படி நம்புவது. அந்த நூலில் நெய்த சேலை தானே இதுவும்.)3. மேடை விவாதத்தில் விவாதிக்கும் அளவிற்கு பேச்சாற்றல் பெற்றவன் அல்ல நான். அவ்வளவு அறிவு கூட எனக்கு இல்லை. மேடை பேச்சுக்கு அனுபவம் அதிகம் வேண்டும். அது எனக்கு இல்லை. எனவே, எழுத்து வடிவ விவாதமே எனக்கு சரியானது.

4. மேடையில் பேசும் போது, என் மீது ஒருவன் கல்லெடுத்து எரிவான், எனக்கு காயம் உண்டாகும். அதற்கு உங்கள் பதில் என்ன இருக்கும்? “, அவனுக்கு மார்க்க அறிவு கிடையாது, அதனால் தான் உன் மீது கல்லெரிந்தான்” என்று சொல்லி தப்பித்துக்கொள்வீர்கள்.

5. கடைசியாக இஸ்லாம் ‍கிறிஸ்தவ விவாதம் என்பது ஒரு நாளில் பல மணிகள் மேடையில் பேசினால் தீர்ந்துவிடும் விசயம் இல்லை. இதற்கு பல ஆதாரங்களை முன்வைக்கவேண்டும், பல விவரங்களை, புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ளவேண்டும். மேடை விவாதத்தில் இதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்காது.

எனவே, எழுத்து வடிவ விவாதத்திற்கு சரி என்றுச் சொன்னால், நான் தயாராக உள்ளேன்.

எப்போது ஆரம்பிக்கலாம்? ( நான் மட்டும் 6 மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டேன்)

மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள்(மகொமவா):

அருமையான இஸ்லாமிய நண்பர்களே, முதலாவது மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள்:

1. நோயாளிகள்
2. தொடை நடுங்கிகள்.
3. பேடிகள்
என்று மரியாதை இல்லாமல் எழுதாதீர்கள்.யாருக்கு தொடை நடுங்கிக்கொண்டு இருக்கிறது என்று கடந்த 6 மாதமாகவே எல்லாருக்கும் தெரியும்.உங்கள் மார்கத்தை விமர்சித்தால், உடனே இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசுவீர்களோ?

உங்களால் முடிந்தால், இஸ்லாமிடம் ஆதாரம் இருந்தால் எங்கள் கட்டுரைகளுக்கு அதாரபூர்வமாக பதில் கொடுங்கள். அது உண்மையாகவே ஆதாரமாக இருந்தால், எங்கள் முகத்தில் அதுவே கரியை பூசிவிடும். எங்கள் கட்டுரைகளையும் உங்கள் கட்டுரைகளையும் படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள் யார் சொலவது உண்மை என்று.ச் அதை விடுத்து, இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.

இஸ்லாமை விமர்சித்தால் இப்படி எழுதுகிறீர்களே, கிறிஸ்தவத்தை நீங்கள் விமர்சிக்கிறீர்களே, இயேசுவைப்பற்றி பொய்யையும், அவதூறையும் அள்ளி வீசுகிறீர்களே, நாங்கள் எப்படி சொல்வது? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா?

நீங்கள் நோயாளிகளாக இல்லாமல் இருந்தால்,
உங்கள் தொடைகள் நடுங்காமல் இருந்தால்,
நீங்கள் பேடிகள் இல்லாமல் இருந்தால்,
என்னோடு “எழுத்து வடிவ விவாததிற்கு வாருங்கள்”.நான் இஸ்லாமிய உலக செய்திகளை என் தளங்களில் பெரும்பான்மையாக பதிக்க முயற்சி எடுப்பதில்லை. நான் இஸ்லாமியர்களுக்கு பதில் எழுதவில்லை, இஸ்லாமுக்கு பதில் எழுதுகிறேன். என் தளத்தில் பல கட்டுரைகள் உள்ளன. அவைகளுக்கு பதில் சொல்லுங்கள்.உங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு பொய் என்று நிருபிக்க, மேடை விவாதம் மூலமாகத்தான் தீர்வு காணவேண்டும் என்பதில்லை, எழுத்து விவாதம் மூலமாகவும் செய்யலாம், உங்களால் முடிந்தால்?

இஸ்லாமை உண்மை என்று நிருபிக்க ஒரு வாய்ப்பு,
முகமது ஒரு நபி என்று நிருபிக்க ஒரு வாய்ப்பு, உங்கள் முன்பு உள்ளது, அதை பயன்படுத்திக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

நேரடி விவாததிற்கு என் இயலாமையை நான் சொல்லிவிட்டேன், “நாங்கள் நேரடி விவாதத்திற்கு அழைத்தால், கிறிஸ்தவர்கள் வரவில்லை” என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்காதீர்கள். உங்களால் முடிந்தால், எழுத்துவிவாதத்திற்கு வரவும்.

“இலவசமாக தளம் வருகிறது என்று எழுதுகிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறீர்களே. ஒரு வேளை பணம் கொடுத்து சொந்த தளத்தில் என் கட்டுரைகளை பதித்து விட்டால் பதில் சொல்லிவிட்டு இருப்பீர்களோ? தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் என் கட்டுரைகள் அனைத்தும் உள்ளது. அந்த தளம் “பணம்” கொடுத்து வாங்கியது தான். அதற்கு பதில் சொல்லவேண்டியது தானே?

“நாட்டியம் ஆடத்தெரியாதவளுக்கு ஆடச்சொன்னால், மேடை சரியில்லை என்று சொன்னாளாம் ஒருத்தி” அது மாதிரி உள்ளது உங்கள் கேள்விகள்.

எழுத்து விவாதத்திற்கு தயாரா? நான் ரெடி அப்ப நீங்க?

=================================
Joke of the year 2008:
ஒரு முஸ்லீம் மற்றவனை தீவிரவாதி என்பது நகைச்சுவை இல்லையா?
நமது இணையதளத்தை தாக்கி அழித்திடும் நோக்கில் 3 மாதங்களுக்கு முன்னர் ஒன்றரைலட்சம் ஹிட்ஸ் அடித்து வெறுத்துப் போன தீவிரவாதிகளுக்கும் பொருந்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
=================================

பிரபல இஸ்லாமிய அறிஞரும்,தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் தலைவருமான பி.ஜைனூல் ஆபிதின் எழுதிய புத்தகத்துக்கு ஈசாகுரான் உமர் மீண்டும் பதில்.

பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்(பிஜே அவர்களின் “இயேசு இறைமகனா?” புத்தகத்திற்கு மறுப்பு)பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் “இயேசு இறைமகனா ?” என்ற புத்தகத்தில் நான்காவது பகுதியில், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, அல்லா ஆள் மாறாட்டம் செய்து இயேசுவை எடுத்துக்கொண்டார் என்று எழுதுகிறார்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டார், மரித்தார், மறுபடியும் உயிரோடு எழுந்தார் என்று பைபிள் சொல்வதும், கிறிஸ்தவர்கள் நம்புவதும் தவறானதாகும், குர்‍ஆன் சொல்வது தான் சரியானது என்று சொல்கிறார். இதற்கு ஆதாரமாக குர்‍ஆன் 4:155 – 159 வசனங்களை ஆதாரமாக காட்டுகிறார்.

பிஜே அவர்கள் புத்தகத்திலிருந்து:

இயேசுவைப் பற்றி

அவரை (இயேசுவை) அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் (கர்த்தர்) தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் (கர்த்தர்) மிகைத்தவராகவும் ஞானமுடையோராகவும் இருக்கிறான். வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (இயேசு, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார். (அல்குர்ஆன் 4:155-159)

Source: http://www.onlinepj.com/book/mahana19.htm

குர்‍ஆன் சொல்லும் இந்நிகழ்ச்சியில் அனேக பிரச்சனைகள் உள்ளது. மட்டுமல்ல, இது குர்‍ஆனுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறுகிறது. இப்படி இயேசுவின் சிலுவை நிகழ்ச்சியை அல்லா மாற்றி சொல்வதினால், அல்லா எதிர் காலத்தைப் பற்றி ஞானமில்லாதவராக தென்படுகிறார், மற்றும் இயேசுவின் சீடர்களை ஏமாற்றியவராக மாறுகிறார். இதுவே, அவருக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறுகிறது. இது எப்படி சாத்தியம் என்று தெரிந்துக்கொள்ள கீழ் கண்ட கட்டுரையை படிக்கவும்.

பிஜே அவர்களின் இந்த வசனங்களுக்கு பதிலாக கீழ் கண்ட கட்டுரையை முன்வைக்கிறேன் .

“ஏமாற்றும் இறைவன் திறமையில்லா மஸீஹா”

ஆங்கிலத்தில் படிக்க: (Deceptive God inCompetent Messiah – Allah Starts Christianity …. by Accident)

இந்த கட்டுரையின் ஆசிரியருக்கு நான் மெயில் அனுப்பி, அனுமதி பெற்று, அவரது ஆங்கில கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து என் தளத்தில் பதிவு செய்துள்ளேன்.

பி.ஜே அவர்களுக்கு இக்கட்டுரையை நான் பதிலாக முன் வைப்பதால், இக்கட்டுரை சம்மந்தப்பட்ட பிஜே அவர்களது எல்லா கேள்விகளுக்கும் முடிந்த அளவிற்கு பதில் அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

பிஜே அவர்களுக்கு ஈஸா குர்‍ஆன் அளித்த இதர பதில்கள் :

1. பிஜே அவர்களும் திரித்துவமும்,பவுலும் .

முஸ்லீம்களுக்கு வேண்டுகோள் : என் அருமை தமிழ் முஸ்லீம்களே, நான் ஒரு பதில் எழுதினால், அது யாருக்காக எழுதப்படுமோ அவர்கள் தான் பதில் அளிக்கவேண்டும் என்பதில்லை. குர்‍ஆனை நம்பும் ஒவ்வொரு முஸ்லீமும் பதில் அளிக்கலாம், முடிந்தால்.

கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள் : என் அருமை கிறிஸ்தவர்களே, பிஜே அவர்கள் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள், உங்களில் பலரும் அதில் பங்கு பெற்று கேள்விகள் கேட்டு இருப்பீர்கள். இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள், இக்கட்டுரையை குறைந்தது பத்து பேருக்காவது அனுப்புங்கள் . ஈஸா குர்‍ஆன் தளத்தையும், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தையும் அறிமுகம் செய்யுங்கள். ஒரு வேளை நீங்கள் பிஜே அவர்களிடம் கேள்விகள் கேட்டு, அவர் பதில் அளிந்து இருப்பாரானால், அதை (கேள்வியும், பிஜே அவர்கள் அளித்த பதிலும்) எனக்கு இந்த மெயில் விலாசத்திற்கு ( isa_koran@yahoo.co.in or isa.koran@gmail.com ) அனுப்புங்கள். நான் என் கருத்தை அல்லது பதிலை எழுத முயற்சி செய்வேன். இது கிறிஸ்தவர்கள் இஸ்லாமை இன்னும் நன்றாக தெரிந்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

ஈஸா குர்‍ஆனின் இதர இஸ்லாம் கட்டுரைகளையும், இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ் முஸ்லீம் தள கிறிஸ்தவ கட்டுரைகளுக்கு ஈஸா குர்‍ஆன் அளித்த பதில்களை(மறுப்புக்களை)யும் படிக்கவேண்டுமானால், கீழ் கண்ட தொடுப்புகளை க்ளிக் செய்யவும்.

1. http://www.geocities.com/isa_koran
2. http://www.tamilchristians.com/
3. http://isakoran.blogspot.com/

http://unmaiadiyann.blogspot.com/2007/11/blog-post_4151.html